2020-ஆம் ஆண்டு தமிழ்நாட் டில் கொரோனா ஊரடங்கின்போது, நக்கீரன் புலனாய்வு செய்தி வெளியிட்டு "ஜெயராஜ், பென் னிக்ஸ் இருவரும் சாத்தான்குளம் போலீசின் சித்திரவதையால்தான் உயிரிழந்தார்கள்' என்பது ஆதாரத்துடன் அம்பலமானது. இந்த வழக்கை யாரும் மறந்திருக்க முடியாது. ஐந்து ஆண்டுகளாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில், வலுவான ஆதாரங்கள் இருந்தும் ஜவ்வு மிட்டாய்போல இழுக்கப்படும் இந்த விசாரணையில் விரைவில் நீதி வழங் கப்படுமா என கண்ணீருடன் பரிதவிக் கின்றனர் ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தில் 2020-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19-ஆம் தேதி இரவு 8 மணிக்கு மேல் கடையைத் திறந்துவைத்ததாகக் கூறி வணிகர் ஜெயராஜ், சாத்தான் குளம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்லப்பட் டார். அவரை மீட்டுவர அவருடைய மகன் பென்னிக்ஸ் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென் றார். சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேஷ னில் இருவரிடமும் விசாரணை என்ற பெயரில் இரவு முழுவதும் போலீ சாரால் துள்ளத் துடிக்க அரங் கேறிய கொடூரக் கொலைவெறித் தாக்குதல் காரணமாக நிலைகுலைந்தனர். ரத்தக் காயங்களுடன் கோவில்பட்டி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் ஜூன் 22-ஆம் தேதி இரவு பென்னிக்ஸும், 23-ஆம் தேதி அதிகாலையில் ஜெயராஜும் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

ss

இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப் இன்ஸ் பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், சிறப்பு எஸ்.ஐ. பால்துரை, போலீசார் உட்பட 10 பேர் முதலில் கைதுசெய்யப் பட்டனர். இந்த வழக்கை முதலில் காவல்துறை விசாரித்து, பின்னர் சி.பி.சி.ஐ.டி. வசம் சென்றது. ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினர் வேண்டுகோளுக் கிணங்க, இந்த வழக்கு சி.பி.ஐ. வசம் ஒப்படைக் கப்பட்டது. இதில் எஸ்.எஸ். ஐ. பால்துரை இறந்துவிட்ட நிலையில்... பல்வேறு கோணங்களில் நக்கீரன் புலனாய்வுச் செய்திகளில் வெளிவந்த அசைக்கமுடியாத பல ஆதாரங்களின் காரணமாக சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உட்பட காவல் துறையைச் சேர்ந்த 9 பேர் இப்போதுவரை சிறையில் அடைபட்டுள்ளனர்.

சி.பி.ஐ. விசாரித்துவரும் இவ்வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது 2027 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரி கை முதற்கட்டமாகத் தாக்கல் செய்யப்பட் டது. இரண்டாம் கட்டமாக 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை என மொத்தம் 2,427 பக்க குற்றப்பத்திரிகை மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சி.பி.சி.ஐ.டி. விசாரணை அதிகாரியாக இருந்த டி.எஸ்.பி. அனில்குமார், சி.பி.ஐ. தரப்பு விசாரணை அதிகாரியான விஜயகுமார் சுக்லா, பெண் காவலர்கள் பியூலா, ரேவதி ஆகியோரின் சாட்சியங்கள் இவ்வழக்கில் முக்கியமான தாகப் பார்க்கப்படுகிறது.

Advertisment

105 பேரிடம் சாட்சியங்கள் பதிவு செய் யப்பட்டும், 38 சான்று ஆவணங்கள் இணைக் கப்பட்டும் மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் விசாரிக்கப் பட்டுவரும் இவ்வழக்கில், சம்பவம் நடை பெற்று ஐந்தாண்டுகள் ஓடிவிட்ட சூழலில், வழக்கு நடைபெறும் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் நீதிபதி பணியிடம் காலியாக உள்ளதாலும், பொறுப்பு நீதிபதிதான் இந்த வழக்கை விசாரித்துவருவதாலும் ஸ்தம்பித்த நிலையில் இருப்பதாக வேதனை தெரி விக்கின்றனர் ஜெயராஜ் -பென்னிக்ஸ் குடும்பத்தினர்.

