Skip to main content

தி.மு.க.வில் எம்.பி.யை நிறுத்துனா, அதிமுகவில் ஓபிஎஸ் மகன் ஓபிஆரை நிறுத்துவோம்... விளையாட்டில் அரசியல்!

Published on 17/03/2020 | Edited on 17/03/2020

இந்தியாவிலுள்ள அனைத்து விளையாட்டுகளிலும் அரசியல் புகுந்திருக்கும் நிலையில் இதுவரை அதில் சிக்காமல் இருந்தது கைப்பந்து கழகம். தற்போது கைப்பந்து விளையாட்டிலும் அரசியல் புகுந்துள்ளதால் நொந்துபோயிருக்கிறார்கள் வாலிபால் வீரர்கள்.

தமிழ்நாடு கைப்பந்து விளையாட்டு கழகத்திற்கான தேர்தல் சில மாதங்களுக்கு முன்பு நடந்தது. தலைவர் மற்றும் அலுவலக நிர்வாகிகள் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய நிர்வாகம் வந்ததிலிருந்தே, பாரம்பரியமாக விளையாடி வந்த வாலிபால் வீரர்களை ஒழித்துக் கட்டிவிட்டு அரசியலை புகுத்தி வருகிறார்கள் என்கிற குற்றச்சாட்டுகள் எதிரொலிக்கின்றன. இது குறித்து தொடர்ச்சியாக நமக்குப் புகார்கள் வரவே, வாலிபால் உலகில் என்ன நடக்கிறது என விசாரித்தோம்.

 

volley ball



நம்மிடம் மனம் திறந்த நாமக்கல் மாவட்ட கைப்பந்து கழகத்தின் செயலாளர் ராஜா, "தமிழ் நாடு வாலிபால் விளையாட்டு சங்கத்தின் தலைவராக கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் இருந்த தினத்தந்தி அதிபர் சிவந்தி ஆதித்தன், வாலிபால் விளையாட்டின் வளர்ச்சிக்கும் பெருமைக்குக்கும் அர்ப்பணிப் போடு உழைத்தவர். வாலிபால் வீரர்கள் பல அரசியல்கட்சிகளின் ஆதரவாளராக இருந்தாலும் விளையாட்டிலும் சங்கத்திலும் அரசியல் புகுந்துவிடாமல் பாதுகாத்த சிவந்தி, சங்கத்தின் விதிப்படி 70 வயதை கடந்தவர்கள் பொறுப்பில் இருக்க முடியாது என்பதால் ஒரு கட்டத்தில் தலைவர் பதவியிலிருந்து விலகினார்.

 

dmk



இதனையடுத்து அவரது மகன் பாலசுப்ரமணிய ஆதித்தனாரை முறைப்படி தேர்ந்தெடுக்கிறார்கள் சங்கத்தினர். கடந்த 2010-2014 வரை தலைவராக இருந்த பாலசுப்ரமணியம், அவரது தந்தை சிவந்திஆதித்தன் மறைந்ததையடுத்து பணிச்சுமையின் காரணமாக சங்கத்திலிருந்து விலகிக்கொள்கிறார். அதன்பிறகு, 2014-ல் மாநில தலைவராக வருகிறார் தொழிலதிபர் வாசுதேவன். அவருடைய பதவிக் காலம் 2018-ல் முடிவடைந்த நிலையில், வாலிபால் கழகத்திற்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்தது. அப்போது, ’தேர்தல்னு வந்துட்டா அரசியல் புகுந்துவிடும். அரசியல் நுழைஞ்சிட்டா விளையாட்டின் போக்கு மாறிவிடும். கைப்பந்தை வாழ்நாள் முழுவதும் நேசிக்கும் வீரர்களுக்கு மரியாதை இருக்காது' என பலரும் எடுத்துச் சொன்னபோதும் குறிப்பிட்ட சிலர் அதனை ஏற்க மறுத்தனர்.

 

dmk



இதுபோன்று பல பிரச்சனைகள் அதிகரித்த நிலையில், மாநில தலைவர் உள்பட 13 பதவிகளுக்கான தேர்தல் 2019 ஆகஸ்ட்டில் அறிவிக்கப்பட்டது. தொழிலதிபர் வாசுதேவன் தலைமையில் 13 பேர் கொண்ட ஒரு டீமும், அதனை எதிர்த்து முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகனும் கள்ளக்குறிச்சி எம்.பி.யுமான கௌதம்சிகாமணி தலைமையில் ஒரு டீமும் களத்தில் குதித்தன. இந்த தேர்தலில் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் மாவட்ட கைப்பந்து விளையாட்டு கழகத்தினர் வாக்களிக்க வேண்டும். ஜெயிக்க வேண்டுமென்பதற்காக அனைத்து அரசியல்களும் அரங்கேறுகின்றன. தேர்தல் முடிவுகளில் கௌதம்சிகாமணி தலைவராகிறார். அவரது டீமும் ஜெயிக்கிறது. இதன் பிறகுதான் பிரச்சனையே.

