Skip to main content

உதயகுமார் ஓவர் ஆக்ட்..! எட்டு மாதத்தில் அதிமுக படுதோல்வியை சந்திக்கும்..! வாகை சந்திரசேகர் பதிலடி..!

Published on 18/09/2020 | Edited on 18/09/2020
vagai chandrasekar

 

 

வேளச்சேரி திமுக எம்எல்ஏவும், நடிகருமான வாகை சந்திரசேகர் நக்கீரன் இணையதளத்திற்கு சிறப்பு பேட்டி அளித்தார். பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் அனைத்து வியூகங்களும் தோல்வியடையும் என்றும், அதிமுக மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் என்றும் கூறினார்.

 

மூன்று நாள் சட்டப்பேரவைக் கூட்டம் நடந்து முடிந்துள்ளது. மக்கள் பிரச்சனைகள் குறித்து விவாதிக்க மூன்று நாள் போதுமானதா? 

 

சபாநாயகர் தலைமையில் நடந்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் கலந்து கொண்டார். குறைந்தது 15 நாள் சட்டப்பேரவைக் கூட்டம் நடத்த வேண்டும் என்று எவ்வளவோ போராடி பார்த்தார். அப்போதுதான் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்க முடியும் என்று கேட்டதற்கு அவர்கள் அடம் பிடித்து மூன்றே நாளில் முடித்துவிட்டார்கள். முதல் நாள் இரங்கல் கூட்டத்தோடு முடிந்துவிட்டது. இரண்டாவது நாள் பெரியதாக எந்த விவாதத்தையும் அவர்கள் எடுத்துக்கொள்ளவில்லை. 

 

மிகவும் திட்டமிட்டே இதனை செய்ததுபோல் இருக்கிறது. கடந்த ஆறு மாதத்தில் ஏகப்பட்ட பிரச்சனைகள் நடத்திருக்கிறது. கரோனா விவகாரத்தில் ஏகப்பட்ட தவறுகள் நடந்திருக்கிறது. அதனை பட்டியலிடலாம் என திமுக இருந்தது. நீட் தேர்வு விவகாரத்தில் நிறைய தற்கொலைகள், அமைச்சர்கள் மீதான ஊழல் பிரச்சனைகள் உள்ளிட்டவைகளை திமுக எடுத்து வைக்கப்போகிறது என்பதாலும், திமுகவின் கேள்விகளுக்கு பயந்தும் மூன்றே நாளில் திட்டமிட்டு முடித்துவிட்டார்கள். விருந்தும் மருந்தும் மூன்று நாள் என பழமொழி சொல்வார்கள். இவர்கள் சட்டமன்றம் மூன்று நாள்தான் என்று புதிதாக சொல்லி முடித்துவிட்டார்கள். 

 

சட்டப்பேரவையில் நீட் விவகாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பேசியிருக்கிறாரே? 

 

ரொம்ப ஆவேசமாக பேசியதாலேயே பிரச்சனையை மூடி வைத்துவிடலாம் என நினைக்கிறார். முதல்வர் பேசிய ஆவேசத்தைவிட இந்த ஆட்சியைப் பார்த்து மக்கள் அதைவிட ஆவேசத்தோட தயாராக இருக்கிறார்கள். அந்த மக்களோட ஆவேசத்தின் முன்பு முதல்வரின் ஆவேசம் தோற்றுப்போகும். வரும் 2021 சட்டமன்றத் தேர்தலில் யாருடைய ஆவேசம் வெற்றி பெறும் என்று தெரிய வரும், மக்கள் தயாராக இருக்கிறார்கள். 

 

2021 சட்டமன்றத் தேர்தலில் திமுகவை வீழ்த்த அதிமுகவைவிட பாஜக அதிக வியூகம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறதே?

 

பாஜக தனியாக வியூகம் வகுத்தாலும், அதிமுக தனியாக வியூகம் வகுத்தாலும், இரண்டு கட்சிகளும் சேர்ந்து வியூகம் வகுத்தாலும், இன்னும் எல்லோரும் சேர்ந்து திட்டமிட்டாலும் 2021 சட்டமன்ற தேர்தலில் இவர்களின் அனைத்து வியூகங்களும் தோல்வியில்தான் முடிவடையும். இனிமேல்தான் இவர்கள் வியூகம் அமைத்து திட்டமிடப்போகிறார்கள். ஆனால் திமுக மக்களோடு மக்களாக இணைந்து தயாராக இருக்கிறோம். மக்களின் உணர்வுகளோடு இணைந்து இருக்கிறோம். தேர்தல் களம் பதில் சொல்லும், வெற்றி திமுகவுக்குத்தான்.

