Skip to main content

அர்ச்சக பயிற்சி மாணவர்களின் 15 ஆண்டுக்கால போராட்டம்; சமூகநீதி பயணத்தில் புரட்சி..!

Published on 14/08/2021 | Edited on 14/08/2021

 

15 years of struggle of priestly training students; Revolution in the journey of social justice ..!

 

2006ல் தமிழக முதலமைச்சராக இருந்த கலைஞரால் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்கிற சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதனைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோயில், பழனி, திருச்செந்தூர், மதுரை மீனாட்சியம்மன் கோயில் வளாகங்களில் சைவ முறை பள்ளிகளும், ஸ்ரீரங்கம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் வளாகத்தில் வைணவ முறைப்படி அர்ச்சக பள்ளிகளும் தொடங்கப்பட்டன.

 

இந்த 6 பள்ளிகளில் 210 இளைஞர்கள் ஆர்வமாக சேர்ந்தனர். அவர்களுக்கு, ஆகம விதிகளின்படி பூஜை செய்வது, வேதமந்திரம் ஓதுவது போன்றவற்றை தமிழ், சமஸ்கிருதம் என்ற இரண்டு மொழியில் பாடம் நடத்தப்பட்டது. திருக்குறள், சிவபுராணம், சைவ சமயத்தின் அனைத்து தெய்வங்களுக்கான 108 போற்றிகள் பன்னிரு திருமுறைகள், 63 நாயன்மார் வரலாறு, தமிழ் இலக்கணங்கள், திருக்கோயில் பூஜை முறைகள் ஜோதிடம், சிறப்பு நாட்கள் (திதி, அம்மாவசை, கிருத்திகை, பிரதோசம்) பஞ்சாங்கம் என அனைத்தும் கற்று தரப்பட்டது. கருவறைக்குள் சென்று பூஜை செய்ய தீட்சை தரப்பட்டது. கற்றதை அறிய எழுத்து தேர்வு, செயல்முறை தேர்வு நடந்தது. அதில் 206 பேர் தேர்ச்சி பெற்றனர்.

 

அனைத்து சாதியினரும் அர்ச்சகராக்குவது தவறு எனச்சொல்லி மதுரை ஆதிசிவாச்சாரியர்கள் உயர்நீதிமன்றத்திலும், பின்னர் உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்தனர். உச்சநீதிமன்றத்தில் நீண்டகாலம் நிலுவையில் இருந்தது அந்த வழக்கு. அந்த வழக்கில் அர்ச்சக பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கமும் இணைந்துகொண்டது. சுமார் 8 ஆண்டுகள் உச்சநீதிமன்றத்தில் பலமுறை மனுக்களை போட்டு அந்த வழக்கை எடுக்கவைத்தது. இதற்கான நீண்ட நெடிய போராட்டத்தை அர்ச்சகர் மாணவர் சங்கம் நடத்தியது.

 

2015ல் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்கிற அரசாணையை, சட்டத்தை ரத்து செய்யவில்லை. எந்தெந்த கோயில்களில் என்ன மாதிரியான ஆகம விதிகளை கடைப்பிடிக்கிறார்களோ அதன்படி அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என்றது. ஆனாலும் அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக அதனை பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை.

 

அதன்பின் மீண்டும் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடத்திகொண்டுவந்தது. அர்ச்சகர் பதவிகளில் தகுதியோடு உள்ள எங்களையும் நியமனம் செய்யுங்கள் என்றுத்தான் கேட்கிறோம். நிச்சயம் வேலை கிடைக்கும் என நம்பித்தான் அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் சேர்ந்து படித்தோம். அனைத்து தகுதிகளும் உள்ள எங்களுக்கு அரசாங்கம் பணி வழங்காமல் உள்ளது நியாயமா எனக் கேள்வி எழுப்பினர்.

 

15 years of struggle of priestly training students; Revolution in the journey of social justice ..!

 

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தவரை அர்ச்சகர் பயிற்சி முடித்த மாணவர்களை கண்டுக்கொள்ளவில்லை.

 

திடீரென 2018ஆம் ஆண்டு மதுரை புதூர் அய்யப்பன் கோயிலில் மாரிச்சாமி என்கிற அர்ச்சக பயிற்சி முடித்த மாணவரை அறநிலையத்துறை, அர்ச்சகராக நியமித்தது அப்போதைய எடப்பாடி தலைமையிலான அரசு. அதன்பின் இரண்டு ஆண்டுகள் நியமனங்களே இல்லை. மீண்டும் போராடிக்கொண்டு இருந்தார்கள் மாணவர்கள்.

 

கேரளாவில் பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை அர்ச்சகராக கோயில் பணியில் நியமித்ததும் நாங்களும் அனைத்து சாதிக்கும் சமமானவர்கள் என்பதைக்காட்ட 2020ஆம் ஆண்டு மதுரை நாகமலை பிள்ளயைார் கோயிலில் தியாகராஜன் என்பவர் பணி நியமனம் செய்தது அதிமுக அரசாங்கம். அதன்பின் மீண்டும் குறட்டைவிட தொடங்கியது.

 

தமிழகத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளநிலையில் 204 அர்ச்சக பயிற்சி முடித்த மாணவர்களுக்கு அர்ச்சகர் பணி வழங்காமல் இருப்பது நியாயமா என பலதரப்பில் இருந்தும் கேள்விகள் எழுப்பினர்.

