""ஹலோ தலைவரே, நாடாளுமன்றத் தேர்தல் நிறைவடையும் நேரத்தில் பிரதமர் மோடி சர்ச்சைகளில் பலமாக சிக்கி வருகிறார்.''’’
""ஆமாம்பா, தேர்தல் நன்னடத்தை விதிகளை பிரதமர் மோடியே மதிக்கவில்லைன்னு எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுக்களை அடுக்குதே?''’’
""ஆமாங்க தலைவரே, நாடாளுமன்றத்துக்கான கடைசி கட்டத் தேர்தல் ஜூன் ஒன்றாம் தேதி நடக்குது. அன்று வட மாநிலங்களைச் சேர்ந்த 57 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் 30ஆம் தேதியுடன் முடிவடையுது. வாக்குப்பதிவு ஜூன் 4ஆம் தேதி நடப்பதால், அதுவரை தேர்தல் நன்னடத்தை விதிகள் நாடு முழுதும் அம-ல் இருக்கும்னு தேர்தல் ஆணையம் தெளிவாக அறிவித்திருக்கிறது. அதுவரை, அதிகாரத்தில் இருப்பவர்கள், வாக்காளர்களை இம்ப்ரஸ் பண்ற மாதிரி, நடந்துகொள்ளக் கூடாது என்றும், புதிய அறிவிப்புகள், திட்டங்கள்னு எதையும் மக்களிடம் கொண்டு செல்லக் கூடாது என்றும் அது வரையறை செய்திருக்கு. அப்படி இருந்தும் பிரதமர் மோடியே, வாக்காளர்களை ஈர்க்கிற மாதிரி, கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் செய்யப்போவதாக அறிவித்திருக்கிறார்.''’’
""ஏற்கனவே நடந்த நாடாளுமன்றத் தேர்தல்களிலும் இப்படித்தானே மோடி நடந்துகொண்டார்?''’’
""ஆமாங்க தலைவரே, 2014 லோக்சபா தேர்தல் பிரச்சாரம் முடிந்ததும், மகாராஷ்ட்ராவில் உள்ள பிரதாப்கர் கோட்டைக்குப் போய் தியானம் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார் மோடி. அதேபோல் 2019 தேர்த-ன் போதும், பிரச்சாரம் முடிந்த கையோடு உத்தரகாண்டில் உள்ள கேதர்நாத் மலைக்குகைக்குச் சென்று தியானம் செய்வதாகச் சொல்-, வாக்காளர்கள் மத்தியில் பெரும் விளம்பரத்தைத் தேடிக்கிட்டார். அதேபோல, இப்போது நம் தமிழகத்துக்கு வந்து, குமரி விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் செய்யப் போவதாக அறிவித்து பரபரப்பை உண்டாக்கியிருக்கிறார். அண்மையில் பிரச்சாரத்துக்காக ஒடிசா போன மோடி, தமி
""ஹலோ தலைவரே, நாடாளுமன்றத் தேர்தல் நிறைவடையும் நேரத்தில் பிரதமர் மோடி சர்ச்சைகளில் பலமாக சிக்கி வருகிறார்.''’’
""ஆமாம்பா, தேர்தல் நன்னடத்தை விதிகளை பிரதமர் மோடியே மதிக்கவில்லைன்னு எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுக்களை அடுக்குதே?''’’
""ஆமாங்க தலைவரே, நாடாளுமன்றத்துக்கான கடைசி கட்டத் தேர்தல் ஜூன் ஒன்றாம் தேதி நடக்குது. அன்று வட மாநிலங்களைச் சேர்ந்த 57 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் 30ஆம் தேதியுடன் முடிவடையுது. வாக்குப்பதிவு ஜூன் 4ஆம் தேதி நடப்பதால், அதுவரை தேர்தல் நன்னடத்தை விதிகள் நாடு முழுதும் அம-ல் இருக்கும்னு தேர்தல் ஆணையம் தெளிவாக அறிவித்திருக்கிறது. அதுவரை, அதிகாரத்தில் இருப்பவர்கள், வாக்காளர்களை இம்ப்ரஸ் பண்ற மாதிரி, நடந்துகொள்ளக் கூடாது என்றும், புதிய அறிவிப்புகள், திட்டங்கள்னு எதையும் மக்களிடம் கொண்டு செல்லக் கூடாது என்றும் அது வரையறை செய்திருக்கு. அப்படி இருந்தும் பிரதமர் மோடியே, வாக்காளர்களை ஈர்க்கிற மாதிரி, கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் செய்யப்போவதாக அறிவித்திருக்கிறார்.''’’
