Skip to main content

'மிசா சர்ச்சை' ஆதாரத்தை ஜெயகுமாருக்கு ரோட்டோரமா வந்து கொடுக்க கூட தயார் - அப்துல்லா தடாலடி!

Published on 12/11/2019 | Edited on 12/11/2019

ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டது தொடர்பாக தற்போது பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், இதுதொடர்பாக அக்கட்சியை சேர்ந்த இணையதள பிரிவு நிர்வாகி அப்துல்லாவிடம் நாம் பல்வேறு கேள்வியை முன்வைத்தோம். நம் கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,

திமுக தலைவர் ஸ்டாலின் அவசரகால கட்டத்தில் சிறைக்கு சென்று உண்மை தான், ஆனால் மிசா  சட்டத்தின் கீழ் அவர் சிறைக்கு செல்லவில்லை என்றும், ஷா கமிஷன் அறிக்கையில் அவர் பெயர் இல்லை என்று சிலர் கூறுவதை பற்றி உங்களின் கருத்து என்ன?


மிகத் தகவறான ஒரு கருத்தை வேண்டும் என்றே பரப்ப முயற்சிக்கிறார்கள். கைதாகவில்லை என்று கூறும் அவர்கள்தானே முதலில் ஆதாரத்தை காட்ட வேண்டும். உங்கள் மீது ஒருவர் குற்றச்சாட்டு கூறினால் அவர்கள் தானே முதலில் ஆதாரத்தை காட்ட வேண்டும். குற்றச்சாட்டு கூறுபவர் ஆதாரத்தை காட்டாமல்  யார் மீது குற்றம்சாட்டுகிறமோ அவர்களே ஆதாரத்தை காட்டி தங்களை குற்றமற்றவர் என்று நிரூபித்துக் கொள்ளுங்கள் என்பது எந்தவகையில் நியாயம். அவர் மிசாவில் கைதாகவில்லை என்றால் எந்த வழக்கிற்கு சிறை சென்றார் என்று கூற வேண்டியதானே? எங்களிடம் அவர் மிசாவில் சிறை சென்றதற்கு ஏராளமான ஆதாரங்கள் இருக்கிறது. அது அனைத்தையும் தற்போது காட்டுகிறேன். முதலில் ஷா கமிஷன் அறிக்கையை பற்றி கூறுகிறா்கள்.  அது எப்போது அமைக்கப்பட்டது அதன் வரலாறு என்ன என்று அதை பற்றி பேசுபவர்கள் தெரிந்து கொண்டு பேச வேண்டும்.
 

 

gf



அந்த ஆணையம் ஜனதா அரசு அமைந்த பிறகு நெருக்கடி கால கொடுமைகளை அறிந்து கொள்ளும் பொருட்டு அமைக்கப்பட்ட ஆணையம். அந்த ஆணையம் விசாரணை செய்துவந்த நிலையில், அதற்குள் இந்திரா காந்தி மீண்டும் ஆட்சி பொறுப்புக்கு வருகிறார். அவர் வந்த பிறகு, அந்த ஆணைய அறிக்கைகளை அழித்து முடிந்ததுதான் அவர்களின் முழு வேலையாக இருந்தது.  இப்போது விக்கிபீடியாவில் தேடி பார்த்தால் கூட அது பற்றிய எந்த தகவலும் இருக்காது. இப்போது காட்டப்படும் அறிக்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செழியன் அவர்கள் வெளியிட்ட ஆவணத்தை காட்டுகிறார்கள். 80களில் முடிந்த போன ஒரு சம்பவத்தை அவர் 2010 ஆம் ஆண்டில் என் வீட்டில் ஷா கமிஷன் அறிக்கையின் சில பகுதிகள் இருப்பதாக கூறி அதனை அத்வானியை கொண்டு புத்தகமாக வெளியிட்டார். அதை பதிப்பிக்க பல்வேறு நிறுவனங்களும் முதலில் மறுத்தன அதன் உண்மையை தன்மையை காரணம் காட்டி. அதில் பாஜக, ஜனதா உறுப்பினர்களின் தகவல்கள் மட்டுமே இருக்கிறது. 

மிசாவில் ஸ்டாலின் கைது செய்யப்பட்டது தொடர்பாக வேறு எந்த மாதிரியான ஆதாரங்கள் உங்களிடம் உள்ளது? 

இதுதொடர்பாக அப்போது நீதிபதி இஸ்மாயில் தலைமையில் தமிழக  அரசு ஆணையம் ஒன்றை அமைத்தது. அந்த விசாரணை ஆணையம் தாக்கல் செய்துள்ள அறிக்கைதான் இது. இதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது. இண்டாவது பெயராக ஸ்டாலின் அவர்களுடைய பெயர் இருக்கிறதே? இதை இல்லை என்று சொல்வார்களா? வேண்டும் என்றே அவருக்கு எதிராக தவறான தகவல்களை பரப்புகிறார்கள். இதெல்லாம் காலத்தின் முன் காணாமல் போகிவிடும். மிசா என்று யாருக்காது ஞாபகம் வருகிறது என்றால் அப்போது அனிச்சை செயலாக ஸ்டாலின் அவர்களுடைய பெயர் நினைவிற்கு வரும். எனவே அவர்களின் எந்த விளையாட்டும் அவரிடம் எடுபடபோவதில்லை. இது அரசாங்கத்தை கையில் வைத்திருக்கும் அவர்களுக்கு தெரியாதா? அமைச்சர் ஜெயகுமாருக்கு தெரியாதா? அரசு அவண காப்பகத்திற்கு சென்று பணம் கட்டினால் யாரும் இதனை வாங்கிக் கொள்ளலாம். இல்லை ஜெயகுமாரின் அலுவலகத்திற்கு கொண்டுவந்து கொடுக்க சொன்னாலும் நான் தர தயார். அல்லது ரோட்டோரமா வர சொன்னாலும் வந்து தர தயாராக இருக்கிறேன்.

