""ஹலோ தலைவரே, தமிழக சட்டப் பேரவையில் அனைத்து எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கும் மத்தியில், பிப்ரவரி 12-ந்தேதி, ஜெ.வின் படத்தை திறந்துவச்சிருக்காரே சபாநாயகர் தனபால்.''’’
""ஏ-1 தண்டனைக் குற்றவாளி படத்தை திறந்து வச்சி நியாயமும் பேசியிருக்காங்களே?''’
""அதுதாங்க தலைவரே... படத்தை திறந்து வைத்த சபாநாயகருக்கும் சங்கடத்தை உருவாக்கியிருக்கு. நீதிமன்றத்தால் குற்றவாளியா அறிவிக்கப்பட்டிருக்கும் ஜெ.’வின் படத்தை நான் திறந்தால், நீதிமன்றங்கள் நாளை கேள்வி எழுப்பலாம். அதன்படி பார்த்தால் எனக்குதான் நோட்டீஸ் அனுப்புவார்கள். அதனால் படம் திறக்கணும்னு ஆசைப்பட்டால் முதல்வரான நீங்களே உங்க கையால் திறந்துவைங்கன்னு கடைசிவரை சபாநாயகர் தனபால் பிடி கொடுக்காமல் இருந்திருக்காரு. ஆனாலும் சரி, வாங்க, பார்த்துக்கலாம்ன்னு சொல்லிட்டு, அன்னைக்கு சபாநாயகர் கையாலேயே ஜெ.’படத்தைத் திறக்கவச்சிட்டார் திறமைசாலி முதல்வர் எடப்பாடி.''’
""இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கலந்துக்கிட்டாரே?''’
""ஆமாங்க தலைவரே, ஆனா ஜெ.’ படத்தை சபாநாயகர் திறந்துவச்சப்ப, முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்ட அனைத்து அ.தி.மு.க.வினரும் எழுந்து நின்று, ஜெ.’ படத்தை நோக்கிக் கைகூப்பி வணங்கினாங்க. ஆனா, தம்பிதுரை மட்டும் வேண்டா வெறுப்பா எழுந்து நின்னதோட, கை கூப்பாமல் முகத்தைத் திருப்பிக்கிட்டாரு. இதுதான் அ.தி.மு.க.வினரிடையே முணுமுணுப்பை ஏற்படுத்திக்கிட்டிருக்கு. இது சம்பந்தமா மனம் குமுறும் எம்.எல்.ஏ.க்கள், தம்பிதுரை, எடப்பாடிப் பக்கம் இருப்பது போல் காட்டிக்கிட்டாலும், அவர் சசிகலாவின் தீவிர விசுவாசி. அதனாலதான் அண்மைக்காலமா பா.ஜ.க.வை விமர்சிக்கிறார். குறிப்பா, டெல்லியில் நடந்த அண்ணா நினைவு நாள் நிகழ்ச்சியில் பேசிய தம்பிதுரை, ஒரே மொழி, ஒரே இனம்ன்னு வலியுறுத்தினால், இந்தியாவின் ஒற்றுமைக்கு ஆபத்தாக முடியும்ன்னு சொன்னார். சென்னை ஏர்போர்ட்டில் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, தேசியக்கட்சிகள் தமிழகத்தில் வேரூன்றவே முடியாதுன்னு பா.ஜ.க.வுக்குப் பஞ்ச் விட்டார். அப்படிப்பட்டவர், சட்டசபையில் சசிகலாவோ தினகரனோதான் ஜெ.’ படத்தைத் திறக்கணும்னு நினைக்கிறார். அதனால்தான் எடப்பாடி அரசு விழாவில் இந்த வேண்டா வெறுப்புன்னு சொல்றாங்க.''’
""ஜெ.’ படத்திறப்பு விழாவில் அ.தி.மு.க. தம்பிதுரை கலந்துகிட்டும் வரவேற்காத நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான விஜயதாரணி கலந்துக்கலைன்னாலும் விழாவை ஆதரிச்சி பரபரப்பை ஏற்படுத்தியிருக்
""ஹலோ தலைவரே, தமிழக சட்டப் பேரவையில் அனைத்து எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கும் மத்தியில், பிப்ரவரி 12-ந்தேதி, ஜெ.வின் படத்தை திறந்துவச்சிருக்காரே சபாநாயகர் தனபால்.''’’