""ஏற்கனவே நடந்த நாடாளுமன்றத் தேர்தல்களிலும் இப்படித்தானே மோடி நடந்துகொண்டார்?''’’
""ஆமாங்க தலைவரே, 2014 லோக்சபா தேர்தல் பிரச்சாரம் முடிந்ததும், மகாராஷ்ட்ராவில் உள்ள பிரதாப்கர் கோட்டைக்குப் போய் தியானம் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார் மோடி. அதேபோல் 2019 தேர்த-ன் போதும், பிரச்சாரம் முடிந்த கையோடு உத்தரகாண்டில் உள்ள கேதர்நாத் மலைக்குகைக்குச் சென்று தியானம் செய்வதாகச் சொல்-, வாக்காளர்கள் மத்தியில் பெரும் விளம்பரத்தைத் தேடிக்கிட்டார். அதேபோல, இப்போது நம் தமிழகத்துக்கு வந்து, குமரி விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் செய்யப் போவதாக அறிவித்து பரபரப்பை உண்டாக்கியிருக்கிறார். அண்மையில் பிரச்சாரத்துக்காக ஒடிசா போன மோடி, தமிழ்நாட்டு மக்களைத் திருடர்கள் என்று பொருள்படும்படி அங்கே விமர்சித்தார். அப்படிப்பட்டவர், எந்த முகத்தோடு தமிழகம் வருகிறார் என்கிற விமர்சனமும் இங்கே எழுந்திருக்கிறது. மோடியின் இந்த தெனாவெட்டும், தியான நாடகமும் அவருக்கு விரைவில் பாடத்தைப் புகட்டும்னு பலரும் சொல்றாங்க.''’’
""தமிழகம் வரும் மோடிக்கு எதிராக போராட்டம் ஒன்றும் வெடிக்கப்போகுதே?''’’
""ஆமாங்க தலைவரே, தமிழர்களைத் திருடர்கள் எனச் சொல்-விட்டு தமிழகத்துக்கு வரும் மோடிக்கு எதிர்ப்புக் காட்டும் விதமாக, "கோ பேக் மோடி' என்று எழுதப்பட்ட வாசகங்களுடன் அவருக்குக் கறுப்புக்கொடிக் காட்ட, தமிழ்த் தேசிய ஆதாரவாளர்கள் திட்டமிடுகிறார்களாம். இதையறிந்து, அவர் வரும்போது அப்படி எந்தப் போராட்டமும் நடந்துவிடாதபடிக்கு முன்னெச்சரிக்கையாக இருக்கும்படி போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறதாம். இதற்கிடையே, ’"மோடி, தியானம் செய்வது தேர்தல் விதி மீறல். அதனால் அந்த தியானத்தை அனுமதிக்கக்கூடாது'’என திமுக வழக்கறிஞர்கள் பிரிவு சார்பில் தேர்தல் கமிஷனிடம் புகார் கொடுக்கப்பட்டு இருக்கிறது.''’’
""ராணுவ விவகாரத்திலும் மோடி விதி மீறி விளையாடியதாக புகார் எழுந்திருக்கே?''’’
""இந்த மே இறுதியில் இந்தியாவின் ராணுவ தளபதி மனோஜ்பாண்டே ஓய்வுபெறவிருந்தார். ஆனால், அவருக்கு திடீரென்று 27ஆம் தேதி ஒருமாத காலம் பணி நீட்டிப்பை வழங்கியிருக்கிறார் மோடி. பாண்டே ஓய்வுபெறுவதால் துணை ராணுவத் தளபதி உபேந்திரா திவேதிதான் புதிய ராணுவத் தளபதியாக நியமிக்கப்படுவார்னு அனைவரும் எதிர்பார்த்தாங்க. ஆனால், யாருமே எதிர்பார்க்காத நிலையில், பாண்டேவுக்கு பணி நீட்டிப்பை கொடுத்திருக்கிறார் மோடி. தேர்தல் நடத்தை விதிகள் அம-ல் இருக்கும்போது, இப்படிப்பட்ட நியமனங்களை அறிவிக்க அனுமதி இல்லை. அசாதாரணமான சூழல்கள் இருந்தால் மட்டும்தான் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற்று இப்படிப்பட்ட அரசாணைகளைப் பிறப்பிக்கலாம். ஆனால், இப்போது என்ன அசாதாரண சூழல் வந்திருக்குன்னு எல்லோரும் கேட்கறாங்க. உபேந்திரா, பா.ஜ.க. தலைமைக்கு ஆதரவானவர் இல்லை என்பதால் பாண்டேவுக்கு இப்போதைக்கு பதவி நீட்டிப்பைக் கொடுத்துவிட்டு, மீண்டும் அதிகாரத்திற்கு வர வாய்ப்பு அமைந்தால், அப்போது விருப்பம்போல் அவரது பதவியை நீட்டித்துக் கொள்ளலாம் என்பதுதான் மோடியின் எண்ணமாம். இதுவும் சலசலப்பையும் சர்ச்சையும் உருவாக்கிவருகிறது.''’’
