ப.சி.யை கைது செய்யத் தீவிரம்!

pc

""ஹலோ தலைவரே, பொதுவா ஒருவரை ஒரு வழக்கில் கைதுசெஞ்சா, அவரை சிறைக்கு அனுப்பிடுவாங்க. கஸ்டடி விசாரணையில் இருந்தால் அது முடிஞ்சதும் சிறைவாசம்தான்.. ஆனால், ப.சி. மகன் கார்த்தி சிதம்பரம் விவகாரத்தில், கஸ்டடி விசாரணையே நீண்டுக்கிட்டு இருக்கே?''’

""சிறையைவிட சி.பி.ஐ. அலுவலக அறை வசதியாத்தானே இருக்கும்? இதை கார்த்தி சிதம்பரம் தரப்பு சாதகமா நினைக்குதா? பாதகமா நினைக்குதா?''’

pchamdambarm

""சி.பி.ஐ. ஆபீசில் விருந்தா வைக்கிறாங்க? விடாம துருவித் துருவில்ல விசாரணை நடக்குது. அதனால் வியர்த்து விறுவிறுத்துப் போயிருக்கார் கார்த்தி. என் செல்போனின் பாஸ்வேர்டைக் கூட கேட்டு, டார்ச்சர் மேல டார்ச்சர் கொடுக்கறாங்கன்னும் அவர் சி.பி.ஐ. பத்தி பகிரங்கமாவே புலம்பறார். சி.பி.ஐ.யும் புதுசு புதுசா ஆதாரங்களைத் திரட்டி, கார்த்திக்கு எதிரா கொண்டுபோய் அடுக்குது. அந்த வகையில், 2017 ஜூலையில் லண்டன் போன கார்த்தி சிதம்பரம், அங்கிருந்த ரெண்டு வங்கிக் கணக்கை க்ளோஸ் செய்து, அதில் இருந்த பணத்தை எல்லாம் வேற ரெண்டு கணக்கில் போட்டிருக்கார். இதை ரிசர்வ் பேங்க் கண்காணிச்சி சொல்ல, இதை ஃபாலோ செய்த மத்திய அமலாக்கத்துறை இது தொடர்பாவும் வழக்கைப் பதிவுசெய்திருக்கு. இதில் அதிரடி நடவடிக்கை எடுக்காதபடி டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றம் போட்ட உத்தரவு கார்த்தி தரப்புக்கு கொஞ்சம் ரிலாக்ஸ்.''’

""கார்த்தி மீதான நடவடிக்கைகள் எதை நோக்கிப்போகுது?''’

karthikchadambaram""எப்படியாவது ப.சி.யைக் கைது செய்யணுங்கிற ரூட்டிலேயே நடவடிக்கைகள் தீவிரமா நகருது. ப.சி. உள்துறை அமைச்சராக இருந்தப்ப, அவரின் கீழ் உள்துறை செயலாளரா இருந்தவர் எஸ்.வி.எஸ்.மணி. இவரிடம் ப.சி.க்கு எதிராக வாக்குமூலம் பெறவும் தயாராக இருக்கு சி.பி.ஐ. காங்கிரஸ் ஆட்சியில் நடந்த சில தீவிரவாத செயல்களை, இந்துக்கள் மீது திருப்பி, இந்துத் தீவிரவாதம்னு ப.சி. காட்

""ஹலோ தலைவரே, பொதுவா ஒருவரை ஒரு வழக்கில் கைதுசெஞ்சா, அவரை சிறைக்கு அனுப்பிடுவாங்க. கஸ்டடி விசாரணையில் இருந்தால் அது முடிஞ்சதும் சிறைவாசம்தான்.. ஆனால், ப.சி. மகன் கார்த்தி சிதம்பரம் விவகாரத்தில், கஸ்டடி விசாரணையே நீண்டுக்கிட்டு இருக்கே?''’

""சிறையைவிட சி.பி.ஐ. அலுவலக அறை வசதியாத்தானே இருக்கும்? இதை கார்த்தி சிதம்பரம் தரப்பு சாதகமா நினைக்குதா? பாதகமா நினைக்குதா?''’

