ராங்-கால்! அமைச்சரின் சாட்டையால் நடுங்கும் ஈஷா!

Wrong-call 29062024

Wrong-call

"ஹலோ தலைவரே, கள்ளக்குறிச்சி விவகாரம், விறுவிறு அறிவிப்புகள், அமைச்சர்களின் அதிரடி பதில்னு பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் சட்டப்பேரவைக் கூட்டம் நடக்குது''

"ஆமாம்பா, சட்டப் பேரவையில் ஜக்கியின் ஈஷா விவகாரம் கூட அடிபட்டிருக்கே?''

"உண்மைதாங்க தலைவரே, ஈஷா விவகாரத்தில் அடின்னா, சாதாரண அடி இல்லை. சரியான நெற்றியடி. வனப்பகுதியில் உள்ள யானை வழித்தடங்களை ஆக்கிரமித்து, ஈஷா மையத்தினர் கட்டடங்களைக் கட்டி இருப்பது குறித்து நமது நக்கீரன்தான் முதன்முதலில் அழுத்தமான ஆதாரங்களோடு அம்பலப்படுத்தியது. இந்தக் கூட்டத் தொடரில் அது குறித்துக் கிளறிய வேளச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஹசன் மௌலானா, ’கோவை ஈஷா யோகாவில் யானை வழித்தடங்களை மறைத்து வைத்திருக்கிறார்கள்னு சொல்ல, உடனே துறை அமைச்சரான மதிவேந்தன்’யானை வழித்தடங்கள் எவை என்பது குறித்து இன்னும் வரையறை செய்யப்படவில்லை என்றார் நிதானமாக.''

"ஆமாம்பா... ஆனா அமைச்சர் துரைமுருகன் விடலையே?''

"ஆமாங்க தலைவரே, உடனே குறுக்கிட்ட அவை முன்னவரான அமைச்சர் துரைமுருகன் 'ஈஷாவில் உங்களின் அனுமதியை பெற்றுத்தான் கட்டடங்கள் கட்டினார்களா? யானைகள் வழித்தடத்தை பிடித்துக்கொண்டது உண்மையா? ரிசர்வ் பாரஸ்ட்டில் கை வைத்திருக்கிறார்களா, இல்லையா? என்பதற்கு நேரடியாக பதில் கூறுங்கள்' என்று அதிரடியாகக் கூறினார். அமைச்சரோ, இதுபற்றி முழுதாக அறிந்துகொண்டு பதில் அளிப்பதாகச் சொல்ல, அப்போதும் விடாத துரைமுருகன்' பதவியேற்று 3 ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை ஆய்வு செய்யவில்லையா? அப்படினு கேட்கிறார் அவர்'’என்று கொக்கிபோட்டு அதிரடி கிளப்பினார். சீனியர் அமைச்சரே இப்படி குரல் கொடுத்திருப்பது ஈஷா தரப்பை நடுங்க வைத்திருக்கிறதாம். இந்தநிலையில், பா.ஜ.க. வானதி சீனிவாசன், ஈஷாவின் நிலை குறித்துப் பேச அனுமதிகேட்டு பேரவைத் தலைவருக்குக் கடிதம் கொடுத்திருக்கிறார்.''

"சட்டப்பேரவை பரபரப்பாத்தான் போகுது. சரிப்பா, நாம் ஏற்கனவே பேசிக்கொண்டபடி, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தியே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறாரே?’’

"உண்மைதாங்க தலைவரே, தெம்போடு நாடாளுமன்றத்திற்குள் நுழைந்திருக்கும் காங்கிரஸ் கட்சி, அதே உற்சாகத்தோடு ராகுல் காந்தியை எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்வு செய்திருக்கிறது. பத்து வருடங்களுக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சிக்கு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்து இப்போது கிடைத்திருக்கிறது. நாம் இரண்டு வாரத்திற்கு முன்பே கணித்தபடி ராகுலே இந்த பதவிக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். கேபினட் அமைச்சர்களுக்கு நிகரான அந்தஸ்துள்ள பதவி இது. அதுமட்டுமல்ல, சி.பி.ஐ

Wrong-call

"ஹலோ தலைவரே, கள்ளக்குறிச்சி விவகாரம், விறுவிறு அறிவிப்புகள், அமைச்சர்களின் அதிரடி பதில்னு பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் சட்டப்பேரவைக் கூட்டம் நடக்குது''

"ஆமாம்பா, சட்டப் பேரவையில் ஜக்கியின் ஈஷா விவகாரம் கூட அடிபட்டிருக்கே?''

