Skip to main content

சசி-எடப்பாடி சமரசம்! புது ரூட் போடும் சொந்தங்கள்!

Published on 20/11/2020 | Edited on 20/11/2020
Sasikala

 

கடந்த 11ஆம் தேதி தஞ்சாவூர் பக்கத்தில் சுவாமிமலை ரிசார்ட்டில் தினகரனின் மகள் ஜெய ஹரிணிக்கும், துளசி அய்யா வாண்டையார் பேரன் ராமநாதனுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த நிச்சயதார்த்தத்துக்கு திவாகர் அழைக்கப்படவில்லை. 14ஆம் தேதி தினகரனின் மாமனாரும் அனுராதா, பிரபா, டாக்டர் வெங்கடேஷ் ஆகியோரின் அப்பாவுமான சுந்தரவதனம் மரணமடைந்தார். பல நாட்களாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு உடல்நலம் சரியில்லாமல் இருந்த சுந்தரவதனம், சசிகலாவின் சகோதரர்.

 

சசிகலாவின் குடும்பத்தில் மூத்தவரான சுந்தரவதனத்தின் மறைவு சசிகலாவை ரொம்பவே பாதித்தது. விவேகானந்தனின் மறைவுக்காக சசிகலா பரோலில் வர முயற்சி செய்தார். உடனடியாக அவருக்கு பரோல் தரமுடியாது என சிறை நிர்வாகத்தின் தரப்பில் வாய்மொழியாக சொல்லப்பட்டது. சசிகலா வரவில்லை. ஆனால் ஒட்டுமொத்த மன்னார்குடி குடும்பமே அந்த இறுதி நிகழ்வில் பங்கெடுத்தது. சென்னையில் வைக்கப்பட்டிருந்த அவரது உடல் தஞ்சாவூருக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு ஒருநாள் வைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. கரோனாவால் பாதிக்கப்பட்ட ஜெயா டி.வி பாஸ்கரனை தவிர மற்ற அனைவரும் அந்த துக்க நிகழ்வில் பங்கெடுத்தனர். டிடிவி தினகரன், அனுராதா, பிரபா அவரின் கணவர் டாக்டர்.சிவகுமார், திவாகரன் அவரது மகன் ஜெய் ஆனந்த், சுதாகரனின் மனைவி, பாஸ்கரனின் மனைவி என ஒட்டுமொத்தமாக மன்னார்குடியே தஞ்சாவூரில் உள்ள சசிகலாவின் வீட்டில் திரண்டிருந்தது.

 

ddd

                                                                                  சுந்தரவதனம்

 

திவாகரனும், தினகரனும் பேசிக் கொள்ளவில்லை. ஆனால் திவாகரனின் மனைவியும், தினகரனின் மனைவியும், மறைந்த சுந்தரவதனத்தின் மகளுமான அனுராதாவிடம் பேசினார். அதேபோல் ஜெயா டி.வி எம்.டியான விவேக், தினகரனுடன் சமீபகாலமாக பேசாமல் இருந்தார். அவரும் தினகரனோடு பேசினார். இப்படி மன்னார்குடி சொந்தங்கள் ஒன்றோடு ஒன்றாக இணைந்து பேசிய பேச்சு அரசியல் பக்கம் திரும்பியது. சொந்தபந்தங்கள் அரசியல் பேசவேண்டாம் என்ற சசிகலாவின் கட்டளையை மீறி இது நடந்தது.

 

சசிகலா வெளியே வந்தால் என்ன நடக்கும் என்ற பேச்சு அங்கு எழுந்தது. சசிகலாவுக்காக தி.நகரில் ஒரு புத்தம் புதிய மாளிகை ஒன்று தயார் செய்யப்பட்டுள்ளது. அதில் உள்ள வசதிகள் பற்றி பேச்சு வந்தது. அதன்பிறகு எடப்பாடி ஆட்சி, பற்றியும், அமைச்சர் துரைக்கண்ணு மரணம், கைப்பற்றப்பட்ட கோடிகள் என பேச்சில் சுவாரசியம் அதிகரித்தது. இனி எடப்பாடியுடன் எப்படி நடந்து கொள்வது என்பது பற்றி மன்னார்குடி சொந்தங்களுடன் ஒரு பட்டிமன்றமே நடந்தது.

 

ddd

                         விவேக்            ஜெய் ஆனந்த்         தினகரன்      திவாகரன் 

 

தினகரன் தரப்பு, அ.ம.மு.க. உடன் கூட்டணி சேர்ந்து மூன்றாவது அணியை உருவாக்க காங்கிரஸ் தரப்பிலிருந்து அழைப்புகள் வருகிறது என்று தெரிவித்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த திவாகரன் தரப்பினர் எடப்பாடி பழனிச்சாமி திவாகரனுடன் நேரடியாகவும், மறைமுகமாகவும் பேசுகிறார். அமைச்சர்கள் எல்லோரும் நல்லபடியே இருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி தூண்டிவிட்டுதான் வருமானவரித்துறை அதிகாரிகள் சசிகலாவின் 1,500 கோடி சொத்துக்களை மடக்கினார்கள். அதெல்லாம் இப்பொழுது மாறிவிட்டது. எடப்பாடி பழனிச்சாமி சசிகலாவுக்கு ஒத்துழைப்பு தர தயாராக இருக்கிறார் என்றார்கள். ஆனால் இதைப்பற்றி எல்லாம் வெளியில் பேசுவதற்கு சசிகலா அனுமதித்ததில்லை என தினகரன் தரப்பினரும், திவாகரன் தரப்பினரும் பேசிக்கொண்டார்கள்.

 

அதேநேரத்தில் சசிகலாவின் ஆஸ்தான தளபதிகளாக இருந்த ராவணன் போன்றோர் கொங்குமண்டல அமைச்சர்கள் தங்களிடம் சசிகலாவுக்கு ஆதரவாக நடந்துகொள்வதாக வாக்களித்திருக்கிறார்கள் என பதிவு செய்தனர். இப்படி ஒட்டுமொத்த அதிமுகவும் சசிகலா தரப்பிடம் பணிந்து நிற்கிறது என்பது போன்ற இமேஜ் அந்த மரண வீட்டிற்கு வந்த வந்தவர்கள் மத்தியில் உருவாகியிருந்தது என்கிறார்கள் சசிகலாவுக்கு நெருக்கமான மன்னார்குடி வட்டாரத்தை சேர்ந்தவர்கள்.

 

ddd

 

இதற்கிடையே ஓபிஎஸ் எப்படி இருக்கிறார் என்கின்ற சிறு பட்டிமன்றமும் அங்கு நடைபெற்றது. சசிகலா விஷயத்தில் பா.ஜ.க. இணக்கமாகவே இருக்கிறது. ஜனவரி மாதம் ரிலீஸ் ஆவதற்கு க்ரீன் சிக்னல் காட்டி விட்டது. பாஜக ஒத்துழைக்கும் நேரத்தில் ஓபிஎஸ்ஸும் சசிகலாவுக்கு ஒத்துழைப்பு தர தயாராக இருக்கிறார். சசிகலா வந்ததுமே எடப்பாடி முதல்வராக தொடர்வாரா என்கின்ற சந்தேகம்தான் இப்பொழுது எழுந்துள்ளது. அதிமுகவை தனது முழு கட்டுப்பாட்டில் எடப்பாடி வைத்திருக்கிறார். எனவே எடப்பாடிக்கு யாராவது தொந்தரவு கொடுத்தால் அது சசிகலாவிற்கு எதிரானதாக மாறிவிடும் என்கின்ற வாதமும் எடுத்து வைக்கப்பட்டது.

 

இந்நிலையில் எடப்பாடிக்கு நெருக்கமான சேலம் இளங்கோவனின் மகன் பிரவீனின் திருமணம் வருகின்ற 27ஆம் தேதி சேலத்தில் நடைபெற இருக்கின்றது. மகாதேவனுக்கு நெருக்கமான இளங்கோவன், சசிகலா குடும்பத்துடன் நல்ல அறிமுகத்தை கொண்டவர். அவரது மகனின் திருமணத்திற்கு சசிகலாவின் உறவினர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். அந்தத் திருமணத்தில் எடப்பாடியும் கலந்து கொள்கிறார். அந்த திருமணத்தின் போது எடப்பாடிக்கும், சசிகலாவுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை வலுப்பெறும் என மன்னார்குடி சொந்தங்கள் நம்பிக்கை தெரிவித்தபடி கலைந்து சென்றார்கள்.

