நாட்டாமைக்கு நடுங்கும் போலீஸ்! உயிரைப் பறிக்கும் ஊர் விலக்கு!

pp

ரவு நேரம். வீட்டுக்கு வேண்டிய பொருட்களை வாங்கிக் கொண்டு அருகிலுள்ள தங்களின் கிராமமான கவுதம புரிக்குக் பைக்கில் திரும்பியிருக்கிறார்கள் அண்ணன் தம்பியான ரவியும் மதியழகனும்.

d

இருவரையும் வேவு பார்த்து வந்த அந்தக் கும்பல் அன்றைக்குக் கெடு வைத்துக் காத்திருந்திருக்கிறது. கிராமத்தின் நுழைவுப் பகுதியில் வந்த அவர்களின் பைக்கை மிதித்துத் தள்ளிவிட்ட 10 பேர்களடங்கிய கும்பல் ரவியையும் மதியழகனையும் சுற்றி வளைத்துக் கொண்டு தடியாலும், இரும்பு ராடுகளாலும், மூர்க்கத்தனமாக அடித்திருக்கிறார்கள். இருவரின் கதறல் சப்தம் கேட்டு சிலர் ஓடிவர, பிறகுதான் அந்தக் கும்பல் தப்பி யோடியிருக்கிறது.

ரத்த வெள்ளத்தில் மயங்கிச் சரிந்த அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்ப, வழியிலேயே மதியழகனின் ஆவி பறந்திருக்கிறது. மயக்க நிலையிலிருந்த ரவிக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. ஏன் இந்தக் கொடூரமான கொலைவெறித் தாக்குதல்?

police

நெல்லை மாவட்டம் அம்பையை அடுத்த மேற்குத்தொடர்ச்சி மலைப்பக்க முள்ள கவுதமபுரி

ரவு நேரம். வீட்டுக்கு வேண்டிய பொருட்களை வாங்கிக் கொண்டு அருகிலுள்ள தங்களின் கிராமமான கவுதம புரிக்குக் பைக்கில் திரும்பியிருக்கிறார்கள் அண்ணன் தம்பியான ரவியும் மதியழகனும்.

d

இருவரையும் வேவு பார்த்து வந்த அந்தக் கும்பல் அன்றைக்குக் கெடு வைத்துக் காத்திருந்திருக்கிறது. கிராமத்தின் நுழைவுப் பகுதியில் வந்த அவர்களின் பைக்கை மிதித்துத் தள்ளிவிட்ட 10 பேர்களடங்கிய கும்பல் ரவியையும் மதியழகனையும் சுற்றி வளைத்துக் கொண்டு தடியாலும், இரும்பு ராடுகளாலும், மூர்க்கத்தனமாக அடித்திருக்கிறார்கள். இருவரின் கதறல் சப்தம் கேட்டு சிலர் ஓடிவர, பிறகுதான் அந்தக் கும்பல் தப்பி யோடியிருக்கிறது.

ரத்த வெள்ளத்தில் மயங்கிச் சரிந்த அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்ப, வழியிலேயே மதியழகனின் ஆவி பறந்திருக்கிறது. மயக்க நிலையிலிருந்த ரவிக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. ஏன் இந்தக் கொடூரமான கொலைவெறித் தாக்குதல்?

police

நெல்லை மாவட்டம் அம்பையை அடுத்த மேற்குத்தொடர்ச்சி மலைப்பக்க முள்ள கவுதமபுரிக் கிராமத்தில் இரண்டே பிரிவினரைக் கொண்ட மக்களில் 350 குடும்பங்களைக் கொண்ட ஒரு பிரிவினர் ஒரு பகுதியிலிருக்கின்றனர். இந்த மக்கள் தாட்டியமான நாட்டாமையின் நிர்வாகத்தின் கீழிருக்கின்றனர். இந்த நாட்டாமைப் பொறுப்பில் ஒருவர் ஒரு வருடம் மட்டுமே இருப்பார்.சமுதாயம் சார்ந்த பிரச்சினைகள், நல்லவை கெட்டவையிலான சம்பவங்களை நாட்டாமை ஊர்க்கூட்டம் போட்டு சுமுகமாகவே தீர்க்கப்பட்டு வந்த முறை மாறி, கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக அடக்குமுறை, ஊர் ஒதுக்கி வைப்பு, என்று சர்வாதிகாரப் பாதைக்குத் திரும்பியதால், அந்த மக்கள் கொத்தடிமையாக நடத்தப்பட்டிருக்கிறார்கள்.

ரவியும், மதியழகனும் கவுதம புரியின் இந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள். ஒரே குடும்பமாக வசிப்பவர்கள். கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு ரவியின் மூத்த மகளான சியாமளா அதே பிரிவைச் சேர்ந்த மணிகண்டன் என்ற வாலிபரைக் காதலித்து மணந்திருக்கிறார். அதை ஊர் நாட்டாமைக்குத் தெரியப்படுத்தாததால், அபராதமாக ஆயிரத்து ஐந்நூறு ரூபாய் ரவி கட்ட வேண்டும் என்று தண்டனை விதிக்க, சியாமளா ஓடிவிட்டதால் அபராதம் செலுத்தப்படவில்லை. இதனால் ரவி, மதியழகன் குடும்பத்தாரை ஊரை விட்டு விலக்கி வைத்து ஊர்க்கட்டுப்பாடு போட்டிருக்கிறார் நாட்டாமை.

ஊர் விலக்க பாதிப்பினை உணர்ந்த ரவியின் இளைய மகளான பத்மப்ரியா 6.07.17 அன்று தற்கொலை செய்து கொண்டது குடும்பத்தார்களை உலுக்கிவிட்டது. தன் மகளின் சாவுச் செய்தியை அங்குள்ள வீடு முழுக்கச் சொல்லியுள்ளார் ரவி. பத்மப்ரியாவின் ஈமச்சடங்கில் முப்பது வீட்டார் கலந்து கொண்டிருக்கின்றனர்.

ஆத்திரமடைந்த நாட்டாமை, அந்த 30 குடும்பத்தார்களுக்கும் 7000 அபராதத் தொகை தண்டனை விதித்தார். பதறிப் போன அந்த 30 குடும்பத்தினரும் பஞ்சாயத்தின் முன் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கியதால் அபராத தொகை குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் ரவி, மதியழகன் குடும்பத்தினர் கும்பிட்டுக் கெஞ்சியும் நாட்டாமை தொகையைக் குறைக்கப்படாததால், தலா 7000 கட்டியுள்ளனர்.

[[

இந்தச் சூழலில் சியாமளா, தன் தந்தை வீட்டுக்கு வர, ரவியும் பாசத்தால் அவளை வீட்டோடு சேர்த்துக் கொண்டவர், முன்பு நாட்டாமை விதித்த 1500 அபராதத் தொகையை ஊர்க்கமிட்டியிடம் செலுத்தியிருக்கிறார். காலம் கடந்ததால், ஒரு லட்சம் ரூபாய் கட்ட வேண்டும். இல்லை என்றால் ஊரோடு சேர்க்கமுடியாது என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டாராம் அப்போதைய நாட்டாமை சுப்பிரமணியம். பஞ்சாயத்தின் கால்களில் விழுந்து கும்பிட்டு கெஞ்சியும் பிரயோஜனமில்லை. அண்ணன் தம்பிகளின் இரண்டு குடும்பங்களும் நிரந்தரமாக ஊரை விட்டு விலக்கி வைக்கப் பட்டனர். தங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைப் பற்றி அம்பை காவல் நிலையத்தில் பல தடவைகள் ரவியும், மதியழகனும் புகார் செய்து வந்த நிலையில் இருவரையும் தீர்த்துக்கட்டினால் தான் நாட்டாமை சொல்லுக்கு ஊர் அடங்கும் என்று எக்ஸ் நாட்டாமைகளான சுப்பிரமணியனும், கணேசன் குரூப்பும் சேர்ந்து நாட்டாமை ராஜகோபாலுக்கு விபூதி போட்டிருக்கிறார்கள். அதையடுத்தே கொலை வழக்கில் தொடர்புடைய பாக்யராஜை வரவழைத்து ரவி, மதியழகனைத் தீர்த்துக்கட்டத் திட்டம் போட்டிருக்கின்றனர்.

இதையறிந்த ரவி, சமூக ஆர்வலர் செல்லையாவிடம் சொல்லியிருக்கிறார். அம்பை டிவிசனின் டி.எஸ்.பி.யான சுபாஷினியிடம் செல்லையா சொல்லியும் நடவடிக்கை இல்லை. சிகிச்சையிலிருக்கும் ரவியைத் தொடர்பு கொண்டு நாம் பேசியதில், ""நாங்க செத்துப் போய்ட்டோம்னு நெனைச்சி அந்தக் கும்பல் தப்பிடுச்சி. துடிச்சிக்கிட்டிருந்த நேரத்துல மணிமுத்தாறுக்கு மாற்றப்பட்ட எஸ்.ஐ.வெங்டேஷ் வந்து, செத்தது ரவியா, மதியழகனான்னு கேட்டுப் போனாரு. இந்தச் சம்பவத்துக்கு முழுக்க காரணமே போலீஸ்தான்'' என்றார் கதறியபடி.

இதுகுறித்து டி.எஸ்.பியிடம் நாம் பேசிய போது, ""நான் பிறகு பேசுகிறேன்'' என்று பதற்றத்தோடு சொல்லிவிட்டு துண்டித்து விட்டார்.

நெல்லை மாவட்டத்திற்கு மாறுதலாகி வந்த எஸ்.பி.மணிவண்ணனிடம் இது குறித்து தெரிவித்த போது,’""10 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அந்த டி.எஸ்.பி. மாற்றப்பட்டிருக்கிறார். அந்தக் கிராமத்தில் ஊர்விலக்கல் தொடர்பான நடவடிக்கையை மேற்கொள்வேன்'' என்றார் அழுத்தமாக.

- பரமசிவன்

படங்கள் : ப.இராம்குமார்

nkn080820
இதையும் படியுங்கள்
Subscribe