Skip to main content

பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தாரா அபிநந்தன் ?

Published on 17/04/2019 | Edited on 17/04/2019

“விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமன் வெளிப்படையாக பாஜகவுக்கு ஆதரவு கொடுத்தது மட்டுமில்லாமல் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாக்குச் செலுத்தி இருக்கிறார். அந்த வாக்கு சாவடியில் இருந்துகொண்டு அவர் தெரிவித்தது ‘நரேந்திர மோடியைவிட சிறந்த பிரதமர் யாரும் இல்லை’என்றார். நண்பர்களே, ஜிஹாதிஸும் காங்கிரஸாரும் பாக் பிடியில் சிக்கிக்கொண்ட வீரர்களை இந்தியாவுக்கு திரும்பி அழைத்து வராது. ஆனால், அபிநந்தன் இந்தியா திரும்பியது மட்டுமில்லாமல் நரேந்திர மோடிக்கு வாக்குச் செலுத்தியிருக்கிறார். அபிநந்தன், உங்களை வரவேற்கிறோம்” என்ற பதிவுடன் விங் கமாண்டர் அபிநந்தனை போல இருக்கும் ஒருவரின் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. 
 

abi

 

 

அந்த புகைப்படத்தில் இருப்பது அபிநந்தனா என்கிற கேள்வி பலருக்கு எழுந்திருக்கிறது. ஆனால், பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்திருப்பது போல அந்த புகைப்படத்தில் இருப்பதால் பாஜக சமூக வலைதள பக்கங்கள், பாஜக ஆதரவாளர்கள் என அனைவரும் இதை பகிர்ந்து வருகின்றனர். சிலர் இது நிஜம் என்று நம்பி விங் கமாண்டரை விமர்சிக்கவும் செய்கின்றனர். ஆனால், இது உண்மையா என்று ‘ஸ்க்ரோல்’ பத்திரிகை அபிநந்தன் புகைப்படத்தையும், வைரலாக பரவிய புகைப்படத்தை வைத்தும் சரி பார்த்துள்ளது. 
 

ஏன் ஒரு விங் காமண்டர் ஒரு தனிக்கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கக் கூடாதா? எதற்கு இதை இவ்வளவு பெரிய பிரச்சனையாக்குகிறார்கள் என்றூ சிலர் கேட்கலாம். இந்திய விமானப்படையில் பணி புரியம் வீரர்கள் யாரும் அரசியல் கட்சிகளுக்கு பிரச்சாரம் மேற்கொள்ள கூடாது. விமானப்படை விதிமுறைகளின்படி 1969ஆம் ஆண்டிலிருந்து வீரர்கள் யாரும் பணியிலிருக்கும்போது அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
 

அபிநந்தனின் சாதாரண புகைப்படத்தையும், சமூக வலைதளத்தில் வைரலாக பரவும் இரு படங்களையும் வைத்து ஒப்பிட்டு பார்ப்போம்...
 

abinandhan

 

 

அபிநந்தனுக்கு உதட்டிற்கு கீழ் மச்சம் ஒன்று இருக்கிறது. வைரலாக பரவும் படத்தில் மச்சம் இல்லை.
 

வைரல் படத்தில் வலது கண்ணுக்கு கீழே ஒரு மச்சம் இருக்கிறது. அபிநந்தன் படத்தில் அந்த மச்சம் இல்லை.
 

அபிநந்தன் புகைப்படத்தில் அவருடைய முகவாய் நேராக இருக்கிறது. ஆனால், பாஜக ஆதரவாளர் என்று சொல்லப்படுபவரின் புகைப்படத்தில் அதுபோல இல்லை.
 

இறுதியாக இரண்டு படங்களை சற்று உத்துப்பார்த்தால் அபிநந்தன் புகைப்படத்திற்கும் பாஜக ஆதரவாளர் என்று சொல்லப்படுபவரின் புகைப்படத்திற்கும் வேறுபாடுகள் இருக்கிறது.  

 

 

 

 

 

Next Story

“இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வி பெறும்” - பா.ஜ.க அமைச்சரின் வைரல் பேச்சு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை (24-04-24) முடிவடைந்தது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியடையும் என்று பா.ஜ.க அமைச்சர் ஒருவர் பேசியது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பஜன் லால் ஷர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பஜன் லால் ஷர்மா அமைச்சரவையில் மருத்துவத் துறை அமைச்சராக கஜேந்திர சிங் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க அமைச்சர் கஜேந்திர சிங் தனது ஆதரவாளர்களுடன் பேசியது தொடர்பாக வைரலான வீடியோவில், “முதற்கட்ட தேர்தலில் நாம் மோசமாக செயல்பட்டுள்ளோம். நாகௌர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியைத் தழுவும். நமது வாக்காளர்கள் வெளியே வரவில்லை. மற்ற இடங்களையும் இழக்கலாம்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இது பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.