 

-தாமோதரன் பிரகாஷ்,
துரை மகேஷ்

 

 

Next Story

“திருச்சி அதிமுக வேட்பாளர் வெற்றிக்கு ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும்” - தங்கமணி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
 Trichy AIADMK candidate must work together for victory says Thangamani

திருச்சி மாவட்டம் முசிறி தா.பேட்டை ரோட்டில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் அறிமுகம் மற்றும் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் பரஞ்சோதி தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏக்கள் செல்வராசு, மல்லிகா, இந்திரா காந்தி, பரமேஸ்வரி, முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர்கள் மோகன், எம்.ஆர். விஜயபாஸ்கர், நாமக்கல் மாவட்டச் செயலாளரும் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி பொறுப்பாளருமான தங்கமணி ஆகியோர் அதிமுக வேட்பாளரை ஆதரித்துப் பேசினார்.

அப்போது முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசியதாவது: பண பலமா? அதிகார பலமா? என்று நிரூபிக்கின்ற இந்த தேர்தலை பொறுத்தவரை நாம் வீடு வீடாகச் சென்று திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்குகள் சேகரிக்க வேண்டும் எனவும்,  பூத்துக்கு 500 வாக்குகள் பெற்றால் கூட நாம் வெற்றி பெற முடியும். 15 நாள் உழைப்பு அடுத்த ஐந்து வருடத்திற்கான மக்கள் பலனை தரும். திருச்சி மாவட்டம் அதிமுகவின் கோட்டை என்பதை நாம் மீண்டும் நிரூபிக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் ஐந்து முறை சென்று கழக தொண்டர்கள் வாக்குகள் சேகரிக்க வேண்டும். இறந்து போனவர்கள், வெளிநாட்டில் இருப்பவர்கள் வாக்குகளை கண்டறிந்து கள்ள வாக்குகளை நாம் தடுக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் விலைவாசி கட்டுக்குள் இருந்தது. திமுக ஆட்சியில் விலைவாசி மற்றும் அனைத்து கட்டணங்களும் உயர்ந்துள்ளது.

நகை கடன் அனைவருக்கும் தள்ளுபடி என்று கூறிவிட்டு 45 லட்சம் பேரில் 12 லட்சம் பேருக்கு மட்டுமே தள்ளுபடி செய்துள்ளனர். 10 ஆண்டுகளில் தாலிக்கு தங்கம், லேப்டாப், இலவச சைக்கிள், மகளிர் திருமண உதவித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் திட்டங்களை நாம் நிறைவேற்றியுள்ளோம். 2026 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தான் மீண்டும் முதலமைச்சர் என உறுதிமொழி ஏற்போம். உள்ளாட்சி தேர்தலுக்கும், வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கும் இந்த நாடாளுமன்றத் தேர்தல் அடித்தளமாக அமையும். பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சந்திரமோகனுக்கு இரட்டை இலை சின்னத்தில் பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற செய்ய வேண்டுமாய் கழக தொண்டர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்று பேசினார்.

வேட்பாளர் சந்திரமோகனை அறிமுகப்படுத்தி விஜயபாஸ்கர் பேசியதாவது: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. ஏழைகளுக்கு 20 கிலோ அரிசி, தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்தார். ஆனால் இந்த திமுக ஆட்சியில் அந்த திட்டத்தை எல்லாம் நீக்கி விட்டனர். நீட் ஒழிக்கிறேன் என்று சொல்லி இப்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி வந்த உடன் நீக்குகிறோம் என்று சொல்லி பொய் பிரச்சாரம் செய்து வாக்கு கேட்டு செல்வார்கள். அந்த பொய் பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில் நமது திண்ணை பிரச்சாரம் இருக்க வேண்டும் என செயல் வீரர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

இதனை அடுத்து வேட்பாளர் சந்திரமோகன் பேசியதாவது:  என்னை எந்த நேரத்திலும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். நான் வெற்றி பெற்றவுடன்  இப்பகுதிகளுக்குரிய தேவைகளை கவனத்தில் கொண்டு நிறைவேற்ற பாடுபடுவேன் எனப் பேசினார்.

முன்னதாக முன்னாள் எம்எல்ஏ செல்வராஜ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில் தேமுதிக மாவட்டச் செயலாளர் குமார், புதிய தமிழகம் கட்சி மாவட்டச் செயலாளர் சின்னையன் , வளரும் தமிழகம் கட்சி மாவட்ட செயலாளர் தமிழன் துரைராஜ், எஸ்டிபிஐ கட்சி மாவட்டச் செயலாளர் அசாருதீன் உட்பட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். நிறைவில் நகரச் செயலாளர் எம்.கே. சுப்ரமணியன் நன்றி கூறினார்.