 

dmk



அதாவது, மாநில கழகத்தின் அங்கீகாரத்தோடு இயங்கி வருகிற ஒவ்வொரு மாவட்ட கழகத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் மற்றும் நிர்வாகிகள் இருக்கின்றனர். பதவிகளிலுள்ள அனைவருமே வாலிபால் வீரர்கள்தான். சிகாமணி தலைவரானதற்கு பிறகு மாவட்ட கழகத்தை அழிக்கும் நோக்கில் தி.மு.க. கட்சிக்காரர்களைக் கொண்டு போட்டி கழகத்தை உருவாக்குகின்றனர். திருவண்ணாமலை, நாமக்கல், சேலம், கோவை, திருப்பூர், மதுரை, செங்கல்பட்டு என பல மாவட்டங்களில், இனி இவர்கள்தான் தலைவர், செயலாளர் என தி.மு.க.காரர்களை நியமித்து வருகிறார்கள். இதனால் அரசியல் சம்பந்தமில்லாத கைப்பந்தை மட்டுமே நேசிக்கும் வீரர்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.


தேசிய அளவிலான வாலிபால் விளையாட்டு போட்டியில் கலந்துகொள்வதற்காக, தமிழகத்திலிருந்து வீரர்களை தேர்வு செய்வதற்கான போட்டி சமீபத்தில் திருவாரூரில் நடந்தது. இதற்காக, தமிழகம் முழுவதிலுமிருந்து பல டீம்கள் திருவாரூக்கு படையெடுத்தன. ஆனால், எந்தெந்த டீமை அனுமதிக்க வேண்டும் என சிகாமணி தலைமையிலான புதிய நிர்வாகம் உத்தரவிட்டிருந்ததோ அதனை மட்டுமே அனுமதித்தனர். மற்ற டீம்களை கிரவுண்ட் உள்ளேயே அனுமதிக்கவில்லை. அதாவது, அங்கீகரிக்கப்பட்ட பல டீம்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, மாநில தலைமையால் உருவாக்கப்பட்ட போட்டி சங்கங்களுக்கு மட்டுமே பங்கேற்கும் வாய்ப்பைக் கொடுத்தனர். இப்படி பல அக்கப்போர்கள் நடந்துகொண்டிருக்கிறது. கைப்பந்து விளையாட்டில் அரசியல் புகுந்துள்ளதால் கைப்பந்தை நேசிக்கும் வீரர்கள் அழிக்கப்படுவதுடன், கைப்பந்து விளையாட்டை தி.மு.க.வின் ஆதரவு அணியாக மாற்றும் முயற்சிகள் திரைமறைவில் நடந்து வருகின்றன'' என்கிறார் ஆதங்கத்துடன்.

இதுகுறித்து கைப்பந்து மட்டுமல்லாமல் ஹாக்கி, கால்பந்து, பேட்மிட்டன், டென்னிஸ் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு சங்கத்தினரிடம் விசாரித்தபோது, "வாலிபாலில் மட்டும்தான் அரசியல் இல்லாமல் இருந்தது. அதிலும் இப்போ அரசியல் புகுந்திருப்பது அதிர்ச்சிதான். கால்ஸ் டிஸ்டலரிஸ்சின் உரிமையாளர்தான் வாசுதேவன். தி.மு.க. ஆட்சியில் இவருக்கு டிஸ்டலரி லைசன்ஸ் கொடுக்கப்பட்டாலும் வாசுதேவன் அரசியல்வாதி கிடையாது. வாசு தேவனுக்கு எஸ்.என்.ஜே. டிஸ்டலரி உரிமையாளர் ஜெயமுருகன், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் வலதுகரமான ராஜாசங்கர் இருவரும் நண்பர்கள். இதன் மூலம் ஸ்டாலினின் அறிமுகம் வாசுதேவனுக்குக் கிடைத்தது. ஒரு கட்டத்தில் தனிப்பட்ட முறையில் ஸ்டாலினை சந்திக்கும் அளவுக்கு நட்பை உருவாக்கிக் கொண்டார் வாசுதேவன். இதனால் நண்பர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் முளைத்தன.