pchamdambarm

""சி.பி.ஐ. ஆபீசில் விருந்தா வைக்கிறாங்க? விடாம துருவித் துருவில்ல விசாரணை நடக்குது. அதனால் வியர்த்து விறுவிறுத்துப் போயிருக்கார் கார்த்தி. என் செல்போனின் பாஸ்வேர்டைக் கூட கேட்டு, டார்ச்சர் மேல டார்ச்சர் கொடுக்கறாங்கன்னும் அவர் சி.பி.ஐ. பத்தி பகிரங்கமாவே புலம்பறார். சி.பி.ஐ.யும் புதுசு புதுசா ஆதாரங்களைத் திரட்டி, கார்த்திக்கு எதிரா கொண்டுபோய் அடுக்குது. அந்த வகையில், 2017 ஜூலையில் லண்டன் போன கார்த்தி சிதம்பரம், அங்கிருந்த ரெண்டு வங்கிக் கணக்கை க்ளோஸ் செய்து, அதில் இருந்த பணத்தை எல்லாம் வேற ரெண்டு கணக்கில் போட்டிருக்கார். இதை ரிசர்வ் பேங்க் கண்காணிச்சி சொல்ல, இதை ஃபாலோ செய்த மத்திய அமலாக்கத்துறை இது தொடர்பாவும் வழக்கைப் பதிவுசெய்திருக்கு. இதில் அதிரடி நடவடிக்கை எடுக்காதபடி டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றம் போட்ட உத்தரவு கார்த்தி தரப்புக்கு கொஞ்சம் ரிலாக்ஸ்.''’

""கார்த்தி மீதான நடவடிக்கைகள் எதை நோக்கிப்போகுது?''’

karthikchadambaram""எப்படியாவது ப.சி.யைக் கைது செய்யணுங்கிற ரூட்டிலேயே நடவடிக்கைகள் தீவிரமா நகருது. ப.சி. உள்துறை அமைச்சராக இருந்தப்ப, அவரின் கீழ் உள்துறை செயலாளரா இருந்தவர் எஸ்.வி.எஸ்.மணி. இவரிடம் ப.சி.க்கு எதிராக வாக்குமூலம் பெறவும் தயாராக இருக்கு சி.பி.ஐ. காங்கிரஸ் ஆட்சியில் நடந்த சில தீவிரவாத செயல்களை, இந்துக்கள் மீது திருப்பி, இந்துத் தீவிரவாதம்னு ப.சி. காட்ட முயற்சி செஞ்சார்ங்கிற ரீதியில் மணி வாக்குமூலம் கொடுக்கப் போகிறாராம். இதை வச்சி ப.சி. மீதும் ஒரு வழக்கைப் பதிவுசெய்து கைதுசெய்யப் போறாங்களாம்.''’

""காங்கிரஸ் கட்சி சைடிலிருந்து சின்னச் சின்ன கண்டனங்களைத் தெரிவிச்சதோட எல்லாம் அடங்கிப் போச்சே?''’

""அங்க எல்லாமே இழுபறிக் குளறுபடிதான். பல மாதங்களா கிடப்பிலேயே வைக்கப்பட்டிருந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் பட்டியலுக்கு 9-ந் தேதிதான் ஒப்புதல் கொடுத்திருக்கார் ராகுல். தமிழகத்தைப் பொறுத்தவரை, கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக்கும் கட்சியின் மாநிலத் தேர்தல் அலுவலர்களான சஞ்சய் தத், முள்ளம்பள்ளி ராமச்சந்திரன் இவங்கள்லாம் மேலிடம் சொன்னபடி திருத்திக்கொடுத்த பட்டியல்படி 156 பேரை ராகுல் ஓகே. செஞ்சிருக்கார். ஆனா, அதுக்கப்புறமும் பிரச்சினை ஓயலை. ஒரு மாவட்டத்துக்கு 15 செயற்குழு உறுப்பினர்கள்ன்னா அந்த மாவட்டம் சார்பில் 3 பேர் அகில இந்திய கமிட்டி உறுப்பினர்களா இருப்பது வழக்கம். ஆனால் தென்சென்னை மாவட்டத்தில் வழக்கத்துக்கு மாறா 11 பேரை செலக்ஷன் மூலமாவும் பரிந்துரை மூலமாவும் உறுப்பினரா ஆக்கியிருக்காங்க. ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும், இதுபோன்ற புகார்கள் மேலே போய்க்கிட்டிருக்கு. பட்டியலில் பெயர் விட்டுபோன சீனியர்களும் முக்கிய பிரமுகர்களும் இன்னொரு பக்கம் அதிருப்தியை வெளிப்படுத்திக்கிட்டிருக்காங்க.''’

""அதிருப்தி இல்லைன்னா காங்கிரஸ் களைகட்டாதே?''’

