Skip to main content

ஸ்ரீப்ரியாவின் கணவராக நடிக்கணுமா வேணாம்... ரஜினி பற்றி வெளிவராத தகவல்! 

Published on 08/11/2019 | Edited on 08/11/2019

பிரபல தயாரிப்பாளரும் இயக்குனருமான டி.என்.பாலு ஸ்ரீப்ரியாவை ஹீரோயினாகப் போட்டு, ‘"ஓடி விளையாடு தாத்தா'’என்ற படத்தை ஆரம்பித்தார். அதில் ஸ்ரீப்ரியாவிற்கு கணவராக யாரை நடிக்க வைக்கலாம் என்ற பேச்சு ஓடியபோது, அப்போது வில்லனாக இருந்த ரஜினியை சிபாரிசு செய்து, ரஜினியிடமும் பேசியுள்ளார் ஸ்ரீப்ரியா. அப்போது வளரும் நடிகராக இருந்தபோது, அந்த கேரக்டரை ஏற்க மறுத்துவிட் டார் ரஜினி. அதேபோல் ஸ்ரீப்ரியாவின் சொந்தப் படமான "நீயா?'’ படத்திலும் பல கதாநாயகர்களில் ஒருவராக நடிக்க மறுத்துவிட்டார் ரஜினி.அப்போது நமது நக்கீரனிலிருந்து வெளிவந்துகொண்டிருந்த "ரஜினி ரசிகன்'’மாத இதழுக்காக, ரஜினியின் ஒவ்வொரு படத்தின் பிரத்யேக ஸ்டில்களை அட்டையிலும் ப்ளோ-அப்பாகவும் வெளியிடுவது வழக்கம். "ரஜினி ரசிகன்' இதழுக்காக ரஜினியும் ஸ்பெஷல் போஸ்கள் கொடுப்பார். 

 

actor



இதனால் ரஜினி ரசிகர்களிடையே ரஜினி ரசிகனுக்கு ஏகோபித்த வரவேற்பு. அந்த வகையில் "பாட்ஷா' ’படத்தின் புது கெட்டப் ஸ்டில்ஸ் எடுக்க விரும்பி, விஜயா வாஹினி ஸ்டுடியோவிற்குச் சென்றிருந்தோம். படத்தில் ரஜினி எண்ட்ரியாகும் "ஆட்டோக்காரன்... ஆட்டோக்காரன்' பாடல் காட்சி எடுப்பதற்காக செட் போட்டு ஏராளமான ஆட்டோக்களும் வந்திருந்தன. நாம் சென்ற நேரம் லஞ்ச் பிரேக் என்பதால், மேக்- அப் அறையில் சிறிது ஓய்வில் இருந்தார் ரஜினி. நாம் வந்த விஷயத்தை அப்போது ரஜினியிடம் உதவியாளராக இருந்த ஜெயராமனிடம் சொன்னோம். அரைமணி நேரம் கழிச்சு சாரிடம் கேட்டுவிட்டு சொல்றேன்'' என்றார் ஜெயராமன். 

 

actress



சொன்னபடியே அரைமணி நேரம் கழித்து ரஜினியிடம் தகவல் சொல்ல, மாடியிலிருந்து இறங்கி வந்த ரஜினி நம்மைப் பார்த்ததும், ""வந்து ரொம்ப நேரமாச்சா, சாப்ட்டீங்களா'' என அன்புடன் விசாரித்ததும், "சார் இந்த கெட்டப்புல (ஆட்டோ டிரைவர்) உங்கள ஸ்டில்ஸ் எடுக்கணும்'' என்றோம்."ஓ.கே. தாராளமா எடுங்க, அதுக்கு முன்னால டைரக்டர்கிட்ட பெர்மிஷன் வாங்கிருங்க. ஷாட் பிரேக்ல எடுத்துக்கலாம்'' என்றார் ரஜினி. நாமும் டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணாவிடம் சென்று, "ஸ்டில்ஸ் எடுக்க ரஜினி சார் உங்ககிட்ட பெர்மிஷன் வாங்கச் சொன்னார்'' என்றோம். "அட ஏன் சார் நீங்க வேற, இதுக்கெல்லாமா என்கிட்ட பெர்மிஷன் வாங்கணும். சாருக்கு ஓ.கே.ன்னா நோ பிராப்ளம்'' என்றார். அதன் பின்தான் தென்னை மரத்தடியிலும் ஆட்டோவுக்கு அருகிலும் நின்று விதம்விதமாக போஸ் கொடுத்தார் ரஜினி. இதுதான் ரஜினியின் உயர்ந்த பண்பு, டைரக்டர்களுக்கு தரும் மரியாதை. ‘"வீரா', "மன்னன்', "படையப்பா'’படங்களின் ஷூட்டிங்கின்போதும் இதேபோன்ற அனுபவம் நமக்கு ஏற்பட்டது.