 

Vijayan


 

Next Story

கோவையில் ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா-திமுக புகார்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
DMK complains about BJP payment through GPay in Coimbatore

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை தொகுதியில் பாஜகவினர் ஜிபே மூலம் பண பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து திமுக புகார் எழுப்பியுள்ளது. பிரச்சாரம் முடிந்தவுடன் வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்றவில்லை என திமுக குற்றம் சாட்டியுள்ளது. கோவை அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தங்கி ஜிபே மூலம் பணம் பட்டுவாடா செய்து பாஜகவுக்கு வாக்களிக்கும்படி கோரி வருகின்றனர் எனவும், சென்னையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், கிருஷ்ணகுமார், கரூரை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் பணம் பட்டுவாடா செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தியுள்ளது.

Next Story

“மகத்தான வெற்றியை ஈட்டுவோம்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
We will achieve great success says CM MK Stalin 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது.

இந்நிலையில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் திமுக சார்பில் வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறவிருக்கும் இந்தியாவின் 18ஆவது நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளும் புதுச்சேரியின் ஒரு மக்களவைத் தொகுதியும் உள்ளடங்கிய 102 தொகுதிகளிலும் நடைபெறுகிறது. இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை அறிவித்த நாளிலிருந்து உடன்பிறப்புகளாம் நீங்கள் அனைவரும் களத்தில் இறங்கிப் பணியை மேற்கொண்டு, தோழமைக் கட்சியினருடன் ஒருங்கிணைந்து, மிகக் குறைந்த கால அவகாசத்திற்குள் வாக்காளர்களைச் சந்தித்து ஆதரவைப் பெற்று, வெற்றியை உறுதி செய்து, தேர்தல் பணியில் தி.மு.க.வினரை மிஞ்ச எவரும் கிடையாது என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறீர்கள்.

மார்ச் 22ஆம் தேதி திருச்சியில் எழுச்சிகரமாகத் தொடங்கிய உங்களில் ஒருவனான என்னுடைய பரப்புரைப் பயணம் ஏப்ரல் 17 அன்று தமிழ்நாட்டின் தலைநகருக்குள் அடங்கிய தென்சென்னை - மத்திய சென்னை தொகுதிகளில் மக்களின் உணர்ச்சிகரமான முழக்கங்களுடன் நிறைவடைந்திருக்கிறது. நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன். களத்தில் நமக்குக் கிடைத்துள்ள ஆதரவு, வாக்குகளாகப் பதிவாகி, வெற்றியாக வெளிப்படும் என்பதில் உறுதியுடன் இருக்கிறேன். அந்த நம்பிக்கையும் உறுதியும் நிறைவேற, வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19 அன்று கழகத்தினர் மிகுந்த கவனத்துடன் செயலாற்ற வேண்டும். அப்போதுதான், இத்தனை நாள் பாடுபட்டது பயன் தரும். 

We will achieve great success says CM MK Stalin 

தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்ய வேண்டிய கடமைக் கழகத் தொண்டர் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. மாவட்டக் கழகச் செயலாளர்கள் தொடங்கி கிளைக் கழக நிர்வாகிகள் வரை தங்களுக்கான பணிகளைத் திட்டமிட்டுக்கொண்டு செயலாற்றுவதுடன், வாக்குச்சாவடிப் பணிகளில் ஈடுபடக்கூடிய பாக முகவர்கள், வாக்குச்சாவடி முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள்தான் வாக்குப்பதிவு நாளின் முன்களப் பணியாளர்கள். முழுமையான போர் வீரர்கள். இதில் வாக்குச்சாவடி முகவர்கள், மாற்று முகவர்கள் ஆகியோர் வாக்குப்பதிவு தொடங்கி நிறைவடையும் வரை விழிப்புடன் செயலாற்ற வேண்டிய பணியில் இருப்பதால், அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை முழுமையாக அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.

அதற்கான பயிற்சியினை நமது கழகச் சட்டத்துறையின் உதவியுடன் ஏற்கனவே வழங்கியுள்ள நிலையில், வாக்குப்பதிவு நாளன்று மறக்காமல் மேற்கொள்ள வேண்டிய கடமைகளை நினைவூட்ட விரும்புகிறேன். காகித வாக்குச் சீட்டுக்குப் பதில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பொதுமக்கள் வாக்களிப்பதால், நாம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளும், கவனிக்க வேண்டிய நடைமுறைகளும் நிறைய உள்ளன. அவை நம் தி.மு.கழகத்தின் சட்டத்துறை சார்பில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் மூலமாக உங்களிடம் கையேடாக வழங்கப்பட்டிருக்கும். 

We will achieve great success says CM MK Stalin 

அவற்றைக் கவனத்தில் கொண்டு வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்படவேண்டும். பாக முகவர்கள் உள்ளிட்ட கழகத்தின் தேர்தல் பணிகளை மேற்கொள்வோர் இவை ஒவ்வொன்றையும் உறுதி செய்யவேண்டும். வாக்குப்பதிவில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் சரியாக அமைந்தால்தான் வாக்கு எண்ணிக்கையின்போது கழகக் கூட்டணியின் முழுமையான வெற்றி உறுதியாகும். விரைந்து களப்பணியாற்றி, வியர்வை சிந்தி விதைத்தவை அனைத்தும் அறுவடையாகும் நாள்தான் வாக்குப்பதிவு நாள். அதனால் மிகுந்த விழிப்புடன் பணியாற்றுங்கள். வாக்குரிமையை நிலைநாட்டுவோம். மகத்தான வெற்றியை ஈட்டுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.