""ஹலோ தலைவரே, அரசியல் களத்தை ரஜினியும், கமலும் மாறி மாறி கலக்கிக்கிட்டிருக்காங்களே...''

""ஆமாம்ப்பா... கமல் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் அரசியல் நிலைப்பாடு பற்றி பேசியிருக்காரு. ரஜினிக்கு "காலா' பட ரிலீஸ் தேதியும் ஸ்டில்லும் வெளியாகியிருக்கு. ரெண்டுதரப்பிலும் வேற என்னென்ன நடக்குது?''’

rajini-kammal

Advertisment

""9-ந் தேதி கமலின் ஆழ்வார்ப்பேட்டை அலுவலகத்தில் மன்றப் பொறுப்பாளர்களின் கூட்டம் நடந்ததுன்னும், இதில், மாவட்டத்துக்கு 5 பேர் வீதம் அழைக்கப்பட்டு இருந்தாங்கன்னும். அப்ப, தேர்தல் கமிஷனில், கமல் கட்சியின் பெயரைப் பதிவு செய்வதற்கான படிவங்கள்ல அவர்களிடம் கையெழுத்து வாங்கினாங்கன்னும், இந்த படிவங்களை 12-ந் தேதி டெல்லியில் இருக்கும் தேர்தல் ஆணையத்திடம் கமல் தரப்பு கொடுக்க இருக்குதுன்னும் தகவல்கள் வரிசைகட்டி வந்தன. இதுபற்றி மன்ற நிர்வாகிகளிடமே விசாரிச்சப்ப, "கூட்டம் கூட்டியதும், படிவங்கள்ல கையெழுத்து வாங்கியதும் உண்மைதான். ஆனால் அமெரிக்கா போயிருக்கும் கமல், 13, 14 வாக்கில்தான் சென்னைக்கே வர்றார். அவர் வந்ததும்தான் எங்கள் கட்சியின் பெயர் என்ன என்பதும், தேர்தல் கமிஷனில் அந்தப் படிவங்களை எப்போது கொடுப்பது என்பதும் தெரியவரும்'னு சொல்றாங்க.''’

Advertisment

""மாநாட்டு ஏற்பாட்டிலும் கமல் தரப்பு ஜரூரா இருக்கே?''’

""உண்மைதாங்க தலைவரே, வர்ற 21-ந் தேதி, மதுரையில் மாநாட்டுக்கான இடப் பரிசீலனையில், பாண்டிகோயில் அருகே இருக்கும் ரிங் ரோட்டுத் திடலும், அரசரடி மைதானமும் இருக்குதாம். ரிங் ரோட்டுத் திடலில் 2 லட்சம் பேர் உட்காரலாமாம். அரசரடி மைதானத்தில் 40 ஆயிரம்பேர் வரை அமரலாம். இந்த இரண்டு இடத்தில் மாநாடு எங்கே நடத்தப்பட இருக்குங்கிறதையும் கமல்தான் அறிவிப்பார்னு சொல்றாங்க. கமலின் சாய்ஸ், சிட்டிக்குள்ளேயே இருக்கும் அரசரடி மைதானம்தான். அதற்கு ஒரு நாள் வாடகை 2 லட்ச ரூபாயாம். ரயில்வேக்கு சொந்தமான இந்த இடத்தை, கமலின் தீவிர ரசிகரான, ரயில்வே தொழிற்சங்கப் பிரமுகர் ரபீக் மூலம் பிடிச்சிருக்காங்க. இங்கே மாநாடு நடத்த அனுமதிகேட்டு மதுரை கமிஷனரிடம் கடிதமும் கொடுக்கப்பட்டிருக்கு.''’’

""8-ந் தேதி ரஜினியும், தன் மன்ற நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியிருக்காரே?''’

