""ஹலோ தலைவரே, தென்மாநிலங்களை ஒருங்கிணைத்து தனிநாடு, திராவிடநாடுன்னு மறுபடியும் இந்திய அரசியலின் கவனத்தை ஈர்க்கும் கலகக் குரல்கள் எதிரொலிக்க ஆரம்பிச்சிருக்கு.''’
""ஆமாம்ப்பா. ஆனால் இந்திய அரசியல் சட்டப்படி தனிநாடு கேட்கமுடியாது. திராவிடநாடு கொள்கை பேசி, தி.மு.க. வளர்ந்துகொண்டிருந்த காலத்தில், அதைத் தடுக்கணும்னு 1963-ல் நேரு தலைமையிலான மத்திய அரசு, பிரிவினைவாதத் தடைச் சட்டத்தைக் கொண்டுவந்துச்சு. அதனால், இப்ப சந்திரபாபுநாயுடு தலைமையிலான தெலுங்கு தேசமா இருந்தாலும் சரி, மு.க.ஸ்டாலினை செயல் தலைவராகக் கொண்ட தி.மு.க.வா இருந்தாலும் சரி, இல்லை, வேறு எந்தக் கட்சியாக இருந்தாலும் சரி, திராவிட நாடு, தனித்தமிழ்நாடுன்னு கோரிக்கை வைக்க, சட்டரீதியா இடம் இல்லை. இருந்தாலும் இந்தியாவைப் பொறுத்தவரை, காஷ்மீர், நாகாலந்து, காலிஸ்தான்னு அந்தந்த மாநிலங்களில் இருக்கும் பிரச்சினைகளின் அடிப்படையில், தனி நாட்டுக்கான குரல்கள் அடிக்கடி ஒலிச்சிக்கிட்டுதான் இருக்குப்பா.''’
""உண்மைதாங்க தலைவரே, தென்மாநிலங்கள்ல இருந்து மத்திய அரசுக்கு அதிக வரி வருவாய் கிடைக்குது. இருந்தும் மத்திய அரசிடமிருந்து தென் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு குறைவாத்தான் கிடைக்குது. புள்ளி விபரங்களின் அடிப்படையிலும் குறியீட்டு எண்களின் அடிப்படையிலும் கர்நாடக முதல்வர் சித்த ராமையா, இதை வெளிப்படையாவே தெரிவிச்சிருக்காரு. அதனால் கூடுதல் அதிகாரம் கொண்ட மாநிலங்களின் கூட்டாட்சி இங்கே இருக்கணும்னு அவர் சொல்றார். அதோடு கர்நாடகத்துக்கு ஒரு தனிக்கொடியை அறிமுகப்படுத்தி, அதற்கான அனுமதியை மத்திய அரசிடம் கேட்டிருக்காரு. அதேபோல் ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலுங்கான பிரிஞ்சதால், ஆந்திரா மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து தரணும்னு சந்திரபாபு நாயுடுவும், புதிய மாநிலமாக ஆக்கியதால் தெலுங்கானாவின் வளர்ச்சிக்காகத் தங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு தரணும்னு சந்திரசேகர ராவும் மத்திய அரசுக்கு தொடர் அழுத்தம் கொடுத்தாங்க.''’
""ஆமாம்ப்பா. மூன்று மாநில முதல்வர்களும் உரிமைக்குரல் எழுப்பியும் மத்தியில் ஆளும் பா.ஜ.க. இதையெல்லாம் கண்டுக்கலையே.''’
""அதனால்தான் இப்ப கிடுகிடு பிரச்சினைகளை பா.ஜ.க. சந்திக்க ஆரம்பிச்சிருக்கு. சந்திரபாபு நாயுடு, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் இருந்தார். அப்படி இருந்தும், அவருடைய கோரிக்கையை பா.ஜ.க. அரசு நிறைவேத்தலை. அதுக்கு மாறா, அவருக்கு எதிரா காய் நகர்த்துச்சு. நாயுடுவின் மகன் லோகேஷ், ஆந்திர மாநில அமைச்சரா இருக்காரு. ஆட்சியைப் பயன்படுத்தி அவர் முறைகேடா சம்பாரிச்சதா ஒரு பட்டியலை எடுத்து வச்சிக்கிட்டு, அவருக்கு எதிரா வழக்குத் தொடர, திரைமறைவு வேலைகளை பிறர் மூலமா மோடி அரசு சீண்டியிருக்கு. இதனால் டென்ஷனான சந்திரபாபு நாயுடு, பி.ஜே.பி. மேலிடத்துக்கிட்ட, "நீங்க சொல்றதையெல்லாம் கேட்டுக்கிட்டுப் போக நான் ஒண்ணும் தமிழ்நாட்டு இ.பி.எஸ்.-ஓ.பி.ஸ். இல்லை. அரசியல்ல நான் மோடியை விட சீனியர். எங்க மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து தராம வேறு ஏதாவது குழப்பம் செஞ்சீங்கன்னா, ரெண்டே மணி நேரத்தில் நான் யாருன்னு காட்ட வேண்டியிருக்கும்'னு சவால் விட்டதோட, தன் கட்சி நிர்வாகிகள்ட்ட ஆலோசனை பண்ணிட்டு, பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகறதா பகிரங்கமா அறிவிச்சதோடு, மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர முடிவெடுத்தாரு.''’
