Skip to main content

பா.ம.க.வுக்கு முக்கியத்துவம் தர்றார்... எங்களை மதிக்கமாட்டேன்கிறார்' என தே.மு.தி.க. தரப்பில் அதிருப்தி...

Published on 19/07/2019 | Edited on 19/07/2019

சூடுபிடித்துள்ளது வேலூர் எம்.பி. தேர்தல் களம். மத்தியிலும் மாநிலத்திலும் ஆளுங்கட்சிகள் கூட்டணி அமைத்துள்ள நிலையில், அதிகார அமைப்புகளின் பறக்கும்படை, வருமான வரித்துறை, மத்திய- மாநில உளவுத்துறை, சி.பி.ஐ. புலனாய்வுக்குழு போன்றவை களமிறக்கப்பட்டுள்ளன. பரிசுப் பொருள் கொடுப்பதை தடுக்க எனச் சொல்லி சுமார் 58 குழுக்களை உருவாக்கியுள்ளது மாவட்ட நிர்வாகம். அதோடு பறக்கும்படை கண்காணிப்புக் குழு என மொத்தம் 108 குழுக்கள் உள்ளன. இவையெல்லாம் வாக்குப்பதிவு நெருங்க, நெருங்க தி.மு.க.வை மட்டுமே குறிவைக்கப் போகிறது என்கிற தகவலால் தி.மு.க. தலைமை, கட்சி பட்டாளத்தை வேலூரில் முகாமிட வைத்துள்ளது. "ஆளுந்தரப்பினர் அதிகார அத்துமீறல் நடத்துவார்கள்' என தி.மு.க. தலைவர் அறிக்கைவிட்டு எச்சரித்துள்ளார்.

 

dmk



கடந்த 12-ந் தேதி வேலூர் அடுத்த புதுவசூரில் உள்ள தி.மு.க. பிரமுகர் ஏழுமலை என்பவர் வீட்டில் வருமானவரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும்படையினர் திடீரென சோதனை நடத்தினர். அந்த சோதனையில் 27 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இது தி.மு.க. வேட்பாளர் பணம் என தகவல் பரவியது. ""தி.மு.க. பிரமுகர்கள் வச்சிருக்கற பணமெல்லாம், வேட்பாளர் பணமாகிடுமா? ஏழுமலை காங்கிரசில் இருந்து தி.மு.க.வுக்கு வந்தார். வேலூரில் பிர பலமான ரியல் எஸ்டேட் அதிபர். எழுதப் படிக்க தெரியாத அவர், ஒரு சொத்தை கைமாற்றியுள் ளார். அதற்கான தொகை வந்துள்ளது. அதோடு, வருமானவரித்துறை, தேர்தல் களத்தில் பண நடமாட்டம் குறித்து தகவல் தெரிவிக்கலாம் என விளம்பரம் செய்துள்ளது. அதை பார்த்துவிட்டு யாரோ தகவல் சொல்ல... அதன்படி ரெய்டு நடத்தி பணத்தை பறிமுதல் செய்துள்ளது. புடிக்கற பணமெல்லாம் எங்க பணம்ன்னு சொல்றது வேடிக்கையா இருக்கு'' என்கிறார்கள் தி.மு.க. தரப்பினர். ஆனாலும் வேட்டை தொடர்கிறது.
 

admk



இதனை எதிர்கொள்ள ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு முன்னாள் அமைச்சர் என பொறுப்புகளை தந்துள்ளது தி.மு.க. தலைமை. பொன்முடி, எ.வ.வேலு, முத்து சாமி ஆகியோர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிக்குள் வந்து முதல்கட்ட ஆலோசனைகளை முடித்துவிட்டு சென்றுள்ளனர். வழக்கறிஞர் அணியும் களமிறக் கப்பட்டுள்ளது. அமைப்புச் செய லாளர் ஆர்.எஸ்.பாரதி, சட்டத் துறை செயலாளர் சண்முகசுந்த ரம் தலைமையில் ஜூலை 14-ந் தேதி வேலூரில் ஒருங்கிணைந்த வழக்கறிஞர் அணி கூட்டத்தில், ""நம் கட்சி நிர்வாகிகளை குறி வைத்து காவல்துறை, வருமான வரித்துறை, தேர்தல் பறக்கும் படை என பலவற்றை களத்தில் இறக்கி பா.ஜ.க. உத்தரவில் அ.தி. மு.க. அரசாங்கம் நம்மை மட்டும் குறிவைத்துள்ளது. தேர்தல் களத் தில் பணியாற்றும் கட்சி நிர்வாகி களை பாதுகாப்பது நமது கடமை, அப்போதுதான் தேர்தல் வேலை தடையில்லாமல் நடக்கும், அதனால் வழக்கறிஞர் அணி கவனமாக இருக்கவேண் டும்'' என அறிவுறுத்தியுள்ளனர்.


