YOUTUBE குழாயடி சண்டை! இவர்களை இயக்கும் கட்சிகள்!

aa

ரடங்கில் தியேட்டர்கள் இல்லையென்றாலும், சினிமா பிரபலங்களின் பரபரப்புகளுக்கு பஞ்சமில்லை. எல்லாம் யூ-டியூப் உபயம். கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி 3-ஆம் கட்ட லாக்டவுன் ஆரம்பமான நேரம். டைரக்டர், நடிகர் மனோபாலா தனது யூடியூப் சேனலுக்காக எடுத்த பேட்டியில் ‘வைகை புயல்’ வடிவேலுவை சகட்டுமேனிக்கு விமர்சித்து, சர்ச்சையைக் கிளப்பினார் நடிகர் சிங்கமுத்து. ""இருவர் மீதும், கோர்ட்டில் கேஸ் போடப் போறேன்'' என வடிவேலு டென்ஷன் ஆனதுமே, இருவரும் மன்னிப்புக் கேட்டனர்.

actors

இந்நிலையில், பீட்டர்பால் என்பவரை வனிதா விஜயகுமார் மூன்றாவது திருமணம் செய்யப் போக... ஆரம்பித்தது யூடியூப் சேனல் எனும் குழாயடி சண்டை. சூர்யாதேவி என்பவர் தனது யூடியூப் சேனலில் வனிதா வை சகட்டுமேனிக்கு வார்த்தை களால் கிழித்தெடுக்க, பதிலுக்கு வனிதாவும் தனது யூடியூப் சேன லில் தாண்டவமாடி விட்டார்.

இதையெல்லாம் பார்த்துக், கேட்டுக்கொண்டிருந்த நடிகை கஸ்தூரி, தனது கலக்கல் கஸ்தூரி’ யூடியூப் சேனலில்,‘""வனிதா அவர்களே… ஏம்மா இப்படிப் பண்றீங்க? இது உங்களுக்கு நல்லாயிருக்காம்மா?''’என பதார்த்தமாகக் கேட்கப்போக...…""ஏய் உன்னைப் பத்தி தெரியாதா?'' என ஆரம்பித்து, காலர்மைக் கதறும் அளவுக்கு கஸ்தூரியை பொளந்து கட்டிவிட்டார் வனிதா. அசராத கஸ்தூரி, ""உங்களப் பத்தின ரகசியங்களை யெல்லாம் சொன்னா தாங்கமாட்டீங்க'' என தனது சேனலில் லைவாகப் பேசி கதிகலக்கினார். அந்த லைவ் புரோகிராம் ரிலே ஆகும்போது இடையிடையே... "ஹலோ சித்ரா ஸாரா வாங்க... உங்க ளுக்காகத்தான் வெயிட் பண்ணிக்கிட்டிருக்கிறேன்... ஹலோ ராம் ஸாரா கொஞ்சம் வெயிட் பண்ணுங்க... வனிதாவப் பத்தி பேசிட்டு வர்றேன்...'’என செல்போனில் லைவ்வாக பதில் சொல்லிக்கிட்டிருந்தார் கஸ்தூரி.

ss

அடுத்து வனிதா பண்ணியதுதான் அதிரி புதிரி ரகம். யூடியூப் சேனல் ஒன்று, ஸ்கைப் நேர்காணலுக்கு வனிதாவையும், நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனையும் ஸ்கைப்புக்குள் பேச அழைத்தனர். லட்சுமி ராமகிருஷ்ணன் பேச்சை ஆரம்பித்ததுதான் தாமதம்... லட்சுமிக்கு லட்சார்ச் சனை பண்ணிவிட்டார் வனிதா. அந்த அதிர்ச்சியில் இருந்து மீளமுடியாமல் தவித்த லட்சுமி ராமகிருஷ்ணன், கடந்த 27-ஆம் தேதி வனிதாவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிவிட்டு, வடபழனி மகளிர் காவல் நிலையத்திலும் டி.சி. ஜெயலட்சுமியிடமும் வனிதா மீது புகார் கொடுத்தார். இப்படி வனிதா, கஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணன், சூர்யா தேவி ஆகிய நால்வரும் மாறி மாறி புகார் கொடுத்து புழுதியைக் கிளப்பியபடியே இருக்கிறார்கள்.

