Skip to main content

44 ஆண்டுகால மருத்துவ சேவை... ஐந்து ரூபாயை தாண்டாத கட்டணம்...மறைந்தார் மக்கள் மருத்துவர்....

Published on 19/12/2018 | Edited on 19/12/2018
jai


சென்னையில் 44 வருடங்களாக ஐந்து ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து வந்த மருத்துவர் ஜெயச்சந்திரன் இயற்கை எய்தினார். 
 

சென்னையை அடுத்த கல்பாக்கத்தில் உள்ள கொடைப்பட்டிணம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தவரான இவர், சிறு வயது முதலே மருத்துவம் படிக்க வேண்டும் என்கிற கனவுடன் வளர்ந்தவர். தனது ஊரில் மருத்துவ வசதி இன்றி பலர் உயிரிழந்ததே மருத்துவம் படிக்க காரணமாக அமைந்தது. பெரியவனாவுடன் மருத்துவராகி ஏழை மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்கிற எண்ணம் சிறுவயதிலேயே ஆழ்மனதில் பதிந்தது. இதனை தொடர்ந்து பல்வேறு போராட்டங்களுக்கு பின் இவர் மருத்துவரானார். 
 

jeyachandran


கடந்த 1971 ஆம் ஆண்டு அவர் மருத்துவ சேவையை தொடங்கிய போது, நோயாளிகளிடம் இரண்டு ரூபாய்க்கு மருத்துவம் பார்த்துள்ளார். ஆனால், தன்னிடம் வரும் நோயாளிகளிடம் கட்டாயமாக அவர் காசு வாங்கியதில்லை. மருத்துவம் பார்க்க வருபவர்கள் விருப்பப்பட்டால் இரண்டு ரூபாய் தரலாம் என்றே மருத்துவ சேவையை செய்துள்ளார். இவர் பெற்ற கட்டணம் குறைவானது என்றாலும் நோயாளிகளுக்கு இவர் பார்த்த மருத்துவம் சிறப்பானதாகவே இருந்துள்ளது. 
 

44 வருடங்களாக தொடர்ந்து இந்த மருத்துவ சேவையை எந்தவித தொய்வும் இன்றி இறுதிக்காலம் வரை செய்துவந்துள்ளார் ஜெயச்சந்திரன். அதேபோல இவருக்கு என்று காலநேரம் இல்லை, 24 மணி நேரத்தில் எப்போது வந்து வேண்டுமானாலும் இவரை பார்க்கலாம். காலம் போக போக, இரண்டு ரூபாயாக இருந்த இவரது கட்டணம் மூன்று ரூபாய் உயர்த்தப்பட்டு ஐந்து ரூபாயாக மாற்றினார்.
 

jai


இவரிடம் சிகிச்சை பெற வரும் பெரும்பாலான மக்கள் அடித்தட்டு மக்கள்தான். சில பணக்காரர்களும் இவர் மிகவும் ராசியானவர் என்று சிகிச்சை பெற வருவார்களாம். தன்னை பார்க்க வருபவர்கள் ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்தாலும், பணமாக வேண்டாம் அதற்கு பதிலாக மருந்துகளாக வாங்கி தாருங்கள் ஏழை நோயாளிகளுக்கு உதவும் என்று ஜெயச்சந்திரன் சொல்வாராம். இதுபோன்று தனது வாழ்நாள் முழுவதையும் ஏழை மக்களுக்காக சேவை ஆற்றுவதிலேயே கழித்துவிட்டார். இவர் இதுபோன்று சேவையாற்ற உருதுணையாக உடன் இருந்தவர் அவரது மனைவி வேணி. மனைவி வேணியும் மருத்துவர்தான் அவரது வருமானத்தில் குடும்பம் நடைபெற, இவர் மக்களுக்கு சேவை செய்ய தொடங்கியுள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகள், ஒரு மகன். அவர்களும் மருத்துவர்களே.
 

இவரது இத்தனை வருட சேவையாலும், அன்பினாலும் ராயபுர மக்களும், அந்த பகுதியை சுற்றியுள்ள மக்களும் இவரின் பாச வலையில் விழுந்துவிட்டனர். இவருடைய வாழ்நாளில் சுமார் 2000 மருத்துவ முகாம்களை நடத்தியுள்ளார். சமீபமாக இவரு உடல்நிலை சரியின்றி இருந்தார், இன்று இயற்கை எய்தினார். இவருடைய மருத்துவ சேவையில் பயன்பெற்று வந்த அப்பகுதி மக்கள் மீளாத் துயரத்தில் உள்ளனர். 

 

 

Next Story

கேளிக்கை விடுதி விபத்து; மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி இருந்தது.

இது விபத்து குறித்து சென்னை மாநகர கூடுதல் காவல் ஆணையர் பிரேமானந்த் சின்ஹா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

இந்நிலையில் இந்த விபத்து குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இது குறித்து எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியாருக்கு சொந்தமான பொழுதுபோக்கு கிளப்பில் உள்ள மெஸ்ஸானைன் தளம் இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பாக விளக்கமிக்க வேண்டிய தேவை உள்ளது. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் தற்போது நடந்து கொண்டிருக்கும் மெட்ரோ ரயில் பணிகளால் அல்ல என்பதை  சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) தெளிவுபடுத்த விரும்புகிறது.

ஏனெனில் மெட்ரோ ரயில் பணியானது, விபத்து நிகழ்ந்த கட்டிடத்திலிருந்து கிட்டத்தட்ட 240 அடி தொலைவில் உள்ளது. மேலும் விபத்து நிகழ்ந்த கட்டடத்தில் அதிர்வுகள் எதுவும் காணப்படவில்லை. சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீட்புப் பணிகளில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி அதிகாரிகளுக்கு உதவி செய்ய உள்ளதாகவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவிக்க விரும்புகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விபத்து; 3 பேர் உயிரிழந்த சோகம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Chennai Alwarpet hotel top roof incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது விபத்து குறித்து காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.