"ஹலோ தலைவரே, தேர்தல் நெருங்கும் நேரத்தில் தமிழகத்தில் தங்கள் கொடியை நாட்ட, பல்வேறு அதிரடி டெக்னிக்குகளை பா.ஜ.க. எடுத்துவருகிறது.''”

"என்ன பெரிசா டெக்னிக்குகள் இருக்கப் போகுது? ஒன்று மிரட்டல்... இல்லைன்னா பேரம். இதுதானே இருக்கப்போகுது?''”

"சரியாச் சொன்னீங்க தலைவரே, தமிழகத்தில் தங்களுக்கு பலமான எதிரியாக இருக்கும் தி.மு.க.வுக்கு ஷாக் கொடுக்க நினைக்கிறது டெல்லி. அதனால், தி.மு.க.வுக்கு தேர்தல் நிதி விசயத்தில் தாராளம் காட்டக்கூடிய தொழிலதிபர்களைக் குறிவைத்து அது வருமான வரித்துறையைக் களமிறக்கி இருக்கிறது. ஒன்றிய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமனே அண்மையில் ரெய்டுகளுக்குத் தொடக்கவிழா நடத்த தமிழகம் வந்திருக்கிறார். காஞ்சிபுரத்தில் ஆடிட்டர் களின் கூட்டத்தை நடத்திய அவர், தி.மு.க.வுக்கு அதிக நிதிகொடுக்கும் பிசினஸ் புள்ளிகள் யார் யார் என் றெல்லாம் பட்டியல் எடுக்கச் சொன்னதோடு, அவர்கள் குறித்த விவரங்களைத் திரட்டித் தரும்படியும் கேட்டுக்கொண்டாராம். அவர் போட்டுக்கொடுத்த வியூகங்களை வைத்துக் கொண்டு வருமான வரித்துறை டீம்கள், தங்கள் மூவ்களை நடத்த ஆரம்பிச்சிடுச்சாம்.''”

"அதிகாரம் இருப்பதே எதிரிகளை ஒடுக்கத்தான்ங்கிற கோட்பாட்டைக் கையில் எடுத்துட்டாங்களோ?''”

Advertisment

rr

"அதேதாங்க தலைவரே, அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, கிடைத்த தகவல்களை வைத்துக்கொண்டு, இந்த வாரம் இந்தியா சிமெண்ட் சீனிவாசன் மீது அதிரடி ரெய்டு நடவடிக்கைகள் பாய்ந்திருக்கின்றன. உடல்நலக்குறைவால் நடக்கவே முடியாத நிலையில் இருக்கும் சீனிவாசன், இதில் ரொம்பவே அதிர்ந்துபோய்விட்டாராம். இதைத் தொடர்ந்து இன்னும் பலருக்கும் ஷாக் ட்ரீட்மெண்ட் இருக்கிறதாம். நிர்மலா தரப்பிடம் சிலர், கோவை ஈஷா மைய ஜக்கியிடம் அ.தி.மு.க. பெரும்புள்ளிகளின் கரன்சிகள் பெருமளவில் புரள்கிறதே என்று சொன்னபோது, அ.தி.மு.க.வுடன் கூட்டணிக்கான கடைசிக் கட்ட முயற்சிகள் நடந்து வருகிறது. அவர்கள் சரிப்பட்டு வரவில்லை என்றால் ஜக்கி மீதும், அ.தி.மு.க. மாஜி மந்திரிகள் மீதும் ரெய்டுகள் பாயும். அது அவர்கள் அனைவரையும் நடுங்கவைப்ப தாக இருக்கும் என்றார்களாம்.''”

Advertisment

"பா.ஜ.க.வே எதிர்பாராதபடி எடப்பாடி, எதிர் போராட்டத்தில் இறங்கிட்டாராமே?''

