Skip to main content

பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தாரா அபிநந்தன் ?

Published on 17/04/2019 | Edited on 17/04/2019

“விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமன் வெளிப்படையாக பாஜகவுக்கு ஆதரவு கொடுத்தது மட்டுமில்லாமல் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாக்குச் செலுத்தி இருக்கிறார். அந்த வாக்கு சாவடியில் இருந்துகொண்டு அவர் தெரிவித்தது ‘நரேந்திர மோடியைவிட சிறந்த பிரதமர் யாரும் இல்லை’என்றார். நண்பர்களே, ஜிஹாதிஸும் காங்கிரஸாரும் பாக் பிடியில் சிக்கிக்கொண்ட வீரர்களை இந்தியாவுக்கு திரும்பி அழைத்து வராது. ஆனால், அபிநந்தன் இந்தியா திரும்பியது மட்டுமில்லாமல் நரேந்திர மோடிக்கு வாக்குச் செலுத்தியிருக்கிறார். அபிநந்தன், உங்களை வரவேற்கிறோம்” என்ற பதிவுடன் விங் கமாண்டர் அபிநந்தனை போல இருக்கும் ஒருவரின் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. 
 

abi

 

 

அந்த புகைப்படத்தில் இருப்பது அபிநந்தனா என்கிற கேள்வி பலருக்கு எழுந்திருக்கிறது. ஆனால், பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்திருப்பது போல அந்த புகைப்படத்தில் இருப்பதால் பாஜக சமூக வலைதள பக்கங்கள், பாஜக ஆதரவாளர்கள் என அனைவரும் இதை பகிர்ந்து வருகின்றனர். சிலர் இது நிஜம் என்று நம்பி விங் கமாண்டரை விமர்சிக்கவும் செய்கின்றனர். ஆனால், இது உண்மையா என்று ‘ஸ்க்ரோல்’ பத்திரிகை அபிநந்தன் புகைப்படத்தையும், வைரலாக பரவிய புகைப்படத்தை வைத்தும் சரி பார்த்துள்ளது. 
 

ஏன் ஒரு விங் காமண்டர் ஒரு தனிக்கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கக் கூடாதா? எதற்கு இதை இவ்வளவு பெரிய பிரச்சனையாக்குகிறார்கள் என்றூ சிலர் கேட்கலாம். இந்திய விமானப்படையில் பணி புரியம் வீரர்கள் யாரும் அரசியல் கட்சிகளுக்கு பிரச்சாரம் மேற்கொள்ள கூடாது. விமானப்படை விதிமுறைகளின்படி 1969ஆம் ஆண்டிலிருந்து வீரர்கள் யாரும் பணியிலிருக்கும்போது அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
 

அபிநந்தனின் சாதாரண புகைப்படத்தையும், சமூக வலைதளத்தில் வைரலாக பரவும் இரு படங்களையும் வைத்து ஒப்பிட்டு பார்ப்போம்...
 

abinandhan

 

 

அபிநந்தனுக்கு உதட்டிற்கு கீழ் மச்சம் ஒன்று இருக்கிறது. வைரலாக பரவும் படத்தில் மச்சம் இல்லை.
 

வைரல் படத்தில் வலது கண்ணுக்கு கீழே ஒரு மச்சம் இருக்கிறது. அபிநந்தன் படத்தில் அந்த மச்சம் இல்லை.
 

அபிநந்தன் புகைப்படத்தில் அவருடைய முகவாய் நேராக இருக்கிறது. ஆனால், பாஜக ஆதரவாளர் என்று சொல்லப்படுபவரின் புகைப்படத்தில் அதுபோல இல்லை.
 

இறுதியாக இரண்டு படங்களை சற்று உத்துப்பார்த்தால் அபிநந்தன் புகைப்படத்திற்கும் பாஜக ஆதரவாளர் என்று சொல்லப்படுபவரின் புகைப்படத்திற்கும் வேறுபாடுகள் இருக்கிறது.  

 

 

 

 

 

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.