இதற்கிடையே இன்னொரு யூடியூப் சேனலில் வனிதாவும் பீட்டர் பாலும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதில் வனிதா, ""குடிக்கிறவங்க எல்லாம் குடிகாரன் கிடையாது, உங்க அப்பாவுக்கும் ரெண்டு பொண்டாட்டி, எங்க அப்பாவுக்கும் ரெண்டு பொண்டாட்டி' என அ

ரடங்கில் தியேட்டர்கள் இல்லையென்றாலும், சினிமா பிரபலங்களின் பரபரப்புகளுக்கு பஞ்சமில்லை. எல்லாம் யூ-டியூப் உபயம். கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி 3-ஆம் கட்ட லாக்டவுன் ஆரம்பமான நேரம். டைரக்டர், நடிகர் மனோபாலா தனது யூடியூப் சேனலுக்காக எடுத்த பேட்டியில் ‘வைகை புயல்’ வடிவேலுவை சகட்டுமேனிக்கு விமர்சித்து, சர்ச்சையைக் கிளப்பினார் நடிகர் சிங்கமுத்து. ""இருவர் மீதும், கோர்ட்டில் கேஸ் போடப் போறேன்'' என வடிவேலு டென்ஷன் ஆனதுமே, இருவரும் மன்னிப்புக் கேட்டனர்.

actors

இந்நிலையில், பீட்டர்பால் என்பவரை வனிதா விஜயகுமார் மூன்றாவது திருமணம் செய்யப் போக... ஆரம்பித்தது யூடியூப் சேனல் எனும் குழாயடி சண்டை. சூர்யாதேவி என்பவர் தனது யூடியூப் சேனலில் வனிதா வை சகட்டுமேனிக்கு வார்த்தை களால் கிழித்தெடுக்க, பதிலுக்கு வனிதாவும் தனது யூடியூப் சேன லில் தாண்டவமாடி விட்டார்.

இதையெல்லாம் பார்த்துக், கேட்டுக்கொண்டிருந்த நடிகை கஸ்தூரி, தனது கலக்கல் கஸ்தூரி’ யூடியூப் சேனலில்,‘""வனிதா அவர்களே… ஏம்மா இப்படிப் பண்றீங்க? இது உங்களுக்கு நல்லாயிருக்காம்மா?''’என பதார்த்தமாகக் கேட்கப்போக...…""ஏய் உன்னைப் பத்தி தெரியாதா?'' என ஆரம்பித்து, காலர்மைக் கதறும் அளவுக்கு கஸ்தூரியை பொளந்து கட்டிவிட்டார் வனிதா. அசராத கஸ்தூரி, ""உங்களப் பத்தின ரகசியங்களை யெல்லாம் சொன்னா தாங்கமாட்டீங்க'' என தனது சேனலில் லைவாகப் பேசி கதிகலக்கினார். அந்த லைவ் புரோகிராம் ரிலே ஆகும்போது இடையிடையே... "ஹலோ சித்ரா ஸாரா வாங்க... உங்க ளுக்காகத்தான் வெயிட் பண்ணிக்கிட்டிருக்கிறேன்... ஹலோ ராம் ஸாரா கொஞ்சம் வெயிட் பண்ணுங்க... வனிதாவப் பத்தி பேசிட்டு வர்றேன்...'’என செல்போனில் லைவ்வாக பதில் சொல்லிக்கிட்டிருந்தார் கஸ்தூரி.

