Skip to main content

"10 பேர் செல்பி எடுப்பாங்கன்னு நம்பித்தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்"

Published on 10/07/2019 | Edited on 10/07/2019

ஒரே டயலாக்கில் உலக ஃபேமஸ் ஆனவர் நடிகர் டேனியல். பிக் பாஸ் இரண்டில் இவர்கலந்து கொண்டு அடித்த லூட்டிகள் ஏராளம். சில மாதங்களுக்கு முன் திருமணம் செய்த அவர், பிக் பாஸ் 3 பற்றி நம்மோடு மனம் திறந்து பேசினார். நம்முடைய கேள்விகளுக்கு  அவருக்கே  உரிய காமெடியுடன் அவர் பதிலளித்தார்.

பிக் பாஸ் மூன்றாவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி யாருக்காவது பலன் தந்துள்ளதா? பலன் தருகின்ற மாதிரிதான் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறுகிறார்கள். நீங்கள் இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இருக்கிறீர்கள், இதனால் நீங்கள் ஏதாவது பலன் அடைந்தீர்களா?

இந்த நிகழ்ச்சிக்கு யாரும் சும்மா போறதில்லை. ஏன்னா இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்கிற அனைவரும் ஏதாவது ஒரு வேலையில் இருக்காங்க. அதிகமா மீடியா ரிலேட்டடா வேலை செய்கிறார்கள். மீடியாவில் வேலை செய்யும் எங்களுக்கு தினக்கூலினு ஒன்னு இருக்கு. எல்லா மீடியா ஆட்களுக்கும் அது இருக்கும். முக்கியமா நடிகர், நடிகைகளுக்கு இருக்கும். எங்களையும் தினக்கூலி அடிப்படையில் தான் கூப்பிடுவாங்க. நீங்க பிக்பாஸ் ஷோவில் நடிங்கன்னு கூப்பிடமாட்டாங்க. அங்கவந்து இருங்கன்னு கூப்பிடுவாங்க. நீங்க வெளியில் இருந்தா எவ்வளவு சம்பாதிப்பீங்களோ அதை நாங்க கொடுக்குறோம், எங்க கண்டிஷன் படி இந்த நிகழ்ச்சியில் நீங்கள் இருக்கனும்னு சொல்லித்தான் கூப்பிடுவாங்க. வெளியில நாம என்ன சம்பாதிக்கிறமோ அதைதான் சம்பளமா கொடுப்பாங்க, மக்கள் நினைக்கிற மாதிரி கோடி ரூபாய் சம்பளம் கொடுத்து யாரையும் கோடீஸ்வர் ஆக்க மாட்டாங்க. 

அங்க போனா பிரபலம் அடையலாம் என்கிற வாய்ப்பை நீங்கள் பெரிதா நினைக்க வில்லையா?

ரொம்ப முக்கியமான விஷயங்களை கூட ஊடகங்கள், இரண்டு மூன்று நாட்களுக்கு மேல பேசறது இல்லை. நீங்க இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் கிட்டதட்ட 100 நாட்கள் தொலைக்காட்சியில் தெரிய போறீங்க. உங்களை பிடிக்குதோ இல்லையோ, நூறு நாட்கள் உங்களை பார்த்து பழகிடுறாங்க. இதுதான் உண்மை. இதனால் தான் நல்ல ரீச் கிடைக்கும் என்கிற காரணத்தால் எங்களை மாதிரியான போட்டியாளர்கள் அதில் கலந்து கொள்கிறார்கள்.
 

  Actor Daniel speaks about bigg boss 3


பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற வையாபுரி, இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்றால் நிறைய வாய்ப்பு வரும்னு சொன்னாங்க, ஆனா நான் சும்மாதான் இருக்கேன்னு சொல்லியிருக்காரே?

எனக்கும் அந்த நிலைமை இருந்தது, இந்த நிகழ்ச்சி மூலம் கிடைக்கிற பிரபலத்தன்மை, பாக்கெட்டை நிரப்புமானா அது தெரியாது. வெளியில் போனா, பி்க் பாஸ் டேனியல் போறாருனு நாலு பேரு கிட்ட வந்து பேசுவாங்க, பத்து பேரு செல்பி எடுத்துப்பாங்க, அவ்வளவுதான். பொருளாதார தேவையை எல்லாம் இது ஒன்னும் பெரிய அளவில் தீர்க்காது.
 

 

பணம் வரலை, ஆனா மன ரீதியா ஏதாவது மாற்றம் ஏற்பட்டதா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு?

பிரதர், நான் உலகத்துக்கு வந்து முப்பது வருஷம் ஆகுது, இத்தனை வருடத்தில் எங்க அப்பா, அம்மா சொல்லாத விஷயமா, என் காதலி சொல்லாத விஷயமா, என்னுடைய மனைவி சொல்லாத விஷயமா, நண்பர்கள் சொல்லாத விஷயத்தையா இந்த நூறு நாட்களில் புதுசா சொல்லித் தர போறாங்க. அது ஒரு கேம் ஷோ. நாளைக்கு வெளியில் வந்தா ஒரு நூறு பேரு செல்பி எடுப்பாங்களேன்னு ஒரு ஆர்வத்துல தான் உள்ளே போறோம். 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சாண்டி தன்னுடைய மகளை பார்த்து அழுத காட்சிகள் வந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் எல்லாரும் அழுதுகிட்டு தான் அதிகம் இருப்பாங்களா?

