Skip to main content

படத்தின் விளம்பரத்துக்கு நிர்வாணம் தேவைப்படுகிறதா..? 'ஆடை' பட இயக்குநர் பதில்!

Published on 20/07/2019 | Edited on 20/07/2019

பலத்த சர்ச்சையும், எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ள திரைப்படம் அமலா பால் நடித்துள்ள 'ஆடை' திரைப்படம். மேயாத மான் திரைப்படத்தை இயக்கிய ரத்ன குமார் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். படம் தொடர்பாக அவரிடம் நாம் பேசிய போது பல்வேறு முக்கிய கருத்துக்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார். இதோ அவரின் தெறி பேட்டி,

 

Aadai Director Rathna Kumar Exclusive



 

'ஆடை' படத்தோட ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஒரு படத்தை பெரிய அளவில் பேச வைக்க ஒரு பெண்ணின் நிர்வாணம் தேவைப்படும் அளவுக்குதான் தமிழ் சினிமா உள்ளதா?

 

 

பலான படம் போஸ்டரில் தியேட்டரின் பெயரை எங்கே ஒட்டுவார்கள் என்று உங்களுக்கு தெரியும். அதை போல அமலா பால் முதுகில் ஒட்ட வேண்டும் என்று நினைத்து இந்த திரைப்படம் உருவாக்கப்படவில்லை. கதைக்கு நிச்சயம் தேவை என்கிற காரணத்தால் தான் அந்த காட்சிகள் படத்தில் வைக்கப்பட்டுள்ளது. நீங்கள் வேண்டுமானால், இதை தானே எல்லோரும் சொல்கிறார்கள் என்று கேட்கலாம். ஆனால் படத்தை பார்த்த பிறகு உங்களின் எண்ணம் முற்றிலும் மாறும். அதையும் தாண்டி முன்பெல்லாம் ஆபாச படங்களை பார்ப்பது என்பது அனைவருக்கும் கடினமான வேலையாக இருந்தது. இப்போது அதெல்லாம் எதுவுமே இல்லை. எல்லோர் கையிலும் மொபைல் இருக்கும். ஆளுக்கு நாலு ஃபேக் ஐடி வச்சிக்கிட்டு உங்களுக்கு என்ன தேவையோ அதை பாத்துக்கலாம். அதனால், பெண்களை ஆபாசமா சித்தரித்து காட்டினால், கூட்டம் வரும் என்பது எல்லாம் ஒரு மாயை. அதில் கொஞ்சம் கூட உண்மை இருப்பதாக நான் நினைக்கவில்லை. அதையும் தாண்டி சில காரணங்களை ரசிகர்களின் ஆழ்மனதில் பதியவைக்க இந்த மாதிரியான காட்சிகள் தேவைப்படுவது இற்கையான ஒன்றுதான். ஆனால், அது பார்ப்பதற்கு ஆபாசம் இல்லாத வகையில் இருக்க வேண்டும். 

'ஆடை' சுதந்திரத்தை பறிப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா?

அப்படி இல்லை, அந்த அந்த சூழ்நிலைகளை பொருத்தது அது. சிலருக்கு அப்படி தோன்றலாம். ஆனால் நம்முடைய பழக்க வழங்கங்களுக்கு அது சரி வராது. தனிபட்ட மனிதர்களை சார்ந்து ஒவ்வொன்றும் வேறுபடும். இதுவும் அதை போன்றதொரு கேள்விதான். எப்படி ஃபார்ன் வீடியோக்களை தடை செய்தால் பாலியல் பலாத்காரம் குறையும் என்று நம்புவதை போலத்தான். நெருப்பை தொட்டா சுட்டுவிடும் என்றுதான் சொல்லித்தர வேண்டும், அதற்காக நெருப்பே இல்லாம இருக்க முடியாது. இந்த படத்தை பற்றிய குற்றச்சாட்டுக்களுக்கு இதுவே எளிமையான பதிலாக இருக்கும்.

Next Story

பாடகர் மீது வழக்குத் தொடரும் நடிகை அமலாபால்...

Published on 03/11/2020 | Edited on 03/11/2020

 

amalapaul

 

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகை அமலாபால். விஜயுடன் 'தலைவா', தனுஷுடன் 'வேலையில்லாப் பட்டதாரி', விக்ரமுடன் 'தெய்வத்திருமகள்'  என முன்னணி கதாநாயர்களுடன் நடித்துள்ளார். 'ஆடை' படத்தில் உடையின்றி நடித்து பரபரப்பைக் கிளப்பினார். 


