Skip to main content

கொலைச்சதிக்கு பயப்படாத பிரதமர் யார் தெரியுமா?

Published on 04/05/2019 | Edited on 04/05/2019

“மேடம் உங்கள் மீது காலிஸ்தான் தீவிரவாதிகள் கோபமாக இருக்கிறார்கள். சீக்கியர்களை உங்கள் பாதுகாப்புக்கு வைக்க வேண்டாம்” என்று உளவுத்துறை அதிகாரிகள் பிரதமர் இந்திராவிடம் கூறினார்கள்.
 

indira gandhi

 

 

1984 ஜூன் மாதம் 1 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதிவரை சீக்கியர்களின் புனித ஸ்தலமான பொற்கோவிலுக்குள் இந்திய ராணுவம் அதிரடியாக நுழைந்தது. கோவிலை ஆக்கிரமித்திருந்த காலிஸ்தான் தீவிரவாதிகளின் தலைவர் பிந்தரன்வாலே உள்ளிட்ட தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றது. சீக்கிய மத குருமார்கள் அடங்கிய தலைமை பீடமான குருத்வாராவை கைப்பற்றுவதற்கு பிந்தரன்வாலேவுக்ுக உதவியவர்தான் இந்திரா.
 

ஆனால், அவருடைய அட்டூழியம் இந்தியாவுக்கு எதிராக திரும்பி, பாகிஸ்தானைப் போல சீக்கியர்களுக்கு காலிஸ்தான் என்ற தனிநாடு வேண்டும் என்கிற அளவுக்கு போயிற்று. அதுமட்டுமின்றி, வழிபாட்டுத் தலத்தையே ஆயுதக்கிடங்காக பயன்படுத்தும் அளவுக்கு சென்றனர்.
 

எனவேதான், ராணுவ நடவடிக்கைக்கு உத்தரவிட்டார் இந்திரா. இது சீக்கியர்கள் மத்தியிலேயே ஒரு பகுதியினர் அதிருப்திக்கு காரணமாக மாறியது. இந்நிலையில்தான், 1984 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி பிரதமர் இந்திரா தனது பாதுகாப்புப் படை வீரர்களாக இருந்த இரண்டு சீக்கியர்களின் துப்பாக்கிக் குண்டுகளால் சல்லடைக்கண்களாக துளைக்கப்பட்டு கொல்லப்பட்டார்.
 

சீக்கிய பாதுகாவலர்கள் அவருடைய பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டதை அறிந்த உளவுத்துறை அதிகாரிகள் இந்திராவை எச்சரிக்கை செய்தார்கள். ஆனால், அவர்களுடைய எச்சரிக்கையை இந்திரா புறக்கணித்தார். 
 

narendra modi

 

 

“எனது நாட்டு வீரர்களை நானே நம்பாமல் போனால், பிறகு யார் நம்புவார்கள்?” என்று கேட்டார் இந்திரா.
 

ஆனால், இப்போதும் இந்தியாவின் பிரதமராய் இருக்கிறார் ஒருவர். அவரோ இல்லாத ஒரு தகவலை அவரே பீதியைக் கிளப்பும் வகையில் பரப்பிக்கொண்டிருக்கிறார்.
 

ஆம், இந்தத் தேர்தலோடு அவராகவே காலாவதி ஆகப்போகிற நிலையில், தன்னை கொல்ல காங்கிரஸ் திட்டம் போட்டுள்ளதாக கூசாமல் மேடைகளில் பேசுகிறார் மோடி.
 

எந்த அளவுக்கு மோடியை மிகப்பெரிய சூராதி சூரன், நிர்வாகப்புலி என்பது உள்ளிட்ட பல்வேறு மாயைகளை கட்டமைத்து பிரதமராக்கினார்களோ, அந்த அளவுக்கு காமெடிப் பீசாக தன்னை வெளிப்படுத்தி கூவிக்கொண்டிருக்கிறார் மோடி! மோடியை பில்டப் செய்ய பயன்படுத்தப்பட்ட சமூக வலைத்தளங்களே இப்போது அவரை காமெடியனாக்கிவிட்டன.

 

 

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

Next Story

வெறுப்பு பிரச்சாரம்; மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டி போராட்டம் (படங்கள்)

Published on 24/04/2024 | Edited on 24/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, வெறுப்பு பிரச்சாரம் செய்துவரும்  பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவும், வழக்கு பதிவு செய்திடவும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் மத்திய சென்னை மாவட்டம் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை கண்டனம் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. பிறகு நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க, பேரணியாக சென்றனர்.