நீங்க அந்த தொலைக்காட்சியோட எல்லா நிகழ்ச்சியையும் வைத்து சொல்றீங்கன்னு நினைக்கிறேன். ரியாலிட்டி ஷோ அப்படிதான் நடக்கும். நான் அந்த நிகழ்ச்சிக்காக சில சேஞ்ச் பண்ணிக்கிட்டேன், நான் நிறைய கெட்ட வார்த்தை பேசுவேன். அதை எல்லாம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதால் குறைத்துக்கொண்டேன். 10 கோடி பேர் அதை பாக்குறாங்க, அவங்களிடம் நான் ஏன் கெட்டவன்னு காட்டனும். இப்ப திரும்பவும் என் நண்பர்களிடம் கெட்ட வார்த்தை பேசிக்கிட்டு ஜாலியா இருக்கேன்.

இந்த நிகழ்ச்சியில் ஒருவரை மட்டும் டார்கெட் செய்து பேசுவது எதை காட்டுகிறது?

 

நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறவர்கள் எல்லாம் போட்டியாளர்கள். சும்மா சொல்லுவாங்க, நீங்க என் அப்பா மாதிரி இருக்கீங்க, அம்மா மாதிரி இருக்கீங்கன்னு, எல்லாம் பொய். 15 பேரையும் எலிமினேட் செய்யத்தான் போறாங்க, ஒருத்தர்தான் ஜெயிக்க போறாங்க. அதனால், இதெல்லாம் பெருசா எடுத்துக்க வேண்டிய அவசியமில்லை.

தமிழ்நாட்டில் நிறைய பிரச்சனை இருக்கு, இளைஞர்களுக்கு வேலை இல்லை. சென்னையில் யாருக்கும் தண்ணீர் சரியா கிடைக்கவில்லை, இந்த மாதிரி சூழ்நிலையில் பிக் பாஸ் தேவையானு கேட்பவர்களுக்கு உங்களுடைய பதில் என்ன? 

இந்த மாதிரி கேள்வி கேட்பவர்களே ஒன்பது மணி ஆனா முதல் ஆளா பிக் பாஸ் பார்க்க ஆரம்பித்து விடுகிறார்கள். அதை நானே நேரா பார்த்திருக்கேன். 10 கோடி ஓட்டு எப்படி வருது, ஒன்று ஓட்டு பொய்யா இருக்கனும், இல்ல எப்படி பாக்குறீங்கன்னு கேக்கறவங்க எல்லாம் முதல் ஆளா அந்த நிகழ்ச்சியை பார்க்கனும், எது உண்மை என்று இதுவரைக்கும் தெரியல. 

 

Next Story

“ஒரு ஆண் என்னிடம் பேசினால் மற்ற ஆண்கள்...”- சர்ச்சையாகும் மீராமிதுனின் வீடியோ

Published on 15/10/2019 | Edited on 15/10/2019

பிக்பாஸ் போட்டியில் கலந்துகொண்ட போட்டியாளர் மீராமிதுன். ஏற்கனவே பல சர்ச்சைகளில் சிக்கியுள்ள நிலையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள வீடியோ புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  
 

meera mithun

 

 

அதில் , “ஏன் 'வீ ஆர் தி பாஸ்' என்ற நிகழ்ச்சியை பண்ணினார்கள் எனத் தெரியவில்லை. பிபி ஹவுஸில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இருவருமே இருந்தோம். ஆண்களை வைத்துத் தான் இந்த ஷோவே நடந்தது போல் காட்டியுள்ளார்கள். மும்பையில் ஷூட்டிங்கில் பிஸியாக இருப்பதால், நான் அந்த நிகழ்ச்சியைப் பார்க்கவில்லை. ஆனால், ட்விட்டர் பக்கத்தில் அந்நிகழ்ச்சியில் என்னைக் கிண்டல் செய்ததாகக் என்னுடைய ரசிகர்களும், நண்பர்களும் கூறினார்கள்.

தமிழ்நாட்டில் சிலர் என்னை இழிவாகப் பேசித் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சிலர் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் இந்த 4 ஆண்களும் இணைந்திருப்பது எனக்குப் பெரிய விஷயமாகத் தெரியவில்லை. அந்த நால்வருமே என் பின்னால் தான் வீட்டிற்குள் சுத்திக் கொண்டிருந்தார்கள். அவர்கள் யாருக்குமே தில் கிடையாது. வீட்டிற்குள்ளேயே என்னை அப்படிப் பார்ப்பார்கள். அவர்கள் கோழைகள். என்னிடம் பேசுவதற்குக் கூட மற்ற பெண்களுக்குத் தெரியாமல் பயந்து பயந்து பேசுவார்கள். என்னுடன் ஒரு நாள் பேசுவார்கள், அதற்குமேல் பேசினால் அவர்களுக்கு பெண்களின் ஓட்டு கிடைக்காது என்பதால் இப்படி செய்வார்கள். ஒரு ஆண் என்னிடம் பேசினால் மற்ற ஆண்களுக்கு பொறாமை வரும் அப்படி இருந்தார்கள். அந்த வீட்டிற்குள் நடைப்பதை நன்கு கவனித்தவர்களுக்கு நான் சொல்வது புரியும்.