 

2021 சட்டமன்ற தேர்தல் நேரத்தில் அதிமுக தனது பிரச்சாரத்தில் அர்ச்சகர் பயிற்சி முடித்த அனைத்து சாதிப்பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கும் வேலை வாய்ப்பை வழங்கியதுப்போல் விளம்பரம் செய்தது. இது கடுமையான விமர்சனத்துக்கு ஆளாகியது. அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத் தலைவர் அரங்கநாதன் இதனை கடுமையாக எதிர்த்து கண்டன அறிக்கை வெளியிட்டார்.

 

15 years of struggle of priestly training students; Revolution in the journey of social justice ..!

 

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக்கப்படுவார்கள் என்றார் அப்போதைய திமுக தலைவரும், இப்போதைய முதல்வருமான மு.க.ஸ்டாலின். தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நடந்தது, திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவிக்கு வந்து 100வது நாளன்று, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்கிற திட்டப்படி படித்து, பயிற்சிப்பெற்ற 206 மாணவர்களில் முதல்கட்டமாக 50க்கும் மேற்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கியுள்ளார்.

 

சுமார் 15 ஆண்டுக்கால போராட்டத்துக்கு பின் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினால் அர்ச்சகர் பயிற்சி முடித்த மாணவர்கள் சங்கத்தின் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

 

தமிழகத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகின்றனர். இது தமிழ்நாட்டில் சமூகநீதி பயணத்தில் பெரிய மைல்கல்.

 

Next Story

கணேசமூர்த்தி மறைவு; அரசியல் தலைவர்கள் இரங்கல்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Ganesamurthy's demise; Political leaders condole

ம.தி.மு.க. எம்பி கணேசமூர்த்தி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஈரோடு பாராளுமன்றத் தொகுதி எம்பியான கணேசமூர்த்தி மதிமுகவின் பொருளாளராகப் பணியாற்றி வந்தார். சென்ற தேர்தலில் ஈரோடு தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டிய சூழல் மதிமுகவுக்கு ஏற்பட்டதால் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நின்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பிறகு கடந்த ஐந்து வருடமாக தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தொடர்ந்து மக்களுக்குப் பணியாற்றி வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கணேசமூர்த்தி தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.  வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கணேசமூர்த்தி. சல்பாஸ் மாத்திரை எனப்படுகிற உயிர்க்கொல்லி மாத்திரையை அவர் விழுங்கியது தெரியவந்தது. ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர் கோவையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தரப்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்று அதிகாலை 5.05 மணிக்கு திடீரென சிகிச்சையில் இருந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. கணேசமூர்த்தியின் உயிரிழப்பு காரணமாக மதிமுக கட்சியினர் மற்றும் கூட்டணிக் கட்சியினர் மருத்துவமனைக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

nn

அவரின் மறைவுக்கு அவரது சொந்த கட்சியைச் சேர்ந்த வைகோ, அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்த செய்திக் குறிப்பில், 'ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைந்த செய்தி அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். ஆற்றல்மிகு தளகர்த்தரான கணேசமூர்த்தியின் மறைவு சொல்லொணாத் துயரைத் தந்துள்ளது. அவர் பிரிவால் வாடும் மதிமுக தொண்டர்கள், திராவிட இயக்க பற்றாளர்களுக்கு என்னுடைய இரங்கல்' எனத் தெரிவித்துள்ளார்.

அதேபோல் 'மதிமுகவின் மூத்த அரசியல் முன்னோடி கணேசமூர்த்தி காலமான செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. கணேசமூர்த்தியை பிரிந்து வாடும் குடும்பத்தார், வைகோ உள்ளிட்ட நண்பர்களுக்கு ஆறுதல்' என கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

Next Story

மீன்வளப் பல்கலைக்கழகம்; ஜெயலலிதாவின் பெயரை நிராகரித்த குடியரசுத்தலைவர்

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
President rejects Jayalalitha name for Fisheries University

நாகை மீன்வளப் பல்கலைக்கழகத்திற்கு முன்னால் முதல்வர் ஜெ.ஜெயலலிதா பெயரை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை குடியரசு தலைவர் நிராகரித்து விட்டார்.

நாகப்பட்டினத்தில் உள்ள மீன்வளப் பல்கலைக்கழகம் கடந்த 2012 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் அதிமுக ஆட்சியின் போது நாகப்பட்டினத்தில் துவங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைந்த பிறகு நாகப்பட்டினத்தில் உள்ள மீன்வள பல்கலைக்கழகத்திற்கு அவரது பெயரை வைக்க வேண்டும் என்று  சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரின் ஓப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் 4 ஆண்டுக்கும் மேல் ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் கிடப்பில் வைத்திருந்தார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு கிடப்பில் போடப்பட்ட 10 மசோதாக்களுடன் ஜெயலலிதா பெயர்மாற்றம் தொடர்பான மசோதவையும் திருப்பி அனுப்பியிருந்தார். இதையடுத்து தமிழக அரசு மீண்டும் பல்கலைக்கழகத்திற்கு ஜெயலலிதாவின் பெயர் வைக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. இந்த மசோதாவை ஆளுநர் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்திருந்தார்.

இந்த நிலையில் நாகப்பட்டினம் மீன்வளப் பல்கலைகழகத்திற்கு ஜெயலலிதா பெயர் மாற்றம் தொடர்பான பரிந்துரையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நிராகரிப்பதாக அறிவித்துள்ளார்.