""ரஜினி, தினசரி தனது ராகவேந்திரா மண்டபத்துக்கு வர்றார். அங்க மாநில ரசிகர் மன்றப் பொறுப்பாளரான வி.என்.சுதாகரனோடு, மாவட்ட நிர்வாகிகளை நியமிப்பது தொடர்பான ஆலோசனையில் ஈடுபடறார். ஏற்கெனவே 3 மாவட்டங்களின் நிர்வாகிகளை ரஜினி அறிவிச்சிருந்தார். அவர்களில் பலர் மீதும் ரசிகர்களிடம் அதிருப்தி அதிகமாக இருப்பதால், புது நியமனங்கள் சரியா இருக்கணும்னு ரஜினி நினைக்கிறார். மன்றப் பொறுப்பாளரான சுதாகர், மாவட்ட சுற்றுப்பயணத்தை குறைச்சிக்கிட்டு, மாவட்ட நிர்வாகிகளை சென்னைக்கு அழைத்து விவாதிக்கத் திட்டமிட்டிருக்காராம்.''’

""ரஜினியும் கமலும் தேர்தல் நேரத்தில் கூட்டணி என்னும் பெயரில் கைகோர்க்கலாம்னும் சொல்றாங்களே?''’

""இரு தரப்புமே இப்படி ஒரு கருத்தை கச்சிதமா ஸ்கிரீன்ப்ளே பண்ணி பரப்புதுன்னு மற்ற கட்சியினர் சொல்றாங்க. இரு தரப்புமே ஒன்றை ஒன்று விமர்சிப்பதைத்தான் பரவலா பார்க்க முடியுது. எந்த அடிப்படையில் கூட்டணின்னு புரியாத ரசிகர்கள் குழம்புறாங்க. த.மா.கா. வாசன், இப்போதே ரஜினியுடன் கூட்டணி வைக்கணும்னு நினைக்கிறாரு. அதற்காகப் பல வழிகளிலும் முயற்சி பண்றார். ஆனால் ரஜினி அசைஞ்சி கொடுக்கலை. அதனால், டெல்லி பா.ஜ.க. தரப்பின் உதவியை வாசன் கோரினார். பா.ஜ.க.வோ, "நீங்கள் உங்கள் கட்சியைக் கலைத்துவிட்டு, ரஜினி தொடங்க இருக்கும் கட்சியில் இணைத்துக் கொள்ளுங்கள். அதற்கான ஏற்பாடுகளை செஞ்சி தர்றோம்'னு சொல்லுச்சு. திகைத்துப்போன வாசன், இது குறித்து தன் குடும்பத்தினருடனும் கட்சி நிர்வாகிகளுடனும் ஆலோசிச்சார். அவங்க, "நாம அவசரப்பட வேண்டாம். ரஜினியோடு கூட்டணிக்கு மட்டும் முயற்சி செய்வோம். மத்தபடி தேர்தல் நேரத்தில், அப்ப இருக்கும் சூழலுக்கு ஏற்ப முடிவு செய்வோம்'னு அவருக்கு ஆலோசனை சொல்லியிருக்காங்க.''’

communist

""இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அடுத்த மாநிலச் செயலாளர் யாருங்கிற விவாதமும் பலமா நடக்குதே?''’

""கேரள மாநிலம் கொல்லத்தில் நடக்க இருக்கும் மாநாட்டில் அகில இந்திய சி.பி.ஐ. பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட இருக்காங்க. அதுக்கு முன்பு மன்னார்குடியில் ஏப்ரலில் நடக்கும் மாநில மாநாட்டில், மாநில பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவாங்க. அப்ப, மீண்டும் மாநில செயலாளரா முத்தரசன் தேர்ந்தெடுக்கப்படுவாரா? இல்லை கடந்தமுறையே களமிறங்கிய சி.மகேந்திரன் தேர்ந்தெடுக்கப்படுவாராங்கிற கேள்விதான் இப்ப பரவலா எழுந்திருக்கு. கடந்தமுறை முத்தரசனை முன்மொழிந்து இவரை செயலாளராக்கப் பின்னால் இருந்து வேலை செய்தவர் தா.பாண்டியன்தான். ஆனால் சட்டமன்றத் தேர்தலின்போது, தா.பாண்டியனின் அ.தி.மு.க. சார்பிலான மனநிலைக்கு மாற்றாக, ம.ந.கூ. பக்கம் கட்சியை நகர்த்திச் சென்றவர் முத்தரசன்தான். அவர் மைனாரிட்டி சாதியைச் சேர்ந்தவர். சாதி கண்ணோட்டமில்லாமல் தன் குடும்பத்தில் அதிக கலப்புத் திருமணங்களைச் செய்தவர்.''’

