""ஹலோ தலைவரே, கலைஞர் நூற்றாண்டு நிறைவைக் கோலாகலமாகக் கொண்டாட தி.மு.க. தயாராகிவிட்டது.''’’

""ஆமாம்பா, மாபெரும் திராவிட சக்தியாய் தன்னை உருவாக்கிக்கொண்ட தலைவரல்லவா கலைஞர்!''’’

rang

Advertisment

""உண்மைதாங்க தலைவரே, கலைஞரின் நூற்றாண்டு நிறைவு ஜூன் 3 ஆம் தேதி வருவதால், அதை, மக்கள் நலப் பணிகளைச் செய்வதன் மூலம் வெகு சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்று தி.மு.க.வினருக்கு முதல்வர் ஸ்டா-ன் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். கடந்த 1 வருடமாக கலைஞரின் நூற்றாண்டு விழாவை தமிழகம் முழுவதும் கொண்டாடி வந்த உடன்பிறப்புகள், அதன் ஒரு பகுதியாக 1 கோடி புதிய உறுப்பினர்களை தி.மு.க.வில் சேர்த்து சாதனை படைத்திருக்கிறார்கள். இதன்மூலம், தி.மு.க.வின் உறுப்பினர்கள் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. ஜூன் 4 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வரவிருப்பதால், அன்றையநாளில் வெற்றிக்கொடி ஏற்றுவோம் என்றும் ஸ்டா-ன் அறிவித்திருக்கிறார்.''’’

""தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தமிழக அமைச்சரவை மற்றும் தி.மு.க. மா.செ.க்களின் மாற்றம் இருக்கும்னு தொடர்ந்து தகவல்கள் வருதே?''’’

Advertisment

""ஆமாங்க தலைவரே, மாற்றத்தின் மூலம் கட்சிக்குப் பயனற்ற சிலரைக் களையெடுக்கவும், உதயநிதிக்கு வருவாய்த்துறையைக் கொடுத்து, அவரை துணை முதல்வராக ஆக்கவும் ஸ்டா-ன் நினைத்திருந்தாராம். ஆனால் இப்போதைய நிலையில் இதைச் செய்தால் கட்சி சீனியர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்படலாம் என யோசித்தவர், உள்ளாட்சித் தேர்தல் முடிந்த பிறகு இது போன்ற அதிரடிகளை அரங்கேற்றலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம். அதேபோல், உதயநிதிக்கும், இப்போது துணை முதல்வர் பதவியை ஏற்பதில் தயக்கம் இருக்கிறதாம். இன்னும் கொஞ்சநாள் போகட்டும் என்று அவர் சொன்னதாலும், ஸ்டா-ன் இந்த விசயத்தில் நிதானிக்கிறார் என்கிறார்கள். அதே சமயம், அமைச்சர்களிடம் இருக்கும் மாவட்டப் பொறுப்புகளை விரைவாக மாற்றி அமைக்கலாம் என்று ஸ்டாலின் நினைக்கிறாராம். எனவே அமைச்சர்கள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் மத்தியில் லேசான பதட்டம் இருக்கிறதாம்.''’’

""கலைஞர் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு திரைக்கலைஞருக்கு பத்ம விருதை வழங்கவேண்டும் என்று தமிழக பா.ஜ.க. சிபாரிசு செய்யப்போகிறதாமே?''’’

""தமிழ்ச் சினிமாவிற்குள் கலைஞர் நுழைவதற்கு முதல் காரணமாக இருந்தவர், பிரபல பாடகரான இசைச்சித்தர் சிதம்பரம் ஜெயராமன். அவர்தான் மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபரான டி.ஆர்.சுந்தரத்திடம் கலைஞரை அறிமுகப்படுத்தி வைத்து, வசனம் எழுதவைத்தவர். கலைஞருக்கு மட்டுமல்ல; எம்ஜிஆர், சிவாஜி ஆகியோருக்கும் சினிமா வாய்ப்புகளைப் பெற்றுத் தந்ததில் ஜெயராமனின் பங்களிப்பு அதிகம். கலைஞரின் முதல் மனைவியான பத்மாவதி, சி.எஸ். ஜெயராமனின் சொந்த தங்கை என்பது குறிப்பிடத்தக்கது. பாடகராக மட்டுமல்லாது, இசையமைப்பாளராகவும், நடிகராகவும் தமிழ்ச் சினிமாவில் கோலோச்சிய சி.எஸ்.ஜெயராமனுக்கு இதுவரை மத்திய அரசின் பத்ம விருதுகள் தரப்படவில்லை. இதனை அறிந்த தமிழக பா.ஜ.க., அவருக்கு பத்மஸ்ரீ விருதை வழங்கவேண்டும் என்று டெல்-யிடம் சிபாரிசு செய்ய முடிவெடுத்திருக்கிறதாம். இதன்மூலம் தி.மு.க.வினரின் மனதை ஈர்க்கலாம் என்று கணக்குப் போடுகிறார்களாம்.''’’

""விக்கிரவாண்டி இடைத்தேர்தல் குறித்த பரபரப்பு இப்போதே தெரிகிறதே?''’’

""அக்டோபருக்குள் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு இடைத் தேர்தலை நடத்தவேண்டும் என்பதால் அது குறித்து ஆலோசித்து வருகிறது தேர்தல் ஆணையம். இந்த இடைத்தேர்த-ல், தி.மு.க. சார்பில் தனது மகன் கௌதம சிகாமணியை களமிறக்க வேண்டும் என்று அமைச்சர் பொன்முடி தீவிரமாகக் காய்களை நகர்த்தி வருகிறார். இந்த ரகசிய மூவ் அறிந்து விழுப்புரம் மாவட்ட திமுகவில் உள்ள வன்னிய சமூகத்தினரிடம் கொந்தளிப்பு உருவாகியிருக்கிறது. வன்னியரான தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி காலமானதால்தான் இடைத்தேர்தல் வருகிறது. அதனால் மீண்டும் வன்னியர் ஒருவருக்குத்தான் திமுகவில் வாய்ப்புத் தரவேண்டும் என இப்போதே அவர்கள் குரல் கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். அதேபோல் இங்கே பா.ம.க.வும் போட்டியிடுவதில் உறுதியாக இருக்கிறது. இங்கு நிற்கப்போவதாக அறிவித்த பா.ஜ.க. தங்களுக்கு தொகுதியை விட்டுக்கொடுக்கும் என்று அன்புமணி எதிர்ப்பார்க்கிறாராம்.''’’

""தேர்தல் நேரத்தில் பிடிபட்ட நயினாரின் 4 கோடி விவகாரத்தில் பா.ஜ.க. நிர்வாகிகள் பலரும் சிக்கியிருக்கிறார்களே?''’’

""உண்மைதாங்க தலைவரே, அதில் குறிப்பாக, பா.ஜ.க.வின் மாநில தொழில்துறைப் பிரிவு தலைவரான கோவர்த்தனும் இருக்கிறார். இவர், வெளிநாட்டுக் கார்களை தருவித்துக் கொடுக்கும் பிசினஸில் கொடிகட்டிப் பறப்பவர். இவர்மூலம் தமிழக அமைச்சர்கள் சிலரும் கூட தாங்கள் ஆசைப்பட்ட வெளிநாட்டு கார்களை வாங்கியிருப்பதாகவும் கூறுகிறார்கள். விசயம் இதுவல்ல. இவர் மீது ஏறத்தாழ சந்தனக்கட்டைக் கடத்தல் தொடர்பான வழக்குகளும் இருந்ததாம். அப்படிப்பட்ட இவர்தான் தேர்தல் நேரத்தில் பா.ஜ.க. கேசவவிநாயத்தின் மூலம் வேட்பாளர்களுக்கு விநியோகம் செய்யப்பட்ட பணத்தைக் கையாண்டாராம். இதில் மார்ச் 26 ஆம் தேதி தாம்பரம் ரயில்வே ஸ்டேசனில் பிடிபட்ட நயினாரின் 4 கோடி ரூபாய் பணமும் அடங்கும் என்கிறார்கள். தற்போது போலீஸ் விசாரணையில் சிக்கிய கோவர்த்தனோ, கேசவவிநாயகம் கொடுத்த பணத்தைத்தான் நான் கையாண்டேன் என்று தெளிவாக வாக்குமூலம் கொடுத்திருக்கிறாராம்.''’’

""பலே''’’

""அதனால்தான் இந்த விவகாரத்தோடு தொடர்புடைய கேசவவிநாயகத்துக்கும் பா.ஜ.க.வின் மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகருக்கும் கூட சி.பி.சி.ஐ.டி. போலீஸ், சம்மன் அனுப்பியது. இந்த விவகாரத்தில் கேசவவிநாயகம் தப்பிவிடாமல் கைதாகவேண்டும் என்பதுதான், பா.ஜ.க.வின் அந்த மாநில நிர்வாகியின் ஆசையாம். கேசவவிநாயகத்தை டம்மியாக்க வேண்டும் என்று அந்த பா.ஜ.க. நிர்வாகி எவ்வளவோ முயன்றும், ஆர்.எஸ்.எஸ்.சின் ஆதரவால் அவர் பதவியில் நீடித்து வருகிறாராம். அதனால் இந்த விவகாரத்தில் அவர் வசமாக சிக்கினாலாவது, அவரது பதவி பறிபோகும் என்று அவர் கணக்குப் போடுகிறாராம். இதற்காக பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டத்தையும் அவர் கூட்டினாராம். அந்தக் கூட்டத்தில் கேசவவிநாயகத்துக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை பூதாகரமாக்க சில ஏற்பாடுகளையும் அவர் செய்ததாகவும் சொல்கிறார்கள்.''’’

""ஆனால் பா.ஜ.க. கேசவவிநாயகம், விசாரணைக்கு ஆஜராகாமல் நழுவி வருகிறாரே?''

""ஆமாங்க தலைவரே, சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இந்த விவகாரத்தில் சம்மன் அனுப்பிய நிலையில், அவசரமாக உயர்நீதிமன்றத்துக்கு ஓடிய கேசவவிநாயகம், இந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், எஃப்.ஐ.ஆரை ரத்து செய்யவேண்டும் என்றும் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். எஃப்.ஐ.ஆரில் கேசவ விநாயகத்தின் பெயர் இல்லாத போது, வழக்கை ரத்துசெய்ய இவர் கோரிக்கை வைக்க முடியாது என்பதை, நமது கடந்த நக்கீரன் இதழில் நாம் சுட்டிக்காட்டியிருந்தோம். அதுபோலவே, கேசவ விநாயகத்தின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, ஜூன் 3#க்கு விசாரணையை ஒத்தி வைத்துவிட்டார். எனவே சி.பி.சி.ஐ.டி.யின் விசாரணையை எதிர்கொள்ள வேண்டிய நெருக்கடி கேசவவிநாயகத்துக்கு ஏற்பட்டிருக்கிறது. அதனால், என்னை எங்கள் கட்சி அலுவலகத்தில் வந்து விசாரியுங்கள். உங்கள் அலுவலகத்துக்கு என்னை கூப்பிடாதீர்கள் என்று போலீஸ் டீமிடம் கெஞ்சிவரும் அவர், இந்த நெருக்கடியில் இருந்து தப்பிக்க, தி.மு.க. தரப்புக்குத் தூதுவிட்டிருக்கிறாராம்.''’’

""சரிப்பா, ஈரோடு அ.தி.மு.க.வேட்பாளரைக் காணவில்லைன்னு சொல்றாங்களே?''’’

""நாடாளுமன்றத் தேர்த-ல் அ.தி.மு.க. நிறுத்திய வேட்பாளர்களில் பலரது கவனத்தையும் ஈர்த்தவர், ஈரோட்டில் களமிறக்கப்பட்ட ஆற்றல் அசோக்குமார். காரணம், மொடக்குறிச்சி பா.ஜ.க. எம்.எல்.ஏ. சரஸ்வதியின் மருமகனான அவர், தனது சொத்து மதிப்பு 653 கோடி ரூபாய்னு சொல்-, தேர்தல் ஆணையத்தையே திகைக்க வைத்தார். பா.ஜ.க.வில் இருந்த இவர், தேர்தலுக்கு மூன்று மாதங்கள் இருந்த நிலையில்தான் எடப்பாடியைச் சந்தித்து, அ.தி.மு.க.வில் ஐக்கியமானார். அப்படி ஐக்கியமாகும்போதே தனக்குத் தேர்த-ல் சீட் கொடுக்கவேண்டும்ங்கிற நிபந்தனையோடுதான், அ.தி.மு.க. ஜோதியில் கலந்தார். அப்போது தனது தொகுதிக்கு 200 கோடி ரூபாய்வரை செலவு செய்வேன்னு சொன்னதோடு, பக்கத்தில் இருக்கும் நீலகிரிக்கும் 100 கோடி வரை தேர்தல் செலவு செய்து, அ.தி.மு.க.வை ஜெயிக்கவைப்பேன்னு அசோக்குமார் வாக்குறுதி கொடுத்து எடப்பாடியைப் பூரிப்பில் புல்லரிக்க வைத்தார். சீட் கொடுக்கப்பட்டதும் ஈரோடு அ.தி.மு.க. நிர்வாகிகள் யாரையும் அழைக்காமல் தனது ஆற்றல் பவுண்டேஷனைச் சேர்ந்த ஊழியர்களை வைத்து தேர்தல் பணியையும் தொடங்கினார்.''’’

""சரி, ஆரம்பம் நல்லாத்தான் இருக்கு.''’’

""ஆனா, அதுக்குப் பிறகுதான் ஆற்றல் தன் ஆற்றல் என்னங்கிறதைக் காட்ட ஆரம்பிச்சார். அதாவது, பூத் கமிட்டிக்கு பணம் கொடுக்கணும்... அன்றாட தேர்தல் செலவுக்குப் பணம் வேணும்னு கட்சி நிர்வாகிகள் அவரை அணுகியபோது, எங்கிட்ட ஒரு பைசா கூட இல்லைன்னு கை விரிச்சிருக்கார். மாஜி மந்திரிகளான கே.ஏ.செங்கோட்டையன், தங்கமணி, கே.வி.ராம லிங்கம் போன்றவர்களும், தேர்தல் செலவையாவது செய்யுங்கன்னு சொல்ல, அந்த அசோக்குமாரோ, ’இது உங்க கட்சி, உங்க சின்னம்... அதனால நீங்களே செலவு செய்யுங்க. தேர்தல் முடிஞ்சதும், பணத்தை நான் தந்துடறேன்னு டயலாக் அடிச்சி, அவர்களைத் திகைக்க வச்சிருக்கார். இதையறிந்த எடப்பாடியே அவர்ட்ட பேசியும், அதே பல்லவியை அசோக் பாடியிருக்கார். வேறு வழி இல்லாமல் தங்கமணி, வேலுமணி உள்ளிட்டவர்கள், பிறகு அசோக்குமாரிடம் வாங்கிக்கலாம்னு நினைச்சி, தேர்தல் செலவுகளைப் பார்த்திருக்காங்க. தேர்தல் முடிந்த நிலையில் அனைவரும் அவரைத் தேட, அவர் ஃபாரின்ல ரெஸ்ட் எடுக்கிறார்னு அவர் தரப்பி-ருந்து சொல்-யிருக்காங்க. பணத்தைக் கொடுக்க வேண்டிய அவர் எஸ்கேப் ஆகிவிட்டதை உணர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகள், அவர் எப்ப திரும்பி வருவாரோன்னு ஆகாயத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்களாம்.''’’

kesava vinayagam

""ஓ.பி.எஸ். தரப்புக்கு எடப்பாடி ரூட் விட்டிருக்கிறாரே?''’’

""உண்மைதாங்க தலைவரே, ஓ.பி.எஸ்.ஸின் தீவிர ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன், அண்மைக்காலமாக அவரிடம் இருந்து விலகி நிற்கிறாராம். அண்மையில் பெரும்பிடுகு முத்தரையரின் சதய விழாவிற்கு மாலையணிவிக்க ஓ.பி.எஸ். வந்தபோது, அவருடன் தலையைக் காட்டாமல் கு.ப.கி. எஸ்கேப் ஆகிவிட்டாராம். இதற்குக் காரணம், எடப்பாடித் தரப்பின் தூண்டில் வீச்சுதான் என்கிறார்கள். அதேபோல் ஓ.பி.எஸ்.ஸின் படைத் தளபதிபோல் இருந்த வைத்தி-ங்கமும் இப்போது அவரிடமிருந்து ஓரம்கட்டி நிற்கிறாராம். காரணம், தனக்கும், தன் மகனுக்கும் மட்டுமே பா.ஜ.க.விடம் லாபம் பார்க்க ஓ.பி.எஸ். துடிப்பது அவரை, எரிச்சல்படுத்தியதாம். இவரது மனநிலையை உணர்ந்த எடப்பாடி, மாஜி மந்திரி செங்கோட்டையன் மூலம் அவருக்கும் ரூட் விட்டாராம். வைத்தியை சந்தித்து அவருடன் மதிய விருந்தை சாப்பிட்ட வைத்தி-ங்கம், பாராளுமன்றத் தேர்தல் முடிவு வந்ததும் சூழலைப் பார்த்துவிட்டு எடப்பாடி பக்கம் வருகிறேன் என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறாராம்.''’’

""சசிகலாவை கட்சிக்குள் அனுமதித்து, அவர் மூலம் முக்குலத்தோர் ஆதரவை பெருக்கலாம் என்கிற முடிவுக்கு எடப்பாடியே வந்திருக்காரே?''’’

""ஆமாங்க தலைவரே... எடப்பாடியிடம் இருந்த சசிகலா எதிர்ப்பு, இப்போது குறைந்துவிட்டதாம். அவரை அ.தி.மு.க.வில் சேர்ப்பது குறித்துப் பேச, வேலுமணியை நேரில் அனுப்பினாராம் எடப்பாடி. சசிகலா வேலுமணியை சந்தித்தபோதும், அவர் அ.தி.மு.க.விற்கு விசுவாசமாக இருப்பார் என்று சசிகலாவே நம்பவில்லையாம். எனினும், அ.தி.மு.க. நிர்வாகிகளுக்குப் பிடிக்காமல் போய்விட்ட தினகரனை முழுதாகக் கழற்றிவிட்டு விட்டு, தான் மட்டும் தனது ஆதரவாளர்களுடன் அதிமு.க.வில் இணையத் தயாராக இருக்கிறாராம். சசிகலா மூலம் முக்குலத்தோர் வாக்குகளை பழையபடி முழுமையாகத் திரட்டலாம் என்று கருதும் எடப்பாடி, நேரில் சந்திக்க வேண்டும் என்று கேட்ட சசிகலாவுக்கு, எந்த பதிலையும் அனுப்பவில்லையாம். அ.தி.மு.க.விற்குள் வந்தபிறகு அதன் லகானைப் பற்றிக்கொள்ளலாம் என்பதுதான் சசியின் எண்ணமாம்.''’’

""காங்கிரஸ் சீனியரான ப.சிதம்பரம் ஏதோ கணக்கெடுக்கிறார்னு சொல்றாங்களே?''’’

""தேர்தல் முடிவுகள் வர இருக்கும் நேரத்தில் காங்கிரஸýக்கு சிவகங்கை தொகுதியில் எவ்வளவு வாக்குகள் விழும் என்கிற கணக்கை எடுத்துக்கொண்டிருக்கிறார், காங்கிரஸ் சீனியரான ப.சிதம்பரம். நடந்த நாடாளுமன்றத் தேர்த-ல் தனது மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு, சிவகங்கை தொகுதியிலேயே மீண்டும் சீட் வாங்கிய ப.சி., அவரது வெற்றி எந்த அளவுக்கு இருக்கும் என்று கணக்கெடுக்க விரும்புகிறாராம். இதைத்தொடர்ந்து, முத-ல் சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள திருமயம் சட்டமன்றத் தொகுதி வாக்குச்சாவடி முகவர்களை வியாழக்கிழமை சந்தித்து, பதிவான வாக்குகள் குறித்தும்... அதில் காங்கிரஸ் கட்சிக்கு உத்தேசமாக கிடைக்கும் வாக்குகள் பற்றியும் விசாரித்திருக்கிறார். அதற்கு அடுத்தநாள் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியிலும் கணக்கெடுத்தவர், அடுத்தடுத்து தொகுதியின் மற்ற பகுதிகளிலும் பல்ஸ் பார்த்திருக்கிறார். இதற்கிடையே காங்கிரஸ் வாக்குச் சாவடி முகவர்களுடன் கீரமங்கலத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்திய ப.சி., கட்சிக்காரர்களின் குறைகளையும் கேட்டறிந்தாராம்.''’’

""காவல்துறையில் சலசலப்பு தெரிகிறதே?''’

""ஆமாங்க தலைவரே, ஏ.டி.ஜி.பி.க்களில் ஒருவரான அருண், ரெஸ்ட் எடுக்கும் எண்ணத்தில் முறைப்படி விடுப்பு எடுத்துக்கொண்டு, வெளியூர் சென்றிருக்கிறார். இதனால் அவரது சட்டம் ஒழுங்கு பொறுப்பு, தலைமையிட ஏ.டி.ஜி.பி.யான டேவிட்சன் தேவாசிர்வாதத்திடம் வந்திருக்கிறது. இந்த நேரத்தில் நெல்லை பகுதியில் சாதி ரீதியிலான படுகொலைகள் பகீரூட்டும் அளவுக்கு அதிகரித்து வருகிறதாம். காரணம், டேவிட்சனால் நியமிக்கப்பட்ட ஒரு சமூகத்தைச் சேர்ந்த சில காவல்துறை ஆட்கள்,’ ஆர்கனைஸ்டு க்ரைம் இண்ட-ஜென்ஸ் யுனிட்’டில் இருப்பதுதான் என்ற புகார், காவல்துறையிலேயே பலமாக எழுந்திருக்கிறது.''

""நானும் என் கவனத்துக்கு வந்த தகவல் ஒரு தகவலைப் பகிர்ந்துக்கறேன். காங்கிரஸ் பிரமுகர் நெல்லை ஜெயக்குமார் கொலை வழக்கை கையில் எடுத்திருக்கும் சி.பி.சி.ஐ.டி. டீம், அதில் தீவிரம் காட்டத் தொடங்கியிருக்கிறது. ஜெயக்குமார் எழுதிய கடிதங்களில் சுட்டிக் காட்டப்பட்ட நபர்களை சி.பி.சி.ஐ.டி. போலீசாரும் விசாரிக்கத் தயங்கினாலோ அல்லது தவிர்த்தாலோ, இந்தக் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று சொல்லும் தமிழக பா.ஜ.க., இது தொடர்பாக

நீதிமன்றத்தின் கதவைக்கூட தட்டலாம் என்கிற முடிவுக்கு வந்திருக்கிறதாம். இதற்காக, ஜெயக்குமாரின் குடும்ப உறுப்பினர்களில் சிலரை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாம் பா.ஜ.க.''’’

இறுதிச் சுற்று!

final around