""ஏ-1 தண்டனைக் குற்றவாளி படத்தை திறந்து வச்சி நியாயமும் பேசியிருக்காங்களே?''’
""அதுதாங்க தலைவரே... படத்தை திறந்து வைத்த சபாநாயகருக்கும் சங்கடத்தை உருவாக்கியிருக்கு. நீதிமன்றத்தால் குற்றவாளியா அறிவிக்கப்பட்டிருக்கும் ஜெ.’வின் படத்தை நான் திறந்தால், நீதிமன்றங்கள் நாளை கேள்வி எழுப்பலாம். அதன்படி பார்த்தால் எனக்குதான் நோட்டீஸ் அனுப்புவார்கள். அதனால் படம் திறக்கணும்னு ஆசைப்பட்டால் முதல்வரான நீங்களே உங்க கையால் திறந்துவைங்கன்னு கடைசிவரை சபாநாயகர் தனபால் பிடி கொடுக்காமல் இருந்திருக்காரு. ஆனாலும் சரி, வாங்க, பார்த்துக்கலாம்ன்னு சொல்லிட்டு, அன்னைக்கு சபாநாயகர் கையாலேயே ஜெ.’படத்தைத் திறக்கவச்சிட்டார் திறமைசாலி முதல்வர் எடப்பாடி.''’
""இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கலந்துக்கிட்டாரே?''’
""ஆமாங்க தலைவரே, ஆனா ஜெ.’ படத்தை சபாநாயகர் திறந்துவச்சப்ப, முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்ட அனைத்து அ.தி.மு.க.வினரும் எழுந்து நின்று, ஜெ.’ படத்தை நோக்கிக் கைகூப்பி வணங்கினாங்க. ஆனா, தம்பிதுரை மட்டும் வேண்டா வெறுப்பா எழுந்து நின்னதோட, கை கூப்பாமல் முகத்தைத் திருப்பிக்கிட்டாரு. இதுதான் அ.தி.மு.க.வினரிடையே முணுமுணுப்பை ஏற்படுத்திக்கிட்டிருக்கு. இது சம்பந்தமா மனம் குமுறும் எம்.எல்.ஏ.க்கள், தம்பிதுரை, எடப்பாடிப் பக்கம் இருப்பது போல் காட்டிக்கிட்டாலும், அவர் சசிகலாவின் தீவிர விசுவாசி. அதனாலதான் அண்மைக்காலமா பா.ஜ.க.வை விமர்சிக்கிறார். குறிப்பா, டெல்லியில் நடந்த அண்ணா நினைவு நாள் நிகழ்ச்சியில் பேசிய தம்பிதுரை, ஒரே மொழி, ஒரே இனம்ன்னு வலியுறுத்தினால், இந்தியாவின் ஒற்றுமைக்கு ஆபத்தாக முடியும்ன்னு சொன்னார். சென்னை ஏர்போர்ட்டில் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, தேசியக்கட்சிகள் தமிழகத்தில் வேரூன்றவே முடியாதுன்னு பா.ஜ.க.வுக்குப் பஞ்ச் விட்டார். அப்படிப்பட்டவர், சட்டசபையில் சசிகலாவோ தினகரனோதான் ஜெ.’ படத்தைத் திறக்கணும்னு நினைக்கிறார். அதனால்தான் எடப்பாடி அரசு விழாவில் இந்த வேண்டா வெறுப்புன்னு சொல்றாங்க.''’
""ஜெ.’ படத்திறப்பு விழாவில் அ.தி.மு.க. தம்பிதுரை கலந்துகிட்டும் வரவேற்காத நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான விஜயதாரணி கலந்துக்கலைன்னாலும் விழாவை ஆதரிச்சி பரபரப்பை ஏற்படுத்தியிருக்காரே?''’
