Skip to main content

“நேருவை ஒதுக்கிவிட்டு சாவர்க்கருக்கு மரியாதையா?” - இள. புகழேந்தி காட்டம் 

Published on 31/05/2023 | Edited on 31/05/2023

 

"Abandon the Nehru film.. Respect for Savarkar?" - young. Pugahendi Ghattam

 

புதிய பாராளுமன்றக் கட்டடம் திறப்பு மற்றும் செங்கோல் நிறுவியது உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் குறித்து திமுகவின் தேர்தல் பணிக் குழுச் செயலாளர் இள. புகழேந்தி நம்முடன் பேசினார். 

 

புதிய பாராளுமன்றத் திறப்பு விழாவில் பேசிய பிரதமர் மோடி, எம்.பி.க்களின் எண்ணை உயர உள்ளதால் புதிய நாடாளுமன்றம் அதற்கேற்ப இருக்கைகள் அதிகரிக்கப்பட்டு அமைக்கப்பட்டுள்ளது என்கிறாரே?

 

“இந்திய சுதந்திரத்துக்கு எதிராகவும் ஆங்கிலேயர்களுக்கு துணையாகவும் கடைசி கால  கட்டத்தை கழித்த சாவர்க்கர் பிறந்த தினத்தை முன்னிட்டு இந்த புதிய பாராளுமன்றத்தின் திறப்பு விழா நடைபெற்றுள்ளது. பல ஆண்டுகள் சிறையிலேயே தங்கள் வாழ்நாட்களை கழித்த நேரு போன்றோர் எத்தனையோ தலைவர்களை ஒதுக்கி, மகாத்மா காந்தி கொலை வழக்கில் ஏ1 குற்றவாளியாக தேடப்பட்ட சாவர்க்கர் படத்தை வணங்கி இந்த பாராளுமன்றத்தை திறந்து வைத்துள்ளார்கள். இது ஜனநாயக படுகொலையாகவும் இந்திய இறையாண்மையை தீங்கு விளைவிப்பதாகவும் பார்க்கப்படுகிறது.

 

சீனாவை விட 135 கோடிக்கு மேல் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக தற்போது இந்தியா வளர்ந்து வருகிறது. இதன் அடிப்படையில் இந்தியாவில் உள்ள  தொகுதிகளை பிரிப்பதற்காக தான் அதிக இருக்கைகள் கொண்ட புதிய பாராளுமன்றம் கட்டப்பட்டுள்ளது. பாஜக அதிக வாக்கு வாங்கும் இடங்களான மத்தியப் பிரதேசம், குஜராத், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் தன்னுடைய வசதிக்கேற்ப தொகுதிகளை அதிகப்படுத்தி தென்மாநிலங்களில் உள்ள தொகுதியை குறைப்பதற்கான சதி திட்டமா? என்பதே பலருடைய கேள்வியாக இருக்கிறது.

 

ஆங்கிலேயர் கட்டிய பழைய பாராளுமன்றம் கிட்டதட்ட 100 வருடங்களுக்கு மேலாக இருந்தது. ஆனால் மோடி கட்டிய இந்த புதிய பாராளுமன்றம் எத்தனை ஆண்டுகள் இடியாமல் இருக்கும் என்பதை உத்தரவாத்தை  தரமுடியுமா? எதற்கு அவசர அவசரமாக புதிய பாராளுமன்றத்தை கட்டினார்கள்?. என்ற கேள்விகளும் எழுகிறது.

 

ஆரம்பத்தில் இந்த புதிய பாராளுமன்றம் கட்டுவதற்காக முதல் முதலில் முன்மொழிந்தது, பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஜெகஜீவன்ராம் அவருடைய மகளான அப்போது பேரவை தலைவராக இருந்த மீரா குமார். அதன் பிறகே இந்த அரசு பாராளுமன்றத்தை கட்டுவதற்கான பணிகளை மேற்கொண்டது.

 

புதிய பாராளுமன்றம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவதற்காக அன்றைய குடியரசு தலைவரான ராம்நாத் கோவிந்த் அழைக்கப்படவில்லை. தற்போது திறப்பு விழாவுக்கு இன்றைய குடியரசு தலைவரான திரௌபதி முர்முவும் அழைக்கப்படவில்லை. இவை மட்டுமில்லாமல், பாராளுமன்ற திறப்பு விழாவில் உரையாற்றிய மோடி, முதல் முதலில் பாராளுமன்றத்தை கட்டுவதற்கு முன்மொழிந்த மீரா குமார் பெயரைக் கூட குறிப்பிடவில்லை. இந்த விழா தீண்டாமையை கடைப்பிடித்தே நடைபெற்றுள்ளது” என்று தெரிவித்தார்.

 

 

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case against PM Modi adjourned

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு இன்று (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. இந்நிலையில் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை வரும் திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.