/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/26/377-2026-02-26-15-42-07.jpg)
இன்று பல்வேறு தலைவர்களும் நல்லக்கண்ணு உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அப்போது மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நல்லகண்ணுவின் எட்டு வயது புகைப்படம் பற்றி பேசியிருந்தார். ''நல்லக்கண்ணு எட்டு வயதில் தாமிரபரணி ஆற்றங்கரையில் கட்டப்பட்ட பால திறப்பு விழாவில் கலெக்டரும், ஜில்லா போர்டு தலைவரும் இருக்கும் கூட்டத்தில் ஒரு ஓரமாக நிற்கும் போட்டோவை புதுக்குடியில் இருக்கக்கூடிய தேநீர்க்கடை உரிமையாளர் ஒருவர் வைத்திருந்தார். இந்த 8 வயது சிறுவன் யார் தெரியுமா? தலைவர் நல்லகண்ணு என்று சொன்னார்.
அந்த புகைப்படத்தை எடுத்துச் சென்று என் கிராமத்து வீட்டில் வைத்திருக்கிறேன். 8 வயது நல்லகண்ணு அரைக்கால் சட்டை போட்டுக் கொண்டிருக்கும் மாணவனாக நின்று கொண்டிருக்கிறார். அவருக்கு மரணம் இல்லை'' என்றார்.
அண்மையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் அவரது இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழா கொண்டாட்டம் குறித்த ஆவணத் தொகுப்பு 'தை திருநாள்.. வைகோ உடன் ஒருநாள்' என்ற தலைப்பில் நக்கீரன் டிவியில் வெளியாகி இருந்தது. இதில் மூத்த பத்திரிகையாளர் இந்து ராம் கலந்து கொண்டார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/26/394-2026-02-26-15-44-13.jpg)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/26/395-2026-02-26-15-41-43.jpg)