100 நாள் வேலை திட்டம் என்று குறிப்பிடப்படும் மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் கிராமத்திலுள்ள அத்தியாவசிய பணிகள், சுகா தாரப் பணிகள் ஆகியவற்றைச் செய்துவருகிறார் கள். வருகைப் பதிவேட்டில் கையெழுத்து போட்டுவிட்டு பலர் வேலைசெய்யாமல் ஏய்ப்ப தாக அரசின் கவனத்திற்கு சென்றதன் அடிப் படையில், தற்போது ஒவ்வொரு ஊராட்சியிலும் தேசிய ஊரக வேலை திட்டத்தின்போது தினசரி பணிக்கு வருகைதரும் பணியாளர்கள் அனை வரும் காலை 9 மணிக்குள் பணியிடத்தில் ஆஜராகவேண்டும். இந்தப் பணியை மேற் பார்வையிடும் பணித்தள பொறுப்பாளர்கள் பணிக்கு வரும் ஆண்- பெண் அனைவரையும் தனது செல்போன் மூலம் படமெடுத்து மாவட்ட, வட்டார வளர்ச்சி அதிகாரிகளுக்கு, உடனே அனுப்பவேண்டும். அதேபோல் மதியம் வேலை முடிந்த பிறகும் அனைவரையும் புகைப்பட மெடுத்து அனுப்பவேண்டும் என உத்தரவிடப் பட்டுள்ளது. இப்படி புகைப்பட
100 நாள் வேலை திட்டம் என்று குறிப்பிடப்படும் மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் கிராமத்திலுள்ள அத்தியாவசிய பணிகள், சுகா தாரப் பணிகள் ஆகியவற்றைச் செய்துவருகிறார் கள். வருகைப் பதிவேட்டில் கையெழுத்து போட்டுவிட்டு பலர் வேலைசெய்யாமல் ஏய்ப்ப தாக அரசின் கவனத்திற்கு சென்றதன் அடிப் படையில், தற்போது ஒவ்வொரு ஊராட்சியிலும் தேசிய ஊரக வேலை திட்டத்தின்போது தினசரி பணிக்கு வருகைதரும் பணியாளர்கள் அனை வரும் காலை 9 மணிக்குள் பணியிடத்தில் ஆஜராகவேண்டும். இந்தப் பணியை மேற் பார்வையிடும் பணித்தள பொறுப்பாளர்கள் பணிக்கு வரும் ஆண்- பெண் அனைவரையும் தனது செல்போன் மூலம் படமெடுத்து மாவட்ட, வட்டார வளர்ச்சி அதிகாரிகளுக்கு, உடனே அனுப்பவேண்டும். அதேபோல் மதியம் வேலை முடிந்த பிறகும் அனைவரையும் புகைப்பட மெடுத்து அனுப்பவேண்டும் என உத்தரவிடப் பட்டுள்ளது. இப்படி புகைப்படமெடுத்து அனுப்பும் பணி செய்துவந்த ஒரு வக்கிர புத்தி படைத்த ஒரு இளைஞனின் விபரீதச் செயல், ஒரு கிராமத்தையே கொந்தளிக்க வைத்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் வீரசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் முருகேசன் மகன் வசந்தகுமார். திருமண மாகாத இவர் தற்போது அந்தக் கிராமத்தில் நடைபெறும் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் பணித்தள பொறுப்பாளராக இருந்துவருகிறார். தினசரி வேலைக்கு வரும் ஆண்- பெண் அனைவரையும் புகைப்படமெடுத்து அதிகாரிகளுக்கு அனுப்புவது இவரது வழக்கம்.