ss

அடுத்து வனிதா பண்ணியதுதான் அதிரி புதிரி ரகம். யூடியூப் சேனல் ஒன்று, ஸ்கைப் நேர்காணலுக்கு வனிதாவையும், நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனையும் ஸ்கைப்புக்குள் பேச அழைத்தனர். லட்சுமி ராமகிருஷ்ணன் பேச்சை ஆரம்பித்ததுதான் தாமதம்... லட்சுமிக்கு லட்சார்ச் சனை பண்ணிவிட்டார் வனிதா. அந்த அதிர்ச்சியில் இருந்து மீளமுடியாமல் தவித்த லட்சுமி ராமகிருஷ்ணன், கடந்த 27-ஆம் தேதி வனிதாவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிவிட்டு, வடபழனி மகளிர் காவல் நிலையத்திலும் டி.சி. ஜெயலட்சுமியிடமும் வனிதா மீது புகார் கொடுத்தார். இப்படி வனிதா, கஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணன், சூர்யா தேவி ஆகிய நால்வரும் மாறி மாறி புகார் கொடுத்து புழுதியைக் கிளப்பியபடியே இருக்கிறார்கள்.

இதற்கிடையே இன்னொரு யூடியூப் சேனலில் வனிதாவும் பீட்டர் பாலும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதில் வனிதா, ""குடிக்கிறவங்க எல்லாம் குடிகாரன் கிடையாது, உங்க அப்பாவுக்கும் ரெண்டு பொண்டாட்டி, எங்க அப்பாவுக்கும் ரெண்டு பொண்டாட்டி' என அதிரடி கமெண்ட்டடிக்கிறார்.

ac

நக்கீரன் ‘டெலிவுட்’ பெட்டிச் செய்தியில் சினிமாவிலிருந்து சின்னத்திரைக்கு சென்ற நடிகை ஓர் அரசியல் + திரைப் பிரமுகர் மீது குற்றம்சாட்டி அடிக்கடி தற்கொலை முயற்சிக்கு ஆளாவது குறித்து எழுதியிருந்தோம். அந்த செய்தி அச்சாகி வந்த நிலையில், நாம் குறிப்பிட்டிருந்த நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங் கிணைப்பாளர் சீமான் மீதான பழைய புகாரை தூசு தட்டி, அச்சேற்ற இயலாத வார்த்தைகளால் வறுத்தெடுத்து வாட்ஸ்ஆப்பில் வீடியோவை வெளியிட, அது அரசியல் களத்திலும் வைரலானது. அதன்பின், இரண்டாவது வீடியோவையும் வெளியிட்ட விஜயலட்சுமி, சீமான் மீது actகுற்றம்சாட்டி, தற்கொலை முயற்சிக்குள்ளாகி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். மாஜிஸ்டிரேட்டிடம் வாக்குமூலம் கொடுத்தார். அவரை பா.ஜ.க.வில் பொறுப்பு பெற்றுள்ள நடிகை காயத்ரி ரகுராம் சென்று பார்த்தது பரபரப்பானது.

சிகிச்சைக்குப் பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட விஜயலட்சுமி, அவசரமாக என்னை அனுப்பிவிட்டார்கள். பில்கூட காயத்ரி ரகுராம்தான் கட்டினார்’’ எனத் தெரிவித்துள்ளார். ஏற்கனவே விடு தலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு எதிராக மததுவேஷ வீடியோ வெளியிட காயத்ரி ரகுராமை பயன்படுத்தியிருந்த பா.ஜ.க. இப்போது, நாம் தமிழர் கட்சிக்கு எதிராக விஜயலட்சுமி யைத் தூண்டிவிட காயத்ரி ரகுராமை களமிறக்கி யிருக்கிறது என்கிறார்கள் அரசியல் வட்டாரத்தில்.