Next Story

'குறைந்தது 15 ஆயிரம் பேருக்கு மேல் கூட்டம் இருக்கணும்' - கட்டளையிட்ட த.மோ. அன்பரசன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக வாக்கு சேகரிக்க களத்தில் இறங்கியுள்ளது. இந்த நிலையில், செங்கல்பட்டில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் தா.மோ. அன்பரசன் பேசுகையில், “நம்ம வேட்பாளர் வாராரு, மாவட்டச் செயலாளர்  வாராரு, எம்.எல்.ஏ வாராருன்னு வீட்டுக்கு வீடு தேங்காய் வாங்கி கொடுத்து விடுவார்கள். வீட்டுக்கு வீடு ஒரு சால்வை வாங்கி கொடுத்து விடுவார்கள். நான் கூட்டிட்டு வருவேன் நீங்கள் சால்வை போடுங்கள் என்று சொல்வார்கள். அப்படியெல்லாம் செய்தீர்கள் என்றால் டைம் வேஸ்ட். மத்த ஊருக்கு போவதெல்லாம் கெட்டுப் போய்விடும். அதேபோல் ஜீப் வருகிறது என்றால் இப்பொழுது வைத்தார்களே பட்டாசு அது மாதிரி பட்டாசு வைப்பார்கள். அது ஒரு அரை மணி நேரத்திற்கு வெடிக்கும். அதனால் ஊரே காலி ஆகிவிடும். தயவு செய்து சொல்கிறேன், பட்டாசு யாராவது வைத்தார்கள் என்றால் நிச்சயமாக கட்சியில் இருந்து எடுத்து விடுவார்கள். ஜாக்கிரதை கண்டிப்பாக சொல்கிறேன். சிரிக்கிறதுக்கு சொல்லவில்லை உண்மையாகவே சொல்கிறேன்.

நான் பலமுறை சொல்லிவிட்டேன். இந்த மாதிரி பட்டாசு வெடிக்காதீங்க என்று. இரவு 10 மணியோடு பிரச்சாரத்தை முடிக்கணும். நாளை மாலை நம்முடைய இளைஞர் அணி செயலாளர், விளையாட்டுத் துறை அமைச்சர் ஆலந்தூர் தொகுதியில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு பல்லாவரம் தொகுதிக்கு வருகிறார். அதனால் மிகப்பெரிய அளவில் மிகப்பெரிய கூட்டத்தை நாம் காட்டியாக வேண்டும். கூட்டணி கட்சித் தோழர்களும் அதிக அளவில் வரவேண்டும். நம்ம தோழர்களும் அதிக அளவில் வரவேண்டும். குறைந்தது 15 ஆயிரம் பேருக்கு மேல் அங்கு கூட்டம் இருக்கணும். பக்கத்திலேயே நாளைக்கு எடப்பாடி பழனிசாமி கூட்டம் நடைபெறுகிறது. அந்தக் கூட்டம் பிசுபிசுத்து போய்விட வேண்டும். நம்ம கூட்டம் தான் மிகப்பெரிய கூட்டம் என்பதை அதிமுககாரங்க உணரணும். நம்ம கதை முடிஞ்சு போச்சு என நாளைக்கே அவங்க முடிவு பண்ணனும்.

இங்கு காங்கிரஸ் மாவட்ட தலைவர் பேசும்போது சொன்னார், எங்கு வீக்கா இருக்குதோ அங்குதான் கவனம் செலுத்த வேண்டும் என்று. அங்கெல்லாம் கவனம் செலுத்த வேண்டியது இல்லை. எங்கு நல்லா இருக்குதோ அங்கதான் கவனம் செலுத்தணும். நீ அங்கு போய் ஓட்டு போடாதவன் கிட்ட போயிட்டு எத்தனை வாட்டி போய் கேட்டாலும் ஓட்டு போட மாட்டான். நம்ம ஆளு எங்க நல்லா இருக்கானோ அவன் கால்ல போய் விழு. அவன் ஓட்டு போடுவான். இது நம்ம தந்திரம் கற்றுக்கொள். இது எங்க வேலை. ஓட்டு போடாதவங்க கிட்ட நீ போய் தொங்கிக்கிட்டு இருக்க வேண்டிய அவசியமில்லை. என்னதான் கால்ல விழுந்தாலும் ஓட்டு போட மாட்டான். நம்ம ஆளு ஓட்டு போடுறவன் இருக்கிறான். அவர்கள் கிட்ட போய் ஓட்டு கேளுங்க. டைம் வேஸ்ட் பண்ணாதீங்க'' என்றார்.