80 ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட திராவிடர் கழக ஏடான "விடுதலை'யை, 60 ஆண்டு கால மாக ஆசிரியர் பொறுப்பேற்று லட்சிய வேகம் குறையா மல் நடத்திவரும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணிக்கு, கடந்த 27 ஆம் தேதி சென்னை பெரியார் திடலில் பாராட்டுவிழா நடந்தது. இதில் பத்திரிகையாளர்களும் எழுத் தாளர்களும் கலந்து கொண்டு ஆசிரியருக்குப் புகழாரம் சூட்டினர்.
விழாவிற்குத் தலைமை ஏற்ற விடுதலையின் நிர்வாக ஆசிரியரான கவிஞர் கலி பூங்குன் றன் "இன்றைக்கு "விடுதலை' வார ஏடாக மாறாமல், நாளேடாக இருந்துகொண்டு, கருத்து மணம் பரப்பியபடி உரிமைப் போர்க் கொடியைத் தூக்கியபடி பீடு நடையும், வீறு நடையும் போடு கிறது என்றால், அதற்குக் கார ணம், நம் ஆசிரியர். தன் 29-ஆம் வயதில் "விடுதலை' ஆசிரியர் பொறுப்பினை -அய்யா தந்தை பெரியார் ஆணைப்படி ஏற்றுக் கொண்ட நம் ஆசிரியரால் இது நடந்தது. இதற்காக திராவிடர் கழகம் மட்டுமல்ல, தமிழ்கூறும் நல்லுலகமே அவருக்கு நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டிருக் கிறது''’என்றார் பெருமிதமாக.
எழுத்தாளர் ஓவியா தனது உரையில், "விடுதலைதான் என் தாய். அது இல்லை என்றால் நான் இல்லை. அதுமட்டுமல்ல, விடுதலை ஏடு இல்லை என்றால் தமிழ்நாட்டின் கருத்துச் சுதந் திரமே இருந்திருக்காது. கம்யூ னிஸ்டு கட்சி தடை செய்யப் பட்டு, சேலம் சிறையில் தோழர் கள் சுட்டுக் கொல்லப்பட்டபோது கூட, தந்தை பெரியாரும், திரா விடர் கழகமும், விடுதலையும் தான் அவர்களுக்காக வாதாடி யது. "விஞ்ஞானத்தின் உதவியால் மனிதன் நீண்ட ஆயுளுடன் வாழ்வான்' என்று ஐயா பெரியார் சொன்னார். அதற்கு உதாரண மாக இன்னும் நீண்டகாலம் நம் ஆசிரியர் வாழவேண்டும்''’என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
'தீக்கதிர்' ஆசிரியர் மதுக் கூர் இராமலிங்கமோ, "அரசியல், பதவியில் அமர்வதில்லை என்று தீர்மானித்துக் கொண்டு வீறு நடைபோடும் ஓர் இயக்கம் நடத்துகிற நாளேட்டிற்கு, ஆசிரியராக இருப்பது என்பது சாதாரணமானதல்ல. அவர் இதழாசிரியராக இருந்த அனு பவம்தான், என் வயது. பெரியார் என்னும் பேருருவம் இப்போதும் சிலரை அச்சுறுத்திக் கொண்டி ருக்கிறது. சிறீரங்கம் கோபுரத் தைப் பற்றிப் பேசாமல், அதன் எதிரில் அமைதியான வகையில் வடிக்கப்பட்டிருக்கும் பெரியார் சிலை பற்றிதான் சிலர் சீறி எழுகிறார்கள். பெரியார் உடலால் மறைந்தாலும், உணர்வால் அவர் வாழ்வதையே இது காட்டு கிறது''’என்றார் ஏகடியமாக.
கலைஞர் தொலைக்காட்சி யின் தலைமைச் செய்தி ஆசிரிய ரான ப. திருமாவேலன் தனது உரையில், "அய்யாவின் நூல் களும், ஆசிரியரின் உரைகளும் இல்லை என்றால் நான் படித்த வழக்குரைஞர் தொழிலுக்குச் சென்றிருப்பேன். இவைதான் என்னை அங்கே கொண்டு செலுத்தாமல், பத்திரிகைத் துறைக்கு வழியனுப்பி வைத்தன. 30 ஆண்டுகளுக்கு மேலாக இதழியல் துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். 1962-இல் "விடுதலை' ஆசிரியர் பொறுப்பை ஏற்ற காலம் முதல் இன்றுவரை சிறப்பாக நடத்திக்கொண்டி ருக்கிறார் ஆசிரியர். இன்று தந்தை பெரியாரின் உருவப் படத்தை எல்லாம் நாம் பார்க்கிறோம் என்றால், அதை எல்லாம் விடுதலை மலருக்காக, பெரியாரை ஸ்டுடியோக்களுக்கு அழைத்துச்சென்று படம் எடுக்கச் செய்தவர் நம் ஆசிரியர்''’என்றார் உணர்வுப்பூர்வமாக.
ஜனசக்தி ஆசிரியர் கே.சுப்பராயன் எம்.பி. தனது உரையில், "பத்தோடு பதினொன்று என்ற வகையில் நடக்கும் நிகழ்ச்சி யல்ல இது. பெரியார், வீரமணி, விடுதலை -இம்மூன்றும் கவனிக் கப்பட வேண்டிய ஆளுமைகள். இன்று நாட்டை இந்துத்துவம் என்பது கவ்விக் கொண்டிருக் கிறது. இந்தியாவில் ஜனநாயகம் சீரழிக்கப்படும் ஆபத்து தலை தூக்கி நிற்கிறது. இந்தத் தீய சக்திகளை வேரறுக்கும் தொண்டி னை தம் வாழ்நாள் முழுவதும் செய்தவர் தந்தை பெரியார். உரிமைக்காகப் போராடுகிறவர் களுக்கு ஆயுதங்களை உற்பத்தி செய்து கொடுத்துக் கொண்டிருக் கும் பட்டறைதான் திராவிடர் கழகம்''’என்று எடுத்துரைத்தார்.
நமது ஆசிரியர் நக்கீரன் கோபால் தன் உரையில், "ஆசிரியர் ஐயா அவர்கள், இந்த 90 வயதிலும் சுறுசுறுப்பாகச் செயல்படுகிறார். அவர் வேகத்தைப் பார்த்து வியக்கிறேன். தந்தை பெரியாரும், விடுதலையும் எங்கள் பின்னணியில் இருப்பதால் தான் எங்களால் "நக்கீரனை' நடத்த முடிகிறது. எங்கள் முன் ஏர் விடுதலை. அக்னி ஹோத்திரம் ராமானுஜ தாத்தாச்சாரியாருடைய தொடரை "நக்கீரன்' வெளியிட்டது. அதைத் தொகுத்து ’"இந்து மதம் எங்கே போகிறது'’ என்ற நூலாக்கியபோது, அவங்க குகைக்கே போய் கண்ணில் விரலை விட்டு ஆட்டுகிற மாதிரி, ஸ்ரீரங்கம் கோயிலுக்குப் பக்கத்திலேயே மேடை போட்டு, என்னையும் அழைத்து அதை ஆசிரியர் அவர்கள் அங்கே வெளியிட்டார்கள். அப்படி அசாத்தியத் துணிச்சல் அவருடையது. எத்தனை பத்திரிகை ஆசிரியர்கள் இருந்தாலும் ஆசிரியர் என்றால் நம் ஆசிரியர்தான் என்ற அடையாளத்தைப் பெற்றிருக்கிறார். இதற்கு அவர் கொடுத்திருக்கும் விலை ஜாஸ்தி. இந்த வயதிலும் கொள்கையிலும் சுயமரியாதையிலும் கொஞ்சமும் சறுக்காத ஆசிரியர் அவர்களை வணங்குகிறேன்''’என்றார் பெருமிதத்தோடு.
"ஃபரண்ட் லைன்' ஆங்கில இதழின் முன்னாள் ஆசிரியர் விஜய்சங்கர் தனது உரையில், ” "60 ஆண்டுகளாக ஓர் ஏட்டுக்குத் தொடர்ந்து ஆசிரியராக இருக்கும் நாட்அவுட் பேட்ஸ்மேனாக ஆசிரியர் திகழ்கிறார். இது ஒரு உலக சாதனை. யாரும் இதுபோல் இருந்ததில்லை'' ’என்றார் உற்சாகமாக.
"விடுதலை' ஏட்டின் தொடர் வாசகரும் முன் னாள் அமைச்சருமான பொன். முத்துராமலிங்க மும் வாழ்த்துரை வழங்கி னார். அவர் தனது உரை யில், "தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையில் "திராவிட மாடல்' ஆட்சி நடை பெற்றுக்கொண்டிருக்கிறது என்றால், அது தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் வழியில்தான். இவ் வாட்சிக்கு வழிகாட்டி யாக போர் அரணாக இருப்பவர் நமது ஆசிரியர்''’என்றார் தெளிவாக.
ஆசிரியர் வீரமணி தனது ஏற்புரையில், "விடுதலை' ஏட்டின் 60 ஆண்டுகால ஆசிரியர் என்று என்னை எல்லோரும் பாராட்டினார்கள்கள். விடுதலையை நானும் விடப்போவதில்லை. விடுதலையும் என்னை விடப்போவதில்லை. கடைசி விடுதலையான மரணம் ஒன்றுதான் விடுதலையை யும் என்னையும் பிரிக்கலாமே தவிர, வேறு எவை யும் எங்களைப் பிரிக்காது. அது என் மூச்சுக்காற்று போல ஆகிவிட்டது''’என்று நெகிழ்ந்தவர்...
"அனைவருக்கும் அனைத்தும் தரக்கூடிய சமூக நீதித் தத்துவத்திற்காக பிறந்த ஏடு விடுதலை. அது அனைவருக்கும் உரிய ஏடு. யார், யாரெல்லாம் மக்கள் உரிமைக்காகப் போராடுகிறார்களோ, யார், யாரெல்லாம் பெண்ணடிமை ஒழியவேண்டும் என்று சொல்கிறார்களோ, அவர்கள் அத்துணை பேருக்குமான ஏடு. எங்களுக்கு எதிரி என்றால் மோசமான தத்துவங்களும் கொள்கைகளும்தானே தவிர, தனி மனிதர்கள் அல்ல. விடுதலையும் தனிப் பட்ட கட்சியின் பத்திரிகை அல்ல... இதைப் புரிந்து கொள்ளவேண்டும்''’என்றார் அழுத்தம் திருத்தமாக.
பல்வேறு கட்சிப் பிரமுகர்களும் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர். "விடுதலை' இதழின் சிறப்பு மலரும் இதில் வெளியிடப்பட்டது. உணர்ச்சிமயமாக நடந்த இந்த விழா, அத்தனை பேர் மனதிலும் திராவிட இயக்கத்தின் கடந்த கால வரலாற்றை அரங்கேற்றித் தலை நிமிரச் செய்தது.
-தொகுப்பு: தமிழ்நாடன்