 

 

Next Story

‘டிஜிட்டல் இந்தியா’ - அதிர்ச்சி அனுபவத்தைப் பகிர்ந்த நடிகை

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
hina khan beggar incident

பாலிவுட்டில் தொலைக்காட்சி தொடர்களிலும், நிகழ்ச்சிகளிலும் மற்றும் ஆல்பம் வீடியோக்களிலும் நடித்து வருகிறவர் நடிகை ஹினா கான். மேலும் டேமேஜ்டு 2 வெப் சீரிஸிலும் நடித்துள்ளார். இவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் யாசகர் ஒருவரின் செயல் குறித்து பதிவிட்டிருந்தார். அது தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

அந்தப் பதிவில், “நான் சிக்னலில் கிரீன் சிக்னலுக்காக காத்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு நபர் என் கார் கதவை தட்டினார். கொஞ்சம் பணம் கொடுத்து உதவ முடியுமா என்று கேட்டார். என்னிடம் பணம் இல்லை என்றேன். வீட்டில் தம்பி, தங்கைகள் இருக்கிறார்கள். தயவு செய்து ஏதாவது உதவுங்கள் என்றார். நான் மீண்டும் என்னிடம் பணம் இல்லை. ஸாரி என்றேன். கூகுள் பே இருக்கு மேடம். அந்த நம்பர் தருகிறேன் என்றார். அது எனக்கு அதிர்ச்சியளித்தது. 

பின்பு அவருக்கு கூகுள் பே மூலம் பணம் அனுப்ப முயற்சிக்கும் போது, ஒரு வாரத்துக்கான ரேஷன் பொருட்கள் வாங்க பணம் அனுப்புங்க மேடம் என்றார். இது என்னை மேலும் அதிர்ச்சியாக்கியது. டிஜிட்டல் இந்தியா தற்போது சிறந்ததாக இருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

குழந்தை விவகாரம் - நடிகை கைது!

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
sonu srinivas.gowda child issue

பெங்களூரைச் சேர்ந்தவர் கன்னட நடிகை சோனு ஸ்ரீநிவாஸ் கௌடா. கன்னட பிக் பாஸ் போட்டியில் கலந்து கொண்டதன் மூலமும் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டும் பிரபலமானவராக இருந்து வருகிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து ரீல்ஸ் வீடியோ வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கும் அவர், அவ்வப்போது ஒரு பெண் குழந்தையுடன் இருக்கும்படியும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வந்தார். அந்த குழந்தையை அவர் தத்தெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

இந்த நிலையில் அக்குழந்தையை சட்ட விரோதமாக சோனு ஸ்ரீனிவாஸ் கௌடா தத்தெடுத்துள்ளதாக குழந்தைகள் நலத்துறை சார்பில் காவல் துறையில் புகாரளிக்கப்பட்டுள்ளது. மேலும் அக்குழந்தையின் அடையாளத்தை நடிகை வெளிப்படுத்தியதாகவும், மார்ச் மாதம் தேர்வு இருந்தும் குழந்தையை பள்ளிக்கு அனுப்பாமல் இருந்ததாகவும் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு குழந்தை தத்தெடுக்கும் நடைமுறையில், குழந்தைக்கும் தத்தெடுப்பவருக்கும் 25 வயது இடைவெளி இருக்க வேண்டும் என சட்டம் இருக்கும் நிலையில் அக்குழத்தைக்கு 8 வயது என்றும் நடிகைக்கு 29 என்றும் மனுவில் மேற்கோள்காட்டப்பட்டுள்ளது.  

இந்த புகாரின் அடிப்படையில் நடிகையை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அவரை விசாரித்த போது, குழந்தை தத்தெடுக்கும் முறையை முழுமையாக பின்பற்றவில்லை என்று ஒப்புகொண்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது. பின்பு நடிகையை 4 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதித்துள்ளது.