வி மெய்யப்ப செட்டியார், நாகி ரெட்டி, சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம், கோவை பட்ஷிராஜா ஸ்டுடியோஸ் ஸ்ரீராமுலு, சாண்டோ சின்னப்பா தேவர் போன்ற ஜாம்பவான்கள் தமிழ் சினிமா தயாரிப்பில் கோலோச்சிய போது, அவர்கள் முதலாளி என்ற கம்பீரத்துடன் தொழில் செய்தார்கள். பெரிய ஹீரோக்களும் ஹீரோயின்களும் அவர்களிடம் கைநீட்டி சம்பளம் வாங்கும் தொழிலாளிகளாகத்தான் இருந்தார்கள்.

ott

தனது கடைசிப் படம் வரை, தயாரிப்பாளர்களை முதலாளியாகத்தான் பாவித்து பணிவு காட்டினார் நடிகர்திலகம் சிவாஜி கணேசன். ஸ்டார் அந்தஸ்து என்ற புகழ்க் கோட்டைத் தொடும் வரை எம்.ஜி.ஆரும் கிட்டத்தட்ட அதேமாதிரிதான் இருந்தார். அந்தக் கோட்டைத் தொட்ட நேரம் தி.மு.க.விலும் செல்வாக்கு பெற ஆரம்பித்ததால், தனது பாணியை மாற்றினார் எம்.ஜி.ஆர். அதில் ஒரு சில பாதிப்புகள் ஏற்பட்டாலும், தனக்குத் தோதான தயாரிப்பாளர்களுக்கான மதிப்பினை அளித்தார். ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், முத்துராமன் போன்ற ஹீரோக்கள் காலம்வரையும் அதன்பின் ரஜினி, கமல், சத்யராஜ் காலங்களின் முற்பகுதி வரையும் தயாரிப்பாளர்கள் முதலாளிகளாகத்தான் இருந்தார்கள்.

1996-க்குப் பிறகுதான் தமிழ் சினிமாவின் நடைமுறையும் விதிமுறையும் மாறியது. பணம் போட்டு படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் தொழிலாளர் களாகவும் கைநீட்டி சம்பளம் வாங்கும் ஹீரோக்கள் முதலாளிகளாகவும் மாறினார்கள். கார்ப்பரேட் கம்பெனிகள் கோலிவுட்டில் கோலோச்சத் தொடங்கிய பிறகு, பல நூறு கோடிகள் சர்வ சாதாரணமாக புழங்க ஆரம்பித்துவிட்டன. மெகா அரசியல்வாதிகள், அவர்களின் பினாமிகள் சினிமாவை தங்கள் பிடிக்குள் கொண்டு வந்துவிட்டனர். இதனால் டாப் ஹீரோக்களின் காட்டில் பண மழை கொட்டிக் கொண்டே தான் இருக்கிறது. வட்டிக்குப் பணம் வாங்கி, பக்காவாக திட்டம் போட்டு படங்கள் எடுத்து, குறைந்த லாபம் வைத்து விற்பனை செய்த கண்ணியமான பல தயாரிப்பாளர்கள் காணாம லேயே போய்விட்டனர்.

Advertisment

அப்ப நடந்த கதை யெல்லாம் இப்ப எதுக்குன்னு கேட்கிறீர்களா? அப்ப நடந்த கதைகள் எதுவும் தெரியாமலோ, அல்லது தெரிந்தோ இப்போதும் சினிமா எடுக்க வந்து சிரமப்பட்டு, நொந்து போய் சொந்த ஊருக்கே திரும்புபவர்களும் அதிகரித்துக் கொண்டே இருக்கி றார்கள். சிலரோ அனுபவசாலிகளை அருகில் வைத்துக் கொண்டு, சினிமா எடுத்து ஜெயித்துக் கொண்டும் இருக்கிறார்கள்.