""முதல்வர் எடப்பாடியையும் சபாநாயகர் தனபாலையும் விஜயதாரணி சந்திச்சி, ஜெ.’படம் திறக்கப்பட்டதற்கு பூங்கொத்தோட வாழ்த்து தெரிவிச்சார். அதோட, வெளியில் பத்திரிகையாளர்களிடம் வந்து, இந்திராகாந்திக்குப் பிறகு என்னைக் கவர்ந்த பெண் தலைவர் ஜெயலலிதாதான்னு பாராட்டினார். இதில் கோபமான தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர், கட்சியின் டெல்லித் தலைமையிடம், கட்சியை விஜயதாரணி மதிப்பதே இல்லைன்னு புகார் தெரிவிச்சார். இதைத் தொடர்ந்து தமிழக மேலிடப் பொறுப்பாளரான முகுல்வாஸ்னிக் மூலம் விஜயதாரணியிடம் விளக்கம் கேட்குமாறு காங்கிரஸ் தலைவர் ராகுல் உத்தரவிட்டிருக்காரு.''’
""சொத்துக் குவிப்பு வழக்கின் ஏ1 குற்றவாளியான ஜெ.’ படத்தை சட்டப் பேரவையில் திறந்தாச்சு. ஏ-2 சசிகலா சிறையில் என்ன செய்யறார்?''’
""சசிகலா சிறைக்கு வந்து பிப்ரவரி பதினாறோடு ஒரு வருசம் முடியுது. சிறை வளாகத்தில் இருக்கும் கோயிலில் மிகப்பெரிய பூஜைக்கு அவர் ஏற்பாடுசெஞ்சாரு. சிறைக்குப் போகும் போது ஜெ.’ சமாதியில் மூன்றுமுறை தரையில் அடித்து சபதம் செய்ததுபோல், ஓ.பி.எஸ்.சை அரசியலில் இருந்தே துரத்தாமல் ஓயமாட்டேன்னு சிறையில் உள்ள கோயிலிலும் தரையில் அடித்துச் சபதம் செய்து சங்கல்ப யாகம் செய்வதுதான் சசிகலா திட்டம். யாகம் நடத்த முடியாவிட்டாலும் பூஜை நிச்சயம். ஓ.பி.எஸ். தொடர்பாக எடப்பாடி தரப்பிடமும் சசி தரப்பு தொடர்ந்து பேசி வருகிறதாம். அதனால், எடப்பாடி விரைவில் ஓ.பி.எஸ்.சை ஓரம்கட்டுவார்ங்கிற பேச்சும், சசி தரப்பிடம் அடிபடுது.''’
""இதுக்கு ஓ.பி.எஸ்.சின் ரியாக்ஷன் என்னவாம்?''’
""இந்தத் தகவல்களை எல்லாம் தெரிஞ்சிக்கிட்ட ஓ.பி.எஸ், வழக்கம் போல் மைத்ரேயன் எம்.பி. மூலம், பா.ஜ.க. தலைமையின் கவனத்துக்கு கொண்டுபோய் நிவாரணம் தேடப்பார்த்தார். ஆனால் இவரால் ஏற்கனவே கழற்றிவிடப்பட்ட மைத்ரேயன், நத்தம் விசுவநாதன், மனோஜ்பாண்டியன் போன்றோர் இவருக்கு எதிர் மனநிலையில் இருப்பதால், டெல்லியை நெருங்கமுடியவில்லை. தூரத்தொடர்புகள் மூலம் ஓ.பி.எஸ். தன் ஆதங்கத்தைக் கொட்டியபோது, டெல்லியிலிருந்து சரியான ரெஸ்பான்ஸ் இல்லை. இதனால் ரொம்பவே குழப்பத்தில் இருக்காரு ஓ.பி.எஸ்.''’
""தினகரன் சுற்றுப் பயணத்திலும் புகைச்சல்ன்னு செய்தி வருதே?''’
""உண்மைதாங்க தலைவரே, தினகரன் பயணத்தை அவர் உறவினர்களான டாக்டர் வெங்கடேசும் பண்ணைவயல் பாஸ்கரனும்தான் கவனிக்கிறாங்க. சமூக ரீதியாத்தான், தினகரன் போகிற இடங்களில் கூட்டம் கூட்டப்படுது. ஆனா, தினகரனோ, எடப்பாடியையும், ஓ.பி.எஸ்.சையும் அட்டாக் பண்றதா நினைச்சி, அவங்ககூட இருக்கும் தன் சமூகத்தைச் சேர்ந்த வைத்திலிங்கம் போன்ற பிரமுகர்களைக் கடுமையா தாக்கறாராம். இது அவர் சமூகத்துக்குள்ளேயே புகைச்சலை உண்டாக்கிக்கிட்டிருக்கு.''’