""சி.பி.ஐ. தோழர்கள் மத்தியில் சி.மகேந்திரனுக்கு ஆதரவு எப்படி இருக்கு?''’

""அண்மையில் திருவாரூர் மாவட்ட சி.பி.ஐ. மாநாடு பேரளத்தில் நடந்தது. இதில் மாவட்ட செயலாளர் பதவிக்கு, முத்தரசனின் ஆதரவு மா.செ.வான வை.செல்வராஜ் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவாருன்னு எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இவரை எதிர்த்து மகேந்திரனின் ஆதரவாளரான எக்ஸ் எம்.எல்.ஏ. சிவபுண்ணியம் போட்டியிட்டார். கடும் வாக்குவாதத்திற்குப் பிறகு நடந்த தேர்தலில் மாவட்ட குழு உறுப்பினர்கள் 85 பேரும் ஆஜரானாங்க. 8 வாக்குகள் வித்தியாசத்தில் சிவபுண்ணியம் ஜெயிச்சிட்டாரு. இந்த வெற்றி, கட்சியின் மாநில பொறுப்பாளர் தேர்தலின் முடிவு எப்படி இருக்கும்னு உணர்த்தறதா, தோழர்களே சொல்றாங்க. சி.மகேந்திரன், சிவபுண்ணியம் போன்றவர்கள் டி.டி.வி.தினகரனோட டச்சில் இருப்பதையும் சுட்டிக்காட்டுறாங்க. மாநிலச் செயலாளர் தேர்தலில் சி.மகேந்திரனுக்கு ஆதரவு பெருகும் பட்சத்தில் முத்தரசன் போட்டியிலிருந்து விலகிக்கொள்ளலாம்ங்கிற பேச்சும் அடிபடுது.''’

""சி.பி.எம். தரப்பிலும் சலசலப்பு கேட்குதே?''’’

""பிரகாஷ் காரத் தரப்பிலான டீம், பா.ஜ.க.வும் காங்கிரஸும் இல்லாத ஒரு அணியை அமைக்கணும்னு சொல்லுது. சீத்தாராம் யெச்சூரி தரப்போ, மதவாத பா.ஜ.க.வை வீட்டுக்கு அனுப்ப காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைக்கணும்னு வலியுறுத்துது. இந்த இரு தரப்பின் தாக்கம் தமிழக சி.பி.எம்.மிலும் எதிரொலிக்கிது. இங்க இருக்கும் சி.பி.எம்.மின் மத்திய கமிட்டி, பிரகாஷ்காரத் வழியில் காங்கிரஸும் வேண்டாம். அதை அரவணைக்கும் தி.மு.க.வும் வேண்டாம்ன்னு சொல்லுது. ஆனால் மாநில கமிட்டியினரும் மாவட்ட கமிட்டியினரும், கீழ்நிலைப் பொறுப்பாளர்களும், யெச்சூரி வழியில், தி.மு.க.வோடும் காங்கிரஸோடும் கைகுலுக்கலாம்ன்னு சொல்றாங்க. வரும் 17, 18-ல் தூத்துக்குடியில் நடக்க இருக்கும் மாநில மாநாட்டில், இது தொடர்பான கருத்து மோதல்கள் பலமாக வெடிக்கும்னு எதிர்பார்க்கப்படுது.''’

stalin1

""தி.மு.க.வில் கள ஆய்வுக் கூட்டங்கள் தொடருதே... ரெஸ்பான்ஸ் எப்படி?''

""கட்சித் தலைமையே குரூப்பிசத்தை வளர்க்குதுன்னு குற்றம்சாட்டப்படும் சேலம் மாவட்ட கள ஆய்விலும் ஏகப்பட்ட குரல்கள் ஒலிக்க... எல்லாத்தையும் கூர்ந்து கவனித்த ஸ்டாலின், ""இதுபற்றி mஎல்லாம் நான் கவனித்துக்கொள்கிறேன். நீங்கள் எல்லோரும் ஒற்றுமையோடு 234 தொகுதி வெற்றிங்கிற டார்கெட்டோடு வேலை பார்க்கணும். ஆர்.கே.நகர்ல நமக்கு பூத்துக்குத் தலா 25 உறுப்பினர்கள் இருந்தாங்க. ஆனா அங்க ஒரு பூத்தில் நமக்கு வெறும் 11 ஓட்டுகள்தான் விழுந்திருக்கு. முதல்ல பூத் கமிட்டிகளை ஒழுங்கா அமைக்கணும். பூத் கமிட்டி என்கிற வேரை பலப்படுத்தினால்தான் ’234-ங்கிற’ கனியை நம்மால் பறிக்கமுடியும்'னு ஸ்டாலின் அழுத்தமா சொன்னார்.''’