இதுகுறித்து மீடியாக்களின் கேள்வியை சீமான் தவிர்த்த நிலையில், நாம் தமிழர் கட்சியினரிடம் கேட்டபோது, ""சமூக வலைத்தளங்களில் தனிநபர்களின் கருத்துகளுக்கு கட்சி பொறுப் பேற்காது. கடந்து செல்ல விரும்புகிறோம். இதை அரசியல் சூழ்ச்சியாகவே நினைக்கிறோம்'' என்கிறார்கள் அரசியல் நாகரிகத்துடன். இதற் கிடையே பீட்டரின் முதல் மனைவி எலிஸபெத் ஹெலனின் புகார் மீது வடபழனி மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ரேணுகாவும் சப்-இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவியும் ஆக்ஷன் எடுக்காதது, வனிதாவுக்கு ஆதரவாக போலீஸ் செயல்படுவது குறித்து, டி.சி. ஜெயலட்சுமியிடம் பேசினோம்.

""எல்லோருடைய புகார் மீதும் ஆக்ஷன் எடுக்கத்தான் செய்கிறோம். எலிஸபெத் ஹெலன் கொடுத்த இரண்டு புகார்களிலும் இரண்டுவிதமாக சொல்லியிருக்கிறார். அதனால் மீண்டும் அவரை ஸ்டேஷனுக்கு வரவழைத்து தீர விசாரிக்கும்படி ddஇன்ஸ்பெக்டரையும் சப்-இன்ஸ்பெக்டரையும் அறிவுறுத்தியுள்ளேன். யூடியூப் சேனலை எங்களால் ஒன்றும் செய்ய முடியாது. சைபர் கிரைம் மூலம் ஆபாச பதிவுகளை வேண்டுமானால் டெலிட் பண்ணலாம். ஆனால் அதே ஆபாசத்தை அவர்களே மீண்டும் அப்லோடு செய்தால் நாங்க என்ன செய்யமுடியும்?'' என்றார்.

ஊரடங்கு காலத்தில் அனுமதியின்றி திருமணம் நடத்தியதாக வனிதா மீது புதுப் புகார் பதிவான நிலையில், சென்னை அய்யப்பன்தாங்கலில் உள்ள வனிதாவின் வீட்டுக்குச் சென்றது போலீஸ் படை. போலீஸ் வரும் தகவல் முன்கூட்டியே பாஸ் ஆகிவிட்டதால் பீட்டர் பாலுடன் எஸ்கேப் ஆகிவிட்டார் வனிதா.

அதேசமயம் யு-டியூபில் தன்னை தாறுமாறாகப் பேசிய சூர்யாதேவி மீது ஆக்ஷன் எடுக்கும்படி போரூர் ஏ.சி.யிடமும், வடபழனி போலீசிலும் கடந்த ஜூலை 20-ஆம் தேதி புகார் கொடுத்தார் வனிதா. தன்னை கஞ்சா வியாபாரி என்று சொன்ன வனிதா மீது ஆக்ஷன் எடுக்கும்படி, வடபழனி ஸ்டேஷ னில் புகார் கொடுத்தார் சூர்யாதேவி.

வனிதா கொடுத்த புகாரின் பேரில் ஜூலை 23-ஆம் தேதி ஆக்ஷனில் இறங்கினார்கள் இன்ஸ்பெக்டர் ரேணுகாவும் சப்-இன்ஸ்பெக்டர் ரேணுகா தேவியும். மாலை 6 மணிக்கு வடபழனியில் இருக்கும் சூர்யாதேவியின் வீட்டுக்குச் சென்று விசாரணைக்கு வருமாறு போலீஸ் ஜீப்பில் ஏறச் சொல்லியுள்ளனர். ஆனால் ஜீப்பில் ஏற மறுத்து தனது டூவீலரில் ஸ்டேஷனுக்குச் சென்றுள்ளார் சூர்யாதேவி. விசாரணை என்ற பெயரில் இரவு முழுவதும் ஸ்டேஷ னில் இருக்கவைத்து, மறுநாள் மதியம் கோர்ட்டில் ஆஜர்படுத்தியுள்ளனர். எந்த நிபந்தனையும் இல்லாமல் சூர்யாதேவிக்கு ஜாமீன் கொடுத்துவிட்டது கோர்ட்.

