நவம்பர் 3-ல் அமெரிக்காவின் தலைவிதி தீர்மானிக்கப்பட்டு விடும். தேர்தல் நடப்பதற்கு கிட்டத்தட்ட 30 நாட்களே இருக்கின்றன. கடந்தமுறை தேர்தலில் வெற்றிபெற்ற டொனால்ட் ட்ரம்பும் தற்போதைய துணை அதிபரான ஜோ பைடனும் இந்த முறை தேர்தல் களத்தில் மோதுகிறார்கள்.
கடந்த தேர்தலைப்போலவே இந்த முறையும் ஆரம்பகட்ட அலைகள் ட்ரம்புக்குச் சாதகமாக இல்லை. அமெரிக்க பொருளாதாரம் சுணங்க ஆரம்பித்திருக்கிறது. சீனாவின் மீதான அமெரிக்காவின் பிடி நழுவிவருகிறது. ஜார்ஜ் ப்ளாய்டு உயிர்ப் பறிப்பு விவகாரத்தில் கறுப்பின மக்களின் அதிருப்தியை சம்பாதித்திருக்கிறார். அமெரிக்காவில் கணிசமாகக் காணப்படும் இந்தியர் உள்ளிட்ட வெளிநாட்டவர் விவகாரத்தில் ஹெச் 1பி விசாக்களுக்கு கெடுபிடி, கொரோனா விவகாரத்தை திறம்படக் கையாளாமை, தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதாக அமெரிக்க செனட்டால் குற்றம்சாட்டப்பட்டது, இந்தியாவைப் போன்றே நீதித்துறையில் தலையீடு, மாகாணங்களின் உரிமைகளை வசப்படுத்தும் முயற்சி என ஏகப் பட்ட கறுப்புக் குறியீடுகளை வாங்கி நிற்க
நவம்பர் 3-ல் அமெரிக்காவின் தலைவிதி தீர்மானிக்கப்பட்டு விடும். தேர்தல் நடப்பதற்கு கிட்டத்தட்ட 30 நாட்களே இருக்கின்றன. கடந்தமுறை தேர்தலில் வெற்றிபெற்ற டொனால்ட் ட்ரம்பும் தற்போதைய துணை அதிபரான ஜோ பைடனும் இந்த முறை தேர்தல் களத்தில் மோதுகிறார்கள்.
கடந்த தேர்தலைப்போலவே இந்த முறையும் ஆரம்பகட்ட அலைகள் ட்ரம்புக்குச் சாதகமாக இல்லை. அமெரிக்க பொருளாதாரம் சுணங்க ஆரம்பித்திருக்கிறது. சீனாவின் மீதான அமெரிக்காவின் பிடி நழுவிவருகிறது. ஜார்ஜ் ப்ளாய்டு உயிர்ப் பறிப்பு விவகாரத்தில் கறுப்பின மக்களின் அதிருப்தியை சம்பாதித்திருக்கிறார். அமெரிக்காவில் கணிசமாகக் காணப்படும் இந்தியர் உள்ளிட்ட வெளிநாட்டவர் விவகாரத்தில் ஹெச் 1பி விசாக்களுக்கு கெடுபிடி, கொரோனா விவகாரத்தை திறம்படக் கையாளாமை, தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதாக அமெரிக்க செனட்டால் குற்றம்சாட்டப்பட்டது, இந்தியாவைப் போன்றே நீதித்துறையில் தலையீடு, மாகாணங்களின் உரிமைகளை வசப்படுத்தும் முயற்சி என ஏகப் பட்ட கறுப்புக் குறியீடுகளை வாங்கி நிற்கிறார்.
ஆனாலும் ரிபப்ளிகன் கட்சியின் ட்ரம்பிடம் உற்சாகத்துக்குக் குறைவில்லை. இந்த முறையும் தானே அதிபர் என்ற நம்பிக்கையுடன் பிரச்சாரத்தைத் தொடங்கியிருக்கிறார். அமெரிக்க அதிபர் தேர்தலில் மிக முக்கியமானது அதிபர் பதவிக்குப் போட்டியிடும் நபர்கள் பல்வேறு இடங்களில் மேடையில் நேருக்கு நேர் வாதத்தில் ஈடுபடுவது. ஒஹியோவின் கிளிவ்லாண்ட் பல்கலைக் கழகத்தில் இந்த முறைக்கான முதல் நீயா- நானா யுத்தம் செப்டம்பர் 30-ஆம் தேதி அரங்கேறி யது.
வழக்கமாக திரளான பார்வையாளர்களும் இந்த விவாதத்தைக் காண அனுமதிக்கப்படுவர். கொரோனா தொற்று அச்சம் காரணமாக பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. விவாதம் தொடங்கும் முன்பு அதிபர் பதவிக்குப் போட்டியிடும் இருவரும் கைகுலுக்குவதும் இதே காரணத்தால் தவிர்க்கப்பட்டது.
தனது தரப்பைப் பேசிய டொனால்ட் ட்ரம்ப், "அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி ருத் பேடர் ஜின்ஸ் பெர்க் பதவிக்காலம் முடிந்துவிட்டதால், அடுத்த நீதிபதியாக அமிகோனி கார்னெட்டை நியமிக்கும் உரிமை தனக்கு உண்டு' என்று வலியுறுத்தினார். மேலும் "என்னதான் நீங்கள் சிறப்பாகச் செயல்படுத்தினாலும் "ஒபாமா கேர் திட்டம்' ஒரு பேரழிவுத் திட்டம்' என விமர்சித்தார்.