""ஆமாங்க தலைவரே, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தலைவரா இருந்தப்ப, தமிழக காங்கிரஸ் கமிட்டிப் பொருளாளரா நியமிக்கப்பட்ட நாசே.ராமச்சந்திரனை மாத்தியே ஆகணும்னு திருநாவுக்கரசர் ஒத்தைக்காலில் நிக்கிறார். இந்த நிலையில் இந்தப் பதவியைக் குறிவைச்சிருக்கும் எக்ஸ் எம்.பி.ஆரூணும், பொதுச்செயலாளர்களில் ஒருவரான தணிகாசலமும் திருநாவுக்கரசரின் கிரீன் சிக்னலுக்குக் காத்திருக்காங்க. வெயிட்டான பொருளாளர் பதவிக்கு இப்பவே போட்டி ஸ்ட்ராங்கா இருக்கு. இந்த நிலையில் நாசே ராமச்சந்திரனை மாத்தக்கூடாதுன்னு சோனியாவுக்கு இளங்கோவன் ஸ்ட்ராங்கா கடிதம் எழுதியிருக்காரு.''’

dmk-mps

""டெல்லியில் தமிழக எம்.பி.க்களின் குரலும் ஸ்ட்ராங்கா இருக்கே?''’

""பா.ஜ.க. தலைவர்களும் இதைத்தான் சொல்றாங்க தலைவரே, மகளிர் தினத்தில் நாடாளுமன்றத்தில், பெண்களுக்கு 33 பர்சன்ட் இடஒதுக்கீட்டை வலியுறுத்தி, தி.மு.க. எம்.பி. கனிமொழி பேசினார். பேசி முடிச்சிட்டு வெளியில் வந்தவரை துணை ஜனாதிபதியும் ராஜ்யசபா தலைவருமான வெங்கையா நாயுடு, நல்லாப் பேசினீங்கன்னு பாராட்டியிருக்கார். கலைஞரைக் கீழ்த்தரமா விமர்சனம் செஞ்ச ஹெச்.ராஜாவுக்கு, கனிமொழி பதிலடி கொடுத்த விதத்தையும் அவர் vicepresidentபாராட்டுத் தொனியில் சுட்டிக்காட்டியிருக்கார். அதேநாள்ல நாடாளுமன்றத்தில் பெண்கள் உரிமைக்காக உரையாற்றிய தி.மு.க.வின் இன்னொரு ராஜ்யசபா உறுப்பினரான திருச்சி சிவா பேச்சையும் வெங்கையா நாயுடு அவையிலேயே பாராட்டினாரு. மகளிர் இடஒதுக்கீட்டை வலியுறுத்திப் பேசிய சிவா அதோடு, மத்திய அரசு உடனடியாக பெண்கள் பயன்படுத்தும் சானிடரி நாப்கினுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி. வரியை நீக்கணும்னு வலியுறுத்தினாரு. கிராமப்புற ஏழைப்பெண்கள் இந்த வரிவிதிப்பால் நாப்கின் செலவுக்கு கஷ்டப்படுவதையும், மாணவிகள் பள்ளிக்குச் செல்லாமல் தவிப்பதையும் உருக்கமா சுட்டிக்காட்டி முழு வரிவிலக்கு கோரினாரு. பெண்களின் அடிப்படையான பிரச்சினைக்குக்கூட தீர்வுகாணாமல், பெண்கள் தினத்தைக் கொண்டாடுவதில் எந்த அர்த்தமும் இல்லைன்னு தன் ஆதங்கத்தைத் தெரிவிச்சிருக்காரு சிவா.''’

""தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு நாங்க சளைச்சவங்க இல்லைன்னு, நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக விளங்கும் அ.தி.மு.க. எம்.பி.க்களும் காவிரி உரிமை, பெரியார் சிலை விவகாரம்னு அங்கே எதிர்ப்புக்குரல் கொடுத்திருக்காங்களே?''’‘

""உண்மைதாங்க தலைவரே, நாடாளுமன்றத் துணைசபாநாயகர் தம்பிதுரையே மத்திய அரசின் நிலைப்பாட்டை எதிர்த்துக் குரல் கொடுத்திருக்கார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விசயத்தில், கர்நாடகத்துக்கு சாதகமாவும் தமிழகத்துக்கு எதிராவும் மத்திய பா.ஜ.க. அரசு நடந்துக்குதுன்னு தமிழக முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் ஓ.பி.எஸ்., மைத்ரேயன் எம்.பி. போன்றவர்களும் குரல்கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்க. அ.தி.மு.க.வினரின் இந்த திடீர் பா.ஜ.க. அட்டாக் பத்தி, டெல்லித் தரப்பில் விசாரிச்சப்ப, விரைவில் கர்நாடக மாநிலத் தேர்தல் வருது. அப்ப, மோடி அரசு தமிழர்களுக்கு எதிராவும் கர்நாடகத்துக்கு ஆதரவாவும் இருக்குங்கிற மாதிரி பிரச்சாரம் செய்தா, அது அங்கே பலமான ஓட்டு அறுவடைக்குக் கைகொடுக்குமாம். அதனால், பா.ஜ.க.வே கொடுத்த அசைன்மெண்ட்படிதான், பா.ஜ.க.வை விமர்சிக்கிறார்கள் அ.தி.மு.க. தலைவர்கள்னு டெல்லித் தரப்பு கிறுகிறுக்க வைக்கிது. இப்படி டெல்லி சொன்னபடி ஆடும் இ.பி.எஸ்.ஸும் ஓ.பி.எஸ்.ஸும், தங்களை நம்பி வந்த மாஜி மந்திரியும் எம்.பி.யுமான வைத்திலிங்கத்தை கண்டுக்கலையாம். அந்த மன உளைச்சல்லயும், தன் ஆதரவாளர்கள் பெரும்பாலோர் தினகரன் பக்கம் போன அதிர்விலும், அவர் இப்ப மாரடைப்புக்கு ஆளாகி சிகிச்சையில் இருக்காராம்.''’