""ஜெ.’ மரணத்தை விசாரிக்கும் ஆறுமுகசாமி கமிஷன் இளவரசி மகன் விவேக்கை சம்மன் அனுப்பிக் கூப்பிட்டதே?''’
""ஆமாங்க தலைவரே, மனைவியோடு லண்டன் போயிருந்த விவேக்கை, ஆறுமுகசாமி கமிஷனின் சம்மன் சென்னைக்கு ஓடிவரவைத்துவிட்டது. 3 மணி நேர வாக்குமூலத்தில், ஜெ.வுக்கு என்ன பிரச்சினைன்னும் அவருக்கு என்ன மாதிரி சிகிச்சைகள் தரப்பட்டதுன்னும் எனக்கு எதுவுமே தெரியாது. அவர் ஆஸ்பிட்டலில் சீரியசா இருந்த நேரத்தில் கூட நான் லண்டன்லதான் இருந்தேன்னு திரும்பத் திரும்பச் சொல்லியிருக்காரு. அதோடவிடாம பல்வேறு கேள்விகளையும் கேட்டு அவரைத் திணற அடிச்சிருக்கு கமிஷன். அதேபோல், டாக்டர் பாலாஜியையும் மறுபடி அழைத்து, நிறைய கிடுக்கிப்பிடிக் கேள்விகளை கேட்டிருக்கிறது விசாரணைக் கமிஷன்.''’
""டாக்டர் பாலாஜி அடிக்கடி ஆஜராகிறாரே, நிறைய மேட்டர் இருக்குமோ?''’
""ஜெ., அப்பல்லோவில் அட்மிட்டானதுமே, ஜெ.’வின் சிகிச்சைகளை கவனிப்பதற்காக, தமிழக சுகாதாரத்துறை மயக்கவியல் நிபுணரான டாக்டர் கலா தலைமையில், டாக்டர்கள் டிட்டோ, தர்மராஜ், முத்துச்செல்வன், பாலாஜின்னு முறைப்படி ஐவர் குழுவை நியமிச்சிருக்கு. ஆனால் இந்தக் குழுவின் தலைவரான கலா உட்பட மிச்ச நால்வரும், ஜெ.’வை ஒருமுறை கூட பார்க்க அனுமதிக்கப்படவில்லை. அப்படி இருக்க, மருத்துவக் குழுவில் ஐந்தாவது இடத்தில் இருந்த பாலாஜிக்கு மட்டும், ஜெ.’வை சந்திக்கிற வாய்ப்பு எப்படி கிடைத்ததுன்னு ஆறுமுகசாமி கமிஷன் கேள்வி எழுப்பியிருக்கு. அதோட, தமிழ்நாட்டில் இருக்கும் போது, குடியரசுத் தலைவர், கவர்னர், முதல்வர் ஆகியோர் நோய்வாய்ப்பட்டால், புரோட்டோக்கால் படி, சென்னை ராஜாஜி தலைமை அரசு மருத்துவமனையின் புரபசர் ஆஃப் மெடிசன் டைரக்டர்’ பொறுப்பில் இருப்பவர்தான் அவர்களை முதலில் கவனிக்கவேண்டும். ஆனால் இந்தப் பொறுப்பில் இருக்கும் டாக்டர் மயில்வாகனன் கூட அனுமதிக்கப்படாத நிலையில், பாலாஜி எப்படி ஜெ.’வை பார்க்க அனுமதிக்கப்பட்டாருன்னும் கேள்விகளை வச்சி, டாக்டர் பாலாஜியை முகம் வியர்க்க வச்சிருக்கு. இடைத்தேர்தல் வேட்புமனுக்களில் ஜெ.வின் கையெழுத்துக்குப் பதில் கைநாட்டு வாங்க, தலைமைச் செயலாளர் எந்த அனுமதி கடிதமும் தரலைன்னும் சுகாதாரச் செயலாளர்தான் வாய்மொழி உத்தரவு போட்டார்னும் புது குண்டு வீசியிருக்காரு பாலாஜி.''’
