Skip to main content

54வது ஆண்டு விழாவை சிறையில் கொண்டாடும்"திருடர் குல திலகம் சில்வர் ஸ்ரீனிவாசன்"

Published on 11/05/2018 | Edited on 11/05/2018

"சில்வெஸ்டர் ஸ்டாலோன்" உலகளவில் நடிப்பிற்கு ஃபேமஸ் என்றால், "சில்வர் ஸ்ரீனிவாசன்" திருட்டுக்கு ஃபேமஸ். ஸ்ரீனிவாசன் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் பிழைப்புத்தேடி தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார்.  சிறு,சிறு தொழில்களில் ஈடுபட்ட வந்தவர் ஒரு ஹோட்டலில் வேலைபார்த்து வந்தார். அங்கு ஒருவரிடம் ஜோதிடம் கற்றுக்கொண்டவர் அதனை திருட்டுத்தொழில் உபயோகப்படுத்தினார். 1964ஆம் ஆண்டு முதலில் திருடியதற்காக கைது செய்யப்பட்டார். ஆம் இவர் சுமார் 50 ஆண்டுகளாக சென்னையில் உள்ள பல வீடுகளில் சாமியார், ஜோதிடர் என்று வேடமிட்டு பரிகார பூஜை செய்வதாக கூறி  வீடுகளுக்கு சென்று   வெள்ளிப்பொருட்களை கண் இமைக்கும் நேரத்தில் திருடிசென்றுவிடுவார். இவருக்கு சில்வர் ஸ்ரீனிவாசன் என்று பெயர் வரவும் இதுதான் காரணம். 

The 54th anniversary will be held in jail

 

 

 

அதன்பின்னும் இத்தனைகாலமாக திருடி வந்த இந்த 'திருடர் குல திலகம்" தனது எண்பதாவது வயதிலும் சுறுசுறுப்பாக நேற்று ஒரு திருட்டை மயிலாப்பூரில் நடத்தினார். ஆனால் சி.சி.டிவி கேமராவில் சிக்கிக்கொண்டது. 

தனது ஐம்பதினான்காவது ஆண்டு விழாவை தற்போது சிறையில் கொண்டாடி வருகிறார். இவர் கைதாவது இது 200வதுமுறையாகும். திருமணம் ஏன் செய்துகொள்ளவில்லை என்று கேட்டால் ஜாதகத்தில் தோஷம் உள்ளதாக கூறுகின்றார் ஸ்ரீனிவாசன். நான் சிறைக்கு சென்றுவிட்டு வந்தாலும் நான் திருட்டு தொழிலை தொடருவேன் என்றும் கூறுகிறார். இவர் கடைசியாக திருடியபொழுதுகூட பதினைந்து நிமிடத்தில் திருடிக்கொண்டு சுவர் ஏறி குதித்து சென்றுள்ளார். வடிவேல் சொன்னதுபோல திருட்டு தொழிலில் இறங்குவதற்கு முன்பு  குதிரை சவாரி, குங்ஃபூ எல்லாத்தையும் கத்துக்கிட்டுதான் இறங்கிருக்கோம் என்பதை ஸ்ரீனிவாசனின் திருட்டு ஞாபகபடுத்துகிறது.

Next Story

வெறுப்பு பிரச்சாரம்; மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டி போராட்டம் (படங்கள்)

Published on 24/04/2024 | Edited on 24/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, வெறுப்பு பிரச்சாரம் செய்துவரும்  பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவும், வழக்கு பதிவு செய்திடவும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் மத்திய சென்னை மாவட்டம் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை கண்டனம் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. பிறகு நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க, பேரணியாக சென்றனர்.

Next Story

ஷர்மிளா தற்கொலை விவகாரம்; ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Sharmila incident RdO Order for investigation

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் ஜல்லடையான் பேட்டையைச் சேர்ந்த ஷர்மிளா (வயது 22) என்ற பெண்ணை கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரவீன் - சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், எதிர்ப்பையும் மீறி இந்தத் திருமணமானது நடைபெற்றது. இந்த காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் இவர்கள் இருவரும் வசித்து வந்தனர்.

இத்தகைய சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரவு அந்தப் பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் நடந்தது ஆணவக் கொலை என்பது உறுதியானது. கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து காதல் கணவன் கொலை செய்யப்பட்டதால் ஷர்மிளா மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் 9 நாட்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு (22.04.2024) உயிரிழந்தார். மேலும் தன்னுடைய காதல் கணவன் கொல்லப்பட்டது குறித்தும், தன்னுடைய தற்கொலை முடிவு குறித்தும் ஷர்மிளா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 'அவன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக எழுதியுள்ளதோடு கொலைக்கு காரணமானவர்களின் பெயர்களையும் ஷர்மிளா குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட ஷர்மிளா மரணம் தொடர்பாக கோட்டாட்சியர் (RDO - ஆர்.டி.ஓ.) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஷர்மிளாவின் உடற்கூராய்வு சற்று நேரத்தில் நடைபெற உள்ளது எனவும், உடற்கூராய்வு வீடியோ பதிவு செய்யப்படும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.