""நானும் ஒரு அதிர்வுச் செய்தி சொல்றேன். அரசுத் துறையில் இருக்கும் காலிப் பணியிடங்களை நிரப்புறோம்னு கோட்டையில் விறுவிறுப்பா கல்லாகட்டும் வேலைகள் நடந்துக்கிட்டிருக்கு. இந்த நிலையில் தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுக்கு வேண்டப்பட்ட ஒருவர், அரசு வேலைக்காக அவரை அணுகியிருக்காரு. கிரிஜாவோ, "பணி நியமனங்கள் வெவ்வேறு ரூட்டுகள்ல நடக்குது. இந்தச் சூழல்ல என்னால் உங்களுக்கு சிபாரிசு பண்ணமுடியாது. அதே சமயம் வேற ரூட்டுகள்ல போய் ஏமாந்திடாதீங்க'ன்னு, வந்தவருக்கு ஷாக் கொடுத்திருக்கார்.''’

மணல் மன்னராகும் நடிகர்!

நடிகர் ரித்தீஷ், ஊர் ஊருக்கு முதல்வர் எடப்பாடியையும் துணை முதல்வர் ஓ.பி.எஸ்.ஸையும் பாராட்டி போஸ்டர்கள் அடித்து ஒட்டிக்கொண்டிருக்கிறார். இதற்குக் காரணம், தமிழகம் முழுக்க இருக்கும் சவுடு மற்றும் கிராவல் மண்ணை எடுக்கும் அனுமதியை, இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். அரசு ரித்தீஷ் தரப்பிற்குக் கொடுத்திருக்கிறதாம்.

-பிரகாஷ்

இறுதிச் சுற்று

அலட்சிய காவல்துறை! கடுப்பில் பா.ஜ.க.!

ayyakannu

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவரான அய்யாக்கண்ணு, தமிழக விவசாயிகளை அவமதிக்கும் பிரதமருக்கு எதிராக விழிப்புணர்வுப் பிரசாரம் மேற்கொண்டுவருகிறார். கடந்த மார்ச் 8-ஆம் தேதி திருச்செந்தூர் வந்த அவர், கோவிலில் பக்தர்களிடையே நோட்டீஸ் விநியோகிக்க ஆரம்பித்தார். அப்போது அங்குவந்த பா.ஜ.க. மகளிரணி மாவட்டச் செயலாளர் நெல்லையம்மாள் அவருடன் விவாதம் செய்தது செருப்பைத் தூக்கிக் காட்டியதோடு, அவரை கன்னத்தில் அறையவும் செய்தார்.

பின்பு, அய்யாக்கண்ணு தன்னை இழிவாகப் பேசி, அடித்து அவமானப்படுத்தியதாகக் கூறி திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் போய்ப் படுத்துக்கொண்டார்.

மருத்துவ அதிகாரியின் அனுமதியில்லாமல் மருத்துவமனையில் படுத்திருக்கும் நெல்லையம்மாளை மருத்துவ ஊழியர்கள் கண்டுகொள்ளவில்லை. நெல்லையம்மாள் கொடுத்த புகாருக்கு மனு ரசீது மட்டும் கொடுத்துவிட்டு, “""இடத்தைக் காலிசெய்யுங்கள். இல்லையெனில் மருத்துவ அதிகாரியின் புகார்வாங்கி உங்களைக் கைதுசெய்ய வேண்டிவரும்"" என எச்சரித்திருக்கிறது காவல்துறை. மத்தியில் ஆட்சியிலிருந்தும், மாநில அரசு நமக்கு ஆதரவாக இல்லையே என்ற கடுப்பில் இருக்கிறதாம் தமிழக பா.ஜ. வட்டாரம்.

-நாகேந்திரன்

karthik chidambaram P A chidambaram
இதையும் படியுங்கள்
Subscribe