Skip to main content

அ.தி.மு.க. கூட்டணி தேர்தலோடு முடிந்து போனது!அரசியல் நட்பு தேவையில்லை!

Published on 20/06/2019 | Edited on 20/06/2019

எடப்பாடி அரசு விவகாரங்களையும், அ.தி. மு.க. உள்கட்சி விவகாரங்களையும் சில மாதங்கள் நிர்மலாவும் கவனித்து வந்திருந்ததால் அவரிடம் அரசியல் ரீதியிலான பிரச்சனைகளை விவாதித்துள்ளார் எடப்பாடி. "இதனை அமித்ஷா அல்லது பியூஷ்கோயலிடம்தான் விவாதிக்க வேண்டும். உங்கள் மீதான நம்பிக்கை பிரதமரிடம் குறைந்திருக்கிறது அதனை சரி செய்யப் பாருங்கள். அமித்ஷா மட்டுமே உங்களுக்கு உதவ முடியும்' என அறிவுறுத்தியிருக்கிறார்.

 

admk



இதனையடுத்து, மறுநாள் (16-ந்தேதி) அமித்ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்து 20 நிமிடங்கள் விவாதித்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. இந்த சந்திப்பு குறித்து விசாரித்த போது, "தேர்தல் முடிவுகளுக்குப் பிறகும் ஓ.பி.எஸ்.சை மீண்டும் மரியாதைக்குரியவராகப் பார்க்கிறார் அமித்ஷா. அதே நேரத்தில், கொங்கு வேளாளர்கள் சமூகம்கூட எடப்பாடிக்கு ஆதரவாக இல்லை என்ற என்கிற முடிவுக்கு வந்துள்ளார். அதனால்தான், ஓ.பி.எஸ். மீது பரிவு காட்ட நினைக்கிறது பா.ஜ.க. தலைமை.

 

bjp



தமிழகத்தில் காலூன்ற நினைக்கும் பா.ஜ.க., உள்ளாட்சி தேர்தலில் கணிசமாக வெற்றி பெற்று தனது கணக்கை துவக்கத் திட்டமிடுகிறது. அதற்கு ஓ.பி.எஸ்.சை அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராக்கி அவரது தலைமையில் கூட்டணி அமைத்து உள்ளாட்சித் தேர்தலை சந்திக்கலாம் என ஆலோசித்துள்ளனர்.

 

admk



ஆனால், "அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தால் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுதான் நமக்கு கிடைக்கும். அந்தளவுக்கு மக்கள் விரோதத்தை சம்பாதித்துள்ளது எடப்பாடி அரசு. தனித்துப் போட்டியிட்டாலே ஓரளவு இடங்களில் பா.ஜ.க. ஜெயிக்கும்' என தமிழக பா.ஜ.க. தலைவர்களிடமிருந்து தரப்பட்ட ஆலோசனையால் கூட்டணியை முறித்துக்கொள்ளும் மூடில் இருக்கிறது பா.ஜ.க. தலைமை.

இதனையெல்லாம் உள்வாங்கிக் கொண்டுதான் அமித்ஷாவை சந்தித்தார் எடப்பாடி. அந்த சந்திப்பில், ஏற்கனவே அமைச்சர்கள் தங்கமணி-வேலுமணியிடம் எப்படி கடிந்துகொண்டாரோ அதே கோபத்தை எடப்பாடியிடமும் காட்டினார் அமித்ஷா. எடப்பாடியோ 2021 வரை தனது ஆட்சிக்கு ஆபத்தை மோடி தரமாட்டார் என்ற நம்பிக்கையில் இருந்தவர். அந்த நம்பிக்கையில் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தலின் போது கட்சியிலும் ஆட்சியிலும் தனது ஒற்றைத் தலைமைதான் இருக்க வேண்டும் என திட்டமிட்டிருக்கிறார். தற்போதைய சூழலில், மோடியும் அமித்ஷாவும் மனசு வைத்தால் மட்டுமே, சட்டச்சிக்கலும் கட்சியில் ஓ.பி.எஸ். எதிர்ப்பு இல்லாமலும் ஒற்றைத்தலைமையை கைப்பற்ற முடியும்ங்கிறது அவரது எண்ணம்.