otttசினிமாவைப் பொறுத்தவரை 7% வட்டி என்பது ஃபைனான்சியர்கள் வைத்திருக்கும் எழுதப்படாத புரோநோட். இந்த வட்டி கட்டியே மொட்டையான பல தயாரிப்பாளர்கள் உண்டு. அதனால் இந்த சிரமத் தைப் போக்கி, புதிதாக சினிமா எடுக்க வருபவர்கள், பழைய அனுபவஸ்தர்கள் ஆகியோருக்கு ஃபைனான்ஸ் ரீதியாக உதவுவதற்காகவே திருப்பூர் சுப்பிரமணியன் தலைமையில் தமிழ் சினிமா ஃபைனான்சியர்கள் சங்கம் என்ற அமைப்பு பல மாதங்களுக்கு முன்பு உதயமானது. மதுரை அன்பு போன்ற அசகாய சூரர்களும் இந்த சங்கத்தில் உள்ளார்கள். இப்போது இந்த சங்கத்தின் செயல்பாடு எந்தளவுக்கு உள்ளது எனத் தெரியவில்லை. ஆனாலும் தமிழ் சினிமாவில் சாதித்தே தீரவேண்டும் என்ற லட்சியத்துடன் கையில் பல லட்சங்களுடன் கோடம்பாக்கம் நோக்கி பலர் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு நேர்மையான வழியில் உதவி செய்வதற்காக ஃபிலிம்கிரிட் என்ற அமைப்பு இயங்கி வருகிறது.

Advertisment

சினிமாக் கதை அனுபவஸ்தர்கள், தயாரிப்பு நிர்வாகத்தில் முன்அனுபவம் மிக்கவர்கள், என பலதுறைகளிலும் அனுபவம் மிக்கவர்களைக் கொண்ட டீம் இது. கிட்டத்தட்ட இதுவும் கார்ப்பரேட் கம்பெனி போலதான் என்றாலும் இவர்களின் பணிகள் எல்லாமே பணம் போட்டவர்களின் நலன் சார்ந்தே இருக்கும். மணிரத்னம், சத்யஜோதி தியாகராஜன் போன்ற முன்னணி தயாரிப்பாளர்களுக்கு, இந்த ஃபிலிம் கிரிட்தான் ஆலோசனை வழங்கிக் கொண்டிருக் கிறதாம். இதுவரை கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் இவர்களின் ஆலோசனைப்படி எடுக்கப்பட்டிருக் கிறதாம். அதில் வெற்றி, தோல்வி எத்தனை என்பது வேறு விஷயம்.

அந்த அமைப்பு ஒருபக்கம் செயல்பட்டுக் கொண்டிருக்க, திரைத்துறையின் 10 வல்லுனர்களை ஒருங்கிணைத்து, தயாரிப்பாளர் தனஞ்செயன் தலைமையில் ஆலோசனை அமைப்பு ஒன்று கடந்த செப்.14-ஆம் தேதி உதயமாகியுள்ளது. இந்த அமைப்பை நடிகர்கள் ஆர்யாவும் விஜய் ஆண்டனியும் துவக்கி வைத்துள்ளனர். ஈங்ஹஉ (ஈழ்ங்ஹற்ண்ஸ்ங் ஊய்ற்ங்ழ்ற்ஹண்ய்ங்ழ்ள் ஹய்க் உண்ள்ற்ழ்ண்க்ஷன்ற்ர்ழ்ள்) என்கிற இந்த ஆலோசனை அமைப்பில் தயாரிப்பாளர் சி.வி.குமார், முன்னணி பி.ஆர்.ஓ. நிகில் முருகன் உட்பட 10 பேர் உள்ளனர்.

