"ஹலோ தலைவரே, சட்டமன்றக் கூட்டத் தொடரில் தீப்பொறி பறக்குது.''”
"ஆமாம்பா, கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம் சட்டப் பேரவையில் பலமா எதிரொலிச்சிருக்குதே?''”
"ஆமாங்க தலைவரே, இந்த வழக்கு விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவிச்சி சட்டசபையில் கேள்வி எழுப்பிய அ.தி.மு.க.வினர் அமளியில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து வெளிநடப்பு செய்த அவர்கள், சட்டசபை வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் குறித்து விளக்கம் கொடுத்த முதல்வர் ஸ்டாலின், "கொடநாடு விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்படும்'னு தேர்தல் வாக்குறுதி கொடுத் திருந்தோம். அதைத் தான் செய்கிறோம். இதில் அரசியல் தலையீடு இல்லை. நீதிமன்ற அனுமதி யுடன் முறைப்படி விசாரணை நடக்கிறது. உண்மைக் குற்றவாளிகள் மீதுதான் நடவடிக்கை எடுக்கப்படும். மற்றவர்கள் பயப்படத் தேவையில் லை''ன்னு சொன்னதோட... ”"மடியில் கனம் இருந்தால் தான் வழியில் பயம் இருக்கும். எங் கப்பன் குதிருக் குள் இல்லை என்பது போல வெளிநடப்பு செய்திருக்கிறார்கள்'’என்று அ.தி.மு.க. தரப்பை விமர்சித்தார். மறுநாளும் அ.தி.மு.க.வினர் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தாங்க.''”
"பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் மாஜி மந்திரி ஒருவருடைய சகோதரரின் பெயரும் அடிபடுதே?''”
"உண்மைதாங்க தலைவரே, பொள்ளாச்சியில் அப்பாவிப் பெண்களையும் குடும்பப் பெண்களையும் குறிவைத்து, அப்பகுதியின் அ.தி.மு.க. பிரபலம
"ஹலோ தலைவரே, சட்டமன்றக் கூட்டத் தொடரில் தீப்பொறி பறக்குது.''”
"ஆமாம்பா, கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம் சட்டப் பேரவையில் பலமா எதிரொலிச்சிருக்குதே?''”
"ஆமாங்க தலைவரே, இந்த வழக்கு விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவிச்சி சட்டசபையில் கேள்வி எழுப்பிய அ.தி.மு.க.வினர் அமளியில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து வெளிநடப்பு செய்த அவர்கள், சட்டசபை வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் குறித்து விளக்கம் கொடுத்த முதல்வர் ஸ்டாலின், "கொடநாடு விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்படும்'னு தேர்தல் வாக்குறுதி கொடுத் திருந்தோம். அதைத் தான் செய்கிறோம். இதில் அரசியல் தலையீடு இல்லை. நீதிமன்ற அனுமதி யுடன் முறைப்படி விசாரணை நடக்கிறது. உண்மைக் குற்றவாளிகள் மீதுதான் நடவடிக்கை எடுக்கப்படும். மற்றவர்கள் பயப்படத் தேவையில் லை''ன்னு சொன்னதோட... ”"மடியில் கனம் இருந்தால் தான் வழியில் பயம் இருக்கும். எங் கப்பன் குதிருக் குள் இல்லை என்பது போல வெளிநடப்பு செய்திருக்கிறார்கள்'’என்று அ.தி.மு.க. தரப்பை விமர்சித்தார். மறுநாளும் அ.தி.மு.க.வினர் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தாங்க.''”
"பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் மாஜி மந்திரி ஒருவருடைய சகோதரரின் பெயரும் அடிபடுதே?''”