"ஆமாங்க தலைவரே... அ.தி.மு.க. எப்படியும் தங்கள் பக்கம் வந்துவிடும் என்று இப்போதும் பா.ஜ.க. நம்புகிறது. அதற்காக ஒரு பக்கம் பேரம். மறுபக்கம் மிரட்டல்ன்னு அஸ்திரங்கள் பாய்ந்து கொண்டு இருக்கின்றன. ஆனால் எடப்பாடியோ, புதுவைக்கு மாநில அந்தஸ்து தராத ஒன்றிய பா.ஜ.க. அரசை எதிர்த்து, அங்கே ஆர்ப்பாட்டம் நடக்குமென அறிவித்து, தன் வீர தீரத்தைக் காட்டியிருக்கிறார். எனினும், அவரை சமாதானப்படுத்தி, அ.தி.மு.க.வை தங்கள் பக்கம் கொண்டுவர பியூஷ்கோயல் மூலம் தீவிர முயற்சியில் இறங்கியிருக்கிறது டெல்லி. இதற்கிடையே, ஓ.பி.எஸ். அணிக்கு 14 தொகுதிகளை ஒதுக்கிவிட்டு, 11 தொகுதிகளில் நேரடியாகவும், 6 தொகுதிகளில் பாரிவேந்தர், ஏ.சி.எஸ். உள்ளிட்ட சிலரை தங்கள் தாமரைச் சின்னத்திலும் நிறுத்த பா.ஜ.க. தலைமை முடிவெடுத்திருக்கிறது. பா.ம.க.விற்கு 5 முதல் 7 தொகுதிகள் வரை தருவதாக டீலிங் பேசிவருகிறது பா.ஜ.க. இதற்கிடையே எடப்பாடிக்கு உபரி ஷாக் கொடுக்க நினைக்கும் ஓ.பி.எஸ்., கரூரில் எடப்பாடியின் அக்காள் மகளையே வேட்பாளராக நிறுத்தப்போகிறாராம்.''”

"அமைச்சர் உதயநிதி முன்னிலையில் நடந்துவரும் தி.மு.க.வின் தேர்தல் ஆலோசனைக் கூட்டங்கள் களைகட்டுகிறதே?''”

uday

"ஆமாங்க தலைவரே, நாடாளுமன்றத் தேர்த லில் ’40-லும் வெற்றி’ என்கிற இலக்கோடு களத்தில் இறங்குகிறது தி.மு.க. இந்த தேர்தலை உதயநிதியின் மேற்பார்வையில் எதிர் கொள்ளவும் அது தயாராகிவிட்டது. வேட்பாளர் தேர்வில் இருந்து, தேர்தல் பணிகளைப் பிரித்து பொறுப்புகளை ஒப்படைப்பது வரை உதயநிதியின் நேரடிப் பார்வை இருக்கும் என்கிறார் கள். அதனால்தான் ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்கும் உதயநிதி, அங்கங்கே கட்சியில் இருக்கும் பிரச் சினைகளையும் சரிசெய்து வருகிறாராம். தி.மு.க.வின் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு மூலம், மாவட்டவரியாக கட்சி நிர்வாகிகளை அழைத்து கடந்த 10 நாட்களாக அவர் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். அப்போது கட்சியின ரிடம் உள்ள கோஷ்டிப் பூசல்களை சரிசெய்வதோடு, சரியாகப் பணியாற்றாத நிர்வாகிகளையும் கண்டித்து வருகிறாராம். அவரது இந்த அதிரடி ஆக்சன்களை கட்சியினர் ரொம்பவே ரசிக்கிறார்கள்.''”

"தேர்தலின் நாடித்துடிப்பைப் பார்க்க தி.மு.க. தலைமை சர்வே எடுத்து வருகிறதே?''”

"உண்மைதாங்க தலைவரே, ஒவ்வொரு தொகுதியின் பல்ஸ்ரேட் பற்றி அறிவதோடு, தற்போது தி.மு.க. கூட்டணியில் இருக்கும் 38 எம்.பி.க்களின் கடந்த கால செயல்பாடுகள், அவர்களுக் குத் தொகுதி மக்களிடம் இருக்கும் செல்வாக்கு ஆகியவற்றைப் பற்றி இந்த சர்வேயின் போது மக்களின் கருத்துக்கள் பதியப்படுகிறதாம். தி.மு.க.வின் கடந்த 3 ஆண்டுகால ஆட்சி பற்றிய மக்களின் மதிப்பீடு பற்றித் தெரிந்துகொள்ளும் விதமான கேள்விகளும் இந்த சர்வேயின் போது கேட்கப்படு கிறதாம். இதுவரை எடுக்கப் பட்ட சர்வேயின்படி 38 எம்.பி.க் களில் 34 பேர் மீது மக்களுக்கு பெரும் அதிருப்தி இருப்பதாகத் தெரியவந்திருக்கிறதாம். அதனால், பெரும்பாலான சிட்டிங் எம்.பி.க்களுக்கு இந்த முறை அறிவாலயம் சீட் ஒதுக்குமா என்பது சந்தேகம் தான் என்கிறார்கள். இதற் கிடையே சட்டமன்றத் தொகுதி வாரியாக நிலவரத்தை அறிய உதயநிதியும் ஒரு சர்வேயை எடுத்து வருகிறாராம்.'' ”

"தி.மு.க.வுக்கு எதிராக அ.தி.மு.க. கையில் எடுத்த ஒரு பிரச்சார ஆயுதத்தை , அப்ப டியே அ.தி.மு.க. பக்கமே திருப்பியிருக்கிறதே தி.மு.க.?''’

