Skip to main content

200 ஆண்டுகள் பழமையான திருஞானசம்பந்தரின் அரிய பாடல் சுவடி பிரதி; நெல்லையில் கண்டுபிடிப்பு

Published on 09/06/2023 | Edited on 09/06/2023

 

200-year-old Tirunnasambandar's rare song Suvadi; Discovery in rice

 

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள திருக்கோயில்களில் இருக்கும் அரிய ஓலைச்சுவடிகளைத் தேடித் திரட்டி, பராமரித்து, அட்டவணைப்படுத்தி, மின்படியாக்கம் செய்து பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அதோடு அல்லாமல் அதனை நூலாக்கும் பணியிலும் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. இதற்காக "திருக்கோயில்கள் / மடங்களின் ஓலைச்சுவடிகள் பாதுகாப்பு பராமரிப்பு நூலாக்கத் திட்டப் பணி" எனும் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் கூடுதல் ஆணையர் சி.ஹரிப்ரியா இத்திட்டப் பணியின் முதன்மையராக நியமிக்கப்பட்டுள்ளார். முனைவர் ஜெ.சசிகுமார் இத்திட்டப் பணியினைக் கண்காணித்து வருகிறார். சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர் முனைவர் சு.தாமரைப்பாண்டியன் திட்டப் பணியின் ஒருங்கிணைப்பாளராக இருந்து செயல்பட்டு வருகிறார். 

 

இவரின் கீழ் 12 பேர் கொண்ட சுவடிக் குழுவினர் இத்திட்டப் பணியில் பணியாற்றி வருகின்றனர். இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் 46,020 திருக்கோயில்கள் உள்ளன. இத்திருக்கோயில்களில் கடந்த 11 மாதங்களில் இதுவரை 232 திருக்கோயில்களில் கள ஆய்வு செய்து முடிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு செய்யப்பட்ட கள ஆய்வின் மூலம் சுருணை ஏடுகள் சுமார் 1,80,612 உம், இலக்கியச் சுவடிக்கட்டுகள் 348 உம் (ஏடுகள் சுமார் 33,000) தாள் சுவடிகள் 5 உம் கண்டறியப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து திருக்கோயில்களிலும் கள ஆய்வு செய்து முடிக்கும் பொழுது இன்னும் மிக அதிகமான சுவடிகள் கண்டறிய வாய்ப்பு உள்ளது.

 

200-year-old Tirunnasambandar's rare song Suvadi; Discovery in rice

 

இந்நிலையில் இச்சுவடித் திட்டப் பணிக்குழுவினர் நெல்லையப்பர் கோயிலில் கள ஆய்வு செய்துள்ளனர். அவ்வாறு கள ஆய்வு செய்த போது சில அரிய ஓலைச்சுவடிகளைக் கண்டறிந்துள்ளனர்.  எனவே அது குறித்து திட்டப் பணியின் ஒருங்கிணைப்பாளரும் சுவடியியல் துறை பேராசிரியருமான சு.தாமரைப்பாண்டியன் கூறியதாவது, “இந்து சமய அறநிலையத் துறையின் அமைச்சர் பி.கே.சேகர்பாபு திருக்கோயில்களில் உள்ள அரிய ஓலைச் சுவடிகளைப் பாதுகாக்க வேண்டும் என்று எண்ணி எடுத்த நடவடிக்கையின் அடிப்படையில் சுவடித் திட்டக் குழுவினராகிய நாங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம். பல மாவட்டங்களில் உள்ள திருக்கோயில்களிலும் தொடர்ந்து கள ஆய்வின் மூலம் ஓலைச்சுவடிகளைத் தேடித் தொகுத்து அட்டவணைப்படுத்தி வருகிறோம். மேலும் சுவடிகளைப் பராமரித்துப் பாதுகாப்பதோடு நூலாக்கமும் செய்து வருகிறோம்.

 

இந்நிலையில் எனது தலைமையில் சுவடியியலாளர்கள் இரா.சண்முகம், க.சந்தியா, நா.நீலகண்டன், மா.பாலசுப்பிரமணியன் ஆகியோர் இணைந்து திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் அருள் தரும் காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் அரிய பழஞ்சுவடிகள் உள்ளனவா என்று தேடிப் பார்த்தோம். அவ்வாறு கோயிலில் முதலில் தேடிய பொழுது கோயில் நிர்வாகம் பாதுகாத்து வந்த 10 செப்புப்பட்டயங்களைக் கண்டறிந்தோம். பின்னர் கிரந்த எழுத்து வடிவில் அமைந்த வேணுவ நாத ஸ்தல புராணம், சைவ அக்னி காரியம், ஸ்ரீ சக்கர பிரஷ்டா விதி, அபஸ்தம்ப அமரம், ஸ்ரீ சக்ர பூஜை, சைவ சந்நியாசி விசயம், வேணுவ நாத லீலா, வைசாக புராணம், சங்காபிஷேக விதி, நித்திய பூஜாவிதி, க்ஷிரா அபிஷேக விதி, சகஸ்த நபணம் ஆகிய 12 ஓலைச்சுவடிக் கட்டுகளைக் கண்டறிந்தோம்.