"உண்மைதாங்க தலைவரே, பொள்ளாச்சியில் அப்பாவிப் பெண்களையும் குடும்பப் பெண்களையும் குறிவைத்து, அப்பகுதியின் அ.தி.மு.க. பிரபலம் ஒருவரின் வாரி சும், அவர் நண்பர்கள் டீமும் ஆடிய கூத்து, தமிழகத் தையே அதிரவச்சிது. இந்த விவகாரத்தில் தற்போது பொள்ளாச்சி பிரபலத்தின் நெருங்கிய நண்பரான கிருஷ்ண குமாருடன் இறுக்கமான நட்பு வைத்துக் கொண்டு, அந்த விவகாரத்திலும் கேம் ஆடினார்னு, அமைச்சர் வேலுமணியின் சகோதரர் அன்பரசனை இப்போது விசாரணை டீம் கண்காணிக்குது. அதனால் அவரும் விரைவில் இந்த விவாகரத்தில் சிக்குவார்னு, காவல்துறை தரப்பிலேயே டாக் அடிபடுது. இந்த நிலையில் சென்னையில் இருந்து கோவை போன வேலுமணியை வரவேற்க, 4 கோடிவரை செலவிட்டதாக அவருக்கு, அவர் தரப்பே ஷாக் கொடுத்து, பில்லையும் நீட்டியிருக்குதாம்.''”
"உதவி கேட்டுப்போன அ.தி.மு.க. பிரமுகர் ஒருவரை எடப்பாடியும் ஓ.பி.எஸ்.சும் நோகடிச்சிருக்காங்களே?''”
"ஆமாங்க தலைவரே, அ.தி.மு.க.வில் அகில உலக எம்.ஜி.ஆர். பேரவை செயலாளராக இருக்கும் தமிழ்மகன் உசேன், கட்சிக்காக செலவழித்தே நொடித்துப்போயிட்டாராம். அதனால் அவர் எடப்பாடியை சந்திச்சி, தான் 10 லட்ச ரூபாய் கடன் நெருக்கடியில் இருப்பதாகவும், தனக்கு உதவும்படியும் கேட்டிருக்கார். எடப்பாடியோ, நான் தேர்தலுக்காக 850 கோடி ரூபாயக் கடன் வாங்கிட்டு, இப்போ அல்லாடிக்கிட்டு இருக்கேன்'னு கைவிரிச்சிட்டாராம். ஓ.பி.எஸ்.சிடமாவது கேட்கலாம்ன்னு அவரையும் போய்ப் பார்த்திருக்கார் உசேன். அவரும், "இப்ப இருக்கும் நிலையில், எந்த சொத்தை விக்கலாம்னு நானே அல்லாடிக்கிட்டு இருக்கேன். இந்த நேரத்தில் நீங்க வேற'ன்னு சொல்லி, அவரை மேலும் அப்செட்டாக்கியிருக்கார் ஓ.பி.எஸ். அதேநேரம், ராஜேந்திர பாலாஜியும், உடுமலை ராதாகிருஷ்ணனும் பா.ஜ.க. பக்கம் போய்விடாமல் இருக்க, 200 பேரை கண்காணிப்புக்கு நிறுத்தி, அவர்களுக்கு அள்ளி இறைக்கிறார்களாம் அந்த இருவரும்.''”
"சட்டசபையில் உதயநிதி ஸ்டாலின் தனது கன்னிப் பேச்சிலேயே கலக்கிட்டாரே?''”
"கன்னிப் பேச்சுங்கிற வார்த்தையை மாற்றி தொடக்க உரை, அறிமுக உரைன்னு சொல்லணும்னு பா.ஜ.க எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கோரிக்கை வைத்திருக்கிறார். 18-ந் தேதி, சட்டப்பேரவையில் முதன்முதலில் பேசிய சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி, "நீட் தேர்வை எதிர்த்து அனைவரும் குரல் கொடுக்கவேண்டும். ஒரு இயக்கமாக செயல்பட வேண்டும்' என்று வலியுறுத்தினார். இதற்கு அதிக அப்ளாஸ் கிடைத்தது. இதற்கு பதிலளித்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், "கட்சிப் பாகுபாடு இல்லாமல் அனைவரும் ஒன்று சேர்ந்து நீட்டுக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும் என்பதுதான் இந்த அரசின் நிலை. நீட் தேர்வை ரத்து செய்வதற்கான சட்ட முன்வடிவை இந்த கூட்டத் தொடரிலேயே கொண்டு வருவோம்''னு அழுத்தமாகத் தெரிவிச்சார்.''”
"சி.பி.எம். தலைவர் சீதாராம் யெச்சூரி, முதல்வர் ஸ்டாலினை சந்திச்சிருக்காரே?''”
