hgyr

""ஹலோ தலைவரே, நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, 20ஆம் தேதி விறுவிறுப்பாக சட்டமன்றம் கூடியிருக்கிறது.''’’

""ஆமாம்பா, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடப்பதால், இந்தக் கூட்டத் தொடரின் நாட்கள் குறைக்கப்பட்டு, 29ஆம் தேதிவரை நடக்கும்னு அறிவிக்கப்பட்டிருக்கே?''’’

Advertisment

""உண்மைதாங்க தலைவரே, 9 நாட்கள் மட்டுமே நடக்கும் இந்த கூட்டத் தொடர் தினமும் கலையிலும், மாலையிலுமாக நடக்க இருக்கிறது. முதல்நாள் நிகழ்வாக மறைந்த விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்திக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றியதோடு, ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. இம்முறை, துறை வாரியான மானியக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவுள்ளன. 110-விதியின் கீழ் துறை சார்ந்த சில புதிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிடவிருக்கிறார். நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளையும் தி.மு.க. கூட்டணி கைப்பற்றியிருப்பதால் முதல்வருக்கான பாராட்டுக்களுக்கும் பஞ்சமிருக்காது. அதேநேரம் சட்டமன்றம் கூடும் நேரத்தில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயச் சாவுகள் நடந்திருப்பதால், இதை பூதாகரமாக்க எதிர்க்கட்சிகள் திட்டமிடுகின்றன.''’’

Advertisment

""சரிப்பா, அமைச்சர் ஒருவர் வெளியிட்ட அறிக்கை, ஏறத்தாழ அப்படியே முதல்வர் பெயரிலும் வெளியாகியிருக்கே?''’’

""வேளாண்துறை குறித்து கடந்த 14ஆம் தேதி துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பெயரில் ஒரு அறிக்கையை செய்தித்துறை ரிலீஸ் செய்திருந்தது. அந்த அறிக்கையின் கடைசி பத்தியில் மட்டும் சில வார்த்தைகளை மாற்றிவிட்டு, அதை அப்படியே முதல்வர் ஸ்டாலின் பெயரில் கடந்த 17 ஆம் தேதி அதே செய்தித்துறையினர் வெளியிட்டுள்ளனர். இதனால், ’"என்ன இது? முதல்வருக்கு தனியாக அறிக்கை வெளிடத் தெரியாததுபோல், காப்பி பண்ணியிருக்கிறார்களே?'’என்று, கோட்டை அதிகாரிகள் தரப்பில் சர்ச்சைகள் எழுந்தன. இதனால் திடுக்கிட்ட அதிகாரிகள், முதல்வரின் கவனத்துக்கு செல்லாமல் இதைத் தடுக்க முயன்றனர். இருந்தும் தகவல் போய்விட்டது. இதைத் தொடர்ந்து, முதல்வரின் மூன்றாவது செயலாளர் சண்முகம் ஐ.ஏ.எஸ்., இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தியிருக்கிறார். அப்போது சம்பந்தப்பட்ட இரண்டு அதிகாரிகளும் மாறி, மாறி குற்றம் சாட்டிக்கொண்டதால், அவர்களை அறிவுறுத்தி அனுப்பிவைத்தாராம் சண்முகம் ஐ.ஏ.எஸ்.''’’

""தமிழிசை விவகாரத்தில் கேம் ஆடியதாக, திருச்சி பா.ஜ.க. பிரமுகரை கட்டம் கட்டியிருக்கிறார்களே?''’’