"உண்மைதாங்க தலைவரே, ஈஷா விவகாரத்தில் அடின்னா, சாதாரண அடி இல்லை. சரியான நெற்றியடி. வனப்பகுதியில் உள்ள யானை வழித்தடங்களை ஆக்கிரமித்து, ஈஷா மையத்தினர் கட்டடங்களைக் கட்டி இருப்பது குறித்து நமது நக்கீரன்தான் முதன்முதலில் அழுத்தமான ஆதாரங்களோடு அம்பலப்படுத்தியது. இந்தக் கூட்டத் தொடரில் அது குறித்துக் கிளறிய வேளச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஹசன் மௌலானா, ’கோவை ஈஷா யோகாவில் யானை வழித்தடங்களை மறைத்து வைத்திருக்கிறார்கள்னு சொல்ல, உடனே துறை அமைச்சரான மதிவேந்தன்’யானை வழித்தடங்கள் எவை என்பது குறித்து இன்னும் வரையறை செய்யப்படவில்லை என்றார் நிதானமாக.''

"ஆமாம்பா... ஆனா அமைச்சர் துரைமுருகன் விடலையே?''

"ஆமாங்க தலைவரே, உடனே குறுக்கிட்ட அவை முன்னவரான அமைச்சர் துரைமுருகன் 'ஈஷாவில் உங்களின் அனுமதியை பெற்றுத்தான் கட்டடங்கள் கட்டினார்களா? யானைகள் வழித்தடத்தை பிடித்துக்கொண்டது உண்மையா? ரிசர்வ் பாரஸ்ட்டில் கை வைத்திருக்கிறார்களா, இல்லையா? என்பதற்கு நேரடியாக பதில் கூறுங்கள்' என்று அதிரடியாகக் கூறினார். அமைச்சரோ, இதுபற்றி முழுதாக அறிந்துகொண்டு பதில் அளிப்பதாகச் சொல்ல, அப்போதும் விடாத துரைமுருகன்' பதவியேற்று 3 ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை ஆய்வு செய்யவில்லையா? அப்படினு கேட்கிறார் அவர்'’என்று கொக்கிபோட்டு அதிரடி கிளப்பினார். சீனியர் அமைச்சரே இப்படி குரல் கொடுத்திருப்பது ஈஷா தரப்பை நடுங்க வைத்திருக்கிறதாம். இந்தநிலையில், பா.ஜ.க. வானதி சீனிவாசன், ஈஷாவின் நிலை குறித்துப் பேச அனுமதிகேட்டு பேரவைத் தலைவருக்குக் கடிதம் கொடுத்திருக்கிறார்.''

"சட்டப்பேரவை பரபரப்பாத்தான் போகுது. சரிப்பா, நாம் ஏற்கனவே பேசிக்கொண்டபடி, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தியே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறாரே?’’

"உண்மைதாங்க தலைவரே, தெம்போடு நாடாளுமன்றத்திற்குள் நுழைந்திருக்கும் காங்கிரஸ் கட்சி, அதே உற்சாகத்தோடு ராகுல் காந்தியை எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்வு செய்திருக்கிறது. பத்து வருடங்களுக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சிக்கு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்து இப்போது கிடைத்திருக்கிறது. நாம் இரண்டு வாரத்திற்கு முன்பே கணித்தபடி ராகுலே இந்த பதவிக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். கேபினட் அமைச்சர்களுக்கு நிகரான அந்தஸ்துள்ள பதவி இது. அதுமட்டுமல்ல, சி.பி.ஐ. இயக்குநர் உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகளைத் தீர்மானிக்கும் குழுவிலும் இடம்பெறக்கூடிய பவர்ஃபுல் பதவி இது. எனவே, காங்கிரஸிடம் உற்சாகம் கரைபுரள்கிறது. அதேபோல், நாடாளுமன்றத்தில் இனி, மோடிக்கு எதிராக ராகுல் வாள் சுழற்றும் ஃபைட் சீன்களையும் நிறைய எதிர்பார்க்கலாம் என்கிற பேச்சும் பரவலாக எதிரொலிக்கிறது.''

