""ஹலோ தலைவரே, டெல்லியில் பெரிய சடுகுடுவே நடந்துக்கிட்டிருக்கு.''’’
""ஆமாம்பா, சூப்பர் மேனா தன்னைக் கருதிக் கொண்டிருந்த மோடி, இப்ப சின்னச் சின்ன கட்சிகளிடமும் ததிங்கினத்தோம் போட்டுக்கிட்டு இருக்காரே?''’’
""உண்மைதாங்க தலைவரே, பா.ஜ.க.வுக்கு ஆட்சி அமைக்கும் அளவுக்குப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கூட்டணிக் கட்சிகளின் தயவோடு ஆட்சியை அமைத்தாக வேண்டிய நிர்பந்தம் மோடிக்கு ஏற்பட்டிருக்கு. சில நாட்களுக்கு முன், தன்னைக் கடவுளின் அவதாரம்னு சொன்ன மோடிக்கு, இப்ப ‘ ஐக்கிய ஜனதா தளம்’ நிதிஷ்குமாரும், ’தெலுங்கு தேசம்’ சந்திரபாபு நாயுடுவும் கடவுளின் அவதாரங்களாகத் தெரியறாங்க. அதற்கு ஏற்ப அவங்க இரண்டு பேரும் இப்ப மோடியை ஆட்டிவைக்க ஆரம்பிச்சிட்டாங்க. தங்களை இதற்கு முன்பு, எளிதாக எடைபோட்ட மோடிக்கு, தங்கள் பவரைக் காட்டக்கூடிய நேரம் இப்ப வந்திருக்குன்னு நினைக்கும் அவர்கள், இப்ப மோடியைத் திகைக்கவைக்கும் அளவுக்கு டிமாண்டுகளை வைக்கறாங்க.''’’
""கைக்கு அங்குசம் வந்துட்டா எவ்வளவு பெரிய யானையும் பூனைக்குட்டிக்குச் சமம்தானே?''’’
""சரியாச் சொன்னீங்க தலைவரே, தங்கள் தயவு இல்லாமல் மோடியால் ஆட்சி அமைக்க முடியாது என்று தெரிந்துகொண்ட சந்திரபாபு நாயுடுவும், நிதிஷ்குமாரும், பெரிய பெரிய டிமாண்டுகளோடு விஸ்வரூபம் எடுத்து நிக்கறாங்க. குறிப்பாக சந்திரபாபு நாயுடு, நாடாளுமன்ற சபாநாயகர் பதவியையும், ஐந்து கேபினட் அமைச்சர் பதவியையும் ஐந்து இணையமைச்சர் பதவியையும், தங்கள் கட்சிக்கு எதிர்பார்க்கிறார். அதேபோல் தொழிலதிபர் அதானியை மனதில் வைத்துக்கொண்டு, நிதித்துறை, மின்சாரம், கப்பல் போக்குவரத்து உள்ளிட்ட பவர்ஃபுல் துறைகள் வேண்டும்னு நிர்ப்பந்தம் செய்யறாராம். அதேபோல் நிதிஷ்குமாரும் மூன்று கேபினட் அமைச்சர் பதவியையும் இரண்டு இணையமைச்சர் பதவியையும் தங்கள் கட்சிக்கு கேட்டிருக்காராம். விவசாயம், சிவில் சப்ளை உள்ளிட்ட இலாக்காக்களை இவர் விரும்புகிறாராம். இதையெல்லாம் கேட்டு கிறுகிறுத்துப்போன மோடி, பவர்ஃபுல் துறைகளை எல்லாம் இவர்களிடம் கொடுத்துவிட்டு என்ன பண்ணுவது என்று, அமித்ஷா உள்ளிட்ட பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களோடு விவாதித்துவருகிறாராம்.''’’
""பரமசிவன் கழுத்துப் பாம்புகள், தங்கள் பவரைக் காட்டத்தானே செய்யும்?''’’