""ஆமாங்க தலைவரே, கடந்த இதழில் நாம் பேசிக்கொண்டது போலவே, அமித்ஷா தமிழிசையைக் கண்டித்த விவகாரத்தின் பின்னணியில் திருச்சி சூர்யாசிவா இருப்பது பகிரங்கமாகி இருக்கிறது. மாநில நிர்வாகியின் தீவிர ஆதரவாளரான சிவா, அவர் மனப்போக்கிற்குத் தக்கபடிதான் தமிழிசைக்கு எதிரான விஷயங்களில் இறங்கினாராம். தமிழிசை பற்றி ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் போட்டுக் கொடுத்து, அமித்ஷாவின் கண்டிப்பு வரை விவகாரத்தைப் பெரிதாக்கியதோடு, தமிழிசையை விமர்சித்தும் சிவா, பகிரங்கமாகப் பேசினாராம். இதுதவிர, பா.ஜ.க.வின் சீனியர்மேனான கேசவவிநாயகத்தின் பணம் மட்டுமல்லாது, அவருடைய ஏடாகூடப் படங்களும் மற்றொரு பா.ஜ.க. பிரமுகரான கோவர்த்தனிடம் இருப்பதை சூர்யா அம்பலப்படுத்த முனைந்தாராம். எனவே, இந்த விவகாரங்களை சூர்யா மூலம் கிளறவேண்டாம் என்று ’அந்த மாநில நிர்வாகியிடம் கேசவவிநாயகம் கெஞ்சி வந்தாராம். இந்த நிலையில், எல்லா விவகாரத்தில் இருந்தும் தன்னைத் தற்காத்துக் கொள்வதற்காக மாநில நிர்வாகியானவர், தனது ஆதரவாளரான திருச்சி சூர்யாவை இப்போது கட்சியில் இருந்து கட்டம்கட்டியிருக்கிறார் என்கிறது கமலாலய வட்டாரம்.''’’

""விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பா.ம.க. விதவிதமாகக் கணக்குப் போடுகிறதே?''’’

""ஆமாங்க தலைவரே, வன்னிய வாக்காளர்கள் அதிகமுள்ள விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், எப்படியாவது வெற்றி பெறவேண்டும் என்று பரிதவிக்கிறதாம் தைலாபுரம். அதனால் தேர்தலைப் புறக்கணிக்கும் அ.தி.மு.க. வாக்குகளை பா.ம.க.வுக்கு அறுவடைசெய்வதற்கான முயற்சிகள் மும்முரமாக நடக்கிறது. இதற்கு மாஜி அ.தி.மு.க. மந்திரி சி.வி.சண்முகம்தான் பயன்படுவார் என்பதற்காக, பா.ம.க. ராமதாஸ் அவரோடு பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். இதையறிந்த எடப்பாடி, வரும் 2026 சட்டமன்றத் தேர்தலிலாவது பா.ம.க. நம்மோடு வருமா? என்று கேட்க, ராமாதாúஸô சட்டமன்றத் தேர்தலில் உங்களோடுதான் இருப்போம் என்று உறுதி தெரிவித்தாராம். இந்த நிலையில் அ.தி.மு.க.வில் இருக்கும் தலித் வாக்குகளும் பா.ம.க. அதிருப்தி வாக்குகளும் தி.மு.க.வுக்குதான் போகும் என்று அவர்கள் தரப்பிலிருந்தே தகவல் கிடைக்க, தைலாபுரம் ஷாக் ஆகியிருக்கிறதாம். இந்த நிலையில் அந்தத் தொகுதியில் இருக்கும் கோயில்களுக்கு ஆளுங்கட்சியான தி.மு.க. 20 லட்ச ரூபாயைக் கொடுத்து, பா.ம.க. தரப்பின் தூக்கத்தைக் கலைத்திருக்கிறதாம்.''’’

""இந்த நிலையில் தங்கள் மாம்பழச் சின்னத்தைப் பெறவும் பா.ம.க. போராடிவருகிறதே?''’’

""ஆமாங்க தலைவரே, நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற குறைவான வாக்குகளால் பாமக தனது மாம்பழச் சின்னத்தைப் பறிகொடுத்திருக்கிறது. ஒரு அரசியல் கட்சி அங்கீகாரம் பெற வேண்டுமானால் 6 எம்.எல்.ஏ.க்கள் அல்லது 2 எம்.பி.க்கள் அல்லது தேர்தலில் 8 சத வாக்குகள் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை அடைந்திருக்கவேண்டும். அப்போதுதான் அதற்கு 'மாநில கட்சி ' என்கிற அங்கீகாரம் கிடைக்கும். இதில் எதையும் பெறமுடியாததால் மாநில கட்சி என்கிற அந்தஸ்தை பா.ம.க. இழந்திருக்கிறது. எனவே, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், பா.ம.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் சி.அன்புமணி, சுயேட்சை சின்னத்தில் போட்டியிடும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இருப்பினும் இடைத்தேர்தலில் தங்கள் கட்சிக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் முட்டி மோதிவரும் பா.ம.க., டெல்லி செல்வாக்கால் மாம்பழத்தை வாங்கிவிடலாம் என்று நம்புகிறதாம்.''’’