தினசரி வேலைக்கு வரும் பணிப்பெண்கள் குனிந்து கையெழுத்து போடும்போதும், வேலை செய்யும்போதும், வேலை கவனத்தில் தங்கள் உடல்மீது போட்டிருக்கும் சேலை முந்தானைத் துணி அப்படி இப்படி ஒதுங்கும்போதும், அவர்களுக்கே தெரியாமல் வசந்தகுமார் தனது செல்போன் மூலம் பெண்களை பல கோணங்களில் படங்கள் எடுத்துள் ளார். அப்படி எடுக்கப்பட்ட சுமார் 200-க்கும் மேற் பட்ட பெண்களின் படங்களை மார்பிங்செய்து அவர்களுடன் வசந்தகுமார் உல்லாசமாக இருப்பது போன்று பல்வேறுவிதமான முறையில் தனது செல்போனில் பதிவுசெய்து வைத்துக்கொண்டு அதை அவ்வப்போது பார்த்துரசிப்பதை வழக்கமாக செய்துவந்துள்ளார்.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு வசந்தகுமா ருக்கு பணத் தேவை ஏற்பட்டுள்ளது. அவர் தனது செல் போனை தனது வீரசோழபுரம் கிராம ஊராட்சி செயலாள ராக வேலை செய்துவரும் தினேஷ் என்பவரிடம் அடமானம் வைத்து பணம்பெற்றுள்ளார். தினேஷும் வசந்த குமார் செல் போனை பெற்றுக்கொண்டு குறிப்பிட்ட தொகை பணம் கொடுத்துள்ளார். பணத்தை திருப்பிக்கொடுத்ததும் தனது செல்போனை திருப்பித் தந்துவிடவேண்டும் என்ற நிபந்தனை யின் பெயரில் தினேஷிடமிருந்து வசந்தகுமார் பணம்பெற்றுள் ளார். செல்போனை அடமானம் வாங்கிய தினேஷ், செல் போனில் என்னென்ன உள்ளது என்பதை ஆய்வுசெய்துள்ளார். அப்போது செல்போனில் 100 நாள் வேலைத் திட்ட பெண் பணியாளர்களை விரசமாக எடுத்த படங்களையும் வசந்த குமாரின் புகைப்படத்துடன் இணைத்துவைத்திருந்ததையும் தனது நண்பர்கள் சிலருக்கு பகிர்ந்துள்ளார். அப்படி அனுப் பப்பட்ட படங்கள் அந்த கிராம ஊராட்சி மன்ற உறுப்பினர் ரவிக்கு போய்ச்சேர்ந்தது. ரவி இதுகுறித்து கிராம மக்களிடம் தெரிவித்துள்ளார். இந்த செய்தி தெரிந்த பெண்கள், அவர்கள் உறவினர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். தன்னை கிராம மக்கள் தேடும் தகவலையறிந்த வசந்தகுமார் ஊரைவிட்டு எஸ்கேப் ஆனார். இதனால் கிராம மக்கள், வசந்தகுமாரை உடனடியாக கைது செய்யக்கோரி அன்று இரவே சேலம்- உளுந்தூர்பேட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
வசந்தகுமாரை கைதுசெய்தாலும், ஆத்திரத்திலிருக்கும் மக்கள் முன்பு அவரைக் கொண்டுசென்றால் விபரீதம் ஏற்படும் என்ற காரணத்தினால் போலீசார் தங்கள் கஸ்டடியில் வைத்திருந்தனர். இதனால் கோபமடைந்த ஊர் மக்கள், வசந்தகுமார் வீட்டை அடித்து நொறுக்கினார்கள்.
வசந்தகுமாரிடமிருந்து செல்போனை வாங்கி அந்தப் படங்களை வெளியிட்ட தினேஷ் மீதும் போலீசார் வழக்குப் பதிவுசெய்து அவரையும் கைது செய்தனர். திடீர் மறியல், வசந்தகுமார் வீட்டை அடித்து நொறுக்கியதற்காக கிராம மக்கள் 20 பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீசாரிடம் கேட்டபோது, “"ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்திற்கு பணி செய்யவரும் இளம்பெண்களை ஆபாசமான வகையில் படமெடுத்ததுடன் மார்பிங் செய்து அதனுடன் தன்னுடைய படத்தையும் இணைத்து ரசித்துவந்துள்ளார். இது ஏதோ ஒருநாள் நடந்த சம்பவமல்ல. இது ஒரு சாடிஸ்ட் மனப்பான்மை உள்ள இளைஞன் செய்யும் செயல். அவர் மீது பல பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைத்துள் ளோம்''’என்றனர். அவர்மீது சட்டப்படியான தண்டனை உறுதி செய்யப்பட வேண்டும்!