Skip to main content

உதயகுமார் ஓவர் ஆக்ட்..! எட்டு மாதத்தில் அதிமுக படுதோல்வியை சந்திக்கும்..! வாகை சந்திரசேகர் பதிலடி..!

Published on 18/09/2020 | Edited on 18/09/2020
vagai chandrasekar

 

 

வேளச்சேரி திமுக எம்எல்ஏவும், நடிகருமான வாகை சந்திரசேகர் நக்கீரன் இணையதளத்திற்கு சிறப்பு பேட்டி அளித்தார். பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் அனைத்து வியூகங்களும் தோல்வியடையும் என்றும், அதிமுக மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் என்றும் கூறினார்.

 

மூன்று நாள் சட்டப்பேரவைக் கூட்டம் நடந்து முடிந்துள்ளது. மக்கள் பிரச்சனைகள் குறித்து விவாதிக்க மூன்று நாள் போதுமானதா? 

 

சபாநாயகர் தலைமையில் நடந்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் கலந்து கொண்டார். குறைந்தது 15 நாள் சட்டப்பேரவைக் கூட்டம் நடத்த வேண்டும் என்று எவ்வளவோ போராடி பார்த்தார். அப்போதுதான் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்க முடியும் என்று கேட்டதற்கு அவர்கள் அடம் பிடித்து மூன்றே நாளில் முடித்துவிட்டார்கள். முதல் நாள் இரங்கல் கூட்டத்தோடு முடிந்துவிட்டது. இரண்டாவது நாள் பெரியதாக எந்த விவாதத்தையும் அவர்கள் எடுத்துக்கொள்ளவில்லை. 

 

மிகவும் திட்டமிட்டே இதனை செய்ததுபோல் இருக்கிறது. கடந்த ஆறு மாதத்தில் ஏகப்பட்ட பிரச்சனைகள் நடத்திருக்கிறது. கரோனா விவகாரத்தில் ஏகப்பட்ட தவறுகள் நடந்திருக்கிறது. அதனை பட்டியலிடலாம் என திமுக இருந்தது. நீட் தேர்வு விவகாரத்தில் நிறைய தற்கொலைகள், அமைச்சர்கள் மீதான ஊழல் பிரச்சனைகள் உள்ளிட்டவைகளை திமுக எடுத்து வைக்கப்போகிறது என்பதாலும், திமுகவின் கேள்விகளுக்கு பயந்தும் மூன்றே நாளில் திட்டமிட்டு முடித்துவிட்டார்கள். விருந்தும் மருந்தும் மூன்று நாள் என பழமொழி சொல்வார்கள். இவர்கள் சட்டமன்றம் மூன்று நாள்தான் என்று புதிதாக சொல்லி முடித்துவிட்டார்கள். 

 

சட்டப்பேரவையில் நீட் விவகாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பேசியிருக்கிறாரே? 

 

ரொம்ப ஆவேசமாக பேசியதாலேயே பிரச்சனையை மூடி வைத்துவிடலாம் என நினைக்கிறார். முதல்வர் பேசிய ஆவேசத்தைவிட இந்த ஆட்சியைப் பார்த்து மக்கள் அதைவிட ஆவேசத்தோட தயாராக இருக்கிறார்கள். அந்த மக்களோட ஆவேசத்தின் முன்பு முதல்வரின் ஆவேசம் தோற்றுப்போகும். வரும் 2021 சட்டமன்றத் தேர்தலில் யாருடைய ஆவேசம் வெற்றி பெறும் என்று தெரிய வரும், மக்கள் தயாராக இருக்கிறார்கள். 

 

2021 சட்டமன்றத் தேர்தலில் திமுகவை வீழ்த்த அதிமுகவைவிட பாஜக அதிக வியூகம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறதே?

 

பாஜக தனியாக வியூகம் வகுத்தாலும், அதிமுக தனியாக வியூகம் வகுத்தாலும், இரண்டு கட்சிகளும் சேர்ந்து வியூகம் வகுத்தாலும், இன்னும் எல்லோரும் சேர்ந்து திட்டமிட்டாலும் 2021 சட்டமன்ற தேர்தலில் இவர்களின் அனைத்து வியூகங்களும் தோல்வியில்தான் முடிவடையும். இனிமேல்தான் இவர்கள் வியூகம் அமைத்து திட்டமிடப்போகிறார்கள். ஆனால் திமுக மக்களோடு மக்களாக இணைந்து தயாராக இருக்கிறோம். மக்களின் உணர்வுகளோடு இணைந்து இருக்கிறோம். தேர்தல் களம் பதில் சொல்லும், வெற்றி திமுகவுக்குத்தான்.

 

எட்டு மாதத்தில் திமுக ஆட்சி என பேசுகிறார்கள். திமுக பேசும் கதை, வசனம் மக்களிடம் எடுபடாது என அமைச்சர் உதயகுமார் பேசியிருக்கிறார்...

 

எங்க தலைவர் கலைஞரோட கதை, வசனம் எடுபட்டதால்தான் 50 ஆண்டுகாலம் கழித்தும் இன்றும் மனோகரா, பராசக்தி வசனத்தை பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல கதை, வசனத்தின் மூலமாக தமிழர்களுடைய பெருமையையும், பகுத்தறிவு சிந்தனைகளையும், அரசியல் சிந்தனைகளையும் மக்களுக்கு எடுத்துச் சென்றார். 

 

ஆனால் உதயகுமார் இப்போது திரைக்கதை, வசனம், நடிப்பு எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து மக்கள் மத்தியில் காட்டுகிறார். இவரைப்போல் நாங்கள் ஓவர் ஆக்ட் பண்ணவில்லை. யதார்த்த வாழ்க்கையை அவர்கள் கண்முன் காட்டும் கண்ணாடியைப்போலத்தான் திமுக இருக்கிறது. எட்டு மாதத்தில் திமுக வெற்றி பெறுவதுமட்டுமல்ல, எட்டு மாதத்தில் திமுகவின் மாபெரும் வெற்றியையும் பார்க்கப்போகிறீர்கள். அதிமுகவின் மிகப்பெரிய தோல்வியையும் பார்க்கப்போகிறீர்கள்.



எட்டு மாதத்தில் திமுக மாபெரும் வெற்றியடைவதோடு, அதிமுக மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் என்று வாகை சந்திரசேகர் மிக உறுதியாக கூறியிருக்கிறார். அதிமுகவின் நிர்வாகிகள் கூட்டம் இன்று மாலை நடக்க உள்ளது. இதில் 2021 சட்டமன்றத் தேர்தல் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகிறது. தேர்தல் களம் சூடு பிடித்தள்ள நிலையில் மக்களின் தீர்ப்பே இறுதியானது என்பதால் பொறுத்திருப்போம். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.

Next Story

தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் கடிதம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
MLAs letter to Chief Electoral Officer Satyapratha Sahu

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து தமிழ்நாட்டில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 69.72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக கடந்த 21 ஆம் தேதி (21.04.2024) அறிவித்திருந்தது. அதில் அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 81.20 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.96 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்தனர். இதன் ஒருபகுதியாக அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகள், பெயர்பலகைகள், எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்களின் அலுவலகங்கள் சீல் வைக்கப்பட்டன.

இந்நிலையில் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிற்கு எம்.எல்ஏ.க்கள் கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில், “தேர்தல் முடிந்து ஒரு வாரம் ஆகிவிட்டதால் மக்கள் பணியாற்ற எம்.எல்.ஏ அலுவலகங்களை திறக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர். இது குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விரைவில் முடிவெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.