""எடப்பாடி மீது தே.மு.தி.க. பிரேமலதா கோபத்தில் இருக்கிறார்னு தகவல் வருதே?''’’

""நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வும், தே.மு.தி.க.வும் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்தன. இந்தக் கூட்டணி, 2026 சட்டமன்ற தேர்தல்வரை தொடரும் என்றும் சொல்லிவந்தனர். இந்தநிலையில், தே.மு.தி.க. உள்ளிட்ட தனது கூட்டணிக் கட்சிகளிடம்கூட ஆலோசிக்காமல், விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துவிட்டார் எடப்பாடி. அவரது இந்த தன்னிச்சையான முடிவு, தே.மு.தி.க. தலைவர் பிரேமலதாவை அதிர்ச்சியடைய வைத்தது. இதைத்தொடர்ந்து அவர், எடப்பாடியிடம் பேச முயன்றார். ஆனால் எடப்பாடி தொடர்பிலேயே சிக்கவில்லையாம். இதனால் வேறுவழியில்லாமல் பிரேமலதாவும் இடைத்தேர்தலை தே.மு.தி.க.வும் புறக்காணிப்பதாக வருத்தத்தோடு அறிவித்திருக்கிறார்.''’’

""அ.தி.மு.க. அவைத்தலைவருக்கு சசிகலா வீடு வாங்கிக் கொடுத்திருக்கிறார்னு சொல்கிறார்களே?''’’

""அ.தி.மு.க.வில் எடப்பாடிக்கு எதிரான அலை பலமாக வீசுவதால், அங்குள்ள பலருக்கும் எடப்பாடியின் எதிரிகள் தரப்பிலிருந்து அதிர்ஷ்டக் காற்று பலமாக வீசுகிறதாம். குறிப்பாக, அ.தி.மு.க. அவைத்தலைவரான தமிழ்மகன் உசேனுக்கு சசிகலா, ரகசியமாக ஒரு பங்களாவை வாங்கிப் பரிசளித்திருக்கிறாராம். இந்த நிலையில் மாஜி மந்திரியான வேலுமணியும், சென்னை எம்.ஆர்.சி. நகரில் நவீன அடுக்குமாடிக் குடியிருப்பில் தனக்கு இருக்கும், தலா 20 கோடி மதிப்பிலான லக்ஜரி அபார்ட்மெண்டுகளில் ஒன்றை, உசேனுக்கு ஒதுக்கிக் கொடுத்து அவரை ஏகத்துக்கும் மகிழ வைத்திருக்கிறாராம். மேலும் வேலுமணி, தன் ஆதரவுக்காக எடப்பாடி கெஞ்சி வருவதுபோல் காட்டிக்கொள்ளும் வகையில், அவர் தனக்கு 20 முறைக்கு மேல் போன் பண்ணியும், தான் எடுக்கவில்லை என்று பம்மாத்து பண்ணிக்கொண்டிருக்கிறாராம்.''’’

""அ.தி.மு.க. சாதிக் கட்சியாக மாறிவருகிறது என்று அடிக்கடி சசிகலா பொருமுகிறாராமே?''’’

""இதுகுறித்து அ.தி.மு.க. சீனியர்கள் தரப்பு என்ன சொல்லுதுன்னா, ஒரு காலத்தில் தங்கள் முக்குலத்தோர் சமூகத்தின் பிடியில் இருந்த அ.தி.மு.க.வில், இப்போது பல்வேறு சமூகங்கள் தலையெடுப்பதை சசிகலாவால் ஜீரணிக்க முடியவில்லை. அனைத்து சமூகத்தினரும் கட்சிப் பொறுப்புகளுக்கு வந்திருக்கிறார்கள். அவர்களில், எடப்பாடிக்கு மிகநெருக்கமான சேலம் இளங்கோவன், மாஜி மந்திரி வளர்மதி, தளவாய்சுந்தரம் ஆகியோர் இணைபிரியாத நட்புகொண்டு பயணித்துவருகிறார்கள். இவர்கள் மூவரும் ஒரே சமூகம் என்ற ஈர்ப்போடு வளையவருவது, சிலரது கண்களையும் உறுத்துகிறதாம். இதையறிந்ததால்தான் சசிகலா, ’அ.தி.மு.க. சாதிக்கட்சியாக மாறிவிட்டது’ என்று பொருமிவருகிறார் என்கிறார்கள்.''’’

