Skip to main content

2024 பாராளுமன்றத் தேர்தல்: தேனியில் யார் போட்டி?

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
2024 Parliamentary Elections: Who Will Contest in Theni?

2024-ல் பாராளுமன்றத் தேர்தல் நடக்கவிருப்பதால் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் போட்டிப் போட்டுக்கொண்டு 40 சீட்டுகளையும் தக்க வைக்க வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் முயற்சியில் வேகம் காட்டி வருகிறார்கள்.

தேனி பாராளுமன்றத் தொகுதியில் பெரியகுளம், போடி, கம்பம், ஆண்டிபட்டி, உசிலம்பட்டி, சோழவந்தான் என 6 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. தேனி பாராளுமன்றத் தொகுதியில் பெரும்பான்மையாக முக்குலத்தோர் சமூக மக்கள்தான் வசித்து வருகிறார்கள். அதற்கு அடுத்தபடியாக பட்டியலினத்தவர்கள், கவுண்டர், நாயக்கர், செட்டியார், பிள்ளைமார், நாடார் உட்பட சில சமூகத்தினரோடு முஸ்லீம் மக்களும், கிறிஸ்தவ மக்களும் வசித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், தேனி பாராளுமன்றத் தொகுதியில் கரை வேஷ்டிகள் போட்டிப் போட்டுக்கொண்டு தத்தம் கட்சியில் சீட்டுக்காக மல்லுக்கட்டி வருகிறார்கள். ஆளுங்கட்சியான தி.மு.க.வில் வடக்கு மாவட்டச் செயலாளராக இருக்கும் தங்க தமிழ்ச் செல்வன் (டி.டி.எஸ்.) அ.தி.மு.க.வில் இருந்தபோது ஓ.பி.எஸ்.ஸுக்கும், டி.டி.எஸ்.ஸுக்கும் இடையேதான் கடும் போட்டி இருந்து வந்தது. அதனாலேயே போடி சட்டமன்றத் தேர்தலில் ஓ.பி.எஸ்.ஸை எதிர்த்து டி.டி.எஸ்.ஸை களமிறங்க வைத்தார் முதல்வர். குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் டி.டி.எஸ். தோல்வியைத் தழுவினார். அந்த அனுதாபம் முதல்வர் ஸ்டாலினிடம் இருந்து வருகிறது. அதோடு ஓ.பி.எஸ்.ஸை எதிர்த்து தொடர்ந்து அரசியல் செய்யும் டி.டி.எஸ்., வரும் பாராளுமன்றத் தேர்தலில் களமிறங்க சீட் கேட்டு வருகிறார்.

2024 Parliamentary Elections: Who Will Contest in Theni?

முன்னாள் எம்.பி. கம்பம் செல்வேந்திரனும் தேர்தலில் குதிக்கத் தயாராகி வருகிறார். அதனால் தனது நெருங்கிய நண்பரான கவிஞர் வைரமுத்து, டி.ஆர். பாலு மூலம் சீட் வாங்க காய் நகர்த்தி வருகிறார். ஒருங்கிணைந்த மாவட்டமாக தேனி இருந்தபோது ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமிதான், மாநிலத் தலைமை தீர்மானக்குழு இணைச் செயலாளரான ஜெயக்குமாருக்கு மாவட்டச் செயலாளர் பதவியை வாங்கிக் கொடுத்தார். மாவட்டம் இரண்டாகப் பிரிந்த பின் ஜெயக்குமாருக்கு மாநிலப் பொறுப்பு கொடுக்கப்பட்டது. அப்படியிருந்தும் கட்சியை வளர்ப்பதில் தீவிரம் காட்டி வரும் ஜெயக்குமார், அமைச்சர் ஐ.பி. மூலம் சீட் வாங்க முட்டி மோதி வருகிறார்.

