Skip to main content

5 மாநிலத்தில் ஒன்றுகூட பாஜகவுக்கு இல்லையாம் – அட பாவமே..!

Published on 10/11/2018 | Edited on 10/11/2018
bjp fail

 

 

வடக்கில் பாஜகவுக்கு மிகவும் முக்கியமான மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களும், தெற்கில் தெலங்கானாவும், வடகிழக்கில் மிஜோரமும் சட்டசட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கவுள்ளன.

 

இவற்றில் மிஜோரம் மட்டுமே காங்கிரஸ் வசம் இருக்கும் ஒரே மாநிலம். மற்ற நான்கில் தெலங்கானா மாநிலம் டிஆர்எஸ் கட்சியிடமும் மூன்று மாநிலங்கள் பாஜகவிடமும் இருக்கின்றன. 2013 ஆம் ஆண்டு இந்த மூன்று மாநிலத் தேர்தலிலும் மோடியின் பிரச்சாரத்தால்தான் பாஜக வெற்றி பெற்றதாக ஒரு தோற்றத்தை உருவாக்கி, அவருக்கு ஆதரவாக பில்டப் செய்யப்பட்டது.

 

ஆனால், மத்தியப்பிரதேசத்தில் அதற்கு முன்பும் பாஜக ஆட்சிதான் இருந்தது. ராஜஸ்தானில் இரண்டு கட்சிகளும் மாறி மாறி ஆட்சியைப் பிடிப்பதே வாடிக்கை. சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜகவே ஆட்சியில் இருந்தது என்கிற உண்மையை மறைத்து, மோடிக்காக ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கினார்கள்.

 

இப்போது, 2019 நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதே மூன்று மாநிலங்களும், மிஜோரம், தெலங்கானா மாநிலங்களும் சட்டப்பேரவை தேர்தலை சந்திக்கவுள்ளன.

 

bjp fail


 

இந்த 5 மாநிலங்களிலும் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பிருந்தே கருத்துக்கணிப்புகள் வெளியாகி வருகின்றன. நேற்று வெளியான கருத்துக் கணிப்புவரை, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், மிஜோரம் மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றும் என்றும், ராஜஸ்தானில் 150 இடங்கள் வரை அந்தக் கட்சிக்கு கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது. மத்தியப்பிரதேசத்தில் 10 முதல் 15 தொகுதிகள் மெஜாரிட்டியில் காங்கிரஸ் அரசு அமைக்கும் என்றும், மிஜோரமில் தொடர்ச்சியாக காங்கிரஸே ஆட்சியைக் கைப்பற்றும் என்று தெரியவந்துள்ளது. சத்தீஸ்கரிலும், தெலங்கானாவிலும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசுக்கு வாய்ப்பிருப்பதாகவும் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

 

இன்று முதல் தேர்தல்களில் வாக்குப்பதிவு முடியும்வரை கருத்துக்கணிப்புகள் வெளியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், நேற்று வெளியான சி வோட்டர் கருத்துக்கணிப்பே கடைசி ஆகும். பாஜக ஆதரவு மீடியாக்கள் என்று கருதப்படுபவை எடுத்த கருத்துக் கணிப்புகள்கூட காங்கிரஸ் வெற்றியை மறைக்க முடியாமல் தடுமாறும் நிலை உருவாகி இருக்கிறது.

 

சத்தீஸ்கரில் காங்கிரஸில் இருந்த வெளியேறி தனிக்கட்சி தொடங்கிய அஜித்ஜோகியும், பகுஜன் கட்சியும் வாக்குகளைப் பிரிப்பதால் பாஜக வெற்றிபெறும் என்று சொல்லப்பட்டது. ஆனால், அங்கும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசுக்கே வாய்ப்பு இருக்கிறது. அதுபோல, தெலங்கானா மாநிலத்தில் ஆளும் டிஆர்எஸ் கட்சிக்கே வாய்ப்பு என்ற நிலை மாறியதற்கு, சந்திரபாபு நாயுடு, காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க முடிவெடுத்ததே காரணம் என்கிறார்கள்.