 

admk



இது குறித்து அமித்ஷாவிடம் பேசிய எடப்பாடி, "இந்த ஆட்சி உங்களுக்கானது. அதிகாரிகள் தொடங்கி திட்டங்களை துவக்கி வைப்பது வரை எல்லாவற்றையும் நீங்களே முடிவெடுங்கள். அந்த முடிவை செயல்படுத்துபவராக மட்டுமே நான் இருக்கிறேன். புதிய தலைமைச்செயலாளர் மற்றும் டி.ஜி.பி. பதவிகளில் யாரை நியமிக்கலாம்ங்கிறது உங்கள் சாய்ஸ்தான். ஓ.பி.எஸ்.சை விட அதிக விசுவாசத்தை நான் உங்களுக்கு காட்டுகிறேன். அதனால் ஒற்றைத் தலைமையை எனக்கு கிடைக்க உதவுங்கள். நீங்கள் சொன்னால் மட்டுமே ஓ.பி.எஸ். அமைதியாவார்.


ஒற்றைத்தலைமைக்குள் நான் இருக்கும்பட்சத்தில், உள்ளாட்சித் தேர்தலில் நீங்கள் எதிர்பார்க்கும் வெற்றியை பா.ஜ.க.வுக்கு பெற்றுத்தர முடியும். கடந்த தேர்தல் போல தவறு நடக்காது. என்னை நம்புங்கள்' என கோரிக்கை வைத்திருக்கிறார் எடப்பாடி. அதற்கு அமித்ஷா, "அ.தி.மு.க. கூட்டணி தேர்தலோடு முடிந்து போனது. மீண்டும் புதுப்பிக்க வேண்டுமானால் பிரதமரிடம் பேச வேண்டும். மத்திய அரசு-மாநில அரசு என்பதைத்தாண்டி அரசியல் நட்பு தேவையில்லை என நினைக்கிறோம். ஆனாலும், ஒற்றைத் தலைமை குறித்து தங்கமணி மூலம் ஏற்கனவே உங்களுக்கு சொல்லப்பட்டதுதான். கட்சி-ஆட்சி இரண்டிலும் நீங்களே இருக்க முடியாது. ஆட்சியில் நீங்கள் இருந்துகொள்ளுங்கள். கட்சி தலைமைக்கு ஓ.பி.எஸ்.சை கொண்டு வாருங்கள்' என தெரிவித்திருக்கிறார் அமித்ஷா. இதனால் இந்த சந்திப்பிலும் எடப்பாடிக்கு மூடு அவுட் தான்''’ என்கின்றனர் அமைச்சர்களுக்கு நெருக்கமான அ.தி.மு.க. சீனியர்கள். மத்திய-மாநில உளவுத் துறை வட்டாரங்களிலும் இதனையொட்டியே தகவல்கள் எதிரொலிக்கின்றன.

டெல்லி பயணத்தின்போது, தமிழக டிஜி.பி. நியமனம் தொடர்பாக ஜாபர் சேட்டுக்குப் பரிந்துரைத்துப் பேசியிருக்கிறார் எடப்பாடி. சட்டமன்ற இடைத் தேர்தலில் ஆட்சியைத் தக்க வைக்கும் அளவுக்கு வெற்றி பெற்றதற்கான வியூகங்களையும் கள வேலைகளையும் கச்சிதமாக செய்தவர் ஜாபர் சேட் என்பதை டெல்லியிடம் எடப்பாடி வலியுறுத்திய போதும், அங்கிருந்து சரியான ரெஸ்பான்ஸ் கிடைக்கவில்லையாம். இதிலும் எடப்பாடிக்கு ஏமாற்றம் தான் என்கிறார்கள் டெல்லி பிரமுகர்கள்.