""மத்திய பா.ஜ.க. ஆட்சியில் தென்மாநிலங்கள் வரிசையா புறக்கணிக்கப்படுது. திராவிடநாடுன்னு விவாதிக்கப்படுது. இந்த நிலையில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய பா.ஜ.க. அரசு, டபுள் கேம் ஆடிக்கிட்டிருக்கு. அதனால்தான், பா.ஜ.க. அரசு மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்க்கட்சி கள் கொண்டுவரும் போது, அதை தமிழக எம்.பி.க் கள் ஆதரிக்கணும்னு சட்டசபையிலேயே எதிர்க் கட்சித் தலைவரான ஸ்டாலின் கோரிக்கைவச்சார். ஆனால் எடப்பாடி அரசு, எந்த வகையிலும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கலையே?''’
""உண்மைதாங்க தலைவரே, பா.ஜ.க. வுக்கு எதிரா நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தியதோட, காவிரி மேலாண்மை வாரியம் பற்றி அவையில் பேச நேரம் ஒதுக்கணும்னு அ.தி.மு.க. அமளி பண்ணிக்கிட்டிருக்கு. ஆனா பா.ஜ.க. அரசுக்கு எதிரான இந்த அமளியையே, பா.ஜ.க. சொல்லித்தான் அ.தி.மு.க. செய்யுதுங்கிற குற்றச்சாட்டு வெளிப் பட்டது. நாடாளுமன்ற விதிகளின்படி, அவையில் அமளி நடக்கும்போது அரசுக்கு எதிரா நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவர முடியாது. அதனால், எதிர்க்கட்சிகள் பா.ஜ.க. அரசை எதிர்த்து நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவந்துடாம இருக்கத்தான், திட்டமிட்டு அ.தி.மு.க. எம்.பி.க்கள், அங்க அமளியை உண்டாக்கிக்கிட்டு இருக்காங்க. சமாஜ்வாடிகட்சி ராம்கோபால் யாதவ், அ.தி.மு.க. வின் இந்த பா.ஜ.க. எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை, மோச மான டிராமான்னு கடுமையா விமர்சிச்சிருக்காரே.''’
""அ.தி.மு.க. அரசுமேல் பொதுமக்களுக்கு அதிருப்தி அதிகமா இருக்கும் இந்த நேரத்தில், அவங்க கட்சிக்குள்ளேயே அதிருப்திக் குரல்கள் இருக்கு போலிருக்கே?''’
""உண்மைதாங்க தலைவரே, அ.தி.மு.க.வில் தினகரன் தரப்பினர் நீக்கப்பட்டதால் காலியான கட்சிப் பதவிகள், முழுக்க முழுக்க சாதிய ரீதியாகவே நிரப்பப்படுதுங்கிற புகார் பலமா எழுந் திருக்கு. கொங்குமண்டலப் பதவிகளை முதல்வர் எடப் பாடியும் அமைச்சர்களான வேலுமணி, தங்கமணி ஆகியோ ரும் தங்கள் கவுண்டர் சமூகத்தினருக்கே கொடுத்திருப்ப தாகவும், இதேபோல் தேனி உள்ளிட்ட தென்மாவட்டங் களில் உள்ள கட்சிப் பொறுப்புகளை, ஓ.பி.எஸ். தனது முக்குலத்தோர் சமூகத்தினருக்கே கொடுத்திருப்பதாக வும், மற்ற சமூகங்களைச் சேர்ந்த கட்சிப் பிரமுகர்கள் குற்றம்சாட்டுறாங்க. இதேபோல் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் பெரும்பான்மையாக இருக்கும் வன்னியர் சமூக அ.தி.மு.க.வினர், சென்னையில் மா.செ.க் களாக உள்ள தி.நகர் சத்யா, ராஜேஷ், வெங்கடேஷ் பாபு ஆகிய மூவருமே நாயுடு சமூகப் பிரமுகர்கள்ன்னும், அமைப்புச் செயலாளர்கள் பதவியைக் கூட தங்களுக்குக் கொடுக்கலைன்னும் குமுறுறாங்க.''’
""ஓ.பி.எஸ். தன் தரப்புக்கு நிறைய சிபாரிசு செய்திருக்காராமே!''