""ஆமாங்க தலைவரே, அதேபோல் பா.ஜ.க.வைப் பொறுத்தவரை ஸ்மிருதிராணி, அர்ஜுன் முண்டா உட்பட மத்திய அமைச்சர்களா இருந்த 13 பேர், தேர்தலில் தோல்வியைத் தழுவி இருக்கிறார்கள். இந்தப் பட்டியலில் இருக்கும் எல்.முருகனுக்கு இந்த முறை அமைச்சர் பதவி இருக்குமா? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் நிதித்துறையை வாங்கிக் கொண்டாலும், அந்தத் துறையின் அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமனுக்கு வேறு ஏதேனும் ஒரு துறையைக் கொடுக்க வேண்டும் என்பது மோடியின் விருப்பமாம். இப்படி மத்திய அமைச்சரவை குறித்த சேர்த்தல், நீக்கல் பணிகளிலும் பா.ஜ.க.7ஆம் தேதி தீவிரமாக இருந்தது. தேர்தலில் எதிர்பார்க்கப்பட்ட பெரும்பான்மைக்குரிய வெற்றி கிடைக்காததால், விரைவில் பா.ஜ.க.வின் தேசியத் தலைவரான நட்டாவும் மாற்றப்படுவார் என்கிறார்கள்.''’’
""இந்த பரபரப்பிற்கு நடுவிலும் தமிழகத்தில் வாஷ்அவுட் ஆனது குறித்து பா.ஜ.க.வின் தேசியத் தலைவர்கள் கவலையோடு விவாதித்திருக்கிறார்களே?''’’
""பொதுவாக அனைத்து மாநிலங்களிலும் தங்களின் சாதக பாதகக் கணக்கை ஆராய்ந்த பா.ஜ.க.வின் தேசியத் தலைவர்கள், தமிழகத்தில் தங்களுக்குக் கிடைத்திருக்கும் படு தோல்வியை ஜீரணிக்க முடியாமல் தவிக்கிறார்களாம். குறிப்பாக மோடி, அமித்ஷா, ராஜ்நாத்சிங் ஆகிய பா.ஜ.க.வின் சீனியர் தலைவர்கள், தமிழக நிலவரம் குறித்து கட்சியின் தேர்தல் நிபுணர்கள் கொடுத்த அறிக்கையை வைத்துக்கொண்டு, தீவிரமாக ஆராய்ந்திருக்கிறார்கள். அப்போது, பழைய மாதிரியே தமிழகத்தில் அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி அமைந்திருந்தால் ஏறத்தாழ 20 தொகுதிகளைப் பிடித்திருக்கலாம் என்று அப்போது அவர்கள் தங்களுக்குள் ஆதங்கப்பட்டார்களாம். அ.தி.மு.க.வுடன் கூட்டணி முறிந்ததற்கு, மாநில பா.ஜ.க. நிர்வாகியின் திமிரான போக்குதான் காரணம்னு அப்போது அமித்ஷா, அழுத்தமாச் சொன்னாராம். அதனால் அந்த நபர்மீது பா.ஜ.க.தேசியத் தலைவர்கள் ஏக காட்டத்தில் இருக்கிறார்களாம். எனவே, அந்த நபர் உட்பட தமிழக பா.ஜ.க. நிர்வாகிகள் பலருக்கும் விரைவில் கல்தா கொடுக்கப்பட இருக்கிறது என்கிறது கமலாலயத் தரப்பு.''’’
""தமிழக அமைச்சரவையிலும் விரைவில் அதிரடி மாற்றம் வரும் என்கிறார்களே?''’’
""ஆமாங்க தலைவரே, நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி 40-லும் வெற்றி பெற்றிருந்தாலும், பல தொகுதிகளில் எதிர்பார்த்த அளவுக்கு வாக்குகள் இல்லையே என்று முதல்வர் ஸ்டாலின் நினைக்கிறாராம். அதனால், 40 தொகுதிகளின் புள்ளி விபரங்கள் குறித்து ஆய்வு செய்து, ஒரு அறிக்கையைத் தரும்படி, தன் மருமகன் சபரீசனிடம் கேட்டுள்ளாராம். அந்த ரிப்போர்ட் கைக்கு வந்ததும் தி.மு.க.வில் சில மாற்றங்கள் இருக்கும் என்கிறார்கள். குறிப்பாக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்கிறார்கள். தொகுதி நிர்வாகிகளுடன் ஒத்துப்போகாத அல்லது விமர்சனத்தைச் சம்பாதித்த சில அமைச்சர் மாற்றப்படலாம் என்கிறது அறிவாலயத் தரப்பு. ''’’
""ஓ..''’’
""அமைச்சர் காந்தி பொறுப்பேற்றிருந்த வேலூரில், நல்ல வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க. கதிர்ஆனந்த் வென்றபோதும், கட்சிக்காரர்களின் அதிருப்தியை காந்தி நிறையவே சம்பாதித்திருக்கிறாராம். அதேபோல் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். பொறுப்பில் இருந்த விருதுநகர் தொகுதியில் தே.மு.தி.க. வேட்பாளரான விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன், ஏழு சுற்றுகள்வரை முன்னிலையில் இருந்தார். அதன்பிறகும் அவர் டஃப் ஃபைட் கொடுக்கும் அளவுக்கு நிலைமை ஏற்பட்டது. அதற்கு, அங்கு களமிறங்கிய காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாக்கூரும் தீவிர உழைப்பைத் தரவில்லை என்கிறார்கள். அதேபோல் நெல்லையில் பா.ஜ.க. கூட்டணியில் நின்ற த,மா,கா,வேட்பாளர் 98 ஆயிரம் வாக்குகள்வரை வாங்கியதற்குக் காரணம், சாதி அரசியல் என்ற ரிப்போர்ட்டும் அறிவாலயத்திற்குப் போயிருக்கிறதாம். எனவே அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் இது குறித்து கேள்வி எழுப்பட்டிருக்கிறதாம்.''’’
’’சரிப்பா, அமைச்சர் ஐ.பெரியசாமியின் களப்பணிகளைப் பற்றி, எதிரணியினர் மிரட்சியுடன் பேசுகிறார்களே?''’’
""உண்மைதாங்க தலைவரே, பிரச்சாரத்துக்காக தேனி மாவட்ட லட்சிமிபுரம் வந்த முதல்வர் ஸ்டாலின், திண்டுக்கல், தேனி ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் இரண்டு வேட்பாளர்களையும் அண்ணன் ஐ.பெரியசாமி வெற்றிபெற வைப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று உற்சாகமாகச் சொன்னாராம். இதையே தேனிக்கு வந்த உதயநிதியும் எதிரொலித்திருக்கிறார். இதை எல்லாம் கட்சி நிர்வாகிகளிடம் அடிக்கடி நினைவூட்டியபடியே விறுவிறுப்பாகக் களமாடிய அமைச்சர் ஐ.பி, திண்டுக்கல்லில் போட்டியிட்ட சி.பி.எம். வேட்பாளர் சச்சிதானந்தத்தை 4 லட்சத்து 43 ஆயிரத்து 821 ஒட்டுகள் அதிகம் பெற்று, வெற்றிபெற வைத்திருக்கிறார்.''
""ஒரு எட்டு மாத காலத்துக்குள்ள அரசியல்ல சந்திரபாபு நாயுடு பள்ளத்துல இருந்து உச்சத்துக்கு ஏறியிருக்காரே.''’’
""உண்மைதாங்க தலைவரே, "ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்,… வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும்'னு சும்மாவா சொல்லியிருக்காங்க. எட்டு மாசத்துக்கு முன்னால பிரதமர் அலுவலகத்துக்குப் போய் மோடியைச் சந்திக்க முயற்சி பண்ணியிருக்கார் சந்திரபாபு நாயுடு. பா.ஜ.க.வுக்கு ஆதரவு தெரிவிச்சு, அவங்களோட ஆதரவைப் பெறுவதுதான் அவரது திட்டம். ஆனா, அன்னைக்கு அவருக்கு பிரதமரைச் சந்திக்கிறதுக்கான வாய்ப்பே கிடைக்கலை. மாநில அரசியல்ல அவரை சிறை வரைக்கும் கொண்டுபோனாங்க. ஆனா இன்னைக்கு பா.ஜ.க. கூட்டணி அரசியலில் பிரதமரையே தீர்மானிக்கும் முக்கிய ஆளுமையா சந்திரபாபு நாயுடு மாறியிருக்கார்.''’’
""விரைவில் அரசு அதிகாரிகளை மாற்றும் திட்டத்திலும் ஸ்டாலின் இருக்கிறாராமே?''’’
""தேர்தல் நேரத்தில் தி.மு.க.வுக்கு எதிராக நடந்துகொண்ட அதிகாரிகளின் பட்டியலும் முதல்வர் கையில் இருக்கிறதாம். இதைத் தொடர்ந்து தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குறித்த பணிக்கால விவரங்களை அரசின் பொதுத்துறை அதிகாரிகள் பரபரப்பாக எடுத்து வருகின்றனராம். இதேபோல் காவல்துறை அதிகாரிகளின் ஜாதகங்களும் துருவப்படுகின்றன. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு கிட்டத்தட்ட 2 வருடங்கள் இருந்தாலும், 2025 செப்டம்பர், அக்டோபர் மாதங்களிலேயே தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய அடிப்படைப் பணிகளை தி.மு.க. தொடங்கியாக வேண்டும் என்று ஸ்டாலின் நினைக்கிறாராம். அந்த வகையில் பார்த்தால், இடையில் இன்னும் 15 மாதங்கள் மட்டுமே இருக்கின்றன. அதனால், ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ். அதிகாரிகள் தொடங்கி, அனைத்துத் தரப்பிலும் அதிகாரிகள் மாற்றம் 10ஆம் தேதிக்கு மேல் இருக்கலாம் என்கிறார்கள். முதல் கட்டமாக கோட்டையில் உள்ள அரசுத்துறைகளின் செயலாளர்கள் மட்டத்தில் ஒரு அதிரடி மாற்றம் இருக்குமாம்.''’’
’அதெல்லாம் இருக்கட்டும். தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் செய்த விளம்பரச் செலவுகள் பற்றிய தகவல் வெளியாகி திகைக்க வைக்கிறதே?''’’
""ஆமாங்க தலைவரே, ஏறத்தாழ 2 மாதங்களாக நடந்துவந்த தேர்தல் பணிகள் முடிவடைந்து, தற்போது அதுதொடர்பான நடத்தை விதிகளும் நீக்கப்பட்டிருக்கின்றன. நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் பல நூறு கோடிகளை விளம்பரங்களுக்காகவே செலவிட்டதாக சொல்கிறார்கள். அதிலும் கூகுளில் விளம்பரம் செய்வதற்கு மட்டுமே பல நூறு கோடிகளை அள்ளி இறைத்திருக்கிறார்களாம். குறிப்பாக, பா.ஜ.க. 166 கோடி ரூபாயை, கூகுள் விளம்பரத்துக்கு மட்டும் செலவிட்டு, அதில் முதலிடத்தில் இருக்கிறது. இரண்டாவது இடத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி 72 கோடியே 8 லட்ச ரூபாயைச் செலவிட்டுள்ளது. மூன்றாவது இடத்தில், ஒன்றிய அரசின் விளம்பரத் தொடர்பு துறை இயக்குநரகம் இருக்கிறது. இது செலவிட்ட தொகை 40 கோடியாம். அதேபோல் தி.மு.க. 25 கோடி ரூபாயைச் செலவிட்டு 4#வது இடத்தைப் பிடித்துள்ளது. இதையெல்லாம் தேர்தல் ஆணையமும் கணக்கில் எடுத்து வைத்திருக்கிறதாம்.''’’
""தேர்தல் வெற்றிக்காக தமிழக காங்கிரஸ் தரப்பில் முதல்வரை சந்தித்தது சர்ச்சையாகி வருகிறதே?''’’
’’""ஆமாங்க தலைவரே, தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 9 தொகுதிகளிலும் வெற்றியினைப் பெற்றதற்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்று, முதல்வர் ஸ்டாலினை 5 ஆம் தேதி சந்திக்கச் சென்றிருந்தார் மாநில காங்கிரஸ் தலைவரான செல்வப்பெருந்தகை. அப்போது தன்னுடன் முன்னாள் மாநிலத் தலைவர் தங்கபாலு, எம்.எல்.ஏ. ரூபி மனோகரன் ஆகியோரையும் அழைத்துச் சென்றிருக்கிறார். இது காவல்துறைத் தரப்பில் கூர்ந்து கவனிக்கப்பட்டிருக்கிறது. காரணம், நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் மரண வாக்குமூலத்தில், அவரால் குறிப்பிடப்பட்டுள்ள தங்கபாலு மற்றும் ரூபி மனோகரன் ஆகிய இருவரையும் சி.பி.சி.ஐ.டி. டீம், தன் விசாரணைப் பட்டிய-ல் வைத்திருக்கிறதாம். கட்சியில் எத்தனையோ தலைவர்கள் இருந்தும்கூட அவர்களை எல்லாம் விட்டுவிட்டு, க்ரைம் தொடர்பான சிக்கலில் இருக்கும் இவர்களை முதல்வரிடம் செல்வப்பெருந்தகை அழைத்துச் சென்றது குறித்து, உளவுத்துறை முதல்வருக்கே ஸ்பெஷல் நோட் போட்டிருக்கிறதாம்.''’’
""நானும் என் கவனத்துக்கு வந்த ஒரு தகவலைப் பகிர்ந்துக்கறேன். இந்தத் தேர்தல் முடிவுகள் பா.ஜ.க.வுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருந்தாலும், ஒரிஸா, டெல்லிமுடிவுகள் மக்கள் மத்தியில சந்தேகத்தைக் கிளப்பியிருக்குது. முக்கியமா அரவிந்த் கெஜ்ரிவால் கைதாலயும், கால்நூற்றாண்டு காலம் ஒடிஸô முதல்வரா இருக்கிற நவீன் பட்நாயக்கின் நற்பணிகளாலயும் இந்த இரு மாநிலங்கள்லயும் பா.ஜ.க. மொத்தமா தோற்கும்னு எதிர்பார்ப்பு இருந்துச்சு. அதற்கேற்ப டெல்-யில ஆட்டோ ஓட்டுநர்கள் மாதிரியான அடித்தட்டு வாக்காளர்கள் கூட தாமரைக்கு நிச்சயம் ஓட்டுப்போட மாட்டோம்னு பேசிக்கிட்டாங்க. ஆனா இந்த இரு இடங்கள்லயும் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துது. அதிகார வர்க்கத்தின் சப்போர்ட்டோட, வாக்குஎந்திர தில்லுமுல்லு மூலமா இங்கே பா.ஜ.க. வெற்றிபெற்றுருக்குமோனு இம்மாநில மக்கள் சந்தேகத்தோட பேசிக்கிறாங்களாம்.’’அதோட இந்த மக்களவைத் தேர்தல் முடிவாலயும், தமிழகத்துல ஒட்டுமொத்த தொகுதிகளையும் தி.மு.க. கூட்டணி ஜெயிச்சதாலயும் தமிழக கவர்னர் வாயடைச்சுப் போய் உட்கார்ந்துட்டாராம். அதிரடி ஸ்டேட்மெண்ட் விடும் அவரை தற்போதைய தேர்தல் முடிவு கொஞ்சகாலத்துக்காவது கப்சிப்னு உட்கார வைச்சுடும்போல இருக்கு.''
தமிழகத்தில் மொத்தமாக மூழ்கிய தாமரை! உண்மை ஓட்டுகே கணக்கு!
பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுக்கு ஏற்பட்ட தோல்வி குறித்து கருத்து தெரிவித்த பா.ஜ.க. மா.த., தற்போது பா.ஜ.க.வுக்கு 11 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் கிடைத்துள்ளன என்றும், 2026 சட்டமன்றத் தேர்த-ல் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடிப்பதே எங்கள் இலக்கு என்றும் கூறியிருந்தார். ஆனால் இதில் உண்மை என்னவென்றால், இந்த தேர்த-ல் பா.ஜ.க. கூட்டணிக்கு கிடைத்த வாக்குகள் சதவீதத்தை, தனிப்பட்ட பா.ஜ.க.வுக்கு கிடைத்ததாகக் கூறுவதே தவறான கணக்கு. வட மாவட்டங்களைப் பொறுத்தவரை, பா.ஜ.க. கூட்டணிக்கு விழுந்த வாக்குகளில் பெரும்பாலானவை பா.ம.க.வின் வாக்குகள். தென் மாவட்டங்களைப் பொறுத்தவரை, அ.ம.மு.க.வும், ஓ.பி.எஸ்.ஸýம் வாங்கியிருக்கும் வாக்குகளின் அடிப்படையில் பார்க்கும்போது, இப்பகுதிகளிலுள்ள பழைய அ.தி.மு.க.வினர் வாக்குகளும் விழுந்திருப்பது தெரிகிறது.
அடுத்ததாக, பெரம்பலூர் பாரிவேந்தர், சிவகங்கை தேவநாதன், தென்காசி ஜான்பாண்டியன், வேலூர் ஏ.சி.சண்முகம் ஆகிய நால்வருமே தாமரை சின்னத்தில் நின்ற பா.ஜ.க. அல்லாத வேட்பாளர்கள். இவர்களின் தனிப்பட்ட செல்வாக்கால் கிடைத்த வாக்குகளும் இதில் இருக்கின்றன. இவற்றையெல்லாம் கழித்துவிட்டுப் பார்த்தால், பா.ஜ.க.வுக்கு கிடைத்திருப்பதென்னவோ 5 சதவீதமோ, 6 சதவீதமோதான் என்று சொல்கிறார்கள் பா.ஜ.க.வின் உண்மை நிலையறிந்த நிர்வாகிகள்.