"அதுசரிப்பா, நாடாளுமன்றத் தலைவராகத் தேர்ந்தேடுக்கப்பட்ட ராகுலுக்கு நடிகர் விஜய்யும் வாழ்த்து தெரிவித்திருக்கிறாரே?''

"ஆமாங்க தலைவரே, எதிர்க்கட்சித் தலைவராகும் ராகுலுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துவரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்திருப்பது, பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்த வாழ்த்தின் மூலம், விஜய், தன்னைப் பா.ஜ.க.வின் ஆதரவாளர் என்று பரப்பட்ட செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் என்று அவரது ஆதரவாளர்கள் ஒரு பக்கம் சொல்லிக்கொண்டிருக்க, இன்னும் சிலரோ நடிகர் விஜய்க்கு புதுவை முதல்வர் ரெங்கசாமியும், அங்குள்ள அமைச்சர் நமச்சிவாயமும் நெருக்கமாக இருக்கிறார்கள். அப்படி இருக்க, விஜய் மீதும் இவர்களின் சாயம் படியாமல் எப்படி இருக்கும்? என்கிறார்கள். அதேசமயம் பா.ஜ.க. தரப்பும், ராகுலுக்கு விஜய் எதற்காக வாழ்த்து சொல்லவேண்டும் என்று எரிச்சல்படுகிறதாம்.''

"சரிப்பா, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் குறித்து சி.பி.ஐ.யின் விசாரணையைக் கேட்டு, பா.ஜ.க. கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், கவர்னர் ரவியை சந்தித்தார்கள். அப்போது உடன் சென்ற தமிழிசையை, பா.ஜ.க. மாநில நிர்வாகி கழற்றிவிடப் பார்க்க, அதைப் புரிந்துகொண்ட தமிழிசை, அவரை முந்திக்கொண்டு கவர்னரிடம் சென்றாராம். மறுநாள் அ.தி.மு.க. தலைவர்களும் கவர்னரை சந்தித்து இதே கோரிக்கையை வலியுறுத்தினர். தனித்தனியாக தன்னை சந்தித்த இரண்டு குழுக்களிடமும் சி.பி.ஐ. விசாரணைக்கு இதில் என்ன முகாந்திரம் இருக்கிறது ? எதன் அடிப்படையில் இப்படி விசாரணையைக் கேட்கிறீர்கள்? என்று கவர்னர் ரவி கேள்வி எழுப்பினாராம். சென்றவர்களும், கவர்னரிடம் இது குறித்து விளக்கம் கொடுத்தார்களாம். இதைத் தொடர்ந்து, 25ஆம் தேதி இரவு, டெல்லியிலிருந்து அழைப்பு வர, கவர்னர் ரவி 26ஆம் தேதி காலையில், அவசரம் அவசரமாக டெல்லிக்கு விரைந்தார். அங்கு உள்துறை அமைச்சர் அமித்சாவையும், அவர் துறை அதிகாரிகளையும் சந்தித்துவிட்டு அன்று இரவே சென்னைக்குத் திரும்பிவிட்டார் கவர்னர். டெல்லியில் கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக கவர்னரிடமும் தனியாக ஒரு ரிப்போர்ட் வாங்கப்பட்டிருக்கிறதாம்.''’

"பா.ஜ.க.வுக்கு நெருக்கமானவராக எடப்பாடி மாறிவருகிறாரே?''