"வனிதாவுக்கும் உங்களுக்குமிடையே என்னதான் பிரச்சினை?' என சூர்யாதேவியிடம் கேட்டோம். ""வனிதா நடத்தும் யு-டியூப் சேனலின் சந்தாதாரர் என்ற முறையில்தான் அவரின் அநாகரிகத்தை தட்டிக்கேட்டேன். 23-ஆம் தேதி ராத்திரி 7 மணிக்கு நான் ஸ்டேஷன் போனதும் காரில் இருந்து இறங்கி ஸ்டேஷனுக்கு வந்தார் வனிதா. இன்ஸ்பெக்டரம்மாவும் சப்-இன்ஸ்பெக்ட ரம்மாவும் என்னை ஒரு ரூமில் வைத்து விசாரிப்பதை எதிர் ரூமில் இருந்து லைவ்வா கேட்டுக்கிட்டிருந்தார் வனிதா.

அவருக்கு நல்லா கேட்கணும்ங்கிறதுக்காகவே "ஒழுங்கு மரியாதையா மன்னிப்புக் கேட்டுட்டு ஓடிடு'ன்னு சத்தம் போட்டு என்னை மிரட்டினார் கள். "மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது'ன்னு ஸ்ட்ராங்கா சொல்லிட்டேன்.

ராத்திரி எட்டு மணிக்கு பெரிய ஓட்டலில் இருந்து வகை வகையான டிபன், மினரல் வாட்டர், காஸ்ட்லியான மாஸ்க் இதெல்லாம் வந்திறங்கிச்சு. எல்லாமே வனிதா ஏற்பாடுதான். நைட் ஒன்பதரை வரைக்கும் என்னை விசாரிச்சுட்டு ஒரு ரூம்ல அடைச்சுட்டுப் போயிட்டாங்க. மறுநாள் கோர்ட்ல ஜாமீன் கிடைச்சு ரிலீஸ் ஆனேன். அந்த ராத்திரி முழுசும் என் குழந்தைகள் என்ன பாடுபட்டிருக்கும்?

சாயங்காலம் 6 மணிக்கு மேல பெண்களை ஸ்டேஷனில் வைத்திருக்கக் கூடாதுன்னு சட்டம்லாம் இருக்குல்லண்ணே. ஆனா வனிதா சொல்றதைத்தான் வடபழனி போலீஸ் கேக்குது. இப்பக்கூடபாருங்க, எனக்கு கொரோனா, நான் தலைமறைவாயிட்டேன்னு வதந்தியப் பரப்பி டைவர்ட் பண்ணப்பார்க்கிறார்கள். என்ன ஆனாலும் வனிதாவை விடமாட் டேன்'' என ஆவேசமானார் சூர்யாதேவி.

வழக்கறிஞர்கள் வட்டாரமோ, ""விசாரணை என்ற பெயரில் செட்டில்மெண்ட் பேச்சுகளை காவல்துறை அதிகம் மேற்கொள்கிறது. அதிலும் தங்களுக்கான பங்கு அதிகமாக இருக்கவேண்டும் என பல லகரங்களை முன் வைத்துப் பேசுகிறது'' என்கிறார்கள்.