 

அதன் பின்பு கோயிலின் பிற இடங்களில் எங்கேனும் ஓலைச்சுவடிகள் உள்ளனவா என்று தேடிப் பார்த்தோம். பழைய பொருட்கள் போட்டு வைக்கப்பட்டிருந்த ஒரு அறைக்குள் 2 அரிய தாள் சுவடிகள் கிடைத்தன. அதன் பின் பழைய பொருட்கள் போட்டு வைக்கப்பட்டிருந்த அறையை ஒட்டி இருந்த ஒரு சிறிய அறையில் ஒரு பழைய பீரோவை திறந்து பார்த்த பொழுது அதற்குள் ஒரு பழமையான சுவடி ஒன்று இருப்பதை மா.பாலசுப்பிரமணியன் கண்டுபிடித்தார். அதனை ஆய்வு செய்த போது திருஞானசம்பந்தர் அருளிச் செய்த முதல் மூன்று திருமுறைகள் அடங்கிய தேவாரப்பாடல்கள் இருந்தன. சுவடியின் தொடக்கப் பக்கத்தில் "தோடுடைய செவியன்....." எனும் பாடல் எழுதப்பட்டுள்ளது. சுவடியில் சுவடியைப் பிரதி செய்தவர், பிரதி செய்யப்பட்ட காலம் பற்றிய குறிப்புகள் எதுவும் காணப்படவில்லை. சுவடியின் எழுத்தமைதி மூலம் சுவடிப் பிரதி செய்யப்பட்ட காலம் சுமார் 200 ஆண்டுகள் இருக்கலாம் என்று அறிய முடிகிறது. சுவடியில் மொத்தம் 281 ஏடுகள் உள்ளன.

 

சுவடியின் இறுதியில் "திருஞானசம்பந்தரான ஆளுடைய பண்டாரத்தின் மூன்றாம் திருமுறை முற்றும். ஆக திருக்கடைக்காப்பு 383. பூமிநாத சுவாமி பாதாரவிந்தமே கெதி. நமச்சிவாய மூர்த்தி" என்ற குறிப்பு உள்ளது. சுவடியைப் பூச்சிகள் ஏதும் அரிக்கவில்லை. நல்ல நிலையில் உள்ளது. சுவடியை முழுமையாக ஆய்வு செய்தால் திருஞானசம்பந்தரின் பாடல்களை ஒப்பு நோக்கிப் பாடபேதம் நீக்கிச் செம்பதிப்பு நூல் கொண்டு வர துணை செய்யும். இக்கோயிலில் கண்டறியப்பட்ட பட்டயங்களை ஆராயும் பணியும் நடைபெற்று வருகிறது. மேலும் கோயிலில் உள்ள சுவடிகளைப் பராமரித்து அட்டவணைப்படுத்தும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

 

 

 

Next Story

நயினார் நாகேந்திரனுக்கு எதிராக வழக்கு!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Case against Nayinar Nagendran!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு நாடு முழுவதும் ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இத்தகைய சூழலில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 06.04.2024 அன்று இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பைகளில் கட்டுக்கட்டாக இருந்த 500 ரூபாய் நோட்டுகளைப் பறக்கும் படையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் பாஜக தொழில்துறை மாநில துணைத்தலைவர் கோவர்தனின் உணவகத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.  இந்தச் சோதனையில் ரூ.1.10 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து, நெல்லையில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு காவல்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது.

இந்த நிலையில், பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரன் போட்டியிடும் நெல்லை தொகுதிக்குத் தேர்தல் நடத்த தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் மகாராஜன், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது, ‘வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவான வழக்கை மறைத்து நயினார் நாகேந்திரன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அதனால், நயினார் நாகேந்திரனின் வேட்புமனுவை நிராகரிக்க கோரிய தன் ஆட்சேபனை மீது முடிவெடுக்கும் வரை தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும். மேலும், நயினார் நாகேந்திரனின் வேட்புமனுவை ஏற்றது சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த மனு தொடர்பான விசாரணை, சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நாளை (16-04-24)  விசாணைக்கு வருகிறது. 

Next Story

“தமிழ் கலாச்சாரம் மீது திமுக காங்கிரஸுக்கு வெறுப்பு உள்ளது” - பிரதமர் மோடி

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
PM Modi says DMK-Congress hates Tamil culture

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே அகஸ்தியர்பட்டியில் பிரதமர் மோடி இன்று (15.04.2024) தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளின் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, “தமிழ் புத்தாண்டு தினத்தில் பா.ஜ.க தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. தமிழ் மொழியை பா.ஜ.க உலக அளவில் பிரபலப்படுத்தும். உலகம் முழுவதும் திருவள்ளுவர் மையங்களை அமைக்க பா.ஜ.க முடிவு செய்துள்ளது. தமிழ் கலாச்சாரம் மீது திமுக காங்கிரஸுக்கு வெறுப்பு உள்ளது. குடும்ப கட்சியான காங்கிரஸ், காமராஜரை அவமதித்தது. எம்.ஜி.ஆர் புகழை திமுக அவமதித்தது. ஜெயலலிதாவை சட்டசபையில் மோசமாக நடத்தியது.

பா.ஜ.க மற்றும் கூட்டணிக் கட்சியினர் தேர்தல் பிரச்சாரம் செய்வதை திமுக அரசு தடுக்கிறது. திமுகவும், காங்கிரஸும் தமிழ்நாட்டு நலனுக்கு விரோதமாக கச்சத்தீவை வேறொரு நாட்டுக்கு கொடுத்துவிட்டனர். கச்சத்தீவை தாரைவார்த்தது மன்னிக்க முடியாத பாவம். குடும்ப அரசியலை ஆதரிக்கும் கட்சியின் ஊழல் ஆட்சியால் தமிழ்நாடு துன்பப்படுகிறது” எனப் பேசினார்.