இந்தச் சூழலில்தான், வாலிபால் கழகத்தின் தலைவர் பதவியிலிருந்து வாசுதேவனை தூக்க அரசியல்ரீதியாக சில முயற்சிகள் நடக்கின்றன. அந்தச் சூழலில்தான் கௌதம்சிகாமணி எம்.பி.யாகிறார். அவரை தலைவராக்க திட்டமிடுகின்றனர். வாலிபால் சங்கத்தில் அரசியல் நுழைவதை கண்டு அதிர்ச்சியடைந்த நிர்வாகிகள், ஸ்டாலினை சந்தித்து முறையிடுமாறு வாசுதேவனுக்கு யோசனை சொல்ல, ஸ்டாலினை சந்தித்து விவரிக்கிறார் வாசுதேவன். இதனையடுத்து சிகாமணி, வாசுதேவன் இருவருமே நம்மாளுங்கதான். விளையாட்டில் எதுக்கு அரசியல்? அது என்னான்னு கவனி' என தனக்கு நெருக்கமானவரிடம் ஸ்டாலின் அறிவுறுத்த... அவரும் வாசுதேவனை தொடர்புகொண்டு, "அவர் (சிகாமணி) மக்கள் பிரதிநிதி. மனுத்தாக்கலும் பண்ணிட்டாரு. மனுவை வாபஸ் வாங்கச் சொன்னா அது நல்லாயிருக்காது'’என சொல்லிவிடுகிறார். அதன்பிறகு, அமைதியாகிவிடுகிறார் வாசுதேவன். இதனையெல்லாம் அறிந்து நொந்துபோன அ.தி.மு.க. ஆதரவு வீரர்கள், தி.மு.க.வில் ஒரு எம்.பி.யை நிறுத்தறாங்கன்னா அ.தி.மு.க.வில் இருக்கும் ஒரே எம்.பி.யான ஓ.பி.எஸ். மகன் ஓ.பி.ஆரை நிறுத்துவோம்னு சிலர் ஆவேசப்பட, போட்டி அரசியல் வேண்டாம் என பலரும் சொல்லியதால் அந்த யோசனையை கைவிட்டனர்.

தேர்தல் விறுவிறுப்பாகிறது. சிகாமணியின் வெற்றிக்கான செலவுகளையெல்லாம் ஜெயமுருகன் கவனித் துக்கொள்ள, தி.மு.க. மா.செ.க்களிடம் தனிப்பட்ட முறையில் முயற்சிகளை எடுக்கிறார் தி.மு.க. தலைமைக்கு நெருக்கமானவர். இதனால் தி.மு.க. கட்சியும் பல மாவட்டங்களில் களமிறங்க, வாலிபால் கழகத்தின் தேர்தல் முழுமைக்கும் அரசியலாகிறது.

தி.மு.க., அ.தி.மு.க. என வீரர்கள் பிரிந்து நிற்க, சாதி ரீதியி லான அணுகுமுறைகளும் பல மாவட்டங்களில் வெடிக்கிறது. தேர்தலில் 15 வாக்குகள் வித்தியாசத்தில் சிகாமணி டீம் ஜெயிக்கிறது. வெற்றிக்குப் பிறகு நாமக்கல், சேலம், தர்மபுரி, திருப்பூர், கோவை, திருவண்ணாமலை, மதுரை என மாவட்ட வாலிபால் சங்கத்தை உடைக்கிறாங்க. வாலிபாலுக்கு சம்பந்தமே இல்லாத தி.மு.க. கட்சிக்காரர்களை உள்ளே நுழைத்து புதிய சங்கத்தை உருவாக்கும் நடவடிக்கைகள் தற்போது வேக மெடுத்துள்ளன. இதன் போக்கு ஆபத்தானது'' என நடந்துள்ள அரசியல் பின்னணிகளை பலரும் விவரித்தனர்.

இதற்கிடையே, தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 13 நிர்வாகிகளைத் தவிர தலைமைப் புரவலர் மற்றும் வாழ்நாள் தலைவர் என சில நியமன கௌரவப் பதவிகளும் உண்டு. அந்த வகையில், தலைமைப் புரவலராக எஸ்.என்.ஜே. டிஸ்ட்லரி அதிபர் ஜெயமுருகனும், வாழ்நாள் தலைவராக அர்ஜுன் துரையும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