""தேர்தலில் களமிறங்கிய ஈரோடு வேட்பாளர், அ.தி.மு.க. தரப்பை அதிரவைத்திருக்கிறாரே?''’’

""ஆமாங்க தலைவரே, சீட்டுக்காகவே பா.ஜ.க.வில் இருந்து அ.தி.மு.க.வுக்கு வந்த ஈரோடு வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார், தனது சொத்து மதிப்பு ரூ 550 கோடி என்று வேட்பு மனுவில் குறிப்பிட்டு, தமிழ்நாட்டிலேயே சொத்து மதிப்பு அதிகம் உள்ள வேட்பாளராக காட்டிக்கொண்டார். தேர்தல் செலவையும் தாராளமாக வாரி இறைப்பேன் என்று அவர் சொன்னதால், அ.தி.மு.க. நிர்வாகிகள் தொடங்கி தொண்டர்கள் வரை உற்சாகத்தில் மிதந்தனர். காரணம் அவர் கோயில்களுக்கும் பள்ளிகளுக்கும் வாரிவழங்கியதாக பில்டப் கொடுத்து வந்ததோடு, ஈரோடு தொகுதியில் பல இடங்களிலும் ஆற்றல் உணவகம் எனத் தொடங்கி, 10 ரூபாய்க்கு சாப்பாடு போட்டும் ஆச்சரியப்படுத்தினார். இருந்தும் இவர், இரண்டரை லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. பிரகாஷிடம் மெஹா தோல்வியைத் தழுவினார். இந்த நிலையில் கடந்த 17ஆம் தேதி, தனது 10 ரூபாய் உணவகம் அத்தனையையும் இழுத்து மூடி, அடுத்தகட்ட அதிர்ச்சியையும் கொடுத்திருக்கிறார்.''’

""காவல்துறையைச் சேர்ந்த ஒரு கில்லாடிப் பேர்வழியின் லீலைகளை அறிந்து பலரும் அதிர்ந்துபோயிருக்கிறார்களே?''’

"" "குற்றவாளி குடும்பத்துக்கு தகவல் -சர்ச்சையில் இன்ஸ்பெக்டர்!'என்ற தலைப்பில் கோவில்பட்டி மேற்கு காவல்நிலைய இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி பற்றிய செய்தி ஒன்றை நமது நக்கீரன் இதழ் அண்மையில் வெளியிட்டிருந்தது. இந்தச் செய்தி வெளியான கொஞ்ச நேரத்திலேயே தென்மண்டல ஐ.ஜி. உத்தரவின் பேரில், நெல்லை பொறுப்பு டி.ஐ.ஜி. அதிரடியாகக் களமிறங்கி, இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவானந்தை, காத்திருப்போர் பட்டியலுக்கு’அனுப்பி இருக்கிறார். இந்த நிலையில் அவர்மீது மற்றொரு குபீர் புகார் கிளம்பியிருக்கிறது. அதாவது, கோவில்பட்டி ராஜீவ் நகரை சேர்ந்த ஒருவர் வீட்டில் ரூ.48 லட்சம் கொள்ளை போனதாம். இது தொடர்பாக சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்ளிடமிருந்து இரண்டுலட்ச ரூபாயை மட்டும் ரெகவரி செய்ததாகக் கணக்கைக் காட்டிவிட்டு, மீதத்தொகையை அப்படியே சம்பந்தப்பட்ட அந்த இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவானந்த்தும் அவருடைய மேலதிகாரியும் பங்கு போட்டு விழுங்கிவிட்டார்களாம்.''’’

""நானும் ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துக்கறேன். முதல்வரின் முதன்மைச் செயலாளராக இருக்கும் முருகானந்தம் ஐ.ஏ.எஸ்., விரைவில் தமிழகத்தின் தலைமைச்செயலாளர் ஆகப்போகிறார் என்றும், இதைத் தொடர்ந்து முதல்வரின் செயலாளர்களில் காலி நாற்காலி ஒன்றில் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ். அமரப்போகிறார் என்றும் கோட்டைத் தரப்பில் பரபர செய்தி உலவுகிறது. அதே சமயம், முதல்வர் அலுவலகத்திற்கு கார்த்திகேயனா? என இப்போதே ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தரப்பில் எதிர்ப்புச் சூறாவளி எழுந்திருக்கிறதாம்.''