நீலகிரி பாராளுமன்றத் தொகுதி எம்.பி.யும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ. ராசா பொதுத் தொகுதியில் போட்டிப் போட முடிவு செய்திருப்பதாகவும் அதனடிப்படையில் இரண்டு முறை தேனி தொகுதியில் விசிட்டடித்து பாராளுமன்றத் தேர்தலில் போட்டிப் போட காய் நகர்த்தி வருவதாக உ.பி.க்கள் மத்தியில் ஒரு பேச்சு அடிபடுகிறது.

அ.தி.மு.க.வை கைப்பற்றுவதில் ஓ.பி.எஸ்.ஸுக்கும், இ.பி.எஸ்.ஸுக்கும் நடந்த போட்டியில் இ.பி.எஸ். அ.தி.மு.க.வை கைப்பற்றியதன் மூலம், ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் ஓரம் கட்டப்பட்டனர். வரக்கூடிய பாராளுமன்றத் தேர்தலில் முன்னாள் எம்.பி. பார்த்திபன் களமிறங்கத் தயாராகி வருகிறார். இவர் எம்.பி.யாக இருந்தபோது ஓ.பி.எஸ். இவரைச் செயல்படாமல் முடக்கி வைத்தார். அதனாலேயே பார்த்திபன், இ.பி.எஸ். பக்கம் தாவி சீட் கேட்டு வருகிறார். முன்னாள் கம்பம் சட்டமன்ற உறுப்பினரான ஜக்கையனின் மகனான இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறை மாவட்டச் செயலாளரான பாலமணி மார்பனும் கோதாவில் குதிக்கத் தயாராகி வருகிறார். அ.தி.மு.க. ஒன்றாக இருந்தபோதே எடப்பாடிக்கு ஆதரவாக ஜக்கையன் இருந்து வந்ததனால் கடந்த சட்டமன்றத் தேர்தலில் கம்பத்தில் மீண்டும் போட்டியிட சீட் கொடுக்காமல் ஓ.பி.எஸ்ஸினால் ஓரம் கட்டப்பட்டார். எடப்பாடி பக்கம் தாவியதன் மூலம் மகனை எம்.பி.யாக்கும் குறிக்கோளுடன் இருந்து வருகிறார் ஜக்கையன்.

2024 Parliamentary Elections: Who Will Contest in Theni?

உசிலம்பட்டி முன்னாள் எம்.எல்.ஏ.வும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக செயலாளருமான மகேந்திரன் சமீபத்தில் எடப்பாடியைச் சந்தித்து அ.தி.மு.க.வில் ஐக்கியமானார். அவருக்கும் எம்.பி. கனவு இருக்கிறது. தேனி கிழக்கு மாவட்டச் செயலாளர் முருக்கோடை ராமர், தேனி நகரச் செயலாளரும், வக்கீலுமான கிருஷ்ணகுமார் உள்பட சில ர.ர.க்களும் சீட்டுக்காக இ.பி.எஸ்.ஸிடம் மோதி வருகிறார்கள்.

தேனி மாவட்டத்திலுள்ள கட்சிப் பொறுப்பாளர்களும், பெரும்பான்மையான தொண்டர்களும் இ.பி.எஸ். பக்கம் சாய்ந்துவிட்டனர். அதனால் ஓ.பி.எஸ். சிட்டிங் எம்.பி.யாக இருக்கக்கூடிய ரவீந்திரநாத்தை மீண்டும் களமிறக்க யோசிக்கிறார். அ.ம.மு.க. சார்பில் ரவீந்திரநாத்தை களமிறக்குவது அல்லது டி.டி.வி.க்கு ஆதரவு கொடுத்து தேனி தொகுதியில் மீண்டும் தினகரனை களமிறக்கும் யோசனையும் ஓ.பி.எஸ்.ஸிடம் தெரிகிறது. பெண்கள் விசயத்திலும் எம்.பி. ரவீந்திரநாத் மீது கெட்ட பெயர் ஏற்பட்டிருப்பதால் வரக்கூடிய பாராளுமன்றத் தேர்தலில் ரவீந்திரநாத் போட்டிப் போட வாய்ப்பு இல்லை என்ற பேச்சும் பரவலாக எதிரொலித்து வருகிறது.