நடிகை அமலாபால், இயக்குனர் ஏ.எல். விஜயையை காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். ஆனால், அவர்களின் திருமண உறவு நீண்டநாள் நீடிக்கவில்லை. இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர். அதன் பிறகு அமலா பால் படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வந்தார்.

 

இந்த நிலையில், சிலமாதங்களுக்கு முன்பு மும்பையைச் சேர்ந்த பாடகர் பவ்னிந்தர் சிங், தனக்கும் அமலா பாலுக்கும் திருமணம் ஆகிவிட்டதாகக் கூறி சிலபடங்களை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்தார். இதைத்தொடர்ந்து அமலா பால் இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாகக் கருதப்பட்டது. ஆனால், இதனை மறுத்த அமலா பால், தனக்கு இரண்டாவது திருமணம் ஆகவில்லை என்றார். அதைத்தொடர்ந்து, அந்தப படங்களை பாடகர் பவ்னிந்தர் சிங் தனது சமூகவலைத்தள பக்கத்திலிருந்து நீக்கினார்.

 

இந்தநிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில், அமலாபால், பவ்னிந்தர் சிங் தன்னோடு எடுத்த புகைப்படங்களை வெளியிடத் தடைகோரியும், பவ்னிந்தர் சிங் மீது அவதூறு வழக்குத் தொடர அனுமதி கேட்டும் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர், தனக்கும், அவருக்கும் திருமணம் ஆகிவிட்டதாகக் கூறி பவ்னிந்தர் சிங், அவரோடு தொழில் ரீதியாக எடுக்கப்பட்ட என்னுடைய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இது எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

 

மேலும், என்னைப பற்றிய தவறான எண்ணத்தை உருவாக்குவதாகவும் உள்ளது. எனவே அந்தப புகைப்படங்களை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் எனவும் அவர் மீது அவதூறு வழக்குத் தொடர அனுமதிக்க வேண்டும் எனவும் கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பவ்னிந்தர் சிங் மீது வழக்குத் தொடர அமலா பாலுக்கு அனுமதியளித்து உத்தரவிட்டது. இதையடுத்து விரைவில், அமலா பால், பவ்னிந்தர் சிங் மீது அவதூறு வழக்குத் தொடருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 


 

 

Next Story

கதைக்கு தேவைன்னா நிர்வாணமா நடிக்க தயார்..! - நடிகை அதிரடி 

Published on 29/07/2019 | Edited on 29/07/2019

கிருஷ்ணா - பிந்து மாதவி இணைந்து நடித்துள்ள கழுகு 2 படம் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இதுகுறித்த ப்ரோமோஷன் நிகழ்ச்கிக்காக நடிகை பிந்து மாதவி நமக்கு அளித்த பேட்டியில் அமலாபால் ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்தது குறித்து பேசியபோது...

 

bindhu

 

 

''ஆடை படத்தில் அமலாபால் செய்த தைரியமான முயற்சிக்கு என்னுடைய பாராட்டுக்கள். ஒரு சாதாரண வெகுளி பெண் கயவர்களின் பொறியில் சிக்கி தவித்து பின்னர் அவர் மேல் பாவம் ஏற்படுவதுபோல் கதைப்படுத்தாமல் படத்தின் ஆரம்பம் முதல் ஒரு தைரியான பெண்ணாக அமலாவை காண்பித்து அதன் பின் நடப்பதை சுவாரஸ்யமாகவும், பிரச்சனையை தைரியமாக எதிர்கொள்வது மாதிரியும் காண்பித்தது அருமையாக இருக்கிறது. இந்த தைரிய முயற்சிக்காக அமலாபாலை நினைத்தால் எனக்கு பெருமையாக உள்ளது. இதுபோல் நிர்வாணமாக நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தாலும் நான் நடிக்க தயார். என்னை பொறுத்தவரை படம் வெற்றிபெற வேண்டும் அதற்காக நான் எந்த எல்லை வரை சென்று கடுமையாக உழைக்க தயார். அதற்கு ஏற்றார் போல் நல்ல கதையும் அமையவேண்டும்'' என்றார்.