""அ.தி.மு.க. மாநில மகளிரணிச் செயலாளரா இருந்த கோகுல இந்திராவே மீண்டும் அந்தப் பதவியில் தொடரணும், இல்லைன்னா மாஜி வளர்மதிக்கு அந்தப் பதவியைக் கொடுக்கணும்னு எடப்பாடி சொல்லியிருக்கார். ஆனால் ஓ.பி.எஸ்.ஸோ, "என் தரப்புக்கு இந்தப் பதவியை விட்டுக்கொடுங்க. சசியை எதிர்த்து தீவிரமா அரசியல் செஞ்ச அழகு.தமிழ்ச்செல்விக்கு அந்தப் பதவியைக் கொடுங்க'ன்னு விடாப்பிடியா இருந்து, அவரை பதவியில் உட்கார வச்சிருக்கார்.''
""நீண்டகாலமா இருக்கிற கட்சியிலேயே குமுறல் வெளிப்படுதே. அரசியலின் புதுமுகங்களான ரஜினியும் கமலும் என்ன பண்ணிக்கிட்டு இருக்காங்க?''’
""ரஜினி இமயமலைப் பயணத்தில் இருக்காரு. அவர் பாபாஜி குகைக்குப் போறது, அங்க தியானம் பண்றதுன்னு புகைப்படங்கள் வந்துக்கிட்டே இருக்கு. பாபாஜி ஆசிரமத்தில் தன் சொந்த செலவில் பக்தர்களுக்கான தங்குமிடத்தையும் தியானக் கூடத்தையும் ரஜினி கட்டியிருக்கார். அதன் பராமரிப்பெல்லாம் எப்படி இருக்குன்னு பார்த்திருக்கார். ஆன்மிகம் சார்ந்த பயணத்தில் இமாச்சலப்பிரதேச முன்னாள் முதல்வர் பிரேம்குமார் துமாலை சந்திச்சார். அதேபோல் லக்னோவுக்கும் ரஜினி போனார். வடநாட்டு ஆன்மிகத்தோடு எப்போதும் அரசியல் கலந்திருக்கும். தமிழ்நாட்டில் வேரூன்றி இருக்கும் திராவிட அரசியலை எப்படியாவது மாற்றிடணும்னு அவங்க நினைக்கிறாங்க. அதில் அதிக அக்கறை காட்டக்கூடிய சாமியார்களான ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், ஜக்கி வாசுதேவ், நித்தியானந்தா உள்ளிட்ட எல்லோருமே ரஜினி வருகையை எதிர்பார்க்குறாங்க.''
""ம்...''
""ஆன்மிக அரசியல்னு ரஜினி சொன்ன தால் வடநாட்டு, தென்னாட்டு ஆன்மிக அமைப்புகள் அவரை சப்போர்ட் பண்ணுது. ரஜினி தொடங்கப்போகும் கட்சிக்கும் நிதி குவியுது. ரஜினி இமயமலைப் பயணத்தை முடித்துக் கொண்டுத் திரும்பும்போது குறைந்தபட்சம் "300 ’சி' வரைக்கும் ஹெல்ப் பண்ணுவோம்னு ஆன்மிக வட்டாரங்கள் சொல்லுது. சித்திரை-1 அன்று ரஜினி தன் கட்சியை ஆரம்பிக்க வாய்ப் பிருக்குன்னும் அதுக்கு முன்னாடி, இமயமலைப் பயணம் முடிஞ்சதும், ரெகுலர் மெடிக்கல் செக் கப்புக்காக, ரஜினி அமெரிக்காவுக்குப் போகப் போறார்ன்னும் அவர் தரப்பு சொல்லுது.''’
""கமல் தரப்பு எப்படி இருக்கு?''’
""திருச்சியில் ஏப்ரல் 4-ந் தேதி, பிரம்மாண்ட மான பொதுக்கூட்டத்தை கமல் நடத்தப்போறார். மதுரையில் மக்கள் நீதி மய்யத்தை தொடங்கியபோது கூட்டிய கூட்டத்தைவிட அதிக கூட்டத்தைக் கூட்ட ணும்ங்கிறது அவரது வியூகம். அவர் புதுமையான கருத்துகளை அரசியலை மேடையிலும் டிவிட்டரிலும் வெளிப்படுத்தினாலும், திருச்சியில் கூட்டத்தைக் கூட்ட, போஸ்டர்கள், வினைல் போர்டுகள், பிட் நோட்டீஸ்கள்னு மற்ற அரசியல் கட்சிகள் கடைப் பிடிக்கும், பழைய விளம்பர பாணியையே, அவரது கட்சி நிர்வாகிகளும் கடைப்பிடிக்கறாங்க. அதுதான் சாதாரண மக்கள்கிட்டே எடுபடுதாம். திருச்சியில் திரளும் கூட்டத்தைப் பொறுத்து பிறகுதான் அவரோட அடுத்த மூவ் இருக்குமாம்.''’