காங்கிரஸ் தரப்பில் தேனி எம்.பி.யாக இரண்டு முறை வெற்றிபெற்ற ஹாரூன், மீண்டும் தலைமையிடம் வாய்ப்பு கேட்கும் முடிவில் இருக்கிறார். இல்லையெனில் தனது மகனும் வேளச்சேரி எம்.எல்.ஏ.வான ஹசனுக்கு அந்த வாய்ப்பைக் கேட்கும் முடிவில் இருக்கிறார். காங்கிரஸில் வேறு பலரும் தேனி சீட்டுக்கு முட்டி மோதுகின்றனர்.

பா.ஜ.க.வில், அக்கட்சியின் மாவட்டத் தலைவர் பாண்டியனும், மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவருமான ராஜபாண்டியனும் இப்போதே தேனி நாடாளுமன்றத் தொகுதியைக் குறிவைத்து தலைமைக்கு நெருக்கமானவர்களை அணுகி உரிய முறையில் வாய்ப்பு கேட்டு வருவதாக கட்சிக்குள் பேச்சுக்கள் எழுகின்றன.

Next Story

அமேதி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியா? பதிலளித்த கார்கே

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Kharge replied Rahul Gandhi Contest in Amethi Constituency?

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில் கேரளாவில் 20, கர்நாடகாவில் 14, ராஜஸ்தானில் 13, மத்தியப் பிரதேசத்தில் 6, மகாராஷ்டிராவில் 8, உத்தரப் பிரதேசத்தில் 8, அசாமில் 5, பீகாரில் 5, சத்தீஸ்கரில் 3, மேற்கு வங்கத்தில் 3, ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 88 தொகுதிகள் தேர்தல் நடைபெற்றது. 

இதற்கிடையில், கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியிலும், கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் ராகுல் காந்தி போட்டியிட்டார். இதில், அமேதி தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணியிடம் தோல்வி அடைந்தார். அதே நேரம் வயநாடு தொகுதியில் அதிகபட்ச வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி வெற்றி பெற்றார். இந்த நிலையில்,  இந்த மக்களவைத் தேர்தலில் கேரளா மாநிலம், வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி காங்கிரஸ் சார்பாக போட்டியிடுகிறார். அதே சமயம், ராகுல் காந்தி கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவாரா? என்று கேள்வி் பலரிடம் இருந்தும் எழுந்து வருகின்றது. அதே நேரத்தில், அமேதி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பெயரை வெளியிடாமல் காங்கிரஸ் தொடர்ந்து மெளனம் காத்து வருகிறது. 

Kharge replied Rahul Gandhi Contest in Amethi Constituency?

இந்த நிலையில், இன்று (27-04-27) காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில், ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், உத்தரப் பிரதேசத்தின் அமேதி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் யார்? என்பது குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையில்,  காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். 

அப்போது அவர், “பிரதமர் மோடி தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை. ஆனாலும், மோடி நாட்டுக்காக நிறைய வேலை செய்துள்ளார் என்று கூறுகிறார். நான் அதிகம் பேச விரும்பவில்லை. காங்கிரஸ் இந்தியாவை சுதந்திரமாக்கியவர்களின் கட்சி. இந்தியாவின் சுதந்திரத்திற்காகவும், இந்தியாவின் வளர்ச்சிக்காகவும் பா.ஜ.க ஒருபோதும் போராடவில்லை. இந்த நாட்டைக் கட்டியெழுப்பினோம். நேருவுக்கு ஒன்றுமில்லை, இந்திரா காந்தி ஒன்றுமில்லை, லால்பகதூர் சாஸ்திரி ஒன்றுமில்லை, மோடிதான் எல்லாம் என தேசப்பற்றைப் பற்றி பாஜகவினர் எவ்வளவோ பேசுகிறார்கள்.