"ஆமாங்க தலைவரே, இப்போது மோடியும் அமித்ஷாவும் சொல்வதைக் கேட்கும் அளவிற்கு எடப்பாடி மாறிவிட்டார் என்கிறார்கள். இனி எடப்பாடியின் மனம் கோணாமல் நடந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கும் இவர்கள், சசிகலா, ஓ.பி.எஸ்., தினகரன் உள்ளிட்டோரை முழுதாக ஓரங்கட்டிவிட்டார்களாம். அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைந்தால்தான் தமிழ்நாட்டில் காலூன்றமுடியும் என்பதை பா.ஜ.க. தரப்பும், பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்தால்தான் ஒளிவட்டத்தோடு உலவமுடியும் என எடப்பாடி தரப்பும் இப்போது உறுதியான முடிவிற்கு வந்திருப்பதால், இருதரப்பிற்கும் இடையில் ஒருவித இணக்கம் ஏற்பட்டிருக்கிறதாம். இதனால் நிமிர்ந்து உட்கார ஆரம்பித்திருக்கும் எடப்பாடி, அண்மையில் மாஜி மந்திரி வேலுமணி, தன் மகனின் திருமண விசயமாகப் பேசவந்தபோது, தனது அறையில் கிடந்த மற்ற நாற்காலிகளை அப்புறப்படுத்திவிட்டு, அவரை நிற்கவைத்தே பேசி அனுப்பினாராம்.''

"பா.ஜ.க.வில் இருந்து கட்டம் கட்டப்பட்ட அந்த திருச்சி நபர், கட்சித் தாவலுக்கு ரெடியாகிறார்னு பேச்சுஅடிபடுதே?''

"தமிழக பா.ஜ.க.வின் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் மாநில செயலாளராக பதவி வகித்த திருச்சி சூர்யாவை, தமிழிசை விவகாரத்தில் கட்சியில் இருந்து நீக்கியது கமலாலயம். எனினும் மாநில நிர்வாகியின் தீவிர ஆதரவாளரானவே இப்போதும் இருந்துவருகிறாராம் சூர்யா. அவரை நேரில் அழைத்த அந்த பா.ஜ.க. மாநில நிர்வாகி, ’"நம்ம கட்சியின் நிலைமை சரியாக ஆகும் வரை, நீ சும்மா இருக்கவேண்டாம். கொஞ்ச நாள் டி.டி.வி. தினகரனுடன் சேர்ந்து செயல்படு. அவரது அ.ம.மு.க.வுக்குதான் ஆட்கள் இல்லை'’ என்று அறிவுரை வழங்கினாராம். ஆனால் சூர்யாவோ, ’யாருமில்லாத களத்தில் முண்டா தட்டுவதைவிட, எதிரியோடு கைகோர்ப்பதே மேல்’என்ற நினைப்போடு, அ.தி.மு.க.வில் சேர, எடப்பாடிக்குத் தூதுவிட்டுக்கொண்டிருக்கிறாராம்.''

"ஜெ.’அண்ணன் மகனுக்கு உடல்நலம் இல்லை என்று செய்தி வருகிறதே?''

"ஜெ.வின் அண்ணன் மகன் தீபக், தற்போது கேரள மாநிலம் திருச்சூர் மருத்துவமனை ஒன்றில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார். காரணம், அவரிடம் அண்மைக் காலத்தில் அதிகரித்த குடிப்பழக்கம்தான் என்கிறார்கள். ஜெ.வின் ஹைதராபாத் திராட்சைத் தோட்டத்தை, ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தரப்பிடம் விலைபேசி அட்வான்ஸ் மட்டும் வாங்கியிருக்கிறார். அந்தத் தோட்டத்திற்குப் பேசியபடி மீதத்தொகை இன்னும் கைக்கு வரவில்லையாம். காரணம், அந்த திராட்சைத் தோட்டம் ஜெ.வின் சொத்துக்குவிப்பு வழக்கில் அட்டாச்மெண்ட்டாகச் சேர்க்கப்பட்டிருப்பதால், சொத்து முதலில் ரிலீசாகி கைக்கு வரட்டும் என்கிறார்களாம். பிறகு மிச்சத்தொகையை வாங்கிக்கொள்ளலாம் என்று சொல்லிவிட்டார்களாம். இதில் அப்செட்டாக தீபக் அதிகம் குடிக்க ஆரம்பித்துவிட்டாராம். இதனால் உடல்நலம் அதிகம் பாதிக்கப்பட்ட நிலையில், இப்போது உயிருக்கே போராடும் நிலைக்கு அவர் வந்திருக்கிறார் என்கிறார்கள். இதையறிந்து, அவரது சகோதரி தீபா, பதறியபடி அங்கே சென்றிருக்கிறாராம்.''