உங்கள் யாருக்குமே என்னைப் பற்றிப் பேசவில்லை என்றால் புகழே கிடையாது. நான் தான் மிகவும் புகழ் வாய்ந்தவள். அந்த 4 ஆண்களுக்குமே எனது புகழைப் பற்றித் தெரியும். ஆகையால் தான் நால்வரும் எனக்காக அடித்துக் கொண்டார்கள். 

சமூக வலைதளத்தில் என்னை திருநங்கை என்று கிண்டல் செய்வது, பீர் அடிக்கிறேன்,என்னை கருப்பு என்று கேலி பேசுவது எல்லாம் எந்த கூட்டம் செய்கிறது என்பது எனக்கு தெரியும். நீங்கள் அதையே தொடர்ந்து செய்யுங்கள். தமிழ்நாட்டில் எனக்கு என்ன புகழ் இருக்கிறது என்பது எனக்கு தெரியும். இனி நான் தினசரி ஒரு வீடியோ போட்டு அடிச்சிட்டே இருப்பேன். எனக்கு என்ன புகழ் இருக்கிறது என்றா கேள்வி எழுப்புகிறீர்கள். தமிழ்நாட்டில் இருக்கின்ற ஹீரோ, ஹீரோயின்களைவிட எனக்கு நேஷனல் மற்றும் இண்டர்நேஷனல் லெவலுக்கு புகழ் இருக்கிறது. இதை நான் எங்குவேண்டுமானாலும் எழுதி தருகிறேன். அவங்களெல்லாம் தமிழ்நாடு தாண்டினா யாருக்குமே தெரியாது. அவங்க என்ன மிஞ்சிபோனா படம்தான நடிக்கிறாங்க, ஆனால் எனக்கு நேஷனல், இண்டர்நேஷனல் லெவல் புகழ் இருக்கிறது. என்னுடைய பெருமையை நானே பீற்றிக்கொள்ளக்கூடாது என இருந்தேன். இந்த ஆறு வருடம் நான் பாசிடிவ் பப்ளிசிட்டியில் இருந்தேன். அதை உடைக்க வேண்டும் என்றே சிலர் என்னுடைய பெயரை முழுதாக டேமேஜ் செய்திருக்கிறார்கள். எல்லாத்துக்கும் அடி கொடுத்துட்டே இருப்பேன்” என்று கூறியுள்ளார். 

 

 

Next Story

சாண்டியை தூக்கிவைத்து கொஞ்சிய சிம்பு... வைரலாகும் வீடியோ

Published on 08/10/2019 | Edited on 08/10/2019

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி நூறு நாட்களை கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று முடிவடைந்துவிட்டது. மலேசியாவை சேர்ந்த தமிழரான முகின் இந்த மூன்றாம் சீசனின் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மக்களிடம் பிரபலமடைந்த சாண்டி இரண்டாவது இடத்தை பிடித்தார்.
 

simbu


இந்த மூன்றாம் சீசன் பிக்பாஸ் போட்டி தொடங்கியதில் இருந்து மக்களிடம் பேராதர்வை பெற்று வந்தவர் டான்ஸ் மாஸ்டர் சாண்டி. அவரும் கவினும் சேர்ந்து பாடு பாடல்கள் எல்லாம் வெளியே செம வைரலானது. அவர் பிக்பாஸை குருநாதா என்று கூப்பிடுவது வைரலாகி, டீசர்ட்டாக சேல் ஆனது. சாண்டியின் புகழால் அவருடைய மகளுக்கு வெளியே லாலா ஆர்மி கூட உருவாக்கப்பட்டது. அந்தளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமானவர்.
 

ff


சாண்டி மாஸ்டர் சிம்புவின் நெருங்கிய நண்பர். சினிமாவில் டான்ஸ் மாஸ்டராக தனக்கு முதலில் வாய்ப்பு கொடுத்தவரும் சிம்புதான் என்று சிம்பு போலவே பேசி அசத்தினார். இந்நிலையில் சிம்புவை நேரில் சந்தித்துள்ளார் சாண்டி மாஸ்டார். அப்போது தன்னுடன் சக போட்டியாளராக பங்குபெற்ற தர்ஷனையும் உடன் அழைத்து சென்றிருந்தார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது. மேலும் தன்னை பார்க்க வந்த இருவருக்கும் ஒரு புத்தகத்தை பரிசாக கொடுத்துள்ளார்.
 

dfgzsgd


இதுவரை சிம்புவின் நெருங்கிய நண்பர்களான ஹரிஷ் கல்யாண், மகத் உள்ளிட்டவர்கள் கடந்த இரண்டு பிக்பாஸில் கலந்துகொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.