உயிரிழந்த ஜெயராஜ் மகள் பெர்சி, நமக்கு அளித்த பேட்டியில்... "எனது அப்பா ஜெயராஜ், தம்பி பென்னிக்ஸின் உடற்கூராய்வு குறித்த ஆதாரப்பூர்வ தகவல்கள், இருவரது உடலிலும் இருந்த ரத்தக் காயங்களுடன் காணப்பட்ட போட்டோக்கள், வீடியோக்கள் நக்கீரனில் வெளியாகியிருந்தது. போலீசார் தான் அடித்துக் கொலை செய்தார்கள் என்பதற்கான வலுவான ஆதாரங்களும் நக்கீரனில் வெளியானது. அப்படியிருந்தும் கூட நீதி எங்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை. ஜூன் 20-ஆம் தேதி சாத்தான்குளம் காவல் நிலையத்திலிருந்து மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டபோது என் தம்பி நடக்க முடியாமல் நொண்டி, நொண்டி நடக்கிற வீடியோவையும், அணிந் திருந்த கைலி ரத்தக் கறைகளுடன் இருந்ததையும் முழுவிவரத்துடன் நக்கீரன் பதிவு செய்திருந்தது.

இதில் போலீஸ் தரப்பு புதிதாக தேடித் தேடி ஜோடிப்பதற்கு ஒன்றுமே இல்லாத வகையில் பொதுமக்கள் அனைவருக்கும் வெளிப்படையாகத் தெரியக்கூடிய வகையில் வலுவான ஆதாரங்கள் இருந்தும்கூட நீதி வழங்காமல் காலதாமதப்படுத்துறாங்க. அந்த டைம்ல நிறைய அரசியல் கட்சிகள் எங்களுக்கு சப்போர்ட்டா இருந்தாங்க. இப்போ எல்லோருமே கொஞ்சம் அமைதியாத்தான் இருக்காங்க. எங்க குடும்பம், எங்க வக்கீல்கள் கேஸை பாலோ செய்றோம். பத்திரிகை துறை நண்பர்களும் இதில் எங்களுக்கு சப்போர்ட்டா இருக்காங்க.

Advertisment

கடந்த ஆறு மாசமா இந்த வழக்கை விசாரிக்க ஜட்ஜை நியமனம் பண்ணுங்க என நிறைய இடங்களில் முறையிட்டிருக்கிறோம். ஆனாலும் நீதிபதி நியமிக்கப்பட வில்லை. வரும் ஜூன் மாதத்தோடு சம்பவம் நடந்து ஐந்து வருடங்கள் முடியப்போகிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் ஏகப்பட்ட கஸ்டடி டெத்கள் நடந்துவிட்டன. தவறு நடக்கும்போது விரைவாக, நீதி கொடுக்கப்படும் போதும், தவறிழைத்தவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்கும்போதும்தான் அடுத்து அது போன்று நடக்காமல் இருக்கும்.

எங்களைப்போல எத்தனையோ பொது மக்கள் பாதிக்கப்பட்டிருக்காங்க. தூத்துக்குடி தாள முத்து நகர் போலீஸ் ஸ்டேஷனில் நிகழ்ந்த வின்சென்ட் லாக்கப் டெத்துக்கு 25 வருடங்கள் கழித்து சமீபத்தில் ஜட்ஜ்மெண்ட் வழங்கப்பட்டுள் ளது. அந்த வழக்கில் சீக்கிரமே நீதி வழங்கப்பட்டி ருந்தால் எங்க அப்பா, தம்பி கஸ்டடி டெத் நடக் காமல்கூட இருந்திருக்கலாம். இப்படி ஒவ்வொரு கேஸ்லயும் காலதாமதம் நடக்கும்போது குற்றம் இழைத்தவர்கள் எல்லாத்தையும் ஆண்டு அனு பவித்து செத்துப் போய்விடுகிறார்கள். உயிரைப் பறிகொடுத்த எங்களுடைய குடும்பங்கள் மட்டும் தான் வேதனையில் வாழவேண்டிய சூழ்நிலை. இவ்வளவு தூரம் நாங்க போராடுவதே எங்களைப் போல இன்னொரு குடும்பம் வேதனைப்படக் கூடாதுன்னுதான்.

ss

மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் நாங்க டைரக்சன் கேட்கும்போது இரண்டு மாசத்துல முடிங்கன்னு சொல்றாங்க. இங்கே நீதிபதியே நியமிக்கப்படாதபட்சத்தில் எப்படி இரண்டு மாசத்துல முடிக்க முடியும். இன்சார்ஜ் ஜட்ஜ் வாரத்தில் ஒரு நாள்தான்... அதுவும் இரண்டு மணி நேரம்தான் விசாரணை போய்க்கொண்டிருக்கிறது. கைதான போலீஸ் ஒன்பது பேரும் ஒன்பது வழக்கறிஞர்களை வைத்து, கேட்ட கேள்வியையே திரும்பத் திரும்ப கேட்டு திட்டமிட்டுக் காலதாமதப்படுத்துகின்றனர்.