யூ-டியூப் சர்ச்சை பற்றி சென்னை உயர்நீதிமன்ற வழக்கறி ஞர் ராஜலட்சுமியிடம் இது குறித்து பேசினோம். ""பாதிக்கப் பட்ட நபர்கள் முதலில் சம்பந்தப் பட்ட யூடியூப், ஃபேஸ்புக் நிறுவனங்களுக்குத், தன்னைப் பற்றி அவதூறாக வரும் வீடியோக்கள் பற்றி புகார் தெரிவிக்க வேண்டும். அப்படியும் நீக்கப்படாத பட்சத்தில் அவதூறாக பேசுபவர்களுக்கு எதிராக யூடியூப் மற்றும் ஃபேஸ்புக் கையும் பார்ட்டியாகச் சேர்த்து நீதிமன்றத்தின் மூலம் கிரிமினல் அவதூறு வழக்குத் தொடர்ந்து அந்த நபரை தண்டிக்கக் கோரலாம். அல்லது நீதிமன்றத்தில் நஷ்டஈடு வழங்கக்கோரி சிவில் அவதூறு வழக்குத் தொடரலாம்'' என்றார். பத்திரி கையாளர் வாராகி நம்மிடம், ""சோஷி யல் மீடியாவை பர்சனல் மீடியா வாக கையாண்டு தங்கள் சொந்த விஷயங்களை வெளிப்படுத்தி நாறடிக்கிறார்கள். இதற்கு சென்சார் இல்லாத வரை நிலைமை மோசமாகும்'' என எச்சரிக்கிறார். மனிதி அமைப்பைச் சேர்ந்த செல்வி, ""பெண்ளின் மாண்பை உயர்த்தும் நிகழ்ச்சிகள் பதிவேற வேண்டும் என மகளிர் ஆணையத் தலைவி கண்ணகி பாக்கியநாதன் வலியுறுத்தியிருந்தார். நடிகைகளின் யூடியூப் சேனல்கள் முக்கியத்துவம் பெறுவது வேதனை தருகிறது'' என்கிறார்.

திரைப் பிரபலங்களுக்கு மார்க்கெட் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அரசியல் தரப்பில் செல்வாக்கு நீடிக்கிறது. அதனை வைத்து, ஸ்கெட்ச் போடும் வேலைகளை அதிகாரத் தில் உள்ள கட்சிகள் கச்சிதமாக மேற்கொள்கின்றன.

-ஈ.பா. பரமேஸ்வரன்

-ச.ப. மதிவாணன்

________________

அதிரடி கிளப்பும் மீராமிதுன்!

a

காவிச்சாயம் ஊற்றி பெரியாரை அவ மானப்படுத்த காலிகள் முயன்றபோது, பெரியாரின் புகழ்பாடும் வகையில் 'ஜெய் பெரியார்' என்னும் ஹேஷ் டேக் ட்விட்டரில் வைரலானது. அப்போது, சர்ச்சைக்குப் பெயர் பெற்ற நடிகை மீராமிதுனும் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் இரண்டு ட்விட்களை போட்டிருந்தார்.

"கலாச்சாரம், பாரம் பரியம் என்ற பெயரில் பெண்களுக்கு எதிராக சமூகத்தில் நிலவிய பாலின சமத்துவமின்மையை பெரியார் கேள்வி எழுப்பி னார். பெண்கள் விடு தலைக்குப் போராடினார். யாரும் யாருக்கும் தீங்கு செய்யக் கூடாது. இந்த நேரத்தில் நான் பெரியாருக்கு முழு மனதுடன் நன்றி கூறுகிறேன். அவரால்தான் நான் தடைகளை உடைத்து முன்னேறி யிருக்கிறேன்' எனக் குறிப்பிட்டி ருந்தார். அதற்கான அவர் பதிவிட்டிருந்த படங்கள் பரபரப்பை கிளப்பின. உடலில் ஆடையில்லாமலும், அரைகுறை ஆடையுடனும் இருந்த படங்களுடனான ட்வீட்டில் பிரதமர் நரேந்திர மோடி, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோரையும் டேக் செய்திருந்தார்.

aa

மீரா மிதுனின் இந்த ட்விட்டிற்கு எதிர்வினையாக பலரும் கமெண்ட் செய்திருக்கின்றனர். அதில், "இப்படி ஆடையில்லாம இருக்கத்தான் பெரியார் போராடுனாரா? உன்ன மாதிரியான ஆளுங்களால பெரியார் பெயருக்குத் தான் அவமானம்' என வெளுத்துவிட்டனர்.