""பலே... விசாரணை இதே வேகத்தில், இதே சூட்டோட போகுதான்னு பார்ப்போம். சரி, தி.மு.க. சைடில் என்ன இருக்கு?''’
""போக்குவரத்துத் துறையில், சம்பளப் பிரச்சினை, கட்டண உயர்வு விவகாரம்ன்னு பிரச்சினைகள் வெடிச்சிக் கிளம்பிக்கிட்டிருக்கும் நிலையில், அந்தத் துறையை சீரமைக்கும் வழிகள் குறித்து ஆராய, டி.ஆர்.பாலு தலைமையில், முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோர் அடங்கிய குழுவை தி.மு.க. அமைச்சதெல்லாம் ஏற்கனவே வெளியான தகவல்தான். அந்தக் குழு பல்வேறு வல்லுநர்கள்கிட்ட விசாரிச்சி, போக்குவரத்துத் துறை, பொது சேவைத்துறை என்பதால், அதன் 60 சதவீதத்தை அரசே ஏற்கணும். துறைக்காக ஒதுக்கப்படும் நிதி ஒதுக்கீட்டையும் மானியத்தையும் வெளிப்படையாக அறிவிக்கணும், உதிரி பாகங்களின் கொள்முதலை பகிரங்க டெண்டர் மூலம் நடைமுறைப்படுத்தணும். தொழிலாளர்களிடம் பிடித்த ஓய்வுக்கால நிதியை உரிய கணக்கில் சேர்க்கனும், துறைக்கான இடங்களை வணிகப் பயன்பாடுகளுக்கு வாடகைக்கு விட்டு, அதன் மூலமும் வருமானம் காணலாம்னும் 27 அம்சங்களை பரிந்துரை செய்திருந்தது. அதை முதல்வர் எடப்பாடியிடம் ஸ்டாலின் ஒப்படைச்சார்.''’
""எடப்பாடி-ஸ்டாலின் சந்திப்பில் என்ன நடந்தது?''’
""முதல்வரை சந்திக்கப்போகும் போது, சென்னையில் எம்.எல்.ஏ.வாவும் மா.செ.வாவும் இருக்கும் தி.மு.க. நிர்வாகிகளை தன்னுடன் அழைச்சிக்கிட்டுப் போனார் ஸ்டாலின். இதில் சீனியர் எம்.எல்.ஏ.வும் மா.செ.யுமான ஜெ.அன்பழகன் ஏனோ, அவருடன் போகலை. முதல்வரோடு, சீனியர் மந்திரிகளான ஓ.பி.எஸ், திண்டுக்கல் சீனிவாசன், வேலுமணி, தங்கமணி, போக்குவரத்து மந்திரி எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோரும் இருந்தனர். போனதும், இருதரப்புக்கு இடையிலும் பரஸ்பர விசாரிப்புகள் நடந்தன. அப்ப ஸ்டாலின் எடப்பாடியிடம், நீங்க கண் அறுவை செய்ததா கேள்விப்பட்டேன். எங்கே பண்ணிக்கிட்டீங்கன்னு கேட்க, எடப்பாடியோ, ராஜன் ஐ கேர்ல பண்ணிக்கிட்டேன் நல்லா இருக்குனு சொன்னாராம். அப்புறம் ஸ்டாலின் கொடுத்த அறிக்கையை வாங்கிக்கிட்டு, கவனிக்கிறேன்னு மட்டும் சொல்லியிருக்காரு. அப்ப ஸ்டாலின், போக்குவரத்து மந்திரி விஜயபாஸ்கரிடம், "இந்த அறிக்கையை நடைமுறைப்படுத்தினீங்கன்னா, உங்களுக்கு நல்லபேரு கிடைக்கும்'னு சொல்லிட்டு வந்திருக்கார். இருந்தும் மக்கள் விரோத ஆட்சியின் முதல்வர்ன்னு எடப்பாடியை விமர்சிக்கும் ஸ்டாலின், அவரை எதுக்கு நேரில் சந்திக்கணும்னும் ஒரு தரப்பு நினைக்குது.''’
