"ஹலோ தலைவரே, உள்ளாட்சித் தேர்தலில் அவரவர் பலத்தைக் காட்டணும்னு ஒவ்வொரு கட்சியும் தீவிரமா வேலை செய்யுது.''
"ஆமாம்பா, கடைசிக் கட்ட களநிலவரம் எப்படி இருக்குதாம்?''”
"இப்போதைய நிலையில், ஆளுங்கட்சிப் பக்கம்தான் காத்து வீசிக்கிட்டு இருக்கு. முழுமையான வெற்றியைப் பாதிக்கிற வகையில், அ.தி.மு.க. தரப்பு பிரச்சாரம் ஊடுருவி இருக்கு. ஆளுங்கட்சியின் உள்ளடி, போட்டி வேட்பாளர்களாலும் கொஞ்சம் பாதிப்பு இருக்குமாம். அ.தி.மு.க.வுக்கு ஒரு சில மாநகராட்சிகள், நகராட்சிகள் சாதகமா இருக்கு தாம். தனித் துப் போட்டி யிடும் கட்சி களில் எந்தக் கட்சி, அதிக எண்ணிக்கை யில் போட்டி யிடுதுன்னு உளவுத்துறை புள்ளி விபரங்களை எடுத்திருக்கு. அதில், 21 மாநகராட்சிகளின் மொத்த வார்டுகள் 1374 என்றும். அதில் பா.ஜ.க. 1,141 வார்டுகளிலும், நாம் தமிழர் கட்சி 1,127 வார்டுகளிலும், அ.ம.மு.க. 887 வார்டுகளிலும், மக்கள் நீதி மய்யம் 681 வார்டுகளிலும், பா.ம.க. 568 வார்டுகளிலும், தே.மு.தி.க. 513 வார்டுகளிலும் போட்டியிடுது. தி.மு.க. -அ.தி.மு.க.வுக்குப் போட்டியாக பா.ஜ.க.வும் நாம் தமிழர் கட்சியும்தான் அதிக இடங்களில் போட்டியிடுது. அதனால் வெற்றி வரிசையில் 3-ஆவது இடத்தை யார் பிடிப் பார்கள் என்கிற பந்தயம் களைகட்டுது.''”
"ஒரு காலத்தில் இரண்டு கழகங் களுக்கும் அடுத்த இடம் காங்கிர ஸுக்கு ஸ்டெடியா இருந்தது.''”
"உண்மைதாங்க தலைவரே, இப்ப அங்கே உள்ளாட்சித் தேர்த லைவிட உள்ளடி அரசியல் தான் அதிகமா இருக்குது. காங்கிரஸ் கட்சியின் சீனியர் லீடரான ப.சிதம் பரம், தமிழகத் தலைவர் கே. எஸ். அழகிரிக்கு எதிரா வரிஞ்சி கட்ட ஆரம்பிச் சிட்டார். சட்டமன்றத் தேர்தல் முடிந்த போதே தமிழக காங்கிரசுக்குப் புதிய தலைவரை நியமிக்க னும்ன்னு சோனியாவும் ராகுல்காந்தியும் முடிவு செய்திருந்தாங்க. அப் போது, ப.சி.யிடம் தமிழக காங்கிரஸ் தலைவராக நீங்கள் பொறுப்பேற்றுக் கொள்கிறீர்களான்னு சோனியா காந்தி கேட்க, வேண்டவே வேண் டாம்ன்னு ப.சி. மறுத்து விட்டார். வேற யாரையும் அவர் பரிந்துரை செய்யலை.''
"அழகிரியின் செயல் பாடுகளை காங்கிரசின் டெல்லித் தலைமை எப்படி பார்க்குது?''”
"உள்ளாட்சித் தேர் தல் தொடர்பாக சமீபத்தில் தமிழகம் வந்த கட்சியின் சீனியர் பொறுப்பாளர்களில் ஒருவரான ரமேஷ் சென்னி தாலா, பல தலைவர் களுடனும் விவாதிச்சி, அழகிரி பற்றியும் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தேக்கநிலை பற்றியும் மேலே ரிப்போர்ட் கொடுத்திருக்கார். உ.பி. உள்ளிட்ட 5 மாநிலத் தேர்தல்களின் முடிவு வந்ததும், சில மாநிலங்களில் காங் கிரஸ் தலைவர்களை மாற்றுவதற்கு மேலிடம் முடிவு செய்திருக்கு. இந்த நிலையில் கரூர் எம்.பி. ஜோதிமணியை மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் உட்காரவைக் கும் முடிவுக்கு வந்திருக்கிறாராம் ப.சிதம்பரம். அவர் மகன் கார்த்தி யும் ஜோதிமணிக்கு கிரீன் சிக்னல் தருவதாகச் சொல்லப்படுகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் ஜோதிமணி மோதல் போக்கைக் கடைப்பிடித்து வருவதால், அந்த நியமனத்தை தி.மு.க. ரசிக்குமா? என்கிற கேள்வியும் கதர் தரப்பில் எழுந்திருக்கு.''’
"தமிழ்நாட்டிற்கான 6 ராஜ்ய சபா இடங்கள் ஜூன் மாதம் காலியாகுதே?''”
"ஆமாங்க தலைவரே, தமி ழகத்தைப் போலவே மகாராஷ்ட்ரா விலும் 6 இடங்கள் காலியாகுது. அதில் முக்கியமானது ப.சிதம்பரத் தின் பதவி. கடந்த 2016-ல் அங் கிருந்து ராஜ்யசபாவுக்குத் தேர்ந் தெடுக்கப்பட்ட ப.சி.யின் பதவிக் காலம், வரும் ஜூனில் முடிவடை யுது. இந்த நிலையில் இப்போதே, தமிழகத்தில் காலியாகும் இடங் களில் ஒரு இடத்தைக் கைப்பற்ற காய் நகர்த்தத் தொடங்கிவிட்டார் சிதம்பரம். கடந்த முறை வைகோ வுக்கு சீட் ஒதுக்கிய ஸ்டாலின், இந்த முறை காங்கிரசுக்கு ஒதுக்கு வார்னு அவர் நினைக்கிறார். ஆனால் இந்தமுறை அவருக்கு ராஜ்யசபா யோகம் அடிப்பது கஷ் டம் என்றும், ராகுல் அவருக்குத் தர மாட்டார் என்றும் காங்கிரஸ் சீனியர்கள் மத்தியில் டாக் அடிபடுது.''”
"ஓ...''”
"தமிழக தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிப் பணியாளர்களின் ஓய்வூதியக் கோரிக்கை யை எடப்பாடி ஆட்சியில் முழுசா கவனம் செலுத்தலை. கருணைத் தொகையா மாதம் 1000 ரூபாய் மட்டும் வழங்கலாம்னு கடைசி நேரத்தில் உத்தரவு போடப் பட்டது. ஆனா, நடைமுறைப்படுத்தலை. தி.மு.க ஆட்சியில் இது சம்பந்தமான ஃபைல் மீது எந்த முடிவும் எடுக்கப்படலை. பணியாளர்களின் குடும்பத்தினர் ஏக்கமும் அதிருப்தியுமா இருக்காங்க.”
"நம்ம நக்கீரனில் மாநகராட்சி, நகராட்சி தேர்தல் கள நிலவரங்களை விரிவா படிக்க முடிந்தது. திருப்பூர் மாநகராட்சி நிலவரம் என்னவாம்?''”
"கோவை மாதிரி திருப்பூரும் தி.மு.க.வுக்கு டஃப் ஏரியாதான். அங்கே அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வும் செல்வாக்கா இருப்பதால, இரண்டு தரப்பிலும் பணத்தை வாரி இறைச்சி கேன்வாஸ் பண்ணுறாங்க. தி.மு.க சைடில் ஒருங்கிணைப்பு இல்லை. பண முடிச்சை அவிழ்க்க யோசிக்கிறாங்க. யாரு மேயர்னு போராட்டம் நடக்குது. கோஷ்டி அரசியலும் ஓயலை. அ.தி.மு.க. பிரமுகர்களோடு சாதி ரீதியா அன்டர்ஸ்டாண்டிங்கில் தி.மு.க. புள்ளிகள் இருக்காங்க. இதெல்லாம் தலைமையின் கவனத்திற்கும் போயிருக்கு.''”