ளுந்தூர்பேட்டையிலிருந்து அரியலூருக்கு நேரடி பெருவழிச்சாலை அமைக்க வேண்டுமென்று கோரிக்கை வைக்கிறார்கள் அரியலூர் பகுதியைச் சேர்ந்த மக்கள்.

ar

"அரியலூர் மாவட்டத் தலைநகரிலிருந்து கிழக்கே கும்பகோணம், ஜெயங்கொண் டம் மேற்கே பெரம்பலூர், தெற்கே தஞ்சாவூர், தென் மேற்கே திருச்சி எனப் பக்கத்து மாவட்டங்களுக்கு நேரடியாகச் செல்ல, பெருவழிச் சாலை களே இல்லை. முக்கியமாக, அரியலூர் நேர் வடக்கே செல்ல வெள்ளாறு, மணி முத்தாறு என ஆறுகள் குறுக்கே சென்றதால், வடக்கு பகுதியை நோக்கி நேரடியா கச் செல்வதற்கு பெருவழிச் சாலை இல்லை. வடக்கு நோக்கி சென்னை செல்ல திருச்சி, விழுப்புரம் கார்ட்லைன் ரயில் பாதையை, 95 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்கள் அமைத் தனர். அதன்பிறகு அரியலூர் மாவட்டம் வளர்ச்சி பெறு வதற்கு பெரிய திட்டங்கள் ஏதும் கொண்டுவரப்படவில்லை.

Advertisment

ss

அரியலூர் மேற்கே 35 கி.மீ சென்று சென்னை - திருச்சி தேசிய சாலையில் இணைய வேண்டும். அல்லது, அரியலூரிலிருந்து ஜெயங்கொண்டம் வழியா கச் செல்லும் தேசிய நெடுஞ் சாலையில் இணைவதற்கு 50 கி.மீ. தூரம் செல்ல வேண்டும். அரிய லூரிலிருந்து பெரம்பலூர் வழி யாக உளுந்தூர் பேட்டை 102 கி.மீ வருகின்றது. அரியலூரிலிருந்து செந்துறை, எறையூர், நல்லூர் வழியாக உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் இணை வதற்கு சுமார் 60 கி.மீ. தூரம் மட்டுமே ஆகும். இதை சாட்டி லைட் உதவியுடன் சுலபமாகக் கணக்கீடு செய்து பெருவழிச் சாலை அமைக்கலாம். இப்படி அமைக்கப்படும் பெருவழிச் சாலையோடு, இடையிடையே இணைப்புச்சாலைகள் அமைத் தால், அரியலூர் மாவட்டத்தி லுள்ள வெள்ளூர், பொட்டவெளி, குழுமூர், நமங்குணம், வஞ்சின புரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களும் வளர்ச்சியடையக் கூடும்'' என்கிறார் சமூக ஆர்வலர் அரியலூர் ஜெகா வெங்கட்.

"இந்த பெருவழிச்சாலை அமைந்தால், அரியலூர், லால் குடி, திருவையாறு, குன்னம், திட்டக்குடி, உளுந்தூர்பேட்டை ஆகிய 6 சட்டமன்றத் தொகுதி கள் பலன்பெறும். அரியலூர் மாவட்டத்திலிருந்து கனிம வளம், சிமெண்ட் ஆலைகள் உற்பத்தி அதிகரிப்பின்மூலம் அரசுக்கு பல்லாயிரம் கோடி வருமானம் கிடைக்கும்'' என்கிறார் புதுவேட்டை குடி சுப்பிரமணியன்;

உளுந்தூர்பேட்டை- அரியலூர் இடையே பெருவழிச்சாலை அமைவ தற்கு, அரியலூர் எம்.எல். ஏ.வும் போக்குவரத்துத் துறை அமைச்சருமான சிவ சங்கர், திட்டக்குடி எம்.எல். ஏ.வும் தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சருமான சி.வி.கணேசன் ஆகிய இருவரும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள் இப்பகுதியைச் சேர்ந்த மக்கள்.

Advertisment