கொரோனா குறித்து விமர்சித்த பைடனுக்கு பதிலடி கொடுத்த ட்ரம்ப், "கொரோனாவுக்காக நாங்கள் செய்த வேலைகளை நீங்கள் ஒருபோதும் செய்திருக்கமாட்டீர்கள். அது உங்கள் ரத்தத்திலேயே கிடையாது' என்றார்.
"ட்ரம்ப் சொல்லும் நபரை நியமித்தால், அமெரிக்காவில் மில்லியன்கணக்கான பொதுமக்களின் ஹெல்த் கவரேஜுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டிய தாகவிடும்' என அதனை மறுத்தார் பைடன்.
விவாதத்தின் இடையில், தான் ஆயிரக்கணக்கான டாலர்கள் வருவாய் வரி செலுத்தியிருப்பதாகக் குறிப்பிட்டார் ட்ரம்ப். அதனை மறுத்த பைடன், "ட்ரம்ப் தனது தனிப்பட்ட வரி விவரங்களை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கமுடியுமா' என குறுக்கிட்டார். இந்த கிடுக்கிப்பிடியால், "அமெரிக்காவில் பிஸினஸ்மேனுக்கு வரிச்சலுகைகள் இருப்பதாகவும், அதைப் பயன்படுத்தி எவ்வளவு குறைவாக வரி செலுத்த முடியுமோ அவ்வளவு குறைவாகத்தான் செலுத்தமுடியும். அப்படிச் செய்யாதவன் முட்டாளாகத்தான் இருக்கமுடியும்' என நழுவினார் ட்ரம்ப். தனது வரி விவரங்களை விவாதத்துக்கு இழுத்த பைடனின் மகன் ஹன்டர், சீனா மற்றும் அயல்நாடுகளிடமிருந்து சட்டத்துக்கு விரோதமாக மில்லியன் கணக்கில் ஆதாயமடைந்திருப்பதாக குற்றம்சாட்டினார் ட்ரம்ப்.
ஜோ பைடன் விவாதத்தின் ஆரம்பத்திலிருந்தே ட்ரம்ப் மீது வலுவான தாக்குதல்களை முன்வைத்தார். “"ட்ரம்ப் ஒரு பொய்யர். அமெரிக்காவின் மிக மோசமான அதிபர். தேசத்துக்கே அவர் ஒரு பொய்யரென'த் தெரியும். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தேசமெங்கும் உள்ள வீடுகளில் உணவறையிலமர்ந்து சாப்பிட்ட 2 லட்சம் பேர் இன்று இல்லை. கொரோனாவைக் கையாளும் லட்சணம் இப்படியிருக்கிறது. மேலும் ட்ரம்பின் ஊர்வலத்தில் சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் கொரோனா குறித்த விழிப்புணர்வில்லாமல் கூடிய ஆயிரக்கணக்கானவர் களைச் சுட்டிக்காட்டித் தாக்கினார்.
"கடந்த நான்கைந்து வருடங்களாக ட்ரம்ப் கட்டிய வருமான வரி வெறும் 750 டாலர்தான். அமெரிக்க அதிபர் பொறுப்பிலுள்ள அத்தனை அதிபர்களுமே தங்கள் வரிசெலுத்திய விவரங்களை மக்களுக்கு வெளிப்படுத்தி யுள்ளனர். அதை வெளிக்காட்டாத ஒரே அதிபர் ட்ரம்ப் தான். ஒரு பள்ளி ஆசிரியரைவிட குறைவாகவே ட்ரம்ப் வரி செலுத்தியுள்ளார்' என மூக்குடைத்தார் பைடன்.
மேலும் ஆஃப்ரோ -அமெரிக்கரான கறுப்பினத்தவர் விவகாரத்தைத் தொட்ட பைடன், "இவர்தான் கறுப்பின மக்களைப் பாதுகாக்கப் போகிற காவலரா என நையாண்டியாக கேள்வியெழுப்பினார். மேலும் ரஷ்யாவை சரிவர எதிர்கொள்ளாததைக் குறிப்பிட்டு, ரஷ்ய அதிபர் புதினின் செல்ல நாய்க்குட்டி' என ட்ரம்பை தாக்கிப் பேசினார். பைடனை "கோமாளி' என விமர்சித்தார் ட்ரம்ப்
முதல் விவாதத்தில் பைடனின் கையே ஓங்கியிருந்தாலும், சில ஊடகங்கள் "அதிபராகப் போகிறவர்களின் நிதானத்துடன் இருவருமே வாதிடவில்லை' என்ற விமர்சனத்தை முன்வைத்திருக்கின்றன.
"அமெரிக்க மக்கள், இரண்டாவது முறையாக அதிபர் நாற்காலியை அலங்கரிக்கும் பொறுப்பை ட்ரம்புக்குத் தரப்போகிறார்களா அல்லது முதல்முறையாக அதிபர் பதவிக்குப் போட்டியிடும் ஜோ பைடனின் பக்கம் சாயப்போகிறார்களா' என்பது விரைவில் தெரிந்துவிடும்.
-க.சுப்பிரமணியன்