Next Story

“இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வி பெறும்” - பா.ஜ.க அமைச்சரின் வைரல் பேச்சு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை (24-04-24) முடிவடைந்தது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியடையும் என்று பா.ஜ.க அமைச்சர் ஒருவர் பேசியது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பஜன் லால் ஷர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பஜன் லால் ஷர்மா அமைச்சரவையில் மருத்துவத் துறை அமைச்சராக கஜேந்திர சிங் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க அமைச்சர் கஜேந்திர சிங் தனது ஆதரவாளர்களுடன் பேசியது தொடர்பாக வைரலான வீடியோவில், “முதற்கட்ட தேர்தலில் நாம் மோசமாக செயல்பட்டுள்ளோம். நாகௌர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியைத் தழுவும். நமது வாக்காளர்கள் வெளியே வரவில்லை. மற்ற இடங்களையும் இழக்கலாம்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இது பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

“தேர்தல் அறிக்கையை விளக்க வேண்டும்” - பிரதமரை சந்திக்க நேரம் கேட்ட கார்கே

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Kharge asked for time to meet PM for Election report should be explained

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 89 தொகுதிகளில் நாளை (26-04-24) நடைபெறவிருக்கிறது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. இதற்கிடையே, இந்தத் தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அந்தத் தேர்தல் அறிக்கை மூலம் காங்கிரஸ் பலரின் கவனத்தையும் தங்கள் பக்கம் ஈர்த்துள்ளது.

அதே வேளையில், இந்தத் தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி கடுமையாக விமர்சனம் செய்து சர்ச்சையாக பேசியிருந்தார். இது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு ராஜஸ்தானில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்கு கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. இதற்கு, காங்கிரஸ் உள்பட எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், பிரதமர் மோடிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 

Kharge asked for time to meet PM for Election report should be explained

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர், “பிரதமர் பயன்படுத்திய மொழியால் அதிர்ச்சியோ ஆச்சரியமோ இல்லை. முதல் கட்டத் தேர்தலில் பா.ஜ.க.வின் மோசமான செயல்பாட்டைப் பார்த்து நீங்களும், உங்கள் கட்சியைச் சேர்ந்த மற்ற தலைவர்களும் இப்படிப் பேசத் தொடங்குவீர்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. சூழலில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு சில வார்த்தைகளைப் பற்றிக் கொள்வதும், வகுப்புவாத பிளவை உருவாக்குவதும் உங்கள் வழக்கமாகிவிட்டது. . தாழ்த்தப்பட்ட ஏழைகள் மற்றும் அவர்களின் உரிமைகள் பற்றி காங்கிரஸ் பேசி வருகிறது. ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்கள் மீது உங்களுக்கும் உங்கள் அரசாங்கத்திற்கும், எந்த அக்கறையும் இல்லை என்பதை நாங்கள் அறிவோம்.

உங்கள் அரசாங்கம், கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக வேலை செய்கிறது. நீங்கள் வரிகளைக் குறைத்தீர்கள், அதே நேரத்தில் சம்பளம் பெறும் வர்க்கம் அதிக வரிகளை செலுத்துகிறது. உணவு மற்றும் உப்புக்கு கூட ஏழைகள் ஜி.எஸ்.டி செலுத்துகிறார்கள். மேலும், பணக்கார கார்ப்பரேட், ஜி.எஸ்.டி பணத்தைத் திரும்பக் கோருகின்றனர். அதனால்தான், பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான சமத்துவமின்மையைப் பற்றி நாங்கள் பேசும்போது, நீங்கள் அதை இந்து மற்றும் இஸ்லாமியர்களுடன் வேண்டுமென்றே சமன் செய்கிறீர்கள். 

எங்களின் தேர்தல் அறிக்கை இந்திய மக்களுக்கானது. அவர்கள் இந்துவாக இருந்தாலும், இஸ்லாமியராகவும் இருந்தாலும், கிறிஸ்தவராக இருந்தாலும், சீக்கியராக இருந்தாலும், ஜெயின் அல்லது பௌத்தராக இருந்தாலும் சரி. சுதந்திரத்திற்கு முந்தைய உங்களின் கூட்டாளிகளான முஸ்லிம் லீக் மற்றும் காலனி ஆதிக்கவாதிகளை நீங்கள் இன்னும் மறக்கவில்லை என்று நினைக்கிறேன்.

எங்களின் தேர்தல் அறிக்கையில் கூட எழுதப்படாத விஷயங்கள் குறித்து உங்கள் ஆலோசகர்களால் உங்களுக்கு தவறான தகவல் கொடுக்கப்படுகிறது. பிரதமராக நீங்கள் பொய்யான அறிக்கைகளை வெளியிட வேண்டாம் என்பதற்காக எங்கள் தேர்தல் அறிக்கையை விளக்குவதற்காக உங்களை நேரில் சந்திக்க இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.