கதை-திரைக்கதையை ஒழுங்குபடுத்துதல், சிக்கலில்லாத ஃபைனான்ஸ் ஏற்பாடு, தயாரிப்பில் உறுதுணை, போஸ்ட் புரொடக்ஷன், வியாபாரம் பேசுதல், ரிலீஸ் பண்ணுதல், மார்க்கெட் நிலவரம் மற்றும் படத்தை விளம்பரப்படுத்துதல் இவற்றில் அதிக முன் அனுபவம் உள்ளவர்களை உள்ளடக்கியது இந்த கன்சல்டன்ஸி கம்பெனி. படத்தின் பட்ஜெட்டுக்கு ஏற்ப இவர்களின் ஆலோசனைக் கட்டணம் இருக்குமாம்.

ott

தமிழ் சினிமா இப்போதிருக்கும் நிலையில் உங்கள் அமைப்பின் ஆலோசனை தயாரிப் பாளர்களுக்கு எந்தளவுக்கு உதவியாக இருக்கும்? போடும் பணத்திற்கு கியாரண்டி இருக்குமா?’ என கன்சல்டன்ஸியின் தலைவர் தனஞ்செயனிடம் கேட்டோம்.

எந்த தொழிலாக இருந்தாலும் வெற்றி பெறணும்னுதான் எல்லோரும் நினைத்து களம் இறங்குவார்கள். அதுபோலத்தான் சினிமா தொழிலும். இங்கே ஆழம் தெரிந்து காலைவிட்டு கரையேறியவர்களும் உண்டு. முழங்கால் அளவு தண்ணீரில் மூழ்கியவர்களும் உண்டு.

சினிமாத் தொழிலில் சிரத்தையும் நேர்மையும் இருந்தால் வெற்றி நிச்சயம். அப்படிப்பட்ட எண்ணத்துடன் சினிமா தயாரிக்க வருபவர்களுக்கு நல்லதொரு வழிகாட்டும் அமைப்பாக நிச்சயம் இருப்போம். ஹீரோ, ஹீரோயின்களின் மார்க்கெட் நிலவரம் அறிந்து சம்பளம் பேசுதல், லொக் கேஷன்களுக்கு பெர்மிஷன் வாங்கிக் கொடுப்பது, ஷூட்டிங் ஸ்பாட்டில் கூடவே இருந்து தயாரிப்புச் செலவைக் கட்டுப்படுத்தி மிச்சம் பண்ணிக் கொடுப்பது, டப்பிங், மிக்ஸிங், ரீரெக்கார்டிங் என எல்லா நிலைகளிலும் நாங்கள் தயாரிப்பாளர்களுடனேயே பயணிப்போம்.

மொத்தத்தில் பூஜை போட்டதிலிருந்து படம் முடிந்து ரிலீஸ் ஆகும் வரை எங்களின் ஆலோசனை தொடர்ந்து கொண்டே இருக்கும். பழுதில்லாத விதை, பங்கமில்லா விளைச்சல், நிம்மதியான உணவு இது தான் எங்கள் கன்சல் டன்ஸியின் பாலிஸி’ என உணர்வுப்பூர்வமாகப் பேசினார் தனஞ்செயன்.

இந்த கன்சல்டன்ஸி சர்வீசில் இருக்கும் இன்னொரு எக்ஸ்பெர்ட்டான பி.ஆர்.ஓ. நிகில் முருகனிடம் நாம் பேசிய போது, ""ஒரு படம் முடிந்து ரிலீஸ் தேதி நெருங்கும் போது மக்களிடம் போய்ச்சேருவது விளம்பர யுக்திகளால்தான். அதற்கடுத்து முக்கியமான விஷயம் மார்க்கெட் டிங் தான். இந்த இரண்டிற்கும் எங்களின் பங்களிப்பு பேருதவியாக இருக்கும்'' என்கிறார்.

இந்த அமைப்புகள் ஒருபுறம் ஆக்டிவ்வாக இருக்கிறதென்றால், தயாரிப்பாளர்கள்- வினியோகஸ் தர்கள்- தியேட்டர் அதிபர்களுக் கிடையே முட்டலும் மோதலும் அதிகரித்தபடியே இருக்கின்றன.

சினிமா தயாரிப்பில் சில வருடங்களுக்கு முன்பு தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத் தையும் இப்போது மாறியிருக்கும் நிலைமையையும் நம்மிடம் மனம் திறந்து பேசினார் முன்னணி தயாரிப்பாளர் ஒருவர்.