"தேர்தல் களம் விறு விறுப்பாகக் களைகட்டத் தொடங்கியிருக்கும் நிலையில், தி.மு.க. எம்.பி.க்களை தொகுதி பக்கம் காணவில்லை என்கிற ரீதியில் ஒரு பிரச்சாரத்தைக் கையில் எடுத்தது அ.தி.மு.க.. இதற்காக "கண்டா வரச் சொல்லுங்க'’ என்ற தலைப் பில், சோசியல் மீடியாக் களில் அதிரடிப் பிரச் சாரத்தை வைக்க அது முயற்சித்தது. இதற்காக அ.தி.மு.க.வின் ஐ.டி. விங்க் களமிறக்கப்பட்டது. இந்த நிலையில் அந்த டெக் னிக்கை அப்படியே ஹை -ஜாக் பண்ணி, ’பதவிக்காக மாநில உரிமைகளை அடகு வைத்த அடிமைகளைக் கண்டா வரச் சொல்லுங்க; ஊழல் செய்து அர சாங்கத்தை திவாலாக்கிய வர்களை கண்டா வரச் சொல் லுங்க; பதவியில் உட்கார வைத்தவர்களுக்கே துரோகம் செய்த துரோகிகளை கண்டா வரச்சொல்லுங்க’ என்றெல் லாம் அ.தி.மு.க.வுக்கும் எடப் பாடிக்கும் எதிராக, அதே டெக்னிக்கை தி.மு.க. கையில் எடுத்து, அதை போஸ்டர், போஸ் டராய் தமிழகம் முழுவதும் ஒட்டிவருகிறது. இதை சபரீசனின் பென் என்கிற தகவல் தொழில்நுட்ப அமைப்பு முன்னெடுத்துவருகிறது. இது அ.தி.மு.க. தரப்பைத் திகைக்க வைத்திருக்கிறது.''”

"பா.ஜ.க.வின் உறவை அ.தி.மு.க. முறித்ததில், அதிகம் குழம்பிப்போய் இருப்பது த.மா.கா. வாசன்தான் என்கிறார்களே?''”

tt

"ஆமாங்க தலைவரே, பா.ஜ.க. கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகியதால், நாம் எந்தப் பக்கம் போவது என த.மா.கா. வாசன் குழம்பிப் போயிருக்கிறாராம். காரணம் அந்த இரு தரப்பிடமும் அதிக மாக ஒட்டுதலைக்காட்டி வந்தவர் வாசன். இந்த நிலையில், கூட்டணி குறித்து முடிவெடுக்க த.மா.கா.வின் பொதுக்குழுவை 12ஆம் தேதி அவர் கூட்டியுள்ளார். இதற் கிடையே, இரண்டு நாட் களுக்கு முன்பு, அவர் எடப் பாடியை சந்தித்துப்பேசினார். அப்போது "நீங்கள் பா.ஜ.க. கூட்டணிக்கு வந்தால், நீங்கள் கேட்கும் சீட்டுகளைத் தரத் தயாராக இருக்கிறார்கள். தி.மு.க.வை வீழ்த்த வேண்டு மானால் அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட் டணி முறியக் கூடாது. தி.மு.க. வலுவான கூட்டணியை அமைத்து போட்டியிடும்போது எதிர்க்கட்சிகள் எல்லாம் தனித்தனியாக நின்றால் அது தி.மு.க.வுக்குத்தான் சாதகம் என்றெல்லாம் எடப்பாடிக்கு வேப்பிலை அடித்திருக்கிறார் வாசன். எனினும், எடப்பாடி, பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்று தீர்க்கமாக அறிவித்துவிட்டோம். அதிலிருந்து பின்வாங்கினால், எங்கள் மீது கட்சித் தொண்டர்களுக்கும் மக்களுக் கும் நம்பிக்கை இல்லாமல் போய்விடும் என்று சொன்னாராம். அதனால் அரைகுறை மனதோடுதான் அங்கிருந்து கிளம்பினாராம் வாசன்.''”

"தேசிய பா.ஜ.க. தலைவரான ஜே.பி. நட்டா சென்னை வருகிறாரே?''”

"பா.ஜ.க. சார்பில் நடந்துவரும் நடைபயணம் சென்னைக்கு எதிர்வரும் 11ஆம் தேதி வந்தடைகிறது. அன்று இந்த நிகழ்வில் பங்கேற்க ஜே.பி. நட்டா வருகிறார். அவரோடு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் தமிழக பா.ஜ,.க. அழைத்திருக் கிறது. அதன்பிறகு நடைபயணத்தை சற்று நிறுத்தி விட்டு கூட்டணிப் பேச்சுவார்த்தையில் இறங்கப் போகிறதாம் பா.ஜ.க.. இந்தமுறை டெல்லித் தலைவர் களின் வருகையை பிரமாண்டப்படுத்த 50,000 பேர் வரை திரட்ட வேண்டும் என்று கட்சியின் தேசியத் தலைமை உத்தரவிட்டிருக்கிறதாம். ஆனால், 5000 பேரை திரட்டுவதற்கே தாவு தீர்ந்து விடுகிறது. இதில் எப்படி அவ்வளவு பேரைத் திரட்டுவது? காசு கொடுத்து அழைத்தாலும் ஆட்கள் கிடைப்பது கஷ்டமாக இருக்கிறதே என கட்சி நிர்வாகிகள் புலம்ப ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த நிலையில் மீண்டும் 22ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். பல்லடத்தில் நடக்கும் தேர்தல் பொதுக் கூட்டத்தில் அவர் கலந்துகொள்கிறார். அவர் வருவதற்குள் தங்கள் கூட்டணிப் பேச்சுவார்த்தை களை நிறைவுசெய்ய நினைக்கிறது பா.ஜ.க.''”

"கொடநாடு கொலை-கொள்ளை விவகாரத்தை விசாரிக்க குஜராத் டீமெல்லாம் வந்திருக்கே?''”

rr

"ஆமாங்க தலைவரே, ஜெ’வின் கொடநாடு பங்களாவில் 2017 ஏப்ரல் 23ஆம் தேதி நடந்த கொள்ளை முயற்சியில் கொலைச்சம்பவங்களும் அரங்கேறி தமிழகத்தையே அதிரவைத்தது. இந்த குற்றச் சம்பவத்தில் தொடர்புடைய ஜெ.வின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் மற்றும் கேரளாவைச் சேர்ந்த சயான், வாழையார் மனோஜ் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்கு பதிவானது. இந்த வழக்கை 36 பேர் அடங்கிய சி.பி.சி.ஐ.டி போலீஸ் டீம் விசாரித்துவருகிறது.''

"குற்றவாளிகள் அரசியல் புள்ளி களோடு உரையாடியது தொடர்பான ஆய்வை மேற்கொள்ள குஜராத்தில் இருந்து தடயவியல் நிபுணர்கள் டீம் வந்திருக்கு. சந்தேகத்திற்குரிய 30 பேரின் மொபைல் போன் அழைப்புகள் அடங்கிய 10 டிஜிட்டல் டேப்புகள் ஏற்கனவே சேகரிக்கப்பட்டிருந்தன. இதை ஆராய்ந்த குஜராத் தடய அறிவியல் பல்கலைக்கழக நிபுணர்கள் 10 பேர், திருச்சியில் உள்ள பி.எஸ்.என்.எல்.லின் பிரதான சர்வரை துழாவினால் கூடுதல் தகவல் பெற முடியும்ன்னு இங்கே வந்திருக்காங்க. அவர்கள் உரிய தடயங்களைத் திரட்டிவருகின்றனர்.''”

"நானும் இந்த கொடநாடு விவகாரம் தொடர்பாக எனக்குக் கிடைத்த தகவலைப் பகிர்ந்துக்கறேன். கொடநாடு குற்றவாளிகளில் ஒருவரான கனகராஜ், சம்பவ நேரத்தில் நான்கு செல்போன்களைப் பயன்படுத்தியது தெரியவந்திருக்கிறதாம். குஜராத் டீம் எடுத்திருக்கும் போன் உரையாடல்களில் கொடநாடு கொலை கொள்ளை பற்றிய ரகசியங்கள் பதிவாகியிருக்கிறதாம். அதேபோல் சயானிடம் 33 பக்கத்திற்கு வாக்குமூலத்தை அவர் கைப்பட எழுதி வாங்கியிருக்கிறதாம் விசாரணை டீம். மலையாளத்தில் எழுதப்பட்ட அந்த வாக்குமூலத்தில் அவர் எடப்பாடிக்கு இந்த விவகாரத்தில் உள்ள க்ரைம் தொடர்புகள் பற்றி விரிவாகவே பகீருட்டும் தகவல்களைச் சொல்லியிருக்கிறாராம்.''”