"தமிழக பா.ஜ.க. வின் சர்ச்சைக்குரிய தலைவர் லண்டன் போகப்போகிறாரே?''

"ஆமாங்க தலைவரே, அந்த பா.ஜ.க. மாநில நிர்வாகி, வரும் செப்டம்பர் மாதம் லண்டன் செல்லத் திட்டமிட்டிருக்கிறார். அங்குள்ள ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் படிப்பதற்காகதான் இந்தப் பயணம்னு அவர் தரப்பு சொல்லிவருகிறது. போகிறவர், 6 மாதப் படிப்பை முடித்துக்கொண்டு அடுத்த வருடம் ஜனவரி இறுதியில்தான் சென்னைக்குத் திரும்புவாராம். அவர் லண்டன் செல்வதால், அவர் வரும்வரை, இந்த இடைப்பட்ட 6 மாதத்திற்கு யாராவது ஒரு பொறுப்புத் தலைவர் நியமிக்கப்படுவாரா? இல்லை, அவர் திரும்பும் வரை, அவர் நாற்காலி காலியாகவே இருக்குமா? என்பதுதான் ஏனைய பா.ஜ.க. நிர்வாகிகளின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இதற்கிடையே, நாடாளுமன்றத் தேர்தலின்போது கிடைத்த 500 ஸ்வீட்ஸ் பாக்ஸ்களை, இந்தப் பயண சாக்கில் வெளிநாட்டிற்ச்கு அவர் இடம் மாற்றத் திட்டமிட்டிருப்பதாகவும் ஒரு டாக் பரபரப்பாக கமலாலயத் தரப்பிலேயே இருக்கிறது.''

"விரைவில் பா.ஜ.க. வின் செயற்குழு கூடப்போகிறது என்கிறார்களே?''

"தமிழக பா.ஜ.க.வின் மாநில செயற்குழு அடுத்த மாதம் கூடுகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. வுக்கு ஏற்பட்டிருக்கும் மோசமான தோல்விக்கான காரணங்கள் குறித்தும், தேர்தல் செலவுகளுக்காக கட்சித் தலைமை கொடுத்த பணத்தில் நடந்த ஊழல்கள் குறித்தும் இந்த செயற்குழுவில் விவாதிக்க இருக்கிறார்களாம். இது தொடர்பான தகவல்களை தொகுதி வாரியாக நிர்வாகிகள் அனைவருக்கும் அனுப்பி வைக்கும்படி, கட்சியின் அமைப்புச் செயலாளரான கேசவ விநாயகம் கேட்டுக்கொண்டிருக்கிறாராம். பணப்பட்டுவாடா தொடர்பான ஊழல் நிரூபிக்கப்பட்டால், அதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து அதே செயற்குழுவில் தீர்மானிக்கப்படும் என்கிறார்கள். அப்ப, பா.ஜ.க. செயற்குழுவில் ரசாபாசத்துக்குப் பஞ்சம் இருக்காதுன்னு தெரியுது.''

"இன்றும் எங்கள் பகுதியில் தீண்டாமை உண்டுன்னு ப.சிதம்பரம் சொல்லியிருக்கிறாரே?''

"தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரான மறைந்த பெரியவர் இளையபெருமாளின் நூற்றாண்டு நிறைவு விழாவை கடந்த 26ஆம் தேதி சென்னை காமராஜர் அரங்கில் காங்கிரஸ் நடத்தியது. அப்போது அக்கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் தலைவர்கள் கிருஷ்ணசாமி, ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், தங்கபாலு உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இதில் இளையபெருமாளின் பெருமைகளை எடுத்துரைத்த முன்னாள் மத்திய அமைச்சரான ப.சிதம்பரம் "எங்கள் பகுதியில் 4 நாட்களுக்கு முன்னர் கண்டதேவியில் தேரோட்டம் நடந்தது. அதுவும் தென் மண்டல ஐ.ஜி. தலைமையில் மூவாயிரம் போலீஸôரை பாதுகாப்புக்காக குவித்து வைத்து, அந்தத் தேரோட்டம் நடத்தப்பட்டது. அதற்குக் காரணம், இப்போதும் இருக்கும் சாதியக் கட்டமைப்புதான், இன்றும் சாதியம் என்கிற சமுதாய இழுக்கு இருப்பதை இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டும்'’ என்று கவலையோடு குறிப்பிட்ட அவர், அந்தப் பகுதியில் உள்ள ஒரு பிரமுகரை மறைமுகமாகத் தாக்கிவிட்டு அமர்ந்தார்.''

"அரசியல் நோக்கத்தோடு ஒரு தமிழ் அமைப்பு தொடங்கப்பட்டிருக்கிறதே?''

"தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் எம்.பி.யுமான திருநாவுக்கரசரின் சம்பந்தியின் பெயர் விஜயகுமார். இவர், முன்னாள் அரசு அதிகாரி. நடந்து முடிந்த தேர்தலில் திருநாவுக்கரசுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில், தமிழை மையப்படுத்தி இலக்கிய அமைப்பு ஒன்றை அடுத்த மாதம் விஜயகுமார் தலைமையில் தொடங்க, அதற்கான ஆயத்தங்கள் பரபரப்பாக நடக்கிறது. 2026 சட்டமன்றத் தேர்தலுக்குள் திருநாவுக்கரசரை மக்கள் மத்தியில் அதிக அளவில் உயர்த்திப்பிடிப்பதற்காகவே இப்படி ஒரு தமிழ் அமைப்பைத் தொடங்குகிறார்கள்.''

"காவல்துறையில் நிறைய உயர் பதவிகள் காலியாக இருப்பதாக சொல்லப்படுகிறதே?''

"ஆமாங்க தலைவரே, காவல்துறையில் மதுரை, காஞ்சிபுரம் ஆகிய இரண்டு மண்டலங்களிலும் இருந்த டி.ஐ.ஜி.க்கள் டெபுடேசனில் சென்றதால், அவர்களின் நாற்காலிகள் இப்போது காலியாக இருக்கின்றன. சென்னை மாநகரில் கீழ்ப்பாக்கம், மைலாப்பூர் ஆகிய காவல் மாவட்டங்களுக்கு எஸ்.பி.க்கள் இல்லை என்கிறார்கள். இதுபோல் காவல்துறையில் பல முக்கிய பதவிகள் காலியாக இருக்க, இந்த நிலையில் தென் மண்டல ஐ.ஜி.யாக இருக்கும் கண்ணன், வடக்கு மண்டலத்துக்கு வரவேண்டும் என்று விண்ணப்பித்துக் கொண்டு இருக்கிறார். இப்படி ஒரே நேரத்தில் நிறைய பதவிகளை நியமித்தும், இடம் மாற்றியும் நிரவ வேண்டிய நிலையில் இருக்கிறதாம் காவல்துறை.''

"நானும் ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துக்கறேன். சட்டமன்றக் கூட்டத்தொடர் முடிந்ததும் தமிழக அமைச்சரவையில் மிகப்பெரிய மாற்றம் இருக்கும் என்கிறார்கள். அதே சமயம் அதில் யார் யாருக்கு சாதகம்? யார் யாருக்கு பாதகம்? என்பதை எல்லாம் மிகவும் சஸ்பென்சாக வைத்திருக்கிறார்களாம்.''

nkn290624
இதையும் படியுங்கள்
Subscribe