தினகரனை எகிறிய சசி! துறை மந்திரிக்கு மாவட்ட மந்திரிகள் ஆப்பு!

sasi-dinakaran

rag

""ஹலோ தலைவரே... ஆண்டாள் சர்ச்சையை மறுபடியும் ஆரம்பிச்சிட்டார் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜம். கவிஞர் வைரமுத்து, ஸ்ரீவில்லிப்புத்தூருக்கு வந்து மன்னிப்புக் கேட்கும்வரை ஓயமாட்டேன்னு அவர் அங்கிருக்கும் மணவாள மாமுனி சன்னதியில் 8-ந்தேதி மறுபடியும் உண்ணாவிரதத்தைத் தொடங்கிட்டார்.''’

""வைரமுத்துவும் இதைப்பத்தியெல்லாம் அலட்டிக்காமல், 13-ந்தேதி மறைமலையடிகள் பற்றி கட்டுரையாற்றப்போறதா அறிவிச்சிருக்காரே.''

vairamuthu

""ஆமாங்க தலைவரே... ஆண்டாளை வச்சி ஜீயர் தரப்பு ஒருபக்கம் ஆன்மிக அரசியலை விறுவிறுப்பா நடத்துது. மறுபக்கம் வைரமுத்துவுக்கு ஆதரவா தமிழ் அமைப்புகளும் தமிழ் உணர்வுகொண்ட அரசியல் கட்சிகளும் குரல்கொடுக்குது. இதுக்கிடையில் தி.மு.க.வைச் சேர்ந்த மாஜி மந்திரியும் ஆழ்வார்கள் பேரவை அமைப்பாளருமான ஜெகத்ரட்சகன் ஏற்கெனவே, வைரமுத்துவைக் கண்டிச்சதோட, ஸ்டாலின் மனைவி துர்காவின் சமாதானத்தை ஏற்றுத்தான் ஜீயர் அப்போது உண்ணாவிரதத்தை கைவிட்டாருன்னு அறிக்கை விட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இப்ப இந்த விவகாரத்தை தி.மு.க. எப்படி கையாளப் போவுதுங்கிறதை எல்லோரும் கவனமா பார்க்க ஆரம்பிச்சிருக்காங்க. ஆண்டாள் விவகாரத்தை அரசியலாக்கும் ஜீயர், அரசியலுக்கு சம்பந்தமில்லாதவர். இலக்கியவாதியான கவிஞர் வைரமுத்துவும் நேரடி அரசியலில் இல்லாதவர். இப்படிப்பட்டவங்களின் யுத்தம், அரசியல் வட்டாரத்தைப் பரபரப்பாக்கியிருக்கு.''’

""தமிழக மக்களைப் பொறுத்தவரை, அவங்க பெருசா எதிர்பார்க்கும் அரசியல் பரபரப்புன்னா, அது ஆட்சி மாற்றம்தான். அதுக்கு தி.மு.க. தயாரா இல்லாத நிலையில், ஒட்டுமொத்த எதிர்பார்ப்பும், தினகரன் பக்கம் திரும்புச்சு. ஆனால் தினகரனும் இப்ப அடக்கி வாசிக்கிறாரே?''’

""அதுக்குக் காரணம் இருக்குங்க தலைவரே. இப்ப தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தினகரனுக்கு, மக்கள் மத்தியில் ஓரளவு சப்போர்ட் இருப்பதா மத்திய உளவுத்துறை டெல்லிக்கு ரிப்போர்ட் அனுப்பியிருக்கு. இதைத்தொடர்ந்து தினகரனிடம் கெடுபிடி காட்டிவந்த டெல்லி... இப்போ, எடப்பாடி, ஓ.பி.எஸ்., சசிகலான்னு ஆளாளுக்கு தனித் தனியா கோஷ்டி கானம் பாடாமல், எல்லோரும் ஒத்துமையா ஓரணியா நில்லுங்க. உங்களுக்கு உதவ நாங்க தயாரா இருக்கோம்னு தினகரனிடம் சமாதானக் குரலில் பேசியிருக்கு. அதனால், டெல்லி நெருக்கடியை அனுபவி