2014க்குப் பிறகு இந்தியா சுதந்திரம் அடைந்தது, அதற்கு முன் நாடு சுதந்திரம் அடையவில்லை என்ற எண்ணத்தை கூட வைத்துள்ளார்கள். இவை அனைத்தும் அவரது வார்த்தைகளில் பிரதிபலிக்கின்றன. இதில் வருத்தம் என்னவென்றால், காங்கிரஸ் கட்சியால் வளர்க்கப்பட்டு, தலைவர்களாக மாறியவர்களும் இதையே சொல்கிறார்கள். காங்கிரஸ் மிகவும் மோசமாக இருந்திருந்தால், உங்கள் வாழ்நாளில் 30-40 வருடங்களை ஏன் தேவையில்லாமல் செலவழித்தீர்கள்?. இவர்களுக்கு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. ஆனால் அவர்களும் இந்திரா காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தியை விமர்சிக்கிறார்கள் எனப் பேசினார். இதனையடுத்து, அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் காங்கிரஸ் சார்பாக யார் போட்டியிடுவார்கள் என செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கார்கே, “சில நாட்கள் பொறுத்திருங்கள். எல்லாம் தெளிவாகிவிடும்” எனக் கூறினார்.

Next Story

பா.ஜ.கவை காலி சொம்புடன் ஒப்பிட்டு கிண்டல் அடித்த ராகுல் காந்தி!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Rahul Gandhi taunted by comparing BJP's poetry with empty anvil!

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில் கேரளாவில் 20, கர்நாடகாவில் 14, ராஜஸ்தானில் 13, மத்தியப் பிரதேசத்தில் 6, மகாராஷ்டிராவில் 8, உத்தரப் பிரதேசத்தில் 8, அசாமில் 5, பீகாரில் 5, சத்தீஸ்கரில் 3, மேற்கு வங்கத்தில் 3, ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 88 தொகுதிகள் தேர்தல் நடைபெற்றது. 

கர்நாடகா மாநிலத்தில் நடந்து முடிந்த வாக்குப்பதிவுக்கு முன்னதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய ராகுல் காந்தி, “இந்திய வரலாற்றில் முதன்முறையாக ஒரு கட்சி, அரசியல் சாசனத்தையும் ஜனநாயகத்தையும் அழிக்க விரும்புவதால், முன்பு நடந்த தேர்தல் போல் இந்த தேர்தல் அல்ல. பிரதமரின் உரைகளைக் கேட்டிருப்பீர்கள். அவர் பயந்துவிட்டார். அவர் மேடையில் கண்ணீர் விடக்கூடும். சில சமயங்களில் சீனா, பாகிஸ்தானைப் பற்றிப் பேசுவார். சில சமயம் தட்டுகளை அடிக்க வைத்து, உங்கள் மொபைல் போன்களின் டார்ச் லைட்டை ஆன் செய்யச் சொல்வார். பா.ஜ.க என்ன செய்யப்போகிறது என்பதை நான் சொல்கிறேன். நரேந்திர மோடியின் பாரதிய சொம்பு கட்சி காலியாக உள்ளது.

அது கர்நாடகா மாநிலம், நாட்டிற்கு ஜி.எஸ்.டியாக வழங்கும் ஒவ்வொரு ரூ.100க்கும், அதற்கு ஈடாக ரூ.13 மட்டுமே வரிப் பகிர்வின் கீழ் கிடைக்கிறது. வறட்சி நிவாரணமாக கர்நாடகாவுக்கு சுமார் ரூ.18,000 கோடி கிடைக்க வேண்டும், ஆனால் அதற்கு ‘சொம்பு’ தான் கிடைத்தது” எனத் தெரிவித்தார்.

பா.ஜ.கவை காலி சொம்புடன் ஒப்பிட்டு பேசிய ராகுல் காந்தி, தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்திலும் இதே போன்ற பதிவை ஒன்றை அளித்துள்ளார். அந்த பதிவில், ‘பொதுமக்களின் பணத்தை ஏராளமாகக் கொள்ளையடித்து, பதிலுக்கு காலி பானை வழங்கப்பட்டது. இது மோடியின் பாரதிய சொம்பு கட்சி’ எனப் பதிவிட்டு சொம்புடன் இருந்தபடி இருந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.