தேர்தல் குறித்து முன்னாள் தலைவர் வாசுதேவனை தொடர்புகொண்டு கேட்டபோது, கருத்துச் சொல்ல மறுத்து விட்டார். கௌதம்சிகாமணியிடம் கேட்டபோது, ""சிவந்தி ஆதித் தன் தலைவராக இருந்தபோதே நிர்வாகக் குழுவில் இருந்தவன் நான். தேர்தல் வந்தது. போட்டியிட்டேன். எங்கள் டீம் ஜெயித்திருக்கிறது. எங்கள் சங்கத்தில் எந்த அரசியலும் இல்லை. நாமக்கல், மதுரை, திருவண்ணாமலை உள்ளிட்ட 4, 5 மாவட் டங்களில்தான் சின்னச் சின்ன பிரச்சனைகள் இருக்கின்றன. தலைமையிலிருந்து சென்ற ஒரு குழு அவர்களுடன் பேசி சுமுக முடிவை எடுத்து வருகிறது. எந்த ஒரு மாவட்டத்திலும் புதிய சங்கத்தை உருவாக்கவில்லை; உருவாக்கு வதற்கான தேவையுமில்லை; அரசியல் கலப்பதாகச் சொல்வதில் உண்மையுமில்லை’’ என்கிறார் அழுத்தமாக.

 

 

Next Story

“கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும்” - இ.பி.எஸ்.

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
alliance Party Candidates Need To Work More EPS

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் தே.மு.தி.க. சார்பில் விருதுநகரில் போட்டியிடும் விஜய பிரபாகரனை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிவகாசியில் இன்று (28.03.2024) பிரச்சார்ம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தமிழக மக்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை. ஒரு மனிதன் பிறக்கின்றான், வாழ்கின்றான், இறக்கிறான். இந்த இடைப்பட்ட காலத்தில் நாட்டு மக்களுக்கு என்ன செய்கிறானோ அந்த தலைவர்கள் தான் மக்கள் மனதில் வாழ்வார்கள். அவ்வாறு எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நம் தலைவர்களுக்கு அரசியல் வாரிசுகள் கிடையாது. எனவே தமிழ்நாட்டைச் சேர்ந்த நாம் தான் பிள்ளைகள். தங்கள் வாழ்நாள் முழுவதும் தம் பிள்ளைகள் வாழ்நாள் முழுவதும் செழிப்பாகவும், வளமாகவும் வாழ வேண்டும் என கருதி இரவு பகல் பாராமல் உழைத்து மறைந்த தலைவர்கள் உருவாக்கிய இயக்கம் அ.தி.மு.க. இது மக்களுக்காகவே துவக்கப்பட்ட இயக்கம். யார் யாரோ இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்கள். யார் எல்லாம் இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்களோ, அவர்கள் எல்லாம் அடையாளம் காணாமல் போய்விட்டார்கள்.

இந்த தேர்தல் முக்கியமான தேர்தல். நாடாளுமன்ற தேர்தலை பொறுத்த வரையில் கூட்டணி கட்சிகள் எல்லாம் ஒன்றாக இணைந்து இரவு பகல் பாராமல் வாக்கு சேகரித்து லட்சக்கானகான வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும். கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும். அ.தி.மு.க. என்று சொன்னாலே அனைவரையும் மதிக்க கூடிய கட்சி. அதிலும் குறிப்பாக கூட்டணியை நேசிக்க கூடிய கட்சி. அ.தி.மு.க. வேட்பாளரை விட கூட்டணி கட்சி வேட்பாளருக்கு அதிக நேரம் செலவழித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார். 

Next Story

“எடப்பாடி செய்த சதியை முறியடிக்கத் தயாராக இருக்கிறேன்” - ஓ.பி.எஸ்.ஸின் பிரத்யேக பேட்டி

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
ready to defeat tready to defeat the conspiracy of EPS says Exclusive interview with OPShe conspiracy of EPS says Exclusive interview with OPS

தேனி பாராளுமன்றத் தொகுதியில் பி.ஜே.பி. கூட்டணி சார்பில் அ.ம.மு.க. வேட்பாளராக டி.டி.வி. தினகரன் போட்டியிடுவதால் ஓ.பி.எஸ்.ஸின் முழு ஆதரவும் டிடிவிக்கு இருக்கிறது. அதோடு டிடிவியும் நான் போட்டி போடுகிறேன் என்று தெரிந்து தான் இத்தொகுதியை ஓ.பி.எஸ்.ஸும் அவரது மகன் ஓ.பி.ஆர்.ரும் எனக்காக விட்டுக் கொடுத்தும் இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். அந்த அளவுக்கு ஓபிஎஸ்ஸும் டி.டி.வி.யும் தேர்தல் களத்தில் நெருக்கமாக இருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தான் வேட்புமனு தாக்கலின் இறுதி நாளான நேற்று 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய டிடிவி தினகரன் மதியத்துக்கு மேல் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வருவதாக இருந்தது. இந்த விஷயம் ஓபிஎஸ்-க்கு தெரியவே, மதியம் ஒன்னேகால் மணிக்கு எல்லாம் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தவர் அலுவலக வளாகத்தில் உள்ள மரத்தடியில் நின்று கொண்டு டிடிவியை வரவேற்க காத்துக் கிடந்தார். அவருடன் ஆதரவாளர்களான செல்லமுத்து மற்றும் சையதுகான் ஆகியோர் இருந்தனர்.