""மினிமம் பட்ஜெட் படங்களுக்கு ஜூனியர் ஆர்டிஸ்டுகள், டெக்னீஷியன்கள் 50 பேர் போதும் என நாங்கள் முடிவெடுத்து ஷூட்டிங் போனால், கேமரா அசிஸ்டெண்ட், டிராலி தள்ளுபவர்கள், எலெக்ட்ரீஷியன்கள், செட் அசிஸ்டெண்டுகள், கேட்டரிங் ஆட்கள் என ஃபெப்சியிலிருந்து 100 பேர் வந்திருப்பார்கள். அவர்களுக்கு சம்பளம், பேட்டா கொடுத்தே ஆகவேண்டும். இல்லைன்னா ஷூட்டிங்கை நிப்பாட்டுவார்கள். ஆனா இப்போது ஷூட்டிங்கிற்கு 75 பேர்தான் அனுமதி என அரசாங்கம் சொன்னதும், அதிகாரம் சுருங்கிப் போனதால் பதறிய ஃபெப்சியின் தலைவர் ஆர்.கே.செல்வமணி, குறைந்தது 100 பேருக்காவது அனுமதி கொடுங்கள் என அரசாங்கத்திடம் முறையிடுகிறார்.

ஐந்து மாதங்களாக வேலை இல்லாததால் வேலை இல்லாத கஷ்டத்தை அறிந்த தொழிலாளர்களின் மனநிலையில் இப்போது மாற்றம் ஏற்பட்டிருக்கிறது, இந்த மாற்றம் தொடர்ந்து நீடிக்க வேண்டும்'' என்றார்.

இதற்கடுத்து, சங்கடத்தில் சண்டை போட்டுக் கொண்டிருப்பவர்கள் தயாரிப்பாளர்களும் தியேட்டர் அதிபர்களும். க்யூப் மற்றும் வி.எஃப்.எக்ஸ் கட்டணத்தை தியேட்டர் அதிபர்களே ஏற்கும்வரை படங்களைத் திரையிட மாட்டோம் என தமிழ் சினிமா நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் பாரதிராஜாவும் வினியோ கஸ்தர்கள் சங்கத் தலைவர் டி.ராஜேந்தரும் போர்க் கொடி தூக்கியுள்ளனர்.

இந்தச் சண்டை ஏன் என தியேட்டர் அதிபர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியனிடம் கேட்டோம். ‘இதே பிரச்சனை சில வருடங்களுக்கு முன்பு வந்த போது, 48 தியேட்டர்களை மூடினோம். மீண்டும் அதே கதைக்கு வருகிறார் பாரதி ராஜா. க்யூப் கட்டணம்கிறது இந்தியா முழுவதும் இருக்கு, ஆனா தமிழக தியேட் டர்களுக்கு மட்டும் விலக்கு வேணும்னா அவர்கள் எப்படி ஒத்துக்கொள்வார்கள்? இப்ப இருக்குற நிலைமையில தியேட் டர்களைத் திறக்க கவர்மெண்ட் பெர்மிஷன் கொடுக்கணும், பயமில்லாமல் மக்கள் வரணும். அதுக்குப் பிறகு மத்ததைப் பத்திப் பேசுவோம்'' என நிஜநிலவரத்தைச் சொன்னார்.

"பொன்மகள் வந்தாள்', "சூரரைப் போற்று', "க/பெ ரணசிங்கம்'’போன்ற பெரிய ஹீரோ-ஹீரோயின்களின் படங்கள் ஓ.டி.டி.யில் ரிலீஸ் ஆவதால் தயாரிப் பாளர்கள் தன்னிறைவு அடைகிறார்கள். ஆனால் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகாததால், ரசிகர்களின் விசில் சத்தம், ஆரவாரம், கைதட்டு இவையெல்லாம் இருந்தால் ஹீரோக்களுக்கு மனநிறைவு.

மொத்தத்தில் வெள்ளித்திரையிலிருந்து சின்னத் திரைக்குள் வந்து, இப்போது செல்ஃபோன் குறுந்திரைக்குள் வந்துவிட்டார்கள் மெகா ஸ்டார்கள்.

-ஈ.பா.பரமேஷ்வரன்