டந்த ஏப்ரல் 1-ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் மானிய கோரிக்கை யின்போது, முன்னாள் அமைச்சரும், ஆரணி தொகுதி எம்.எல்.ஏ.வுமான அ.தி.மு.க. சேவூர் ராமச்சந்திரன், "திருவண்ணாமலை மாவட்டம் பிரிக்கப்பட்டு ஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படுமா?' என கேள்வியெழுப்பினார்.

tmalai

தி.மு.க. சட்டமன்ற கொறடா கோவி.செழி யன், "கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் உருவாக்கப் படுமா?' என கேள்வியெழுப் பினார். இதற்கு பதிலளித்த வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ராமச் சந்திரன், "8 மாவட்டங்கள் பிரிக்கவேண்டும் என எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்கள். அதேபோல் கோட்டாட்சியர் அலுவலகங்களைப் பிரிக்கவேண்டும், தாலுகாக்கள் பிரிக்கவேண்டும் என்கிற கோரிக்கையும் வந்துள் ளன. புதிய மாவட்டங்கள் உருவாக்கத் தேவையான சட்டப்படியான தகுதிகள் உள்ளதா என பார்க்க வேண்டும், அரசிடம் அதற்கான நிதி இருக்கிறதா என கவனத்தில்கொண்டே நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. இதனையெல்லாம் முதலமைச்சர் ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பார்''’என்றார்.

Advertisment

திண்டுக்கல்லிலிருந்து பழனி, தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம், கோவையிலிருந்து பொள் ளாச்சி, சேலத்திலிருந்து ஆத்தூர், கடலூரிலிருந்து விருத்தாச்சலம், திருவண்ணாமலை, மதுரையைப் பிரித்து புது மாவட்டம் உருவாக்கவேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. இதற்காக போராட் டங்களும் நடை பெற்று வருகின்றன. தமிழ்நாட்டில் தற்போதுள்ள 38 மாவட்டங்களில் பரப்பளவில் திண்டுக்கல் முதல் இடத்திலும், திருவண்ணாமலை இரண்டாவது இடத்திலும் உள்ளன. திருவண்ணாமலை மாவட் டத்தை இரண்டாக பிரிக்கவேண்டும் என்பது பல ஆண்டுகால கோரிக்கை. திருவண்ணாமலை, ஆரணி என இரண்டு நாடாளுமன்ற தொகுதி, 8 சட்ட மன்றத் தொகுதி, 18 ஊராட்சி ஒன்றியங்கள், 12 தாலுகாக்களோடு உள்ளது திருவண்ணாமலை மாவட்டம். வடகிழக்கு எல்லை கிராமமான தூசியிலிருந்து மாவட்ட தலைநகரான திருவண்ணாமலைக்கு 120 கி.மீ. நேரடிப் பேருந்து களும் கிடையாது. இசேவை மையங்களில் வழங்கப்படும் சான்றிதழ்களில் ஏதாவது தவறு ஏற்பட்டால் அதைத் திருத்த திருவண்ணா மலைக்குத்தான் வரவேண்டும். திருவண்ணா மலை மாவட்ட ஆட்சியர் அரங்கத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறை தீர்வு, விவசாயிகள் குறை தீர்வு நாளுக்கு வரவேண்டும் என்றால் காலை 6 மணிக்குப் புறப்பட்டால் மட்டுமே 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வரமுடியும். செய்யார், வெம்பாக்கம், வந்தவாசி, தெள்ளார் பகுதிகளிலிருந்து பொதுமக்கள் திருவண்ணாமலை வரு வதற்குள் நொந்துபோகிறார்கள். இதனால் கடந்த 5 ஆண்டுகளாக மாவட்டத்தைப் பிரிக்கவேண்டும் என்கிற கோரிக்கை பலமாக எழுந்துவருகின்றது.

tmalai

Advertisment

ஏப்ரல் 9ஆம் தேதி திருவண்ணாமலை அண்ணா சிலை முன்பு மாவட்டத்தை பிரிக்கக்கோரி பா.ம.க. ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதில் பேசிய பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், "திருவண்ணாமலை மாவட்டத்தில் சுமார் 27 லட்சம் பேர் வசிக்கிறார்கள். பா.ம.க.வின் நீண்டகால கோரிக்கை, தமிழ்நாட்டிலுள்ள பெரிய மாவட்டங்களைப் பிரிக்கவேண்டும் என்பதுதான். அப்போதுதான் அந்த மாவட்டத்திற்கு வளர்ச்சி வரும். ஆட்சிக்கு வந்தால் மாவட்டங்களைப் பிரிப்போம் என்பது தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதி. ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டு களாகிவிட்டது, ஏன் இன்னும் இந்த மாவட்டத்தைப் பிரிக்காமல் இருக்கிறீர்கள்? திருவண்ணாமலை மட்டுமல்ல கடலூர், திருவள்ளூர், சேலம், கோவை, திருச்சி, மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களையும் பிரிக்க வேண்டும். அந்தந்த மாவட்டத்திலுள்ள தி.மு.க.வின் குறுநில மன்னர்கள்தான் மாவட்டம் பிரிக்காமலிருக்க காரணம். இவர்கள், தன்னுடைய ராஜ்யத்தில் அதிக தொகுதிகள் இருக்கவேண்டும், அப்போதுதான் தனக்கு பவர் என நினைக் கிறார்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் குறுநில மன்னராக அமைச்சர் எ.வ.வேலு இருக்கிறார். அவர் இந்த மாவட்டத்தைப் பிரிக்க விடமாட்டேன் என்கிறார். இவர்களுக்கு ஏழை மக்களைப் பற்றியெல்லாம் கவலை கிடையாது. நாம் திருவண்ணாமலை மாவட்டத்தை பிரிக்கக் கோரி இந்த ஆர்ப்பாட்டத்தை செய்துகொண் டிருக்கிறோம். இந்த ஆர்ப்பாட்டம் அடையாளத் துக்காகக் கிடையாது, வெற்றி பெறுகிறவரை நாம் போராடுவோம். திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாகப் பிரிப்போம் என்கிற அறிவிப்பை வருகின்ற சட்டமன்றக் கூட்டத் தொடரில் அறிவிக்கவேண்டும். திருவண்ணாமலை போன்று தமிழகத்தில் பெரிய மாவட்டங்களாக உள்ள 8 மாவட்டங்களையும் பிரிக்கவேண்டும்''’ என்றார்.

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட் டத்தைப் பிரித்து புது மாவட்டம் உருவாக்கும் போது, மாவட்ட தலைநகராக செய்யாரை அறிவிக்க வேண்டும் என செய்யாறு மக்கள் முன்னேற்ற சங்கம் என்கிற பெயரில் அமைப்பு தொடங்கி மக்களை ஒருங்கிணைத்து கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி செய்யார் நகரில் ஊர்வலம் நடத்தி, மாவட்ட தலைநகருக்கான தகுதி செய்யாருக்கே அதிகமுள்ளது என சார்ஆட்சியரிடம் மனு தந்த னர். புதுமாவட்டத்துக்கு ஆரணியே மையப்பகுதி. அதனால் மாவட்ட தலைநகராக ஆரணியை அறிவிக்கவேண்டும் என ஆரணி வர்த்தகர்கள், பொதுநல அமைப்பினர் கோரிக்கைவிடுத்து கையெழுத்து இயக்கம் நடத்தியுள்ளனர்.

தலைநகரம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், புது மாவட்டம் என்பது அவசியம்.