""எடப்பாடி தரப்புக்கும் தினகரன் தரப்பிலிருந்து புதுத் தலைவலி ஒண்ணு ஆரம்பிச்சிருக்கு போலிருக்கே?''’

""ஆமாங்க தலைவரே, தினகரன் ஆதரவாளர்களை நீக்கிவரும் எடப்பாடி, ஓ.பி.எஸ். தரப்பு, அண்ணா தொழிற்சங்க மாநில செயலாளர் சின்னச்சாமியையும் கட்சியைவிட்டு நீக்குச்சு. இதில் கடுப்பான சின்னச்சாமி, ஒருவரை கட்சியிலிருந்து நீக்கும் உரிமை கட்சியின் பொதுச்செயலாளருக்கு மட்டும்தான் இருக்கு. அதிகாரமில்லாத ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் என்னை எதனால்? எப்படி நீக்கினீர்கள் என்கிற விளக்கத்தை 15 நாட்களுக்குள் தரவேண்டும். இல்லையென்றால் வழக்கு தொடுப்பேன்னு வக்கீல் நோட்டீஸ் விட்டிருக்கார். அதோட, நீதிகேட்டு ஓ.பி.எஸ். பாணியில் ஜெ.’சமாதியில் தியானப் போராட்டம் நடத்தவும் ரெடியாம்.''

""அதிகாரிகள் தரப்பிலும் சலசலப்பு தெரியுதே?''’

""சென்னை குடிநீர் வழங்கல் வாரிய முதன்மைப் பொறியாளரா இருக்கும் பொன்னம்பலம் ஏகப்பட்ட புகார்களோடு, இந்தமாத இறுதியோடு ஓய்வுபெற இருக்காரு. அமைச்சர் வேலுமணிவரை புகார் போயும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாத நிலையில், தனக்குக்கீழ் காலியாக இருக்கும் பணியிடங்களான உதவிப் பொறியாளர், உதவி செயற்பொறியாளர், பகுதிப் பொறியாளர், துணைப் பகுதிப் பொறியாளர், மேற்பார்வைப் பொறியாளர் போன்ற பதவிகளை நிரப்ப, தலைக்கு 5 "எல்'லில் இருந்து 20’ "எல்'’வரை ரேட் நிர்ணயம் செய்து, கடைசிநேரக் கல்லாவை கட்ட ஆரம்பிச்சிருக்காராம். இது சம்பந்தமா கவர்னர் மாளிகை நோக்கியும் புகார்களை சரமாரியாக அனுப்பிக்கிட்டு இருக்காங்க.''’

ramajayam

""ரொம்ப வருஷமா விடை தெரியாத விஷயம்பற்றி நான் சொல்றேன்... திருச்சி ராமஜெயம் கொலை வழக்கை தீவிரமாக விசாரிக்க ஆரம்பிச்சிருக்கும் சி.பி.ஐ. டீம், ராமஜெயத்தின் கடைசி தம்பி கோவை மணிவண்ணனையும் விசாரிச்சிருக்குது. ராமஜெயம் வழக்கமாக அமர்ந்திருக்கும் ஓ.டி.சி. பில்டிங் மாடி பகுதிக்கு, ஒரு இலங்கை வாலிபர், ஒரு பெண்ணோடு ஒருநாள் போதையில் சென்றாராம். அவரைப் பிடித்து ராமஜெயம் கடுமையாக விசாரித்தபோது பெரும் தகராறு ஆனதாம். கொலையில் அந்த இலங்கை வாலிபருக்குத் தொடர்புண்டாங்கிற கோணத்திலும் விசாரணை நடக்குது.''