இந்த வழக்கு டெய்லி நடக்கிற மாதிரி இருந்தாத்தான் எங்களுக்கு சீக்கிரம் நீதி கிடைக்கும். இதை ஒரு கோரிக்கையாகவே முன்வைக்கிறோம். ஏனெனில் இந்த வழக்கில் குற்றச்சாட்டுக்குள்ளான அனைவருக்கும் போலீஸ் தரப்பு சப்போர்ட்டிவா இருக்காங்க. கைதாகியுள்ள போலீஸ் யாரும், தெரியாமல் எதுவும் செய்யவில்லை. நீ செத்தால் சாவு... நான் என்ன ஆனாலும் பார்த்துக்கொள்கிறேன் என சொல்லி எஸ்.ஐ. பாலகிருஷ்ணன் அடித்ததா அந்த ஸ்டேசன்ல பணிபுரிந்த போலீஸ் கொடுத்த ஸ்டேட்மெண்ட்லயே இருக்குது. செத்தா சாவு என்கிற இந்த அதிகாரத் திமிரை அவங்க குடும்பத்துல சொல்லுவாங்களா...

நீதித்துறையை நாங்க முழுமையா நம்பு றோம். பொதுமக்களும், மீடியாக்களும் அந்த நேரத்தில் எங்களுக்கு உதவி செய்யலைன்னா ஒண்ணுமே இல்லாம பண்ணியிருப்பாங்க. என் தம்பி பென்னிக்ஸ் இறந்தவுடன் பென்னிக்ஸ்ங்கிற பெயரில் குற்றப் பின்னணி ஏதாவது இருக்கான்னு சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேஷனில் எல்லா ரெக் கார்டுலயும் தேடியிருக்காங்க. இவங்க தப்பிக் கிறதுக்காக எந்த எக்ஸ்ட்ரீமுக்கும் போக அப்ப வே ரெடியா இருந்திருக்கிறாங்க. ஹைகோர்ட் தானா முன்வந்து இந்த வழக்கை எடுக்கலைன்னா எந்த ஒரு காரியமும் நடந்திருக்காது. நாங்களே செப்பரேட்டா வழக்கு போட்டு இருந்தாகூட எங்களைப் பயமுறுத்தியிருப்பாங்க.

நாங்க ஒரு சாதாரண குடும்பம். எங்க அப்பா பனங்கட்டை வியாபாரம் பாத்தாங்க. என் தம்பி ஒரு கடை வச்சிருந்தான். நிம்மதியா வாழ்ந்து கொண்டிருந்த எங்க குடும்பத்தைச் சீரழித்துவிட்டு... அவங்களுக்கு பெயில் கிடைக்கலை என்பதற்காக எங்களுக்கு குடும்பம் இல்லையான்னு சொல் கிறார்கள் போலீஸ் தரப்பினர். கல்யாண வீட்டுக்கு வருவது மாதிரிதான் கோர்ட்டுக்கு வருவாங்க. கைதான போலீஸ்காரங்களுக்கு டூட்டில இருக்கிற போலீஸ்காரங்க சல்யூட் அடிக்கிறாங்க. இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் கோர்ட்டை விட்டு வெளியே சென்றுவிடுவார்.

அஞ்சு வருஷம் முடிஞ்சிருச்சு. எங்களுக்கான நீதி இந்த வருஷத்துலயாவது கிடைக்கும்னு நம்புறோம். நீதித்துறையிடமும் அதை நாங்கள் வேண்டுகிறோம். செய்தி வெளியிட்டு நக்கீரன் செய்த உதவி மகத்தானது. நீதிக்காக எங்களால் எவ்வளவு பாடுபட முடியுமோ, அந்த அளவுக்கு நாங்கள் பாடுபடுறோம்''’என்றார் கண்ணீருடன்.

ஜெயராஜ் -பென்னிக்ஸ் தரப்பின் வழக்கறிஞர் ராஜீவ்ரூபஸும், "தினசரி விசாரணை, நீதிபதி நியமனம் இரண்டும் நடந்தால்தான் வழக்கு விசாரணை வேகமெடுக்கும்' என வலியுறுத்தினார்.

-மூர்த்தி