rag

""ஹலோ தலைவரே... ஆண்டாள் சர்ச்சையை மறுபடியும் ஆரம்பிச்சிட்டார் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜம். கவிஞர் வைரமுத்து, ஸ்ரீவில்லிப்புத்தூருக்கு வந்து மன்னிப்புக் கேட்கும்வரை ஓயமாட்டேன்னு அவர் அங்கிருக்கும் மணவாள மாமுனி சன்னதியில் 8-ந்தேதி மறுபடியும் உண்ணாவிரதத்தைத் தொடங்கிட்டார்.''’

""வைரமுத்துவும் இதைப்பத்தியெல்லாம் அலட்டிக்காமல், 13-ந்தேதி மறைமலையடிகள் பற்றி கட்டுரையாற்றப்போறதா அறிவிச்சிருக்காரே.''

vairamuthu

""ஆமாங்க தலைவரே... ஆண்டாளை வச்சி ஜீயர் தரப்பு ஒருபக்கம் ஆன்மிக அரசியலை விறுவிறுப்பா நடத்துது. மறுபக்கம் வைரமுத்துவுக்கு ஆதரவா தமிழ் அமைப்புகளும் தமிழ் உணர்வுகொண்ட அரசியல் கட்சிகளும் குரல்கொடுக்குது. இதுக்கிடையில் தி.மு.க.வைச் சேர்ந்த மாஜி மந்திரியும் ஆழ்வார்கள் பேரவை அமைப்பாளருமான ஜெகத்ரட்சகன் ஏற்கெனவே, வைரமுத்துவைக் கண்டிச்சதோட, ஸ்டாலின் மனைவி துர்காவின் சமாதானத்தை ஏற்றுத்தான் ஜீயர் அப்போது உண்ணாவிரதத்தை கைவிட்டாருன்னு அறிக்கை விட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இப்ப இந்த விவகாரத்தை தி.மு.க. எப்படி கையாளப் போவுதுங்கிறதை எல்லோரும் கவனமா பார்க்க ஆரம்பிச்சிருக்காங்க. ஆண்டாள் விவகாரத்தை அரசியலாக்கும் ஜீயர், அரசியலுக்கு சம்பந்தமில்லாதவர். இலக்கியவாதியான கவிஞர் வைரமுத்துவும் நேரடி அரசியலில் இல்லாதவர். இப்படிப்பட்டவங்களின் யுத்தம், அரசியல் வட்டாரத்தைப் பரபரப்பாக்கியிருக்கு.''’

""தமிழக மக்களைப் பொறுத்தவரை, அவங்க பெருசா எதிர்பார்க்கும் அரசியல் பரபரப்புன்னா, அது ஆட்சி மாற்றம்தான். அதுக்கு தி.மு.க. தயாரா இல்லாத நிலையில், ஒட்டுமொத்த எதிர்பார்ப்பும், தினகரன் பக்கம் திரும்புச்சு. ஆனால் தினகரனும் இப்ப அடக்கி வாசிக்கிறாரே?''’

""அதுக்குக் காரணம் இருக்குங்க தலைவரே. இப்ப தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தினகரனுக்கு, மக்கள் மத்தியில் ஓரளவு சப்போர்ட் இருப்பதா மத்திய உளவுத்துறை டெல்லிக்கு ரிப்போர்ட் அனுப்பியிருக்கு. இதைத்தொடர்ந்து தினகரனிடம் கெடுபிடி காட்டிவந்த டெல்லி... இப்போ, எடப்பாடி, ஓ.பி.எஸ்., சசிகலான்னு ஆளாளுக்கு தனித் தனியா கோஷ்டி கானம் பாடாமல், எல்லோரும் ஒத்துமையா ஓரணியா நில்லுங்க. உங்களுக்கு உதவ நாங்க தயாரா இருக்கோம்னு தினகரனிடம் சமாதானக் குரலில் பேசியிருக்கு. அதனால், டெல்லி நெருக்கடியை அனுபவிச்சதெல்லாம் போதும்... இனி அவங்க சொல்ற மாதிரி நடந்துதான் பார்ப்போமேன்னு தினகரனும் நினைக்கிறாராம். அதனால்தான், எடப்பாடி ஆட்சியைக் கவிழ்ப்போம்னு சொல்லிக்கிட்டிருந்தவர் இப்போ, "தகுதி நீக்கத்துக்கு ஆளான 18 எம்.எல்.ஏ.க்களில் ஒருத்தரை முதல்வராக்குவோம்'னு சொல்ல ஆரம்பிச்சிருக்கார்.''’

""சசிகலா சொல்லித்தான் இப்படியெல்லாம் சொல்றாரா?''’’

sasi-dinakaran

""சசிகலா சொல்லித்தான் சொன்னாருன்னு சொல்ல முடியாது. சசி மனநிலைக்கு இசைவா தினகரன் சொல்றாருன்னு வேணும்னா சொல்லிக்கலாம். தன் சுற்றுப் பயணத்துக்கு முன்பாக, தினகரன் சசிகலாவை சிறையில் சந்திச்சார். அப்ப ரொம்பவும் கோபமாக எகிறிய சசிகலா, "நீ உன் போக்கில் போனா எப்படி? உனக்குன்னு தனி சாம்ராஜ்யத்தை அமைக்கணும்னு நினைக்கிறியா? இப்ப நீங்க எல்லோரும் வசதியா இருக்க யார் காரணம்ங்கிறதை ஞாபகத்தில் வச்சிக்கணும்'னு திட்டியதோட, "எல்லோரையும் அரவணைச்சிப் போகணும்'னு சில உத்தரவுகளையும் தினகரனுக்குப் போட்டிருக்கார். அதன்படி, கட்சியின் இளம்பெண்கள் பாசறைப் பொறுப்பை கிருஷ்ணப்பிரியாவிடமும் இளைஞர் பாசறைப் பொறுப்பை திவாகரன் மகன் ஜெய் ஆனந்திடமும் கொடுக்கும் முடிவில் இருக்காராம் தினகரன்.''’’

""ஆட்சி விவகாரத்தில் சசிகலா தரப்பு என்ன நினைக்கிது?''’’

""சசி தரப்பு, ஆட்சிக்கு எதிரா இருக்குதா? இல்லை, சாதகமா இருக்குதான்னு? முடிவு பண்ண, நான் ஒரு தகவலைச் சொல்றேன். மணல் குவாரிகள் முழுதையும் இழுத்து மூடணும்னு மதுரை உயர் நீதிமன்றக் கிளை, ஏற்கெனவே தடை உத்தரவு போட்டிருந்தது. இதை எதிர்த்து எடப்பாடி அரசு, உச்ச நீதிமன்றத்துக்குப் போக, இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், சமீபத்தில் உயர்நீதிமன்றத்தின் தடைக்குத் தடை விதிச்சிடுச்சி. இதைத்தொடர்ந்து ஜரூரான முதல்வர் எடப்பாடி, அதிகாரிகளை அழைத்து காவிரி டெல்டா மாவட்டங்கள்லயும் திருவண்ணாமலை-வேலூர் மாவட்டங்கள்லயும் முதலில் மணல் குவாரியைத் துரிதமா திறப்பதற்கான வேலைகள்ல இறங்குங்கன்னு உத்தரவு போட்டிருக்கார். காரணம், பெரும்பலான குவாரிகள் சசிகலா தம்பி, திவாகரன் தரப்புக்கிட்டதான் இருக்கு. போதாக்குறைக்கு அரசு, மேலும் திறக்க முடிவெடுத்திருந்த 70 புதிய குவாரிகளையும் விரைவாகத் திறக்கும்படி முதல்வர் எடப்பாடி உத்தரவு போட்டிருக்கார். இதை வச்சே எடப்பாடி அரசு, சசி தரப்புக்கு ஆதரவான அரசா இல்லையான்னு முடிவு பண்ணிக்கலாம்.''’