""ஸ்டாலின் தரப்புக்கும் இது தெரிஞ்சிருக்குமே!''’
""முதல்வரை சந்தித்த அன்னைக்கு சாயங்காலமே, திருவள்ளூரில் மிகப்பெரிய அளவில் நடந்த தி.மு.க. சார்பிலான அனைத்துக் கட்சி கண்டனப் பொதுக்கூட்டத்தில் ஸ்டாலினே, இதுக்கு பதில் சொல்லியிருக்கார். தி.மு.க. போராட்டங்களை நடத்துவதோடு, தன் வேலைகளை முடித்துக்கொள்வதில்லை. தி.மு.க. நினைத்தால், மக்கள் விரோத ஆட்சியை ஒரு நிமிடத்தில் கவிழ்த்துவிடமுடியும். ஆனால் ஜனநாயகத்துக்கு விரோதமாக நாம் அதைச் செய்யமாட்டோம். இந்த ஆட்சி தானாகக் கவிழும். இந்த செயல்படாத அரசுக்கு, மக்களின் தேவையை எடுத்துச் சொல்லும் எதிர்க்கட்சியாக இருக்கிறோம் என்று சொல்லியிருக்கிறார். முதல்வரை நேரில் சந்தித்து மனு கொடுத்து விளக்கும் ஸ்டாலினின் அப்ரோச் அரசுக்கு ஒரு நெருக்கடியை உண்டாக்குது. அரசியல் நோக்கர்கள் என்ன சொல்றாங்கன்னா, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க.வின் டெபாசிட் இழப்பு தோல்விக்குப் பிறகு, தினகரன் பக்கம் தமிழகத்தின் பார்வை திரும்பியிருக்கும் நிலையில், இங்கே அரசியல் களத்தில் ஆளும்கட்சிக்கு டஃப் கொடுக்க எதிர்க்கட்சியால் தான் முடியும்னு காட்டுவதற்காகவே ஆக்கப்பூர்வமான பரிந்துரைகளோடு முதல்வரை ஸ்டாலின் சந்தித்திருக்கிறார்னு நினைக்கிறாங்க.''’
""கட்சியின் உள்விவகாரங்களையும் சந்திக்க வேண்டிய நிலையில் ஸ்டாலின் இருக்காருப்பா... ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, அந்தப் பகுதியைச் சேர்ந்த 140 பேரை, கட்சிப் பொறுப்பில் இருந்து தி.மு.க. தலைமை நீக்கியது. இதனால் காலியான இடங்களில் புதிய பொறுப்பாளர்களை நியமிக்க, வேட்பாளர் மருது கணேஷும், மா.செ.சுதர்சனனும் ஒரு பரிந்துரைப் பட்டியலைக் கொடுத்திருக்காங்க. இது தொகுதிப் பிரமுகர்களுக்குத் தெரியவர, அவங்க கொடுத்த பட்டியலில் இருப்பவர்கள் மேல அதிருப்தி தெரிவிச்சி, அறிவாலயத்தை முற்றுகையிட்டாங்க. அதனால், அந்த இடங்களை நிரப்புவதை நிறுத்திவைத்திருக்கிறது தி.மு.க. தலைமை.''’
""எல்லா கட்சிகளிலும் பொறுப்பாளர்கள் நியமனத்தில் தனி அக்கறை செலுத்துறாங்க. மாவட்ட வாரியா மன்ற ஆட்களை சென்னைக்கு வரவழைச்சி, நிர்வாகிகளை நியமிக்கும் வேலையை ரஜினி தன்னோட மன்றத்தின் மாநிலப் பொறுப்பாளர்கள்கிட்ட கொடுத்திருக்காரு. ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பேசிட்டு தமிழகம் திரும்பியுள்ள நிலையில் 21-ந்தேதி அறிவிக்க இருக்கும் புதுக்கட்சியின் பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதில் மும்முரமா இருக்கிற கமலும், அதையடுத்து கட்சி நிர்வாகிகள் நியமனத்தில் தீவிரம் காட்டப் போறாராம்.''’