ad
ஓபிஎஸ் உடன் நமது நிருபர்

அப்போது நாம் முன்னாள் முதல்வரான ஓபிஎஸ்ஸிடம் சென்று நம்மை நக்கீரன் நிருபர் என்று அறிமுகப்படுத்திய உடனே ஆசிரியர் நல்லா இருக்காரா? என்று கேட்டார். அதைத் தொடர்ந்து நாமும் ஆசிரியர் நலமாக இருக்கிறார் என்று கூறியவாறே தொகுதியின் தேர்தல் பணி எந்த அளவுக்கு இருக்கிறது என்று கேட்டபோது, “நான் போட்டி போடும் அந்த தொகுதியில் பிரதமர் மோடி தான் போட்டிப் போடுவதாக இருந்ததால் அங்குள்ள கட்சியினர் தொகுதியை ஒரு கட்டுக்கோப்பாக பிரதமருக்காக தயார் செய்தும் வைத்திருந்தனர். ஆனால் பிரதமர் இங்கே போட்டி போடவில்லை என்பதால் என்னையத்தான் நிற்க சொன்னார். அதன்பேரில் தான் போட்டி போடுகிறேன்” என்றவரிடம் அத்தொகுதியில் முக்குலத்தோர் சமூக ஓட்டுக்கள் அதிகமாக இருக்கிறதா என்று கேட்டபோது, அத்தொகுதியில் மொத்தம் பதினாறு லட்சம் ஓட்டுகள் இருக்கிறது. இதில் சிறுபான்மை சமூக ஓட்டுகள் இரண்டு லட்சம் இருப்பதாக தெரிகிறது. அதுபோல் முக்குலத்தோர் சமூக ஓட்டுகள் ஆறு லட்சத்திற்கு மேல் இருப்பதாக தெரிகிறது. மீதி மற்ற சமூக மக்கள் இருக்கிறார்கள் என்றவரிடம், உங்களுடைய வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்று கேட்டதற்கு என்னுடைய வெற்றி உறுதி இறைவன் இருக்கிறார்” என்றார்.

உங்களை பெயரிலேயே ஐந்து சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல் செய்து இருக்கிறார்கள். அது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, “நான் வெற்றி பெறக் கூடாது என்பதற்காகவே எடப்பாடி செய்த சதி. அதையும் முறியடிக்க தயாராக இருக்கிறேன்” என்றார். தொடர்ந்து தேனி மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க.வினர் கூட டிடிவிக்கு மறைமுகமாக சப்போர்ட் பண்ண இருப்பதாக ஒரு பேச்சு அடிபடுகிறதே என்று கேட்டதற்கு சிரித்துக் கொண்டே “அதுவும் நடக்கலாம் நான் சொன்னது போல் தமிழகம் முழுவதுமே அ.தி.மு.க. படுதோல்வி அடையும்” என்று சொல்லிக் கொண்டு இருந்தார்.

ready to defeat the conspiracy of EPS says Exclusive interview with OPS

அப்போது தேர்தல் பிரச்சார வாகனத்தில் ஆட்சியர் அலுவலகத்திற்குள் இரண்டேகால் மணிக்கு டிடிவி வந்தார். அவரை ஓபிஎஸ் சால்வை அணிவித்து வரவேற்றார். அதன்பின் ஓ.பி.எஸ். தனது ஆதரவாளர்களுடன் மீண்டும் மரத்தடியிலேயே நின்றார். அப்போது பயனாளிகளுக்காக போடப்பட்டிருந்த இரும்பு சேரில் ஓ.பி.எஸ் உடன் வந்த இருவரும் உட்கார்ந்து இருந்தனர். அதைத் தொடர்ந்து டிடிவி தினகரன் தனது வேட்புமனுவை தேர்தல் அதிகாரியான ஆட்சியரிடம் தாக்கல் செய்துவிட்டு வந்தார். வந்தவர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியும் கொடுத்தார். அதுவரை ஓபிஎஸ் டிடிவியுடனே நின்றுவிட்டு டிடிவியை பிரச்சார வேனில் திரும்ப வழியனுப்பி விட்டுத்தான் திரும்பினார்.