""எதிர்க்கட்சி ஏரியா தகவலையும் சொல்லுப்பா...''

""தி.மு.க.வின் கள ஆய்வுக் கூட்டம் விறுவிறுப்பா நடக்குறது போல, அங்க வைக்கப்பட்டிருக்கும் புகார்ப் பெட்டியும் கிடுகிடுன்னு நிரம்பிக்கிட்டிருக்கு. இந்தப் புகார்களின் அடிப்படையில் கட்சிக்குள் அதிரடி நடவடிக்கைகள் இருக்குமா?''

diwakarab

""தி.மு.க. தரப்பில் பேசினேங்க தலைவரே. ஈரோடு மாநாடு நல்லபடியா சிறப்பா நடக்கணும் என்பதுதான் தலைமையின் இப்போதைய ஒரே விருப்பமா இருக்குது. மாநாடு முடிஞ்சதும், புகார்களின் அடிப்படையில் நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் தொடங்கி, மாவட்ட தலைமைவரை நடவடிக்கை இருக்கும்ன்னு அறிவாலயத் தரப்பு சொல்லுது. புகார்ப் பெட்டியில் போடப்படும் புகார்களை கவனிக்க, ஒரு டீம் அமைக்கப்பட்டிருப்பது பத்தி போனமுறையே நாம பேசிக்கிட்டோம். யார் மேல புகார், என்ன புகார், அந்தப் புகாரை சொன்னவர் யாருங்கிற ரகசியம் காக்கப்படணும்ங்கிறதில் ஸ்டாலின் உறுதியா இருக்காரு. அதனால், அந்தக் குழுவிடம் அப்படியே புகார் மனுக்களைக் கொடுக்காமல், ஸ்டாலினே புகார்களை நேரடியா படிச்சி, தன் நம்பிக்கைக்குரிய நபர்கள் மூலம், அந்தப் புகார்களின் சாராம்சத்தை மட்டும் தொகுத்து, அதை அந்த விசாரணைக் குழுவிடம் கொடுப்பாராம். பின்னர் அந்தக் குழு, சம்பந்தப்பட்டவர்களை விசாரிச்சி, அது கொடுக்கும் ரிப்போர்ட்டின் அடிப்படையில்தான் நடவடிக்கை இருக்குமாம்.''’

""தி.மு.க.வில் மா.செ.க்கள்தானே ஆல் இன் ஆல். அவங்க மேலேயும் ஸ்டாலினின் நடவடிக்கைகள் பாயுமா?''’

modi

""இந்தக் கேள்வி தொண்டர்கள் மத்தியிலேயே இருக்கு. அவங்க கட்சியின் ஆரோக்கியத்துக்காக, ஒரு அதிரடி அறுவை சிகிச்சையை விரும்பறாங்க. அதுக்கு ரெடியாகும் ஸ்டாலின், கட்சியின் மாவட்டங்களைப் பிரித்து சில சீர்திருத்தங்களையும் செய்ய நினைக்கிறாராம். உதாரணத்துக்கு சென்னை வடக்கு மாவட்டத்தில் திருவொற்றியூர், ராயபுரம், ஆர்.கே.நகர், பெரம்பூர், மாதவரம் ஆகிய 5 தொகுதிகள் இருக்கு. இதன் மா.செ.வா சுதர்சனம் இருக்கார். இதேபோல் துறைமுகம், வில்லிவாக்கம், எழும்பூர், திரு.வி.க.நகர், கொளத்தூர், அம்பத்தூர் ஆகிய 6 தொகுதிகள், சென்னை கிழக்கு மாவட்டத்தில் இருக்கு. இதன் மா.செ.வாக இருப்பவர் சேகர்பாபு. தி.மு.க. தலைமையோ, 4 தொகுதிக்கு ஒரு மா.செ.வை நியமிக்கும் வகையில், இந்த இரண்டு தொகுதிகளிலும் இருக்கும் அம்பத்தூர், கொளத்தூர், வில்லிவாக்கம், திரு.வி.க.நகர் ஆகிய தொகுதிகளைக் கொண்ட ஒரு புதிய மாவட்டத்தை அமைக்கும் வியூகத்தில் இருக்கு. இதன் மா.செ. பதவியை, புரசை ரெங்கநாதன் குறி வச்சிருக்காரு. இதேபோல் திருவள்ளூர் தி.மு.க. மா.செ.வா இருக்கும் கும்மிடிப்பூண்டி வேணு, உடல்நலக் குறைவால் பொறுப்பில் இருந்து விலக நினைக்கிறாராம். இது தெரிஞ்சதும் இந்தப் பதவியை தி.மு.க.வில் இருக்கும் தே.மு.தி.க. எக்ஸ் எம்.எல்.ஏ. சேகரும் கனிமொழி ஆதரவு இளைஞர்கள் சிலரும் குறிவச்சிருக்காங்களாம்.''’

""அரசியல்னாலே குறிவைத்து "அட்டாக்' பண்றதுதானே! நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்துப் பேசிய பிரதமர் மோடி, நேரு தொடங்கி ராகுல்காந்தி வரையிலான காங்கிரஸ் தலைவர்களை கடுமையாக விமர்சிச்சிருக்காரே?''’’

""காங்கிரஸ் செய்த பாவங்களால்தான் இந்திய மக்கள் துன்பம் அனுபவிக்கிறாங்கன்னு ஆரம்பிச்சி, நேரு ஜனநாயகவாதி இல்லைன்னும், காங்கிரஸ் கேரளா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் எப்படி நடந்துகொண்டது? தமிழ்நாட்டில் எதைச் சாதித்தது? என்றெல்லாம் கேட்டு காங்கிரஸைக் கடுமையான விமர்சனங்களால் பிரிச்சி மேய்ஞ்சிருக்கார். அதோட "பக்கோடா' விற்பதே பெரியவேலை வாய்ப்புங்கிற மாதிரியும் பேசினார். அவர் பேச்சைக் கிண்டல் செய்வதுபோல் காங்கிரஸ் மாஜி மந்திரி ரேணுகா சௌத்ரி பலமாகச் சிரிக்க, அதை மாநிலங்களவை தலைவரான துணைஜனாதிபதி வெங்கையாநாயுடு கண்டிச்சார்.''

""ரேணுகாவின் சிரிப்புக்கு மோடியின் ரியாக்ஷனும் கடுமையா இருந்திருக்கே?''

""கேலிச்சிரிப்பையும் அரசியல்ரீதியா எதிர்கொண்டார் மோடி. அவர், மக்களவைத் தலைவரைப் பார்த்து, "அவர்களை ஒன்றும் சொல்லாதீர்கள், ராமாயணத் தொடரில் கேட்ட சிரிப்புச் சத்தத்துக்குப் பிறகு, இப்பதான் இப்படியொரு சிரிப்பைக் கேட்கமுடிகிறது'ன்னு பதிலுக்குக் கிண்டலடிச்சார். மோடியின் பேச்சுக்குப் பதில் சொல்லியிருக்கும் ராகுல், "தான் பிரதமர் என்பதையே மறந்துவிட்டு மோடி பேசியிருக்காருன்னும், இளைஞர்களின் வேலைவாய்ப்பு பத்தியெல்லாம் அவரால் எதையும் சொல்லமுடியலை'ன்னும் பதிலடி கொடுத்திருக்கார். மோடியின் பேச்சுக்கு எதிர்ப்பாவும் ஆதரவாவும் விமர்சனங்கள் எழுந்துக்கிட்டிருக்கு. மோடியின் பக்கோடா வேலைவாய்ப்புதான் இப்ப ஹாட் டாபிக்.''’