"ஆமாங்க தலைவரே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரான சீதாராம் யெச்சூரி, 18-ந் தேதி முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார். சில கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஸ்டாலினிடம் அப்போது கொடுத்தார். தனது பேச்சிற் கிடையே அவர், அரசியல் வியூக வல்லுநரான பிரசாந்த் கிஷோரிடம் "தி.மு.க.வும் காங்கிரசும் எச்சரிக் கையாக இருக்க வேண்டும்' என்று சொன்னாராம். சோனியாவிடமும் ராகுலிடமும் அண்மைக் காலமாக நெருக்கம் பாராட்டி வரும் பிரசாந்த் கிஷோர், 2024 நாடாளுமன்றத் தேர்தலில், காங் கிரஸுக்காகக் களமிறங்குவார்னும் சொல்லப்படுது. அதேபோல் அவர் காங்கிரஸில் சேர்ந்து தேர்தலிலும் நிற்பாருன்னும் யூகங்கள் ஓடுது. ஆனால் சி.பி.எம்.மோ, அவர் பா.ஜ.க.வின் உளவாளியாக காங்கிரசுக்குள் ஊடுருவுகிறார்னு சந்தேகப்படுது. அதைத்தான் முதல்வர் காதில் நேரம் பார்த்துப் போட்டாராம் யெச்சூரி.''”
"பா.ஜ.க. தமிழகத் தலைவரான அண்ணாமலை, அப்செட்டில் இருக்கிறாராமே?''”
"உண்மைதாங்க தலைவரே, ஏன்டா கட்சித் தலைவர் பதவியை ஏத்துக்கிட்டோம்னு அண்ணாமலை நொந்து போகிறாராம். காரணம், காங்கிரசைவிட அதிகமான கோஷ்டிப் பூசல் பா.ஜ.க.வில் இருக்கிறதாம். அதனால் யாரிடம் அவர் பேசினாலும், மற்ற கோஷ்டிகள் அவர் மீது கோபப்பார்வையை வீசுதாம். அதேபோல் தமிழக பா.ஜ.க பிரமுகர்கள் இவரை மதிப்பதும் இல்லையாம். இதனால் நொந்து போயிருக்கும் அண்ணாமலைக்கு, முன்னாள் தலைவரும் இணையமைச்சருமான எல்.முருகன் மட்டும்தான் அனுசரணையாக இருக்கிறார் என்கிறார்கள். அதே நேரத்தில் அவரும் ஆசிர்வாத யாத்திரைன்னு கட்சிக்குள் கலக்க, கூடவே போகவேண்டிய நிலையில் இருக்கிறார் அண்ணாமலை.''”
"ஜெயிலிலும் நடிகை மீராமிதுனின் அட்டகாசம் தாங்கலை போலிருக்கே?''”
"ஆமாங்க தலைவரே, பட்டியல் இனத்தைக் கொச்சைப்படுத்திப் பேசிய நடிகை மீராமிதுனை சென்னை மாநகர போலீஸ் கைது செய்து, சிறையில் தள்ளியிருக்கிறது. சிறையிலும் அவரது வாய்க்கொழுப்பு அடங்கலையாம். பெண் வார்டன்களிடம், ஜம்பமடிக்கும் மீரா, "நான் வெளியே போனதும் என் பவர் என்னன்னு போலீஸுக்குக் காட்டறேன்'னு சவால் விடுகிறாராம். அதேபோல் அவர், பெண் வார்டன்களிடம் சிகரெட் கேட்டும் அடம்பிடிக்கிறாராம். இதற்கிடையே, மீராமிதுனின் யூடியூப் சேனலை முடக்குமாறு, யூடியூப் நிர்வாகத்துக்குக் கடிதம் எழுதியிருக்கிறதாம் சென்னை போலீஸ்.''”
"நானும் ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துக்கறேன். சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்துக்கிட்டு இருக்கும் நிலையில், சட்டமன்றத்துக்கு வரும் ஜூனியர் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பலரும், நேராக உதயநிதியின் இருக்கைக்கு அருகே சென்று, குனிந்து பவ்யமாக வணக்கம் சொல்கிறார்களாம். அவர்களின் இந்த செய்கையால் சங்கோஜம் அடையும் உதயநிதி, தன் தந்தையும் முதல்வருமான ஸ்டாலினின் கவனத்துக்கு இதைக் கொண்டு போய், இதைத் தவிர்க்கச் செய்யுங்கன்னு வேண்டுகோள் வச்சிருக்காராம்.''