படுவேகமாக களத்தில் தி.மு.க. இறங்கியுள்ள நிலையில், சில புலம்பல்களும் தி.மு.க.வில் இருந்து கேட்கின்றன. ""அ.தி.மு.க. அணியின் ஏ.சி.எஸ். டீம், வேலூர் மாவட்டத்தில் இயங்கும் சமூக வலைத்தள குழுமங்கள், மீம்ஸ் கிரியேட்டர் குழுக்களை வளைத்து லட்சங்களில் கவனித்து தி.மு.க. வையும், அதன் வேட்பாளரை யும் டேமேஜ் செய்யச் சொல்லியும், ஏ.சி.சண்முகத்தை புரமோட் செய்யச் சொல்லியுள்ளது. தி.மு.க. வில் வலிமையான இணையதள அணியிருந்தும் எங்களை பயன் படுத்திக்கொள்ள மறுக்கிறது'' என்கிறார்கள்.

ஏ.சி.சண்முகம், 6 சட்ட மன்ற தொகுதியிலும் ஒரு ரவுண்ட் வேட்பாளர் அறிமுக கூட்டத்தை முடித்துவிட்டு, பிரச்சாரக் களத்தில் இறங்கியுள்ளார். வேலூர் தொகுதியின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 14,26,991. இதில் வாணியம்பாடி, ஆம்பூர், பேரணாம்பட்டு, குடியாத்தம், பள்ளிகொண்டா, வேலூர் தொகுதிகளில் உள்ள இஸ்லாமிய வாக்குகள் சுமார் 3 லட்சம். வேலூர், குடியாத்தம், வாணியம் பாடி பகுதிகளில் பரவலாக வாழும் முதலியார் சமூக வாக்கு கள் மட்டும் 2 லட்சம், அணைக் கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம், வாணியம்பாடி பகுதிகளில் உள்ள வன்னியர் வாக்குகள் 3 லட்சம், குடியாத்தம், ஆம்பூர், கே.வி.குப் பம் பகுதிகளில் வாழும் நாயுடு வாக்குகள் 1.2 லட்சம், தலித் சமுதாய வாக்குகள் 3.2 லட்சம். மீதி பிற சமுதாய வாக்குகள்.

இதில் தனது முதலியார் சமூக வாக்குகள் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள ஏ.சி.சண் முகம், 3 லட்சம் வன்னியர் வாக்குகளைக் கவர வியூகம் வகுத் துள்ளார். தி.மு.க.வுக்கு விழும் நாயுடு வாக்குகளை நம் பக்கம் திருப்ப என்ன செய்யலாம் என ஆலோசனை நடத்தியுள்ளது ஏ.சி.சண்முகம் டீம். பா.ம.க.வுக்கு அதிக முக்கியத்துவம் தர்றார் எங்களை மதிக்கமாட்டேன்கிறார்' என தே.மு.தி.க. தரப்பில் அதிருப்தி வெளிப்படும் வேளையில், பா.ம.க. தரப்போ "எங்களை முன்புபோல கண்டு கொள்ளவில்லை' என்கிறது. அதுபோல "எங்களையும்தான் மதிக்கிறதில்லை' என்கிற குற்றச்சாட்டு பா.ஜ.க. தரப்பில் இருந்தும் எழுப்பப்படுகிறது. தொகுதியில் 3 லட்சம் இஸ்லாமிய வாக்குகள் உள்ளன. 

பா.ஜ.க.-அ.தி.மு.க. கூட்டணி என்பதால் அ.தி.மு.க.வில் உள்ள இஸ்லாமியர்களே அதிருப்தி யில் உள்ளனர். அதனால் பா.ஜ.க.வை ஒதுக்கிவைக் கிறோம் என்பதுபோல் ஒரு தோற்றத்தை உருவாக்குகிறது ஏ.சி.சண்முகம் டீம். அதற்கு பா.ஜ.க.வும் ஒத்துழைக்கிறது. உண்மையில் ஏ.சி.சண்முகம் வெற்றிக்காக அ.தி.மு.க.வைவிட பா.ஜ.க. தீவிரமாக உழைக்கிறது'' என்கிறார்கள் உள்விபரம் அறிந்தவர்கள். பணத்தை வாரித்தந்து தனக்கு ஆதரவு திரட்டுகிறார் ஏ.சி.சண்முகம். பணத்தை கட்சியினரின் கண்களுக்கு காட்ட மறுக்கும் தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த்தின் அப்பா துரைமுருகன், சில அமைப்புகளை தங்கள் பக்கம் இழுக்க சாமியார்களை பயன்படுத்தி வருகிறார்.

Next Story

'கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தேர்தல் முடிவு இருக்கும்'-துரை வைகோ நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
'The result of the election will be an kalaingar's birthday gift' - Durai Vaiko believes

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று(19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், ''தமிழகத் தேர்தல் முடிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக இருக்கும். தனக்காக பரப்புரை செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் தோழமை, கூட்டணி கட்சியினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இது ஜனநாயகத்திற்காக, மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான தேர்தல். அதேவேளையில் மத அரசியல் புரிந்து மக்களை பிளவுபடுத்தும் ஜாதி, மத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் பொழுது கலைஞரின் 101 வது பிறந்தநாள் பரிசாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது