""ஹலோ தலைவரே, எந்தப் பக்கம் போனாலும் முட்டுச்சந்தா இருக்கேன்னு தமிழக பா.ஜ.க. நிலையை நினைச்சி, பிரதமர் மோடியும் அமித்ஷாவும் திகைச்சிப்போய் நிக்கிறாங்க.''’

""மாநிலத்துக்குத் தக்கபடி, எந்த லெவலுக்கும் போய் ஆட்சியைப் பிடிக்கிறதில் அவங்கதான் கில்லாடிகளாச்சே. இப்பக்கூட மோடிதான் எங்க சூப்பர் ஸ்டார்... அமித்ஷாதான் எங்கள் உலகநாயகன்னு, தமிழக பா.ஜ.க. தலைவரான தமிழிசை சொல்றாரே! தமிழ்நாட்டில் பா.ஜ.க.வின் மார்க்கெட்டை எப்படி விரிவாக்கறதுன்னு அவங்களுக்கெல்லாம் தெரியாமலா இருக்கும்?''’

""உண்மைதாங்க தலைவரே, ஜெ.’ உயிரோடு இருந்தப்பவே மாஜி மந்திரிகள் வீடுகள்ல ரெய்டு பண்றது... சொத்துக் குவிப்பு வழக்குகளின் தீர்ப்புகள் நிலுவையில் இருந்ததை காரணமா வச்சி ஆட்டம் காட்டறதுன்னு.. செல்லமா மிரட்டி, பா.ஜ.க.வின் செல்வாக்கை வளர்க்கப் பார்த்தாங்க. ஜெ.’ இறந்த பிறகு, ஓ.பி.எஸ்.சை அவங்க கைல எடுத்தாங்க. அவர் வேலைக்கு ஆகலை. அடுத்ததா ஓ.பி.எஸ்.சையும் இ.பி.எஸ்.சையும் இணைச்சும் பார்த்தாங்க. இருந்தும் அவங்க ரெண்டுபேரும் விசுவாசம் காட்டுறதில் இப்பவரை போட்டி போடறாங்களே தவிர, பா.ஜ.க.வின் வளர்ச்சிக்கு எந்த வகையிலும் பயன்படலை. அதோட மக்களின் அதிருப்திதான் நாளுக்கு நாள் அதிகரிச்சிக்கிட்டு இருக்கு. அதனால், தனிப்பட்ட முறையில் இங்க பா.ஜ.க.வை வளர்க்க என்ன பண்ணலாம்ன்னு, புதுசா ஒரு ரூட்டைப் போட்டுக்கிட்டு இருக்காங்க.''’

""என்ன ரூட்டுப்பா அது?''’

Advertisment

ajith

""தமிழக மக்களுக்கு சினிமா மீதான ஈர்ப்பைப் பார்த்துதான், ரஜினியை அரசியலுக்குக் கொண்டுவருவதில் டெல்லி பா.ஜ.க. மேலிடமே தீவிரம் காட்டுச்சு. ரஜினியும் தன் அரசியல் எண்ட்ரியை அறிவிச்சார். பா.ஜ.க.வுக்குப் பிடிக்கிற மாதிரி, ஆன்மிக அரசியல்தான் என் நோக்கம்ன்னு கோடிட்டுக் காட்டினார். ஆனால், தமிழகத்தின் சூழலை முழுசா புரிஞ்ச ரஜினி பா.ஜ.க.வோடு சேரும் எண்ணத்தில் இல்லை. தனிச்சுதான்ங்கிறதில் ஆரம்பத்திலிருந்தே உறுதியா இருந்தாரு. தேர்தல் களத்தைச் சந்திச்சி, அதில் வரும் முடிவுகளைப் பொறுத்து, பா.ஜ.க. வின் உறவு பத்தி முடிவெடுத்துக்கலாம்ங்கிறதுதான் ரஜினி திட்டம். இதைப் புரிஞ்சிக்கிட்ட பா.ஜ.க., அவரை இப்ப முழுமையா வரவேற்க முடியாத மனநிலையில் இருக்கு.''’

""அதனால் என்ன? இப்ப நடிகர்கள் பலரும் முதல்வர் கனவில்தானே இருக்காங்க. அவங்கள்ல ஒருத்தரை பா.ஜ.க. தங்கள் பக்கம் இழுத்துப் போட்டுக்க வேண்டியதுதானே?''’

Advertisment

""ரஜினிக்கு முன்னாடியே கட்சியை அறிவிச்ச கமலோ, திராவிடம், பெரியார்ன்னு 50 ஆண்டுகளுக்கு மேலாய் இங்க இருக்கும் அரசியலை வேற ஸ்டைலில் பேசறார். அதைக் கவனிச்ச பா.ஜ.க. மேலிடம், இங்க இருக்கும் விஜய் மாதிரியான நடிகர்களை இழுத்தாலும் அவர்களும் தமிழன், பெரியார், எம்.ஜி.ஆர். திராவிடம்ன்னுதான் பேசுவாங்க. பா.ஜ.க. நினைக்கிற தேசிய அரசியலை பேசமாட்டாங்க. அதனால் இதெல்லாம் இல்லாத, மக்கள் செல்வாக்குள்ள ஒரு நடிகரை கட்சிக்கு இழுத்துவரணும்னு, அவங்க ஆலோசிச்சிருக்காங்க. நீண்ட ஆலோசனைக்குப் பிறகு பா.ஜ.க. டார்கெட் பண்ணியிருப்பது யாரைத் தெரியுமா? "தல' அஜீத்தை.''’

""அவரா? அவர் பங்ஷன்கள்ல கலந்துக்கவே சம்மதிக்கமாட்டாரே... அவர் எப்படி பாலிடிக்ஸில் இறங்குவார்?''’

""அது தெரிஞ்சிதான் பா.ஜ.க. தீவிரமா வியூகங்களை வகுத்துக்கிட்டு இருக்கு. அஜீத்துக்கு நெருக்கமான உறவினர்கள்.... நண்பர்கள்ன்னு யார் யார் பா.ஜ.க. பிரமுகர்களுடன் தொடர்பில் இருக்காங்கன்னும் அவங்க மூலம் அஜித்தை எப்படி பா.ஜ.க. பக்கம் கொண்டு வரலாம்ன்னும், அதற்கான மதிப்பு என்னன்னும் கணக்குப் போட்டுக்கிட்டு இருக்கு. இப்ப அஜீத் வீட்டுக் கதவையும் தட்ட பா.ஜ.க. தரப்பு தயாராயிடுச்சி. அஜீத் சம்மதம் தெரிவிச்சாருன்னா, அவர் பெரியார், திராவிடம்ன்னு பேசாம, தங்கள் பக்கம் நின்னு, தேசிய அரசியலைப் பேசுவார்ன்னு பக்கா வியூகத்தில் இருக்கு பா.ஜ.க.''’

"""விவேக'மான அஜீத் பா.ஜ.க.வுக்கு "விசுவாசம்' காட்டுவாரா?''’

""கேள்வி நியாயம்தான் என்றாலும், அரசியல்ன்னு வந்துட்டா எதுவும் நடக்கலாங்க தலைவரே. எதிர் எதிர் துருவமா இருந்தாலும் தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் நாடாளுமன்றத்தில் தமிழகம் தொடர்பான சில பிரச்சினைகள்ல ஓரணியா நின்னாங்க. அதேபோல் முதல்வர் எடப்பாடியும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினும் இப்ப அடிக்கடி பேசிக்கிறதையும் நம்மால் பார்க்க முடியுது. அண்மையில் எடப்பாடியும் ஸ்டாலினும் சந்திச்சிக்கிட்டது பத்தி, வெளியில் வராத ஒரு தகவலைச் சொல்லுது கோட்டை வட்டாரம்.''’

""அப்படி என்ன தகவல்ப்பா அது?''’

sp""கலைஞரின் பாதுகாப்பு அதிகாரியா இருந்த பாண்டியன், ஓய்வுபெறும் நாளில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதை ரத்து பண்ணணும்ங்கிறதுதான் ஸ்டாலின் வச்ச கோரிக்கை. முதல்வரும் தலையாட்டினாராம். கடந்த தி.மு.க. ஆட்சியில் பாண்டியனுக்கு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு ஒதுக்கப்பட்டது. அது தொடர்பான விவகாரத்தில்தான் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கார். இது தொடர்பாக ஜெ. ஆட்சியில் அவர் மீது போடப்பட்டிருந்த எஃப்.ஐ.ஆர். விஜிலென்ஸ் விசாரணையில் பெண்டிங்கில் இருந்தது. அதேபோல் அவர் மேல் இன்னும் சார்ஜ் ஷீட்டும் போடலை. இருந்தும் சஸ்பெண்ட் செய்துட்டாங்க. இப்படிப்பட்ட விவகாரத்தில் யாரையும் கடைசி நாளில் சஸ்பெண்ட் செய்யக்கூடாது. அப்படி ஏதாவது நடவடிக்கை எடுத்தாகணும்னு நினைச்சா, அவர்களது ஓய்வூதியப் பலன்களை மட்டும் நிறுத்திவச்சிட்டு, அவர்களை ஓய்வுபெற அனுமதிக்கணும்னு கலைஞர், தன் பீரியடில் வாய்மொழி உத்தரவு போட்டிருந்தார். சொன்னதோடு நிற்காமல், ஜெ.’வுக்கு நெருக்கமாகவும் விசுவாசமாகவும் இருந்த காவல்துறை அதிகாரி தேவாரம் போன்றவர்கள் குற்றச்சாட்டுகளுக்கு நடுவே ஓய்வுபெற்றபோது சஸ்பெண்ட் ஆகாமலும் பார்த்துக்கிட்டார் கலைஞர்.''’

""அவர் பாணி வேற... ஜெ. பாணி வேறயாச்சே...!''’

""உள்துறையில் இருக்கும் உயர் அதிகாரியும், காவல்துறையில் இருக்கும் உயர் அதிகாரியும் பாண்டியன் விவகாரத்தில் தலையிட்டு அவரை சஸ்பெண்ட் செய்ய வச்சுட்டாங்க. சி.எம். பாதுகாப்பில் இருந்தவங்களை இப்படி சஸ்பெண்ட் பண்ணுறதில்லைன்னு மற்ற அதிகாரிகள் முதல்வரிடம் சொல்லியும் சஸ்பெண்ட் பண்ணிட்டாங்க. இப்ப ஸ்டாலின் வலியுறுத்தலால் என்ன நடக்கப் போகுதுங்கிற எதிர்பார்ப்பு உருவாகியிருக்கு. பாண்டியனைப் போலவே வினோத், கணேசன்ன்னு கலைஞர் கூட இருக்கிறவங்க மேல இதே மாதிரி புகார் இருக்கு.''’

""தி.மு.க. ஆட்சியில் மிகுந்த செல்வாக்கோடு, உளவுத்துறை ஏ.டி.ஜி.பி.யா இருந்த ஜாபர்சேட் மீதும் இதுபோன்ற புகார் லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணையில் இருக்கு. டி.ஜி.பி.க்கான புரமோசன் லிஸ்ட்டை எதிர்பார்த்திருக்கும் ஜாபர்சேட், இந்த சிக்கலில் இருந்து மீளும் முயற்சியில் தீவிரமாக இருக்கார். அண்மையில் அவரும் முதல்வர் எடப்பாடியை ரகசியமாக அணுகியிருப்பதாகவும் கோட்டை வட்டாரத்தில் டாக் அடிபடுது.''’

sasi

""சசிகலாவுக்கு உடல்நிலை சரியில்லைன்னு ஒரு தகவல் வந்துச்சே?''’

""அதுபத்தியும் அவங்க தரப்பில் விசாரிச்சேங்க தலைவரே, ஜெ.’ மர்ம மரணத்தை விசாரிக்கும் ஆறுமுகசாமி கமிஷன், தனது கேள்விகளுக்கு பதில் கொடுத்தாகணும்னு சசிகலாவுக்கு கெடு விதிச்சிருக்கு. இந்த நிலையில் சிறையில் அவரது நடத்தை குறித்து, அங்குள்ள சிறைத்துறை அதிகாரி ரூபா எழுப்பிய புகாரின் பேரில், கர்நாடக லஞ்ச ஒழிப்புத்துறையும் வழக்கு பதிவு பண்ணி, விசாரணையை ஆரம்பிச்சிருக்கு. இதுபோன்ற நெருக்கடிகளால் மன உளைச்சலுக்கு ஆளான சசிகலா சரியா சாப்பிடலை. அதனால், உடல்நிலை பாதிக்கப்பட்டு 6-ந் தேதி சிறைக்குள்ளேயே மயங்கி விழுந்துட்டாங்கன்னும் அவங்களுக்கு அதிக சுகரும் பிரஷரும் காய்ச்சலுக்கான அறிகுறியும் இருந்ததால், சிறைக்குள்ளேயே இருக்கும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவர் சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்காருன்னு அவர் தரப்பு வருத்தமா சொல்லுது. ஆனா அதிகாரிகள் தரப்போ, நெருக்கடி வரும்போதெலாம் அவர் இப்படி சிகிச்சை எடுத்துக்கறது வழக்கம்தானேன்னு சொல்றதோடு, சசிகலாவுக்கு ஜெயிலில் சிறப்பு சலுகைகள் தரச்சொன்னது கர்நாடக சி.எம்.தான்னு டி.ஜி.பி. தெரிவித்திருப்பதையும் சுட்டிக் காட்டுறாங்க..''’

""ஆட்சி மாறினாலும் மாநிலம் மாறினாலும் சசிகலா சவுகரியமா இருக்காரு. ஆனா, திரிபுராவில், சி.பி.எம். ஆட்சியை பா.ஜ.க. வீட்டுக்கு அனுப்பியதுமே அங்கு லெனின் சிலை தகர்க்கப்பட்டிருக்கு. இது அகில இந்திய அளவில் சி.பி.எம்.முக்குள் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்குன்னு சொல்லப்படுதே?''’

""உண்மைதாங்க தலைவரே, அகில இந்திய மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை, பிரகாஷ் காரத் தரப்பு, பா.ஜ.க.வும் காங்கிரஸும் இல்லாத ஒரு அணியை உருவாக்கணும்னு சொல்லிவந்தது. சீதாராம் யெச்சூரி தரப்போ, மத்தியில் இருக்கும் மதவாத பா.ஜ.க.வை வீட்டுக்கு stalinஅனுப்ப, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளையும் ஓரணியில் திரட்டியாகணும்னு சொல்லுச்சு. இந்த நிலையில் கொல்கத்தாவில், கட்சியின் அகில இந்திய மாநாடு நடந்துக்கிட்டு இருந்தபோதுதான், திரிபுரா தகவல் அங்க வந்து, எல்லோரையும் பதட்டமாக்குச்சு. அப்பவே, பா.ஜ.க.வை வீழ்த்த காங்கிரஸ் உட்பட எல்லாக் கட்சிகளையும் ஒருங்கிணைக்கணும்ங்கிற எண்ணத்துக்கு வலு சேர்ந்தது. அன்னைக்கே கொல்கத்தாவே கிடுகிடுக்கும் அளவுக்கு ஒரு கண்டனப் பேரணியையும் ஒருங்கிணைச்சி நடத்தியிருக்காங்க.

""நானும் ஒரு தகவலைச் சொல்றேன். கொஞ்சம் லேட் செய்தின்னாலும், அது சுவாரஸ்யமான செய்தி. மார்ச் 1-ந் தேதி ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாடிய போது, கட்சிக்காரங்க புத்தகங்களைப் பரிசா கொடுத்தாங்க. அந்த வரிசையில் தயாநிதி மாறன், "கறுக்கும் மருதாணி'ங்கிற ஒரு புத்தகத்தைக் கொடுக்க, அதை வாங்கிப் பார்த்த ஸ்டாலின், கொஞ்சம் திகைத்து, ஒரு புன்னகையோடு அவரை ஏற இறங்கப் பார்த்தார். காரணம் அது, கனிமொழி எழுதிய புத்தகம். ஸ்டாலின்-கனிமொழி-தயாநிதின்னு மூன்று கோணங்களும் ஒரு புள்ளியில் இணைஞ்சா திகைப்பாத்தானே இருக்கும்!''’