Skip to main content

'2016' தேர்தலில் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வென்றவர்கள்!

Published on 01/05/2021 | Edited on 01/05/2021

 

2016 tn assembly election admk and dmk candidates votes

 

தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளும், சில மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் மக்களவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளும் நாளை (02/05/2021) எண்ணப்பட்டு, நாளையே தேர்தல் முடிவுகளும் வெளியாகவுள்ளது. கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி வாக்கு எண்ணிக்கையை நடத்துவதற்கான ஏற்பாடுகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.

 

தமிழக முன்னாள் முதல்வர்களான ஜெயலலிதா, கலைஞர் மறைவுக்கு பிறகு நடந்த முதல் சட்டமன்றத் தேர்தல் என்பதால், தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

 

தேர்தலில் பதிவான ஒவ்வொரு வாக்குகளும் முக்கியம். எப்படி என்று கேட்கிறீர்களா? கடந்த 2016- ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளர்கள் வெற்றி, தோல்வியைச் சந்தித்தனர்.

 

குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றவர்கள், தோல்வி அடைந்தவர்கள் குறித்து பார்ப்போம்!

ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட அப்பாவு வெறும் 49 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இந்த தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட இன்பதுரை 69,590 வாக்குகளும், அப்பாவு 69,541 வாக்குகளும் பெற்றனர். 

 

காட்டுமன்னார்கோவில் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் 87 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இந்த தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட முருகுமாறன் 48,450 வாக்குகளும், தொல்.திருமாவளவன் 48,363 வாக்குகளும் பெற்றனர். 

 

திண்டிவனம் சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட பி.சீதாபதி 101 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட எஸ்.பி.ராஜேந்திரன் 61,778 வாக்குகளும், பி.சீதாபதி 61,879 வாக்குகளும் பெற்றனர். 

 

செய்யூர் சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஆர்.டி.அரசு 304 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஏ.முனுசாமி 63,142 வாக்குகளும், ஆர்.டி.அரசு 63,446 வாக்குகளும் பெற்றனர்.  

 

கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கடம்பூர் ராஜு 428 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அமைச்சரானார். இந்த தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஏ.சுப்ரமணியன் 64,086 வாக்குகளும், கடம்பூர் ராஜு 64,514 வாக்குகளும் பெற்றனர்.

 

கரூர் சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட எம்.ஆர்.விஜயபாஸ்கர் 441 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அமைச்சரானார். இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கே.சுப்ரமணியன் 81,495 வாக்குகளும், எம்.ஆர்.விஜயபாஸ்கர் 81,936 வாக்குகளும் பெற்றனர். 

 

தென்காசி சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட செல்வமோகன்தாஸ் பாண்டியன் 462 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட எஸ்.பழனி நாடார் 85,877 வாக்குகளும், செல்வமோகன்தாஸ் பாண்டியன் 86,339 வாக்குகளும் பெற்றனர். 

 

ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஆர்.சுந்தர்ராஜ் 493 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் போட்டியிட்ட புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி 64,578 வாக்குகளும், ஆர்.சுந்தர்ராஜ் 65,071 வாக்குகளும் பெற்றனர். 

 

பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வெற்றிவேல் 519 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் போட்டியிட்ட பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் என்.ஆர்.தனபாலன் 79,455, வெற்றிவேல் 79,974 வாக்குகளும் பெற்றனர். 

 

திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கோவி செழியன் 532 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட யு.சேது 77,006 வாக்குகளும், கோவி செழியன் 75,538 வாக்குகளும் பெற்றனர்.

 

திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஏ.எல்.எஸ்.லக்ஷ்மணன் 601 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன் 81,160 வாக்குகளும், ஏ.எல்.எஸ்.லக்ஷ்மணன் 81,761 வாக்குகளும் பெற்றனர். 

 

திருமயம் சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட எஸ்.ரகுபதி 766 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட பி.கே.வைரமுத்து 71,607 வாக்குகளும், எஸ்.ரகுபதி 72,373 வாக்குகளும் பெற்றனர்.

 

பரமத்தி வேலூர் சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கே.எஸ்.மூர்த்தி 818 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஆர்.ராஜேந்திரன் 73,600 வாக்குகளும், கே.எஸ்.மூர்த்தி 74,418 வாக்குகளும் பெற்றனர். 

 

திருப்போரூர் சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கோதண்டபாணி 950 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட விஸ்வநாதன் 69,265 வாக்குகளும், கோதண்டபாணி 70,215 வாக்குகளும் பெற்றனர்.

 

பர்கூர் சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வி.ராஜேந்திரன் 982 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஈ.சி.கோவிந்தராஜன் 79,668 வாக்குகளும், வி.ராஜேந்திரன் 80,650 வாக்குகளும் பெற்றனர். 

 

பேராவூரணி சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட எம்.கோவிந்தராசு 995 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட என்.அசோக்குமார் 72,913 வாக்குகளும், எம்.கோவிந்தராசு 73,908 வாக்குகளும் பெற்றனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தேர்தல் முடிவு இருக்கும்'-துரை வைகோ நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
'The result of the election will be an kalaingar's birthday gift' - Durai Vaiko believes

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று(19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், ''தமிழகத் தேர்தல் முடிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக இருக்கும். தனக்காக பரப்புரை செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் தோழமை, கூட்டணி கட்சியினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இது ஜனநாயகத்திற்காக, மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான தேர்தல். அதேவேளையில் மத அரசியல் புரிந்து மக்களை பிளவுபடுத்தும் ஜாதி, மத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் பொழுது கலைஞரின் 101 வது பிறந்தநாள் பரிசாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது