"அந்தம்மா மேல கொலை வழக்கு இருக்கு, கைதாகி சிறைக்கும் போய்ட்டு வந்திருக்காங்க. நீதிமன்றத்திலும் வழக்கு இருக்கு, அப்படிப்பட்ட அந்தம்மாவை கட்சியின் பொதுக்கூட்ட மேடையில் எப்படி உட்காரவைக்கலாம்?''’-என திருவண்ணா மலை மாவட்ட அ.தி.மு.க. பிரமுகர்களும், ரத்தத்தின் ரத்தங்களும் மிரட்சியாகக் கேட்கிறார்கள்.

tt

யார் அந்தப் பெண்மணி?

திருவண்ணாமலை அ.தி.மு.க. நகரச் செயலாளராக பல ஆண்டுகள் இருந்தவர் கனகராஜ். கவுன்சிலராகவும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவராகவும் கூட இருந்திருக்கிறார். கட்டப்பஞ்சாயத்து, ரியல் எஸ்டேட் என நக ரத்தில் டானாக வலம்வந்தார் கனகராஜ். அவருக்கும் தி.மு.க.வில் இருந்த பங்க் பாபுவுக்கும் ஏற்பட்ட பகையால், 2017ஆம் ஆண்டு கனகராஜை வெட்டிப் படுகொலை செய்தார் பங்க் பாபு.

Advertisment

அப்போது கனகராஜ் மனைவி ஞானசௌந்தரி கைக்குழந்தையுடன் இருந்தார். கனகராஜ் ஆதரவாளர்கள் சிலர் இதற்கு பழிக்குப் பழி வாங்குவோம் என சபதமெடுத்தனர். இந்த நிலையில் கடந்த 2020 டிசம்பரில் பட்டப்பகலில் பங்க் பாபுவும் படுகொலை செய்யப்பட்டார். அந்த கொலை வழக்கில் கனகராஜ் மனைவி ஞான சௌந்தரியை முதல் குற்றவாளி என கைது செய்து சிறையில் அடைத்தது போலீஸ்.

அப்படிப்பட்ட ஞானசௌந்தரியை, கடந்த 17ஆம் தேதி திருவண்ணாமலை நகரில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழாப் பொதுக்கூட்ட மேடையில், முதல் வரிசையில் உட்கார வைத்திருக்கிறார்கள். இதுதான் கட்சித் தலைமை வரை புகாராகப் போயிருக்கிறது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க. பிரமுகர்கள், ”கனகராஜ் படுகொலை செய்யப்பட்ட பின்பு கொலை செய்த பங்க் பாபு வெளியே வந்து, பஞ்சாயத்து செய்யத் துவங்கினார். கனகராஜுக்கும் தனக்கும் இடையில் பிரச்சினையாக இருந்த சொத்தை, கனகராஜ் மனைவியை மிரட்டி வாங்கிக்கொண்டு கெத்தாக வலம் வந்த பாபுவை, கனகராஜ் மனைவி பழிக்குப் பழி வாங்குவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. பங்க் பாபுவை படுகொலை செய்த வழக்கில் கனகராஜ் மனைவியை போலீஸ் கைது செய்தபோது, இந்த நகரமே மிரண்டுபோய்ப் பார்த்தது.

Advertisment

இதன்பின் சிறை, ஜாமின், ரியல் எஸ்டேட் தொழில் என அமைதியாக இருந்த ஞானசௌந்தரி திடீரென அரசியலுக்குள் வருவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. முதலில் ஜெ.’ பிறந்தநாளுக்கு அவர் பேனர் வைத்தார். அதன்பின் தொடக்கத்தில் முன்னாள் அமைச்சர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி பின்னால் சென்றார். இப்போது திருவண்ணாமலை கிழக்கு மா.செ. என்கிற முறையில் ராமச்சந்திரன் பின்னால் நிற்கிறார். இரண்டு வாரங்களுக்கு முன்பு 18ஆவது வார்டில் கட்சி உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சியையும் ஞானசௌந்தரி நடத்தினார். அதில் மா.செ, மற்றும் ந.செ. செல்வம் போன்றவர்களும் கலந்துகொண்டார்கள்.

ss

வடக்கு, தெற்கு என இருந்த மாவட்டக் கழகத்தை நான்காகப் பிரித்து ராமச்சந்திரனை கிழக்கு மா.செவாக நியமித்தபோது, கட்சியில் பெரும் எழுச்சி இருந்தது. திருவண்ணாமலையில் அவர் நடத்திய ஊர்வலம் தி.மு.க.வினரைக்கூட அதிர்ச்சியடையச் செய்தது. அமைச்சர் வேலுவை எதிர்த்து அரசியல் செய்ய இவர்தான் சரியான ஆள் என்று நினைத்து, தொண்டர்கள் இவர் பின்னால் திரண்டார்கள். ஆனால் அவர் அதனை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அக்ரியே, அமைச்சர் வேலுவை எதிர்த்து எப்போதாவதுதான் பேசுவார். கட்சி அலுவலகத்தில் கூட அவர் குறித்து இவர் பேசுவதில்லை. அன்டர்கிரவுண்டில் அமைச்சர் வேலுவுடன் டீலிங் வைத்திருக்கிறாரோ என்கிற சந்தேகத்தில் இவரிடமிருந்தும் தொண்டர்கள் இப்போது விலகி நிற்கிறார்கள். இதனால் திருவண்ணாமலை மாநகரத்திலேயே இவருக்கு ஆதரவாளர்களே இல்லை. அத னால்தான் இவர், தன் சாதியைச் சேர்ந்த ஞானசௌந்தரிக்கு முக்கியத்துவம் தருகிறார். அந்தம்மாவும் கட்சி நிகழ்ச்சிக்கு செலவு செய்கிறார், கட்சிக் காரர்கள் யார் அவர் வீட்டுக்குச் சென் றாலும் செலவுக்குப் பணம் தந்து அனுப்புகிறார். அவர் பின்னால் இருபது இளைஞர்கள் இருக்கிறார் கள். இதுதான் அவரது பலம். அதனை ராமச்சந்திரன் பயன்படுத் திக் கொள்கிறார். கட்சியில் அடிப் படை உறுப்பினராக மட்டும் இருப்பவரை, கொலை வழக்கில் சிக்கிய அம்மணியை மேடையில் முன்வரிசையில் உட்காரவைப்பதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடிய வில்லை''’என்கிறார்கள் ஆதங்கமாய்.

இதுகுறித்து மா.செ. ராமச் சந்திரனிடம் நாம் கேட்டபோது, "அந்த பெண்மணி மீது கொலைக் குற்றச்சாட்டு உள்ளது தெரியும். அவரை மேடையின் முதல் வரிசை யில் திடீரென சங்கர் என்பவர் கொண்டுவந்து உட்காரவைத்து விட்டார். இதற்குமேல் இப்படி நடந்துகொள்ளக்கூடாது என கண்டித்து சொல்லிவிட்டேன். நான் முழுமையான அரசியல்வாதி. என் பெயரை சமுதாயத்தில் கெடுத்துக் கொள்ள நான் விரும்புவேனா? சாதி பார்க்கிறேன், சாதிக்காரர்களை வளர்த்துவிடுகிறேன் எனச் சொல்வது பொய்யானது. நான் சாதி பார்ப்பதில்லை, அனைத்து சாதியினரையும் அரவணைத்தே அரசியல் செய்கிறேன்''’ என்றார் அமைதியாக.