ள்ளாட்சிகள் தோறும் மக்கள் கிராம சபை- வார்டு சபையை பெருமளவிலான பெண்களின் பங்கேற்புடன் நடத்தும் தி.மு.க., தனது வீக் ஏரியாவான கொங்கு மண்டலத்தில் ஸ்பெஷல் கவனம் செலுத்துகிறது. அதனால், உள்ளாட்சித் துறை அமைச்சரான வேலுமணியின் கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட தேவராயபுரத்தில் முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சரான மு.க.ஸ்டாலின் பங்கேற்ற கூட்டம் ஜனவரி 2ஆம் நாள் நடந்தது.

admk

வேலுமணி மீதான ஊழல் புகாருடன் தி.மு.க. ஏற்கனவே உயர்நீதிமன்றம் வரை சென்ற நிலையில், அமைச்சர் தரப்போ ஸ்டாலின் வருகையை கண்கொத்தி பாம்பாக கவனித்திருந்தது. மக்கள் கிராமசபை கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், ""அ.தி.மு.க ஆட்சியில் உள்ளாட்சித்துறையை அசிங்கப்படுத்தி கேவலப் படுத்தியிருக்கிறார்கள். இந்த ஆட்சியின் ஊழல்களை ஒவ்வொரு ஊராட்சியாக எடுத்துச் சொல்லி வருகிறோம். அதனால் இந்தக் கூட்டங்களுக்கு எப்படியாவது தடை ஏற்படுத்த வேண்டும் என்று அமைச்சர் வேலுமணி செயல்படுகிறார்'' என்றபோது, ஒரு பெண் எழுந்து, ""இந்த தொகுதியில் எத்தனை வேலை செய்திருக்கிறார் தெரியுமா வேலுமணி?'' என்றார். ஸ்டாலின் பொறுமையாக, ""நீ எந்த ஊரும்மா?'' எனக் கேட்டார்.

உடனே அந்தப் பெண் சுகுணாபுரம் என்று .வேலுமணியின் ஊரை சொன்னார் .

Advertisment

""உங்களை வேலுமணி அனுப்பி வச்சா ராம்மா? போம்மா வெளியே'' என சொன்ன ஸ்டாலினுக்கு எதிராக கோஷமிட்டார் அந்தப் பெண்.

கோபமான உடன் பிறப்புகள்... அந்தப் பெண்ணை வெளியேற்ற போலீஸ் அங்கிருந்து மீட்டுச் சென்றது.

அந்தப் பெண்ணின் பெயர் வி.பூங்கொடி. அ.தி. மு.க.வின் மாநில மகளிரணி துணைத் தலைவியாக இருக்கிறார். வாளையார் ரோடு சுகுணாபுரத்தில் செந்தில் நகரில் வீடு இருக்கிறது. மந்திரி தரப்பின் உத்தரவின்படி, தி.மு.க.வினர் அணியும் கறுப்புசிவப்பு தொப்பி அணிந்து, ஸ்டாலின் கூட்டத்தில் குழப்பம் ஏற்படுத்துவதற்காகவே அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார். அதாவது, கேள்வி கேட்கும்போது ஸ்டாலின் கோபமானால், கட்சியினர் அந்தப் பெண்ணைத் தாக்குவார்கள். பட்டியல் இனப்பெண் மீது தி.மு.க. தாக்குதல் நடத்தியது என்பதை முன்வைத்து, தி.மு.க.வுக்கு எதிரான அலையை உருவாக்கலாம் என்பதுதான் வேலுமணி தரப்பு ப்ளான்.

Advertisment

ddd

இந்தத் தகவல் முன்கூட்டியே ஸ்டாலின் வரை தெரிந்துவிட்டதால்தான், ""நேற்றே எனக்கு இந்த தகவல் தெரியும், எப்படியும் அ.தி.மு.க.வினர் இடையூறு செய்வார்கள் என நான் எதிர்பார்த்தேன். இது தொடர்ந்தால் அ.தி.மு.க.வின் எந்த கூட்டத்தையும் நாங்கள் நடத்த விடமாட்டோம்'' என்றார் ஸ்டாலின். கேள்வி கேட்ட பெண்ணை பாதுகாப்பாக அனுப்பிவைக்கச் செய்தார். அவரை அழைத்து வந்த ஆளுந்தரப்பு ஆண் பிரமுகரை கவனித்து அனுப்பினர் உ.பிக்கள்.

அதுமட்டுமல்ல, தி.மு.க. நடத்தும் கிராமசபை கூட்டத்தில், மாற்றுக்கட்சியினரும் கலந்து கொள்கிறார்கள் என்பதற்கு இந்த நிகழ்வே சான்று என்பதாகவும் தி.மு.க இதனைப் பிரச்சாரம் செய்கிறது.

அன்று மாலை, ஈரோடு கோபிசெட்டி பாளையம் தொகுதியில் சிறுவலுர் கிராமத்தில் நடந்த மக்கள் சபை கூட்டத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் கூட்டம் அலை மோதியது. அருந்ததிய பெண்கள் 3.5 சதவிகிதம் உள் இட ஒதுக்கீடு குறித்து சிலாகித்து பேசினார்கள். தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கட்சி நிர்வாகிகள் தங்கள் பகுதி மக்களிடமிருந்து விலகியிருக்காமல் செய்யும் உத்தியாகவும் இந்த மக்கள் சபை கூட்டங்களைக் கையாள்கிறார் ஸ்டாலின்.

ஈரோட்டில் உள்ள சக்தி சுகர் விடுதியில் தங்கியவர் 3-ந் தேதி வெள்ளோடு கிராமத்தில் இருக்கும் தென்னந்தோப்பில் மக்கள் சபை கூட்டத்தை நடத்தினார். இதிலும் பெண்கள் கூட்டமே அதிகமாய் இருந்தது. அ.தி.மு.க.வை நிராகரிக்கிறோம் என்கிற தீர்மானத்தை ஒவ்வொரு கூட்டத்தின் முடிவிலும் ஒட்டுமொத்த குரல் ஒலியுடன் நிறைவேற்றி, கையெழுத்தும் பெறுவதை தி.மு.க நிர்வாகிகள் மேற்கொள் கின்றனர்.

கொங்கு மண்டலத்தில் பெண்கள் ஓட்டுக்களே அதிகம் என்பதை தெரிந்திருக்கும் எடப்பாடி வரும் 6, 7-ந் தேதிகளில் ஈரோடு மாவட்டம் முழுக்க சுற்றுப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். கொங்கு மண்டலமே தனக்கு பாதுகாப்பு அதிகம் தரும் என்பதாலேயே இந்தப் பயணத்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக நினைக்கிறார் எடப்பாடி.

ஸ்டாலினின் கூட்டத்தில் பேசிய ஓர் இளம் பெண், ""இந்த ஈரோட்டில் 8 முறை எம்.எல்.ஏ வாகவும், மினிஸ்டராகவும் இருந்தவர் செங்கோட்டையன் . ஆனா எங்க ஊர்ல குப்பை கூட அள்ளறதில்லை. குப்பையாய் இருக்க வேண்டிய இடங்களிலெல்லாம் வீடுகளாய் இருக்கின்றன. வீடாய் இருக்க வேண்டிய இடங்களெல்லாம் குப்பை மேடாய் இருக்கின்றன''’என்றது ஊராட்சி கிராம சபை கூட்டத்தின் முத்தாய்ப்பாக அமைந்தது.

தி.மு.க.வுக்கு வீக்கான பகுதியில் புதிய அஸ்திவாரம் போட்டிருக்கிறார் ஸ்டாலின். கட்சி நிர்வாகிகள் அதை கட்டடமாக கட்டுகிறார்களா, ஆளுந்தரப்பு புல்டோசரால் அதை தகர்க்குமா என்பது தேர்தல் களம் நெருங்க நெருங்கத் தெரிந்துவிடும்.

-ஜீவா தங்கவேல், அருள்குமார்