""மாநில பா.ஜ.க. நிர்வாகியின் ஆட்டம் அதிகமாக இருக்கிறது என்கிற முணுமுணுப்பு கமலாலயத் தரப்பிலேயே கேட்கிறதே?''’’
""ஆமாங்க தலைவரே, அந்த பா.ஜ.க. மாநில நிர்வாகியின் அடாவடிப் போக்கு கட்சிக்குள்ளேயே வெறுப்பை சம்பாதித்து வருகிறதாம். இதைத் தொடர்ந்துதான், அண்மையில் பா.ஜ.க. கூட்டிய நிர்வாகிகள் கூட்டத்தில் அதன் முக்கிய நிர்வாகிகளான நயினார் நாகேந்திரனும், வானதி சீனிவாசனும் கலந்துகொள்ளவில்லை என்கிறார்கள். நயினாரின் 4 கோடி ரூபாய் விவகாரத்தில், பா.ஜ.க. தொழிற்துறைப் பிரிவு நிர்வாகியான கோவர்த்தன் அப்ரூவர் ஆகியிருக்கும் நிலையில், இதில் கட்சியின் சீனியரான கேசவவிநாயகத்தை எப்படியும் சிறைக்கு அனுப்பிவிடவேண்டும் என்று அந்த மாநில பா.ஜ.க. நிர்வாகி காய் நகர்த்தி வருகிறாராம். மேலும் தலைக்கணம் அதிகமான நிலையில், அவர், ஒருகாலத்தில் நான் பி.எல்.சந்தோஷின் தயவில் இருந்தேன். இப்போது அந்த பி.எல்.சந்தோஷே என் தயவில்தான் இருக்கிறார் என்று டயலாக் அடித்து வருகிறாராம். நாடாளுமன்றத் தேர்தல் முடிவு ஊத்திக்கொள்ளும் பட்சத்தில், அவரைத் தட்டி வைக்க அவர்களின் டெல்- தலைமையே தயாராக இருக்கிறது என்கிறார்கள் கமலாலயத் தரப்பினர்.''’’
""அ.தி.மு.க.வில் ஐக்கியமாகத் திட்டமிட்டிருக்கும் சசிகலா, கட்சியின் பொதுச்செயலாளர் பதவி வேண்டும் என்கிறாராமே?''’’
""தனக்காக அ.தி.மு.க.வின் கதவைத் திறக்கவேண்டும் என்று சசிகலா போராடிவந்த நிலையில், அவரை வைத்து ஒட்டுமொத்த முக்குலத்தோர் ஆதரவையும் அ.தி.மு.க. பக்கம் திருப்பிவிடலாம் என்று கருதிய எடப்பாடி, அவர் வரவுக்கு க்ரீன் சிக்னல் காட்டும் முடிவிற்கு வந்தாராம். இந்த நிலையில் சசியின் உறவினரும் ஓய்வுபெற்ற பி.ஆர்.ஓ.வுமான கண்ணதாசன் மூலம் இருதரப்புக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. அப்போது, அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் பதவியைத் தனக்குத் தரவேண்டும் என்று அவர் மூலம் சசிகலா டிமாண்ட் வைக்க, எடப்பாடியோ, சசிகலா அருகில் இருக்கட்டும். ஆதரவு தரட்டும். அதே சமயம் கட்சியில் எந்தப் பதவியும் தருவதற்கில்லை. அவர் ஆதரவு தந்தால், பொருளாதாரரீதியாக என்ன டிமாண்ட் வைத்தாலும் நிறைவேற்றுகிறேன் என்று சொல்-விட்டாராம். இதை சசிகலா ரசிக்கவில்லையாம். அதனால் பேச்சுவார்த்தை இழுபறியில் இருக்கிறது என்கிறார்கள். இதற்கிடையே மாஜி வேலுமணியோ, எடப்பாடி தன்னை தனது அரசியல் வாரிசாக அறிவிக்கவேண்டும் என்று இன்னொரு பக்கம் ரூட் போட்டுக்கொண்டிருக்கிறாராம்.''’’
""விக்கிரவாண்டி இடைத்தேர்த-ல் அ.தி.மு.க. சார்பில் மாஜி மந்திரி ஒருவரின் சகோதரரை களமிறக்கும் முயற்சியும் நடக்குதே?''’’
""விக்கிரவாண்டி இடைத்தேர்த-ல் தனது மகனுக்கு சீட் வாங்கிட வேண்டும் என அமைச்சர் பொன்முடி ஒரு பக்கம் முயற்சிக்கும் நிலையில், எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வில் மாஜி மந்திரியும் எம்.பி.யுமான சி.வி.சண்முகத்தின் அண்ணன் ராதாகிருஷ்ணனை தேர்த-ல் நிற்கும்படி, விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் வ-யுறுத்திவருகிறார்களாம். அ.தி.மு.க. சார்பில் ராதாவுக்கு வாய்ப்புக் கொடுக்கப்பட்டால் தி.மு.க., பா.ம.க. கட்சிகளுக்கு செம டஃப் ஃபைட் கொடுப்பார் என்று வட மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள், எடப்பாடியிடம் சொல்-யிருக்கிறார்களாம். எடப்பாடியும் இது சரியான யோசனைதான். தேர்தல் முடிவிற்குப் பின் நடக்கவிருக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் இதுபற்றி விவாதிக்கலாம் என்று சொல்-யிருக்கிறாராம். ஆனால் சி.வி.சண்முகமோ, தனது அண்ணனை தேர்த-ல் களமிறக்க விரும்பவில்லையாம். அவர் தனது அரசியலைப் பார்த்துக்கொண்டாலே போதும் என்று நினைக்கிறாராம்.''’’
""நாடாளுமன்றத் தேர்தல் கருத்துக் கணிப்புகளை அறிய எடப்பாடி பரிதவிக்கிறாராமே?''’’
""தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்று, வாக்குப்பதிவின்போதே பத்திரிகைகளும் காட்சி ஊடகங்களும் எடுத்த சர்வே முடிவுகளை, கடைசிக்கட்ட வாக்குப்பதிவு நாளான ஒன்றாம் தேதி மாலை 6.30#க்கு மேல் வெளியிடத் தடை ஏதுமில்லையாம். அதனால், அதை வெளியிடுவதில் மீடியாக்கள் தரப்பு தீவிரம் காட்டி வருகின்றன. அதேபோல் இவற்றை அறிந்துகொள்ள அரசியல் தலைவர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக, எடப்பாடி இதில் கூடுதல் ஆர்வம் கொண்டிருக்கிறாராம். காரணம், உளவுத்துறை தரப்பில் கொடுத்த கருத்துக்கணிப்பு அவருக்கு சாதகமாக இல்லையாம். அதனால், மீடியாக்களின் கருத்துக் கணிப்பாவது நம்பிக்கையூட்டும் வகையில் இருக்கிறதா? என்று பார்க்க நினைக்கிறாராம். தேர்த-ல் மோசமான முடிவுகள் வந்தால், அ.தி.மு.க.வில் தனக்கு எதிராக பெரும் பூகம்பம் ஏற்படும் என பலரும் சொன்னதால், எடப்பாடி இந்த முடிவுகளை அறிய பரிதவிக்கிறார் என்கிறார்கள்.''’’
""நானும் என் காதுக்கு வந்த ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துக்கறேன். ஐ.பி.எல்.-ல் சோபிக்காத நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை, இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசனிடம் இருந்து, அதானியின் அம்புஜா சிமெண்ட்ஸ் வாங்குகிறதாம். சீனிவாசன் நிர்வாகத்தில் இருந்தபோது, சென்னை அணி ஏறத்தாழ 700 கோடி கடனில் இருந்ததாம். அந்தக் கடன்களை எல்லாம் அடைத்துவிட்டு, அதானி நிறுவனம் மேற்கொண்டு தொகை கொடுத்து சென்னை அணியைக் கைப்பற்றுகிறதாம். இதைத் தொடர்ந்து சென்னை அணியின் கேப்டனையும் அதானி மாற்றத் திட்டமிட்டிருக்கிறார் என்கிற டாக் தற்போது பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.''