Skip to main content

ஒரு நிமிடம் அபிராமி நினைத்து பார்த்திருக்கலாம்...!!!

Published on 03/09/2018 | Edited on 03/09/2018
Abirami may have been thinking for a minute ... !!!


சென்னை குன்றத்தூரை அடுத்த மூன்றாம் கட்டளையில் நடந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது. தான் பெற்ற இரண்டு குழந்தைகளை கொன்று, கணவனையும் கொல்ல திட்டமிட்டிருந்த அபிராமியின் படு பயங்கரமான கொடூர செயல்தான் அது. 
 

"காதலித்துதான் திருமணம் செய்து கொண்டோம்.  என் கணவர் எப்போதும் வேலையிலேயே அக்கறையாக இருப்பார். சில நேரம் இரவு வீட்டுக்கு வர மாட்டார். இவ்வாறு கணவர் நடந்து கொண்டதால் அவர் மீது வெறுப்பு வந்தது. இந்த சமயத்தில்தான் பிரியாணி கடையில் வேலை செய்யும் சுந்தரத்தின் பழக்கம் ஏற்பட்டது" என போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார் அபிராமி.
 

கொலை நடந்த பிறகு அபிராமி சென்ற ஸ்கூட்டி, கொலை நடந்த வீடு, குழந்தைகளுடன் அபிராமி இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்த்தால் அவரது கணவர் எந்த குறையும் வைக்கவில்லை என்பது தெரிகிறது. 
 

'வேலை வேலை என்று பறக்காவிட்டால், அபிராமி இப்படி வசதியாக வாழ்ந்திருக்க முடியுமா? தினமும் பிரியாணி ஆர்டர் செய்திருக்க முடியுமா?' என்ற கேள்வியும் எழுகிறது. தனக்காகத்தான் வேலை வேலை என்று தனது கணவர் பறந்தார் என ஒரு நிமிடம் அபிராமி நினைத்து பார்த்திருக்கலாம்...
 

டூவீலர், கார், ஏ.சி., ப்ரிட்ஜ், வாஷிங்மிஷின், எல்இடி டிவி, விலை உயர்ந்த செல்போன் உள்ளிட்டவைகள் ஒரு காலத்தில் ஆடம்பரமாக இருந்தவைகளெல்லாம் இன்று அத்தியாவசியமாகிவிட்டது. உறவினர்கள், நண்பர்களைப் போல நாமும் பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும் வீடு, நிலம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் கணவன் - மனைவி இருவருக்குமே உண்டு என்பதில் மாற்றுக் கருத்து இல்லை... வேலை வேலை என ஆண்கள் பறப்பதற்கு காரணம் இன்றைய சமூக நிலை. இன்று பெரும்பாலான குடும்பங்களில் கணவன் - மனைவி இருவருமே வேலைக்காக பறக்கின்றனர். 
 

அதே நேரத்தில் ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும் குடும்ப விஷயங்கள் உள்பட பல்வேறு விஷயங்களை சந்தோஷமாக பகிர்ந்து கொள்வதற்காக தனது மனைவிக்காக, தனது கணவருக்காக நேரத்தை ஒதுக்க வேண்டும் என்பதுதான் இத்தகைய சம்பவங்கள் சொல்லும் பாடம். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழப்பு

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
6-year-old boy lost their live in private college bus crash

நாமக்கல்லில் தனியார் கல்லூரி பேருந்து மோதி ஆறு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஈரோடு சாலையில் உள்ள  தோட்ட வாடி கிராமத்தில் உள்ள பேருந்து நிலைய பகுதியில் கூட்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவர் இருசக்கர வாகனத்தில் தன்னுடைய 6 வயது மகனுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்திற்குப் பின்புறம் வந்த தனியார் கல்லூரி பேருந்து எதிர்பாராத விதமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 6 வயது சிறுவன் தலை நசுங்கி உயிரிழந்தார். தந்தை சதீஷ்குமாரின் கை முறிந்து துண்டானது.

இந்தச் சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்த, உடனடியாக அங்கு வந்த போலீசார் சிறுவனின் உடலைக் கைப்பற்றி  பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்தப் பகுதிகளில் காலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதாகவும், அந்த நேரத்தில் தனியார் பேருந்துகள் மிகுந்த வேகத்துடன் செல்வதால் சாலைத் தடுப்பு, வேகத்தடை ஆகியவற்றை அமைத்துக் கொடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்செங்கோடு காவல் நிலைய போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த குழந்தைக்கு நேர்ந்த சோகம்!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Tragedy of the child who fell into the borehole

மத்திய பிரதேசம் மாநிலம் ரேவா என்ற மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் திறந்தவெளி ஆழ்துளைக் கிணறு ஒன்று அமைக்கட்டுள்ளது. இதில் 6 வயது குழந்தை ஒன்று கடந்த 12 ஆம் தேதி (12.04.2024) தவறி விழுந்தது. இந்த குழந்தையை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. அப்போது ரேவா மாவட்ட ஆட்சியர் பிரதிபா பால் கூறுகையில், ‘ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். ஆழ்துளைக் கிணற்றின் ஆழம் 70 அடி ஆகும். 50 அடி ஆழம் தோண்டிய பின் கேமரா மூலம் கிடைத்த தகவலின் படி குழந்தை 45 முதல் 50 அடி ஆழத்தில் சிக்கியிருக்கலாம் என தெரிய வருகிறது. தேசிய பேரிடர் மீட்புப்படையினர் குழந்தையை மீட்க கிடைமட்டமாக சுரங்கம் தோண்டி வருகின்றனர்’ எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 6 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். சுமார் 70 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் 40 அடி ஆழத்தில் சிக்கியிருந்த சிறுவனை மீட்கும் பணியில் இரண்டு நாட்களாக தீயணைப்பு துறை, பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டனர். இருப்பினும் உயிரிழந்த நிலையில் சிறுவனின் உடல் சடலமாக நேற்று (14.04.2024) மீட்கப்பட்டது.

இது குறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விவேக் லால் சிங் கூறுகையில், “தேசிய பேரிடர் மீட்புப்படையினர், போலீஸ், உள்ளூர் மக்கள் மற்றும் உள்ளூர் நிர்வாகத்தினர் ஆகியோர் சிறுவனை மீட்க சுமார் 45 மணிநேரம் கடுமையாக உழைத்தோம். ஆனால் எங்களால் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.