இது குறித்து மீரா மிதுனிடம் பேசிய போது, ""சினிமாவை விட பெரிய உலகம் பேஷன் டெக்னாலஜி. அது உலக அளவில் பறந்து விரிந்து இருக்கிறது. இந்த துறையில் தமிழகத்தில் இருந்து ஒரு பெண் நுழைந்து காலூன்றி இருப்பதற்கு காரணமே பெரியார் தந்த துணிவும் தன்னம்பிக்கையும்தான் என்பதற்கான நன்றிப் பதிவு தான் அது. மத்தபடி உடைக் கட்டுப்பாடு என்பது பேஷன் டெக்னாலஜிக்கு கிடையாது. சினிமாவில் எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து தற்போது, வரை எல்லா நடிகைகளும் செய்வதைப்போலதான் நானும் செய்திருக்கிறேன்'' என்றார் விடாப்பிடியான குரலில்.

சில மாதங்களுக்கு முன்பு பா.ஜ.க.வில் மீரா மிதுன் இணையப் போவதாக செய்திகள் வந்தன. பாஜக. ஏனோ மாடல் மீரா மிதுனை கண்டுகொள்ளவே யில்லை. எப்படியாவது அரசியலில் குதித்தால் பரவாயில்லை! என்ற தீர்க்கமான முடிவில் இருக்கும் மீரா மிதுன் இந்த ட்விட்டில் மோடியையும், ஸ்டாலினையும் டேக் செய்து கடைசி வார்னிங்கும் கொடுத்திருக்கிறார். "அடுத்த புரட்சித் தலைவி நான் தான்' என மீரா மிதுன், சாரி சூப்பர் மாடல் மீரா மிதுன்.

பா.ஜ.க.வில் நேரடியாக சேராவிட்டாலும், மீராமிதுன் கடந்த ஜூலை 30 அன்று, நடிகர் சூர்யாவை வம்புக்கிழுத்து டவிட்டரில் வீடியோ பதிவு செய்திருந்தார். பா.ஜ.க. அரசின் சூழலியல் தாக்க திருத்த வரைவு பற்றி சூர்யாவும் கார்த்திக்கும் கருத்து தெரிவித்திருந்த நிலையில், இரண்டு ஆண்டு களுக்கு முன் ரிலீசான "தானா சேர்ந்த கூட்டம்' படம் பற்றி சூர்யாவையும் டைரக்டர் விக்னேஷ் சிவனையும் சீண்டியிருந்தார் மீராமிதுன்.

அரசியல் கணக்குடன் இருக்கும் மீரா மிதுனுக்கு போலீஸ் துறையிலும் செல்வாக்கு உள்ளது. தென் மாவட்ட உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் மீராமிதுனின் நட்புக்காக 40 லட் சத்தை இழந்துள்ளார் என காக்கிகள் வட்டாரத்தில் பேசுகிறார்கள். சென்னையில் இருக்கும் பெண் ஐ.பி.எஸ். ஒருவர், மீராமிதுனுக்கு சகல வழிகளிலும் சப்போர்ட்டாக இருக்கிறாராம். போலீஸ் துறை செல்வாக்கு மூலம், மோசடி வழக்கில் சிக்கியுள்ள தயாரிப்பாளர் ஒருவரைக் காப்பாற்றுவதற்காக மீராமிதுன் களத்தில் குதித்துள்ளார் என்றும் கோலிவுட் ஏரியாவில் கிசுகிசுக்கப்படுகிறது. நயன்தாராவை திருமணம் செய்யவிருக்கும் டைரக்டர் விக்னேஷ் சிவனும் மீராமிதுன் என்றால் அலறுகிறார் என்ற தகவல் கசியும் நிலையில், தனக்குத் தெரிந்த பிரபலங்களின் பட்டியலை வெளியிடும் அதிரடி முடிவில் உள்ளாராம் மீரா மிதுன். அவர் மீதான புகார்கள் குறித்து அவரிடம் கேட்டபோது, ""வாட் நான்சென்ஸ்.. யார் இப்படியெல்லாம் கிளப்பி விடுறது? எனக்கே தெரியாததை என்கிட்டே கேட்டா எப்படி?'' என ஹைடெசிபலுக்கு சென்றார் மீராமிதுன்.

-ஜெ.டி.ஆர்

nkn050820
இதையும் படியுங்கள்
Subscribe