 

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் நடைபெறும் இந்த 5 மாநிலத் தேர்தல்களின் முடிவுகள் நாடுமுழுவதும் பரபரப்பாக எதிர்பார்க்கப் படுகின்றன. இந்த முடிவுகளே நாடாளுமன்றத் தேர்தலிலும் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

 

Next Story

'பாஜக ஆட்சிக்கு வந்தால் தேர்தல் பத்திரம் கொண்டு வருவோம்'-நிர்மலா சீதாராமன் 

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

தேர்தலுக்கு முன்னதாகவே தேர்தல் பத்திரம் தொடர்பான கருத்துக்கள் மற்றும் நீதிமன்றத்தின் உத்தரவுகள் இத்தேர்தலில் மிகப்பெரும் பேசு பொருளாக இருந்தது. உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடுக்கப்பட்ட  நிலையில் பாஜக அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திரத் திட்டம் என்பது அரசியலமைப்புக்கு எதிரானது எனக் கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், நன்கொடை வழங்கியோர், நன்கொடையைப் பெற்ற கட்சிகளின் விவரங்களை ஆணையத்திடம் வழங்க உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் மீண்டும் தேர்தல் பத்திரங்களைக் கொண்டு வருவோம் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பாஜக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் தேர்தல் பத்திரங்களைக் கொண்டு வருவது தொடர்பாக ஆலோசிப்போம். அனைவரும் ஏற்கத்தக்க வகையில் தேர்தல் பத்திரம் கொண்டு வருவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்வோம். தேர்தல் பத்திரம் வெளிப்படை தன்மையானது, கருப்பு பணத்தை ஒழிப்பதற்கானது என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Next Story

“பா.ஜ.கவை விட ஆபத்தானவர் நிதிஷ்குமார்” - மல்லிகார்ஜுன கார்கே

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Mallikarjuna Kharge says Nitish Kumar is more like BJP

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இதற்கிடையே, பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு 7 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், சிபிஐ (எம்எல்) ஆகிய கட்சிகள் உள்ளன. அதே போல், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது.

இந்த நிலையில், நாட்டில் ஜனநாயகத்தை காப்பாற்ற தற்போது நடைபெற்று வரும் தேர்தல்கள் மிகவும் முக்கியமானவை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பீகார் மாநிலத்தில் உள்ள கிஷன்கஞ்ச் மற்றும் கதிஹார் தொகுதிகளில் நேற்று (19-04-24) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது, “மோடி சமீபகாலமாக அரசியல் சாசனத்தின் மீது மிகுந்த மரியாதையைக் காட்டி வருகிறார். அவர் சொல்வதையே அவர் கடைப்பிடிக்கிறார் என்றால், அரசியல் சாசனத்தை மாற்றுவோம் என பேசி வரும் பாஜக தலைவர்கள் எப்படி தப்பிக்க முடிகிறது? அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் எந்தப் பங்கையும் வகிக்காத ஆர்.எஸ்.எஸ் திட்டத்தை செயல்படுத்த பா.ஜ.க களமிறங்கியது. நாட்டில் ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனத்தை காப்பாற்ற தற்போது நடைபெறும் தேர்தல்கள் முக்கியமானவை. நாம் தோல்வியுற்றால், நமது வருங்கால சந்ததியினர் பாதிக்கப்படுவார்கள்.

எங்கள் கூட்டணியில் போட்டியிடும் தேஜஸ்வி யாதவ், நிதிஷ்குமாரின் துரோகத்தை பலமுறை கூறி புலம்பியுள்ளார். நான் அதை ஒரு நல்ல அதிர்ஷ்டம் என்று சொல்கிறேன். பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்ஸை விட நிதிஷ் குமார் போன்றவர்கள் ஆபத்தானவர்கள். நிதிஷ் குமாரிடம் கொள்கைகள் இல்லை. அவர் அதிகாரத்திற்காக மட்டுமே கவலைப்படுகிறார்” என்று கூறினார்.