""இங்க தமிழ்நாட்டிலும் வேலை வாய்ப்புப் பிரச்சினை இருக்குதே?''’

""வேலை வாய்ப்பும் பிரச்சினையா இருக்கு. வாய்ப்பு இருந்து அதை அடையணும்னாலும் அதுவும் பிரச்சினையாத்தான் இருக்கு. இப்ப ரேசன்கடை ஊழியர்களுக்கான காலி இடங்களை நிரப்பப்போறாங்க. இதில் ஒரு போஸ்டிங்கிற்கு "3 எல்'’ வீதம் தனக்குத் தந்துடணும்னு துறை அமைச்சர் தரப்பு கறாராச் சொல்லுதாம்.''

""கட்டாய வசூலா?''

""அவருக்கே 3 "எல்'னா, அவருக்கு கீழ இருப்பவர்களுக்கும் சேர்த்து குறைந்தபட்சம் தலைக்கு 5 "எல்'லாவது வாங்க வேண்டியிருக்கும். ஆனால், இந்த வேலையைப் பெற விரும்புகிறவர்கள், "எங்களுக்கு சொற்ப சம்பளம்தான் கிடைக்கும். அதிலும் "மார்ச் மாதத்தில் இருந்து ஸ்மார்ட் கார்டு மூலம்தான் ரேசன் பொருள் வாங்கமுடியும்'னு அறிவிக்கப்பட்டிருப்பதால், அதை ஒழுங்கா நடைமுறைப்படுத்தினா எடைக் குறைப்பு உட்பட மோசடிகள் குறைஞ்சிடும். அதனால் 5 "எல்'’ என்பது மிகமிக அதிகம்'னு புலம்பறாங்க. இதுக்கு மத்தியில் மாவட்ட லெவல்ல இருக்கும் லோக்கல் மந்திரிகள் தரப்போ, இப்படியெல்லாம் துறை மந்திரி தரப்பே அதிகமா வாங்கிடிச்சுன்னா, எங்களுக்கு அதில் என்ன கிடைக்கும்னு எரிச்சலாயிடுச்சி. அதனால், போஸ்ட்டிங்கிற்காக காத்திருப்பவர்களை வைத்தே, அதற்கு ஸ்டே வாங்கச்சொல்லி, துறை மந்திரிக்கு எதிரா மாவட்ட மந்திரிகளே ஆப்பு ரெடி பண்ணுறாங்க.''

அப்பா விழாவில் மகன்!

பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மாவட்டம்தோறும் கண்டனப் பொதுக்கூட்டம் நடத்துகிறது. திருவள்ளூரில் மு.க.ஸ்டாலின் பேசுகிறார். மதுரையில் வைகோ பேசுவது எதிர்பார்ப்பை உண்டாக்கியிருக்கு. இந்நிலையில்... மதுரை புறநகர் வடக்கு -தெற்கு தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம், அதன் மா.செ.க்களான எம்.எல்.ஏ.மூர்த்தி, மணிமாறன் ஆகியோர் தலைமையில், அய்யர் பங்களா கல்யாண மகாலில் நடந்தது. "வரும் மார்ச் 19-ந் தேதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை உதயநிதி ஸ்டாலினை அழைத்து, வெகு சிறப்பாகக் கொண்டாடுவது என்றும், இதில், 70 வயதைக் கடந்த 1009 கட்சி சீனியர்களுக்கு, பொற்கிழி வழங்கிச் சிறப்பிப்பதோடு, நலத்திட்ட உதவிகளையும் வழங்கி, விழாவை பிரம்மாண்டப்படுத்துவது' என்றும் முடிவெடுத்தனர்.

ஒருபுறம் தோழமைக் கட்சிகளை ஒருங்கிணைக்கும் நிலையில்... இன்னொருபக்கம் உதயநிதியின் பங்களிப்புக்கான ஏற்பாடுகளும் தி.மு.க.வில் ஜரூராக நடக்கிறது.

-ஷாகுல்

sasi-dinakaran
இதையும் படியுங்கள்
Subscribe