Advertisment

பா.ஜ.க.வை திணறடிக்கும் 14 கேள்விகள்!

பா.ஜ.க. தனது பொய்ப்பிரச்சாரத்துக்காக உருவாக்கி வைத்திருக்கும் போலியான ட்விட்டர், முகநூல் கணக்குகளின் எண்ணிக்கை பாகிஸ்தான் ஜனத்தொகையைக் காட்டிலும் அதிகும் என்று ஒரு செய்தி வந்திருக்கிறது.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

அப்படியானால், பாகிஸ்தான் ஜனத்தொகை எவ்வளவு இருக்கும் என்பது தெரிந்தால்தான் அதன் பிரமாண்டம் புரியும். பாகிஸ்தானின் மக்கள்தொகை 20 கோடியே 77 லட்சத்திற்கும் அதிகம். இவ்வளவு போலிக் கணக்குகளை வைத்துக்கொண்டு பா.ஜ.க.வின் ஐ.டி.விங் எவ்வளவு பொய்ச் செய்திகளைப் பரப்ப முடியும் என்பதை நினைத்தாலே மலைப்பாக இருக்கிறது.

Modi

பா.ஜ.க.வுக்கு எதிரான ஒரு குற்றச்சாட்டு வலுப்பெற்றுவரும்போது அதை திசைதிருப்ப போலியான செய்திகளை பரப்புவதே இந்த போலிக்கணக்குகளின் வேலை.

ஆனால், அத்தனை முயற்சிகளையும் முறியடித்து, பா.ஜ.க. மற்றும் மோடியின் பொய்முகத்தை அம்பலப்படுத்துவதில் எதிர்க்கட்சிகளின் உண்மையான கணக்குகள் வெற்றிபெற்றிருக்கின்றன.

சமீபகாலமாக பா.ஜ.க.வின் பொய் வாக்குறுதிகளையும், பித்தலாட்டங்களையும் தொடர்ந்து பிரச்சாரம் செய்வதில் எதிர்க்கட்சியினரின் கணக்குகள் தீவிரம் காட்டுகின்றன. பா.ஜ.க.வால் உண்மைபோல பதியவைக்கப்பட்ட பொய்களை தோலுரிப்பதில் கவனமாக இருக்கின்றன.

இந்திய வரலாற்றில் இதுவரை கேள்விப்படா பல விஷயங்களை எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பதிவாளர்கள் வரிசைப்படுத்துகிறார்கள். அந்த உண்மைகளை பா.ஜ.க.வால் மறுக்கவே முடியாது. சுடும் அந்த உண்மைகளை நாமும் இங்கே வரிசைப்படுத்துவோம்.

1.இந்திய வரலாற்றில் இதற்கு முன்பு எப்போதேனும், கற்பழிக்கப்பட்ட ஒரு பெண்ணின் தந்தையை போலிஸ் நிலையத்திலேயே ஒரு எம்.எல்.ஏ. கொலை செய்ததாக கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

BJP

2.இந்திய வரலாற்றில் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஒருவர் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டதுண்டா? தேர்தல் ஆணையரான பிறகு அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டை மாநில அரசு திரும்பப்பெற்றதுண்டா?

3.இந்திய வரலாற்றில் பிரதமரின் கல்வித்தகுதியை எப்போதாவது ரகசியமாக மறைத்து வைத்ததை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

4.இந்திய வரலாற்றில் தலைமை நீதிபதியே தனது வழக்கில் நீதிபதியாக இருந்ததை கேட்டிருக்கிறீர்களா?

5.இந்திய வரலாற்றில் எம்.எல்.ஏ. ஒருவரால் கற்பழிக்கப்பட்ட பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள், அந்த மாநில முதல்வரின் வீட்டுமுன் தற்கொலைக்கு முயன்றதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

6.இந்திய வரலாற்றில் ரூபாய் நோட்டு கிடைக்காமல் திண்டாடியதாக எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

7.இந்திய வரலாற்றில் தலைமைத் தேர்தல் ஆணையர் தேர்தல் தேதியை அறிவிப்பதற்கு முன் பா.ஜ.க.வின் ஐ.டி.விங் தலைவர் தேதிகளை அறிவித்ததை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

8.இந்திய வரலாற்றில் ரூபாய் நோட்டுக்களை பெறுவதற்காக நீண்ட வரிசையில் மக்களைக் காக்கவைத்த நிகழ்வை கேள்விப்பட்டதுண்டா?

Yogi

9.இந்திய வரலாற்றில் உச்சநீதிமன்றம் தீர்ப்பை வெளியிடுவதற்கு முன்பு, தீர்ப்பு நகலை சட்டத்துறை அமைச்சர் வாங்கிய நிகழ்வை கேள்விப்பட்டதுண்டா?

10.இந்திய வரலாற்றில் ராணுவ வீரர்கள் தங்களுக்கு உணவு கிடைக்கவில்லை என்று புகார் செய்ததை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

11.இந்திய வரலாற்றில் கற்பழிப்புக் குற்றச்சாட்டுக்கு ஆளான குற்றவாளியை பாதுகாக்க மாநில அமைச்சர்களே ஊர்வலம் நடத்தியதை கேட்டிருக்கிறீர்களா?

12.இந்திய வரலாற்றில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு எதிராக உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூடி செய்தியாளர்களைச் சந்தித்து புகார் கூறியதை கேட்டிருக்கிறீர்களா?

13.இந்திய வரலாற்றில் சாலைகளில் கிடந்த பசு சாணத்தை திண்ணும்படி தாழ்த்தப்பட்ட மக்களை கட்டாயப்படுத்திய சம்பவத்தை கேள்விப்பட்டதுண்டா?

14.இந்திய வரலாற்றில் மதக்கலவரத்தில் ஈடுபட்ட ஒரு குற்றவாளியை பாதுகாக்க, நீதிமன்றக்கூண்டில் ஏறி, தேசியக் கட்சியின் தலைவர் ஒருவர் சாட்சியம் அளித்திருக்கிறாரா?

இந்த 14 கேள்விகள் இப்போது பரபரப்பாக உலா வருகின்றன. சமூக வலைத்தளங்களில் பரவும் இந்தக் கேள்விகள் அனைத்தும் பா.ஜ.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு இந்திய சரித்திரத்தில் இடம்பெற்றவை. அனைத்து நிகழ்வுகளிலும் பா.ஜ.க. அரசுக்கும், பாஜக ஆட்களுக்கும் தொடர்பு உண்டு.

கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் இந்தக் கேள்விகள் நல்ல பலனைக் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

சித்தராமய்யாவின் தேர்தல் பிரச்சார உத்திகள் பா.ஜ.க.வை திணறடிக்கின்றன என்கிறார்கள்.

congress Siddaramaiah yogi adithyanath Amit shah Narendra Modi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe