சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு ஒரு வருடத்தைக் கடந்தும் சிறையில் இருந்து வருகிறார் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி. இந்த நிலையில், அவரது ஜாமீன் மனு மீதான விசாரணையை 12-ந்தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது உச்சநீதிமன்றம். இதனால் ஜாமீன் கிடைக்குமா? கிடைக்காதா? என்கிற மனக்குழப்பத்தில் தவித்து வருகிறார் செந்தில்பாலாஜி.
கடந்த 1 வருட காலத்தில் ஜாமீன் கேட்டு பல முறை சென்னை அமர்வு நீதிமன்றம், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவற்றின் கதவுகளைத் தட்டினார். ஜாமீன் கிடைத்த பாடில்லை.
கடந்த ஏப்ரல் மாதம் ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் செந்தில்பாலாஜி முறையிட்ட போது, அவரது மனுவுக்கு பதி லளிக்குமாறு அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். இந்த மனு மீதான விசாரணை கடந்த மே மாதம் வந்தபோது, அமலாக்கத்துறை சார்பில் ஆஜராகும் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, வேறு சில வழக்குகளில் ஆஜராக வேண்டியதிருப்பதால் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என சொல்லப்பட்டது.
இதனையேற்று ஜாமீன் மனு மீதான விசாரணையை ஜூலை 10-க்கு தள்ளி வைத்தது உச்சநீதிமன்றம். கிட்டத்தட்ட 40 நாட்கள் ஒத்திவைக்கப்பட்டதில் செந்தில்பாலாஜி தரப்பு ஏகத்துக்கும் அப்செட். செந்தில் பாலாஜி மீது அக்கறையாக உள்ள முதல்வர் ஸ்டாலினும் கூட, நீண்ட நாட்கள் ஒத்தி வைக்கப்பட்டதில் அப்செட் டானார் என்கிறது தி.மு.க. வழக்கறிஞர்கள் தரப்பு.
பரபரப்பாக எதிர்பார்க்கப் பட்ட ஜூலை 10-ந்தேதி மீண்டும் விசாரணைக்கு வந்த போது, வாதிடுவதற்கு மேலும் கால அவகாசம் வேண்டும் என துஷார் மேத்தா சொல்ல, அதனை செந்தில்பாலாஜியின் வழக்கறிஞர் முகுல் ரோத்தகி கடுமையாக எதிர்த்தார். இருப்பினும் அமலாக்கத்துறை யினரின் கோரிக் கையை ஏற்று, 2 நாட்கள் அவகாசம் கொடுத்து, ஜூலை 12-க்கு வழக்கை ஒத்திவைத்தனர் உச்சநீதிமன்ற நீதிபதிகள்.
இதற்கிடையே, அமலாக்கத்துறையின் வழக்குகளிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான உத்தரவை தள்ளி வைக்க வேண்டும் என்று சென்னை முதன்மை அமர்வில் செந்தில்பாலாஜி ஏற்கனவே தாக்கல் செய்திருந்த மனு மீதான உத்தரவை ஜூலை 10-ந்தேதி பிறப்பிப்பதாக தெரிவித்திருந்தார் நீதிபதி அல்லி. ஜாமீன் மனுவை போலவே இந்த உத்தரவும் ஜூலை 12-க்கு ஒத்திவைக்கப்பட்டது. இரண்டு முக்கிய மனுக்கள் மீதான விசாரணை மீண்டும் தள்ளி வைக்கப்பட்டதில் செந்தில்பாலாஜி மீண்டும் அப்செட்டாகியிருக்கிறார்.
இந்த நிலையில், தி.மு.க. வழக்கறிஞர்கள் தரப்பில் விசாரித்தபோது, "செந்தில்பாலாஜியை தொடர்ந்து சிறையில் வைத்திருக்க எந்த முகாந்திரமும் அமலாக்கத்துறையிடம் கிடையாது. சட்டரீதியான பாயிண்டுகள் எதுவும் அவர்களிடம் இல்லை. அதனால்தான் கால அவகாசம் கேட்டு விசாரணையை இழுத்தடித்தபடி இருக்கின்றனர்.
அமைச்சராக இருப்பதால் சாட்சிகளை கலைத்துவிடுவார் என அமலாக்கத்துறை ஆரம்பகட்டத்தில் வாதிட்டது. அதனை உடைக்கும் வகையில், கேபினெட்டில் இருந்து செந்தில் பாலாஜியை விலக்கினார் முதல்வர் ஸ்டாலின். ஆனாலும் ஜாமீனை எதிர்த்தது அமலாக்கத்துறை. ஆக, செந்தில்பாலாஜி விவகாரத்தில் அரசியல்தான் விளையாடுகிறது. இதையெல்லாம் உடைத்திருக் கிறோம். அதனால், இனியும் அவரை சிறையில் வைத்திருக்க முடியாது. நிபந்தனை ஜாமீனில் விடுதலையாவார்''’என்று சுட்டிக்காட்டுகிறார்கள்.
அமலாக்கத்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, செந்தில்பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கை 3 மாதங்களில் முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. அதனை எதிர்கொண்டு தன்னை நிரபராதி என நிரூபிக்க வேண்டிய அவர், வாய்தா வாங்கிக் கொண்டேயிருப்பதால் அந்த வழக்கு இன்னமும் நிலுவையிலே இருக்கிறது. அதேபோல, அமலாக்கத் துறை போட்டிருக்கும் சட்டவிரோத பணப்பரி மாற்ற வழக்கினை எதிர்கொள்ளாமல் வெவ்வேறு வகையிலான மனுக்களை தாக்கல் செய்து விசாரணைக்கு முட்டுக்கட்டை போடுகிறார்கள்.
அதேசமயம், ஆதாரங்கள் இருப்பதால் அவரது ஜாமீனை அமலாக்கத்துறையினர் எதிர்க் கின்றனர். சரியான கோணத்தில் அழுத்தமான வாதங்களை ஆதாரப்பூர்வமாக வைத்தால் ஜாமீனை ஏன் அமலாக்கத்துறை எதிர்க்கப் போகிறது? அதனால் செந்தில்பாலாஜி தரப்பைப் போலவே நாங்களும் ஜூலை 12-ஐ நோக்கிக் காத்திருக்கிறோம்''’என்கிறார்கள்.
செந்தில்பாலாஜிக்கு நெருக்கமான தி.மு.க. வினரிடம் நாம் பேசியபோது, "தனக்கு எதிரான வழக்கை எதிர்கொள்ளவும், ஜாமீன் விசயத்திலும் தி.மு.க. வழக்கறிஞர்கள் டீமைத்தான் நம்பிக்கொண் டிருக்கிறார் செந்தில்பாலாஜி. அவர்களும் அழுத்த மான வாதங்களை நீதிமன்றத்தில் வைக்கிறார்கள். ஆனாலும் ஜாமீன் கிடைக்க மறுக்கிறது. ஒவ்வொரு முறை ஜாமீன் மனு விசாரணைக்கு வரும் போதும், அதற்கு முன்னதாக, இந்த முறை ஜாமீன் கிடைத்து விடும் என்றே தி.மு.க.வின் சீனியர் வழக்கறிஞர்கள் நம்பிக்கை கொடுக்கின்றனர். அதை நம்பி உற்சாகமாகிறார் செந்தில்பாலாஜி.
ஆனால் நடப்பதில்லை. இப்படி பலமுறை ஏமாற்றமடைந்ததால், ஜாமீன் கிடைத்தால் பார்க்கலாம் என்கிற மனநிலைக்கு எப்போதோ வந்துவிட்டார். ஆனால், ஜூலை முதல்வாரத்தில் செந்தில்பாலாஜிக்கு தகவல் தந்த வழக்கறிஞர்கள் டீம், ஜூலை 10-ல் ரிலீஸாகிறீர்கள். இதில் மாற்றம் இல்லை. டெல்லியில் எல்லா வேலையும் பார்த்தா யிற்று. கவலைப்படாமல் உற்சாகமாக இருங்கள் என அதீத நம்பிக்கை கொடுத்ததால், இந்த ஒரு முறை மட்டும் நம்பிப் பார்க்கலாம் என்கிற முடிவுக்கு வந்திருந்தார் செந்தில்பாலாஜி. ஆனால், ஜாமீன் விசாரணை ஜூலை 12-க்கு ஒத்திவைக்கப்பட்டதால் மீண்டும் குழம்பிப் போயிருக்கிறார். இந்த முறையும் எதிர்மறையாக உத்தரவு கிடைத்தால் ஜாமீன் கிடைப்பதில் செந்தில் பாலாஜி இனி மாத்தி யோசிக்க வேண்டும்''” என்கிறார்கள்.
ஜூலை 12-ஐ நோக்கிய தீவிர எதிர்பார்ப்பில் செந்தில் பாலாஜியும் அவரது குடும்பத்தினரும் தூக்கமின்றி இருக்கின்றனர்.
-இளையர்