 

எட்டு மாதத்தில் திமுக ஆட்சி என பேசுகிறார்கள். திமுக பேசும் கதை, வசனம் மக்களிடம் எடுபடாது என அமைச்சர் உதயகுமார் பேசியிருக்கிறார்...

 

எங்க தலைவர் கலைஞரோட கதை, வசனம் எடுபட்டதால்தான் 50 ஆண்டுகாலம் கழித்தும் இன்றும் மனோகரா, பராசக்தி வசனத்தை பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல கதை, வசனத்தின் மூலமாக தமிழர்களுடைய பெருமையையும், பகுத்தறிவு சிந்தனைகளையும், அரசியல் சிந்தனைகளையும் மக்களுக்கு எடுத்துச் சென்றார். 

 

ஆனால் உதயகுமார் இப்போது திரைக்கதை, வசனம், நடிப்பு எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து மக்கள் மத்தியில் காட்டுகிறார். இவரைப்போல் நாங்கள் ஓவர் ஆக்ட் பண்ணவில்லை. யதார்த்த வாழ்க்கையை அவர்கள் கண்முன் காட்டும் கண்ணாடியைப்போலத்தான் திமுக இருக்கிறது. எட்டு மாதத்தில் திமுக வெற்றி பெறுவதுமட்டுமல்ல, எட்டு மாதத்தில் திமுகவின் மாபெரும் வெற்றியையும் பார்க்கப்போகிறீர்கள். அதிமுகவின் மிகப்பெரிய தோல்வியையும் பார்க்கப்போகிறீர்கள்.



எட்டு மாதத்தில் திமுக மாபெரும் வெற்றியடைவதோடு, அதிமுக மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் என்று வாகை சந்திரசேகர் மிக உறுதியாக கூறியிருக்கிறார். அதிமுகவின் நிர்வாகிகள் கூட்டம் இன்று மாலை நடக்க உள்ளது. இதில் 2021 சட்டமன்றத் தேர்தல் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகிறது. தேர்தல் களம் சூடு பிடித்தள்ள நிலையில் மக்களின் தீர்ப்பே இறுதியானது என்பதால் பொறுத்திருப்போம். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பா.ஜ.க வேட்பாளரின் நாடகம் அம்பலம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
BJP candidate's play exposed in kerala

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், இரண்டாம் கட்டமாக வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலை எதிர்கொள்ள கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான தேர்தல் பிரச்சாரம் இன்று (23-04-24) மாலையுடன் நிறைவடையவுள்ளது.

அந்த வகையில், கேரளா மாநிலம், கொல்லம் மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க சார்பில் பிரபல மலையாள நடிகர் கிருஷ்ணகுமார் போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் அந்த தொகுதி முழுவதும் கிருஷ்ணகுமார் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். அதன்படி, கொல்லம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட குந்த்ரா பகுதியில் உள்ள சந்தையில் இரு தினங்களுக்கு முன்பு அங்குள்ள மக்களிடம் வாக்கு சேகரித்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு கிருஷ்ணகுமாரின் கண்ணில் கூர்மையான ஆயுதம் பட்டு பலத்த காயம் ஏற்பட்டது.

BJP candidate's play exposed in kerala

இதனையடுத்து, காயமடைந்த அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு கிருஷ்ணகுமாரின் கண்ணில் தையல் போட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையே, எதிர்க்கட்சியினர் தாக்கியதில் கண்ணில் காயம் ஏற்பட்டதாக பா.ஜ.க வேட்பாளர் கிருஷ்ணகுமார் புகார் கூறினார். இது தொடர்பாக கிருஷ்ணகுமார் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் கூறியதாவது, “கேரளாவின் கொல்லம் குந்த்ராவில் எனது மக்களவைத் தொகுதியில் பிரச்சாரத்தின் போது எனக்கு எதிர்க்கட்சிகளின் தாக்குதலால் கண்ணில் காயம் ஏற்பட்டது. இந்த நேரத்தில் உங்கள் பிரார்த்தனைகள் மற்றும் ஆதரவு எனக்கு எப்போதும் இருக்கிறது. நன்றி” எனத் குறிப்பிட்டு கண்ணில் பிளாஸ்திரியுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டார்.

இது தொடர்பாக, குந்திரா போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அதில், கிருஷ்ணகுமார் கலந்துகொண்ட தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட பா.ஜ.க தொண்டர் சனல் என்பவரை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர், தவறுதலாக பா.ஜ.க வேட்பாளர் கிருஷ்ணகுமாரின் கண்களை சாவியால் குத்திவிட்டதாக வாக்குமூலம் அளித்தார்.

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.